Saturday 22 August 2020

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா"

ஔவையார்,நல்வழி

நமது பாரம்பரிய வழக்கப்படி உள்ளூர் கோவிலில் சக்கரைப் பொங்கல் வைத்து, கொழுக்கட்டை செய்து இல்லாதோர்க்கு கொடுத்து கொண்டாடுவோம்.

N2R நந்தகுமார்

Friday 14 August 2020

ஆடி மாதத்துக்கும் அம்மன் வழிபாட்டுக்கும் என்ன தொடர்பு? ஆடி மாதம் கூழ் ஊற்றுவது ஏன்?

       கோழி கூவுவதற்கு முன்பே, `அம்பிகையே... ஈஸ்வரியே...' என்று பாடல் ஒலிக்கத் தொடங்கிவிட்டால் ஆடி மாதம் பிறந்துவிட்டது என்று அர்த்தம். ஆடி மாதம் அம்மனுக்கான மாதம். அம்மன் கோயில் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கிவிடும். 


    வருடத்தில் எல்லா மாதங்களும் சிறப்பானவைதாம் என்றாலும், ஆடிமாதத்துக்கு மட்டும் எந்த மாதத்துக்கும் இல்லாத தனிச்சிறப்பு உண்டு. ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் தொடங்குகிறது. உலக உயிர்கள் அனைத்தையும் காத்து அருள்புரியும் சூரியன்,  கடக ராசியில் சஞ்சரித்து தெற்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறார். எனவேதான் இதை `கற்கடக' மாதம் என்றும் குறிப்பிடுகிறோம். கடக ராசி சந்திரனுக்கு உரியது. சிவ அம்சமான சூரியன், சக்தியின் அம்சமான சந்திரனுடன் ஒன்றுசேர்ந்து கற்கடகத்தில் சஞ்சரிக்கும்போது சக்தியின் பலம் அதிகரிக்கிறது. ஆடி மாதத்தில் சிவபெருமானே சக்தியின் அம்சத்துக்குள் அடங்கிவிடுகிறார் என்பது ஐதீகம். எனவேதான், ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாகத் திகழ்கிறது.


    ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் தேவர்களின் இரவு நேரம் என்பது ஆன்மிக நம்பிக்கை. இந்தப் புண்ணிய காலத்தில் சூட்சம சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த நேரத்தில் பூஜைகள், ஜபங்கள், நீத்தார் வழிபாடு ஆகியவற்றைச் செய்தால் அதிக அளவு பலன்கிடைக்கும். `பார்வதி தேவி மலையரசன் மகளாகப் பிறந்தது ஆடி மாதம்தான்' என்கிறது தேவி பாகவதம். மதுரை மீனாட்சி அம்மன் அவதரித்ததும் ஆடி மாதமே. இதே ஆடி மாதத்தில்தான் ஆண்டாளும் அவதரித்தாள். 


     மேலும், மழைக்குரிய தெய்வமாக மாரியம்மன் திகழ்வதால், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு வரும் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. ஆடி மாதத்தில் கூழ் வார்த்தல், விளக்கு பூஜைகள், பூக்குழி இறங்குதல் போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன. ஆடிப் பூரம், ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய் என்று இந்த மாதம் முழுவதும் திருவிழாக்களுக்குப் பஞ்சமே இல்லை. 


    அம்மன் கோயில் பிரசாதங்களில் முதன்மையானவை வேப்பிலையும், எலுமிச்சைப் பழமும். இதற்குப் பின்னால், அறிவியல் காரணம் ஒன்றும் இருக்கிறது.  


    ஆடி மாதத்தில் மழைக்காலம் தொடங்குவதால் தொற்று நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புண்டு. வேப்பிலையும், எலுமிச்சைப் பழமும் இயற்கையான கிருமிநாசினிகள். இதனால் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கப்படுகின்றன. மேலும் வெப்பம் குறைவான நாள்களில் எளிதில் செரிக்கக் கூடிய உணவு கூழ். அதுமட்டுமல்ல கூழ் இயற்கையாகவே அதிக அளவு எதிர்ப்புச் சக்தியையும், வலிமையையும் உடலுக்கு வழங்கக்கூடியது. அதனால்தான் `ஆடிக்கூழ் அமிர்தமாகும்' என்று கூறுகிறார்கள்.

இது தொடர்பாக புராணக்கதை ஒன்றும் உண்டு...

  கேட்பவை அனைத்தையும் அளிக்கும் காமதேனு பசுவை, ஜமதக்னி முனிவரிடமிருந்து அபகரிக்க கார்த்தவீர்யார்ஜுனரின் மகன்கள் திட்டம் போடுகிறார்கள். ஒருதருணத்தில், முனிவரைக் கொன்று காமதேனுவைக் கவர்ந்துசென்றுவிடுகிறார்கள். கணவர் இறந்ததும் தானும் அக்னிப்பிரவேசம் செய்கிறாள் ஜமதக்னியின் மனைவி ரேணுகாதேவி. ஆனால், `தெய்வாம்சம் பொருந்திய ரேணுகா தேவியினால் உலகத்துக்கு நன்மை ஏற்படவேண்டும்' என்று நினைத்த இந்திரன், வருண பகவானிடம் மழையைப் பொழியும்படி உத்தரவிடுகிறார். மழை பெய்து தீயை அணைத்துவிடுகிறது. ஆனாலும், ரேணுகாதேவியின் உடல் முழுவதும் தீக்காயங்கள் மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.  

  தீக்காயத்தின் வெம்மையைத் தணிக்கவேண்டி, வேப்பிலையைச் சுற்றிக்கொள்கிறார் ரேணுகாதேவி. தீக்காயங்களுடன் போராடிய ரேணுகா தேவிக்குக் கிராமத்து மக்கள் கூழ் காய்ச்சிக் கொடுக்கிறார்கள். அத்துடன் வெல்லம், இளநீர் ஆகியவற்றையும் கொடுத்து உதவுகிறார்கள். உடல் முழுவதும் கொப்புளங்களுடன் போராடிக்கொண்டிருந்த ரேணுகா தேவியிடம் சிவபெருமான், ``பராசக்தியின் அம்சமான நீ மக்களை நோயிலிருந்து காக்க வேண்டும்" என்று அருள்புரிகிறார். எனவேதான் அம்மை நோயைக் குணமாக்கும் வேப்பிலைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும் கூழுக்கும் அம்மன் வழிபாட்டில் முக்கியப் பங்கு வழங்கப்படுகிறது. 


  ஆடி மாதம் செவ்வாய் கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் இருக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் நீண்ட ஆயுள் பெறவும், குழந்தை வரம் கிட்டவும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்குத் திருமணம் நடைபெறவும் ஆடி மாத விரதம் நலம் பயக்கும்.

  ஒரு குழந்தையின் இயல்பு என்ன. பகலெல்லாம் ஓடியாடித் திரிந்தாலும், இரவு வந்துவிட்டால் அந்தக் குழந்தை தன் தாயின் மடியைத்தானே தேடிச் செல்லும்... தாயின் மடியில்தானே இரவைப் பற்றிய அச்சம் நீக்கி ஆறுதலைப் பெறும்... அதுபோலவே, கால மாற்றமானது நம்முடைய வாழ்க்கையில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க, உலக மக்களாகிய நாமும் பராசக்தியின் அம்சமாக ஆங்காங்கே கோயில்களில் குடிகொண்டிருக்கும் அம்மனை நாடிச் சென்று, அவளுடைய திருவடிகளைத் தொழுது பணிந்து அருள் பெறுவோமாக...!

N2R நந்தகுமார்

Channel N2R 

இரண்டாம் குழந்தை


அரை டஜன் பிள்ளை பெற்றது அந்தக்காலம்... ஒரு பிள்ளைக்கே ஓராயிரம் முறை யோசிப்பது இந்த காலம்...

  பிள்ளை பெற்று தன் சந்ததியை காப்பாற்ற சேர்ந்தது அந்தக் காலம்...
சிற்றின்பத்திற்கு சேர்ந்து நித்திரைக்கு கேடாய் வாழ்வது இந்தக் காலம்...

  துரோகமும்  வஞ்சகமும் இல்லாதது அந்தக் காலம்...
 வஞ்சகமில்லையென்றால் வாழ முடியாது என்று பகிரங்கமாய் சொல்வது இந்த காலம்...

  வளர்ந்த பிறகு ஆணுக்கு பெண்ணும் பெண்ணும் ஆணும் வேண்டும் என்று என்னும் மனித மனதுக்கு தன் குழந்தை வளரும் போது தனிமையில் வளர்கிறதே என்ற எண்ணம் வருவதில்லை...

 பசியால் வயிற்று வலியை சொல்ல தெரியாமல் அழும் குழந்தை ஒரு நாள் உணர்ந்து  தானே உண்ண காற்றுக்கொள்ளும்...
  ஆனால், சந்தர்ப்பவதிகளால் நாளுக்கு நாள் பரிணாம வளர்ச்சியடையும் இந்த உலகில்
 தனக்கென பாசத்திற்குரியவர்களும் நம்பிக்கைக்குரியவர்களும் இல்லை என்று  தனிமையில் வளரும் குழந்தை ஒரு நாள் ஏங்கும்...

   அமைதியும் நிம்மதியும் இல்லாத வாழ்வில் பணமும் நாகரிகமும் ஒருவனை முழுமை படுத்திவிடாது.

உடன் பிறப்புகளுடன் பிறந்தவர்களுக்காக...

என்
துயரங்களின் தோழனே தேழியே....

உன்
துணையுடன்தான்
என் எல்லாவற்றையும்
நான் கடந்திருக்கிறேன்...

நான்
தனியாள் இல்லை
என்பதனை எனக்கு
உணர்த்திச்செல்லும்
தாய்கரங்களாய்
என் தலைகோதியது நீதான்

இந்த
பூமிக்கு வரும் முன்பே
என் தாயின் கருவறையில்
என்னுடன் உருவானது
நீ மட்டுமே
என் இறுதிப்பயணத்திலும்
உடன் வர தகுதியான ஒரு ஜீவன் நீதான்...

பெருங்கூட்டங்களில்  தனிமை உணர்ந்த எனக்கு
தனித்திருக்கும் வேளைகளில்
தோள் கொடுத்த தாய்மனமே நீதானே....

 நீ இருக்கும் வரை
எனக்கு தனிமையில்லை...

N2R நந்தகுமார்

Thursday 13 August 2020

தூங்கும் போது கால்களுக்கு நடுவே தலையணை வைத்து தூங்குபவரா? நீங்க பேரதிர்ஷ்டசாலிதான்! ஏன் தெரியுமா?

எவ்வளவு தான் நாள் முழுவதும் அயராது உழைத்தாலும், வீட்டிற்கு வந்து படுக்கையில் தூங்கும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கு சென்றாலும் கிடைக்காது. ஆனால் என்ன அவ்வாறு படுக்கையில் தூங்கும் போது ஆங்காங்கு சிறு வலிகளை சந்திப்போம். இதற்கு காரணம் நாம் தூங்கும் நிலை தான். ஒருவரின் முதுகெலும்பின் ஆரோக்கியத்திற்கு தூங்கும் நிலையானது மிகவும் முக்கியம். ஒரு நாளைக்கு 8 மணிநேரம் ஒரே நிலையில், அதுவும் தவறான நிலையில் தூங்கும் போது, முதுகெலும்பிற்கு போதுமான ஆதரவு கிடைக்கப் பெறாமல், அதன் விளைவாக வலி, பிடிப்பு மற்றும் உட்காயங்களை உண்டாக்கும

எனவே இரவு தூங்கும் போது சரியான நிலையில் தூங்க வேண்டியது அவசியம். எனவே தூங்கும் போது – முக்கியமாக பக்கவாட்டில் தூங்கும் போது கூட உங்கள் உடலை சரியான வழியில் நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டாம்.

மேலும் பொருத்தமான மெத்தை ஒன்றை தேர்ந்தெடுத்து, தலையணை பயன்படுத்தி முதுகெலும்பை ஆரோக்கியமான வளைவுக்கு மாற்றிவிடலாம்.

ஆரோக்கியமான தூக்கத்தினை பெற என்ன செய்யலாம்

தூங்கும் போது கால்களுக்கு இடையே தலையணையை வைத்துக் கொள்வதன் மூலம், அது ஆறுதலை அளிப்பதோடு, முழங்கால்களை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்திருப்பதன் மூலம் அழுத்தம் நீக்கப்படுகிறது.

இது உங்கள் இடுப்பு பகுதி சீரமைக்கப்படுவதை உறுதி செய்கிறது.

நன்மைகள்

முக்கிய குறிப்பு
  1. உடலின் ஆற்றலையும், மன விழிப்புணர்வையும் புதுப்பிக்க ஒரு நல்ல இரவு தூக்கம் அவசியம்.
  2. இது உங்கள் மனநிலையை மேம்படுத்தவும், அடுத்த நாளுக்கு உங்களை தயார்படுத்தவும் உதவுவது மட்டுமல்லாமல், நோயில் இருந்து மீளவோ அல்லது காயத்தில் இருந்து குணமடையவோ உதவும்.
  3. நீங்கள் தூங்கி எழுந்திருக்கும் போது, ஏதேனும் வலியை உணர்ந்தால், உடனே உங்கள் தூக்க தோரணையை சரிபார்க்கவும்.
  4. மேலும் ஒவ்வொரு இரவு தூங்கும் போதும் தூக்க தோரணையை கவனிக்க வேண்டியது அவசியம்.
  5. அதேப் போல் மறுநாள் காலையில் எழும் போது வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்.
N2R NandhakumaR
Channel N2R

Tuesday 11 August 2020

ஹிந்தி கற்பது குறித்த எமது அனுபவக் கருத்து

Published by 
N2R NandhakumaR

   2012,  13 களில் டெக்ஸ்டைல் தொழில் குறித்த அனுபவங்களுக்காக குஜராத்திலுள்ள சூரத் மற்றும் அகமதாபாத் சென்றிருந்தேன். அக் கால கட்டங்களில் எனக்கு ஹிந்தி மொழி கடுகளவும் தெரியாது. அங்கு தென் மாநிலங்களில்  பேசும் அளவில் கால் பாக மக்களுக்கு கூட ஆங்கிலம் சிறிதும் தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஹிந்தியும் குஜராத்தியும் மட்டும் தான். சாப்பிடுவதற்கும் தேநீர் அருந்துவதற்கும் ஏன் தண்ணீர் ஒரு பாட்டில் வாங்குவதற்கும் கூட ஆங்கிலத்தில் கூறி செய்கையாலும் காட்டுவேன் ஒரு உமைக்கு நிகராக. அங்கிருந்த பத்து நாட்களும் மிகவும் சிறமப்பட்டுள்ளேன் மொழி தெரியாததால்.

 அதற்கு பிறகு  சத்தீஸ்கர், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு பல முறை சென்றுள்ளேன். ஹிந்தி மொழியில் நேர்த்தியான உரையாடல் இல்லாவிட்டாலும் தேவையான அளவிற்கும்  எனது கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் அளவிற்கு கற்றுக் கொண்டு.

இருப்பினும், பத்து மாதங்களுக்கு முன்பு உத்திரப்பிரதேசம், மனவ்ரி என்ற ஊரிலுள்ள விமானப்படை தளம் செல்ல  அலாகபாத்திலிருந்து மனவ்ரி  வரை 18 கி.மீ ஆட்டோவில் சென்றிருந்தேன்.  அந்த ஆட்டோ காரர் 4 கி.மீ முன்பே சரியான இடத்திற்கு வந்து விடுடோம் என்று பொய் சொல்லி இறக்கிவிட்டு பணத்தையும் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். வட இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் மட்டுமே ஊர் பெயர் பலகைகளில் ஆங்கிமும் இடம் பெற்றிருக்கும் சிறிய நகரங்களிலெல்லாம் ஹிந்தியில் மட்டுமே எழுதியிருக்கும். ஹிந்தி படிக்கத்தெரியாத பலவீனத்தால் அங்குள்ளவர்களிடம் விசாரித்து பிறகொரு ஆட்டோ பிடித்து சேர வேண்டிய இடத்திற்கு வட இந்தியனிடம் ஏமாந்த தமிழனாக சென்றேன்.  ஏமாற்றியவன் ஒரு புரம் இருந்தாலும் ஹிந்தி படிக்கத் தெரியாமல் ஏமாந்தது என் தவறு தானே....

  கேரளா சென்றால் மலையாளம் தெரிந்திருக்க வேண்டும், கர்நாடகா சென்றால் கனடம் தெரிந்திக்க வேண்டும், ஆந்திர சென்றால் தெலுங்கு தெரிந்திருக்க வேண்டும் இருப்பினும்  இம் மாநிலங்களில் ஆங்கிலம் எடுபடும். வட இந்தியாவில் பல மாநிலங்களில் ஹிந்தி அல்லாமல் மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, காஷ்மீரி பேன்ற பல மொழிகள் பேசப்படுகிறது. வட இந்தியாவில் ஹிந்தி தெரியாத பெரும்பான்மையான மக்கள் தங்கள் தாய் மொழி மட்டுமே தெரிந்து வாழ்ந்துவருகின்றனர். மேலும், தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநிலத்தவர்கள் பலரும் தங்கள் வாழ்வாதரத்திற்காக தமிழையும் கற்று வாழ்ந்து வருகின்றனர்.

   இந்திய அரசியலமைப்பு உருவாகும் போது மாதராஸ் இந்தியாவின் தலைநகரமாக இருந்திருந்தால் தமிழ் இந்தியாவிற்கே தாய் மொழியாக இருந்திருக்கும்.

  இந்தியாவின் தாய்மொழி இந்தி என்பதற்காக இந்தியையும்  வேறு எந்த மொழியையும் கட்டாயம் படிக்க வேண்டுமென்பதில்லை. 

  மொழிக்கல்வியும் தொழிற்கல்வியும் வேறு வேறு. படிப்பறிவே இல்லாத பல லாரி ஓட்டுனர்கள் இந்தியவின் ஏழு எட்டு மொழிகள் சரளாமாக பேசுகின்றனர். தேவையிருந்தால் தேவைப்படும் மொழியை எந்த வயதிலும் கற்றுக்கொள்ளலாம்.

  தமிழகத்தை பெருத்தவரை இப்போதும் இரண்டு தலைமுறை மக்களுக்கு தமிழ் மட்டுமே தெரியும். ஆகவே, இந்த தலைமுறை வாழ நமது தாய் மொழியான தமிழை கட்டாயமான மொழிப் பாடமாகவும் ஆங்கிலத்தை இராண்டாவது மொழிப்பாடமாகவும் மூன்றாவதாக தேவைப்பட்டால்
 நம் விருபத்தின் படி பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுவதும் சிறந்த கல்வி முறையாக இருக்கும் என்பது எனது கருத்து.

ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் ஆயிரம் கருத்துக்களிலிருக்கலாம்!
 தமிழனுக்கு தமிழ் மட்டுமே முதல் நோக்கம்!!

N2R நந்தகுமார்

வள்ளலார் கூறும் 42 வகை பாவங்கள்

பாவம் செய்யாதிரு மனமே!
நாளும் பாவம் செய்யாதிரு மனமே! மனமே!!

1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.

2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.

3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.

4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.

5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.

6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.

7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.

8. தருமம் பாராது தண்டிப்பது.

9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.

10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.

11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.

12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.

13. ஆசை காட்டி மோசம் செய்வது.

14. பொது வழியை மூடி அடைப்பது.

15. வேலை வாங்கிக்கொண்டு கூலி குறைப்பது.

16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.

17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.

18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.

19. நட்டாற்றில் கை நழுவுவது.

20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.

21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.

22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.

23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.

24. கருவைக் கலைப்பது.

25. குருவை வணங்கக் கூசி நிற்பது.

26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.

27. கற்றவர் தம்மிடம் கடுப்போடு நடப்பது.

28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.

29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.

30. ஊன் சுவை உண்டு உடல் வளர்ப்பது.

31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.

32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.

33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.

34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.

35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.

36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.

37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.

38. சிவனடியாரைச் சீறி வைவது.

39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.

40. சுத்த ஞானியரைத் தூஷணம் செய்வது.

41. தந்தை தாய் மொழியைக் தள்ளி நடப்பது.

42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.

N2R நந்தகுமார்
Channel N2R

Friday 7 August 2020

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2020 ல் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன வெற்றி



Published by
Channel N2R
07.08.2020 4:30 am

   கலைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான 9 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 2020 ல் திட்டமிடபட்டிருந்தது. ஆனால், கொரானோ வைரஸ் பாதிப்பால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் 05.08.2020 புதன்கிழமை அன்று நடைபெற்றது.

    மொத்தமுள்ள 225 எம்.பிக்களில் 196 பேர் தேர்தல் மூலமும், 29 பேர் நியமன எம்.பிக்களாகவும் தேர்வு செய்யப்படுவர். இலங்கையின் 22 மாவட்டங்களில் 12,985 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு  இத் தேர்தல் நடைபெற்றது.

   இத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 06.08.2020 வியாழக்கிழமை நடைபெற்று 07.08.2020 இன்று அதிகாலையில் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளது.

   1,62,63,885 மொத்த வாக்காளர்களை  கொண்ட இலங்கையில் 1,23,43,302 வாக்குகள் (75.8%) பதிவாகியுள்ளது. பதிவான வாக்குகளில் 1,15,98,929  செல்லத்தக்க வாக்குகளும் 7,44,373 செல்லாத வாக்குகளாகவும் பதிவாகி இருந்தது.

  தேர்தல் நடைபெற்ற 196 இடங்களில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) 128 இடங்களிலும் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 47 இடங்களிலும் பிற கட்சிகள் 21 இடங்களிலும்வெற்றி பெற்றுள்ளது.

  இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

N2R நந்தகுமார்
Channel N2R

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...