Thursday 8 March 2012

கொங்கர் கண்ட அணைகள்


காடு கொன்று, நாடு ஆக்கி குளம் தொட்டு, வளம் பெருக்கிக் கோயிலோடு குடியேறிய கொங்கு வேளாளர்  பெருமக்கள் கொங்கு நாடெங்கும் ஆறுகளில் 90 அணைகள் கட்டியதாகத் தென்கரை நாட்டுப் பட்டயம், இராமபத்திரன் பட்டயம் ஆகிய வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.
பவானியாற்றில் -  4 அணைகள்
நொய்யலாற்றில் - 32 அணைகள்
உப்பாற்றில் -  4 அணைகள்
மீன்கொல்லியாற்றில் - 18 அணைகள்
அமராவதியாற்றில் - 20 அணைகள்
நன் காஞ்சியாற்றில் -  4 அணைகள்
நல்லமங்கையாற்றில் -  6 அணைகள்
குடவனாற்றில் -  2 அணைகள்
இவை பெரும்பாலும் இன்றும் உள்ளன.   பல நல்ல பயன்பாட்டில் உள்ளன.


Ruler can do anything, so Born to rule the Galaxy

உலகையே காக்கும் கொங்குவேளாளக் கவுண்டர்களின் குலங்கள்


கொங்கு நாட்டின் முதற்குடிமக்கள் கொங்கு வேளாளர்கள்.  கூடி வாழும் பண்பு விலங்கு பறவைகளுக்கும் உண்டு.  எறும்புகளும் உண்டு.  "ஒரு குடிப்பிறந்த பல்லோர்" கூட்டம் என்றனர்.  உற்றார் உறவினர்கள் "கூடிவாழ்ந்தால் கோடி நன்மை" என்ற பழமொழிப் படி சுற்றம் தழுவி வாழ்ந்தனர்.  கூட்டத்தையே குலப்பிரிவாக அமைத்தனர். கொங்கு வேளாளர் இயற்கையோடு  இணைந்து - இயைந்து வாழ்ந்தவர்கள்.  தங்களோடு இயைந்த பறவைகள், தாவரங்கள், பூக்கள், சிறப்புடைய பெயர்கள் முன்னோர்கள் வழிமுறைப் பெயர்களையே குலப்பெயர்களாக அமைத்தனர்.  பண்டைக் காலத்தில் அறுபது  குடிப் பெயர்கள்  மட்டுமே இருந்தன.  சமுதாய மரபுகள் மாறும் போது  கூட்டம் விரிவடையும் போதும் இந்த எண்ணிக்கையும் விரிவடைகின்றன.  பிற்காலத்தில் பாடப்பட்ட ஓதாளர் அழகுமலைக் குறவஞ்சியில் 142 குடிப்பெயர்கள் கூறப்பட்டுள்ளன.  குடி அமைப்பு குலக்கணியாக - குலதெய்வ வழிபாடாக மாறியது.  கொங்கு வேளாளக் கவுண்டர்களின் குலதெய்வங்கள் அக்கூட்டத்தின் முன்னோர் வழிபாடாக அமைந்திருப்பதை அறியலாம்.
  • அழகன் (அ)அலகுகுலம்
  • அந்துவன் குலம்
  • ஆடை குலம் (அ) ஆடர் குலம்
  • ஆதி குலம் (அ) ஆதிகுடி குலம்
  • ஆந்தை குலம்
  • ஆவின் (அ) ஆவ (அ) ஆவன் (அ) ஆவிஞன் குலம்
  • இளங்கம்பு குலம்
  • ஈஞ்சன் குலம்
  • ஏன குலம்
  • காரி குலம்
  • எண்ணை (அ) எண்ண குலம்
  • ஒழுக்கர் குலம்
  • ஓதாளர் (அ) ஓதாளன் குலம்
  • கணக்கன் குலம்
  • கண்ணந்தை குலம்
  • கண்ணன் (அ) கண்ண குலம்
  • கணவாளன் குலம்
  • காடை குலம்
  • காரி குலம்
  • கீரன் குலம்
  • கீரை குலம்
  • குழாயன் (அ) குழையன் குலம்
  • கூறை குலம்
  • கோவேந்தர் குலம்
  • கோவர்  குலம்
  • சாத்தந்தை குலம்
  • செங்கண்ணன் குலம்
  • சிலம்பன்  குலம்
  • செங்கண்டி (அ) செங்கண்ணி குலம்
  • செங்குன்றியர் குலம்
  • செம்பன் (அ) செம்பியன் (அ) செம்பொன் குலம்
  • செம்பூத்தான் குலம்
  • செவ்வாயன் (அ) செவ்வாய குலம்
  • செல்லன் குலம்
  • செவ்வந்தி (அ) செவந்தி குலம்
  • சேடன் குலம்
  • சேரன் குலம்
  • சேரர் (அ) சேரலன் குலம்
  • தழிஞ்சி குலம்
  • தனஞ்செயன் (அ) தனிச்சன் குலம்
  • தூரன் குலம்
  • தேவேந்திரன் (அ) தேவன் குலம்
  • தோடை குலம்
  • நச்சந்தை குலம்
  • நீருண்ணி (அ) நீருண்ணியர் குலம்
  • பண்ணை குலம்
  • பதரி (அ) பத்ரியர் குலம்
  • பதுமன் குலம்
  • பயிரன் குலம்
  • பவள (பவழ)  குலம்
  • பனையன் குலம்
  • பனங்காடை குலம்
  • பாண்டியன் குலம்
  • பில்லன் குலம்
  • பூசன் குலம்
  • பூச்சந்தை (அ) பூச்சட்டி (அ) பூச்சந்தி குலம்
  • பூந்தை குலம்
  • பைதலி குலம்
  • பெரிய குலம்
  • பெருங்குடியான் குலம்
  • பேரிழந்தான் குலம்
  • பொடியன் குலம்
  • பொருள் தந்த குலம்
  • பொன்ன குலம் (அ) பொன்னர் குலம்
  • மணியன் குலம்
  • மயிலன் குலம்
  • மழு அழகர் குலம்
  • மழுவன் குலம் (அ) மழுவ குலம்
  • மாடை குலம்
  • மாயவர் குலம்
  • முத்தன் குலம்
  • முழுக்காதன் குலம்
  • மூலன் குலம்
  • மேதி குலம்
  • வண்ணக்கன் குலம்
  • வாணர் (அ) வாணி (அ) வாணன் குலம்
  • விலையன் குலம்
  • வில்லி  குலம்
  • வெண்னை குலம்
  • வெண்டுவன் குலம்
  • வெண்டுழவர் குலம்
  • வெளியன் (அ) விளியன் குலம்
  • வெள்ளம்பன் (அ) வெள்ளை (அ) வெள்ளமை குலம்
  • வேந்தன் குலம்
  • தம்பட்டை குலம்
  • முல்லை குலம்
  • பிள்ளை குலம்
உலகையே காக்கும் வேளாளர்
"மேழி பிடிக்கும் கையே ஆழிவேந்தனை ஆக்கும் கை"             - ஒளவை.
கார்  நடக்கும்படி காராளர் தம்முடைய
ஏர் நடக்கும் எனில் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்
சீர் நடக்கும் திறம் நடக்கும் திரு அறத்தின் செயல்                  - ஏர் எழுபது
பார் நடக்கும் படை நடக்கும் பசிநடக்க மாட்டாதே.
வேளாளர் இனத்தைப் பற்றி ஆயிரம் ஆயிரம் பெருமைகள் உண்டு.  வேளாண்  குடியிலே பிறந்த நான் பண்பாட்டுக் கல்வியோடு  தொழிற் கல்வி கற்றுத் தொழில் துறையிலே மேலும் முன்னேற வேண்டும்.  உழவுத்துறையை முறையாக சீர்படுத்தி, விளைச்சலை பெருக்கி, நாம் மட்டும் வாழ்வதோடு அல்லாமல் இந்த உலகிற்கே வழி காட்ட வேண்டும்.

http://www.knmkparty.com

Ruler can do anything, so Born to rule the Galaxy

அருள்பரவும் கொங்கு வேளாளர் வாழ்க்கை வ‌ர‌லாறு

  அருள்பரவும் வேளாளர் பயிர்வளர்த்தால் நீதி அந்தணர் வேள்வி வளரும் அன்பினோடு இவர்கள் படைவாளெடுத்தால் வெற்றி அரசர் படைவாள் எடுக்கும் கருது தானியராசி இவர் குவித்தால் வணிகர் கனகராசியெல்லாம் குவிப்பர், காதலுடன் ஏர்த்தொழில் நடத்தினால் மற்றுள்ளோர்கைத்தொழில் எல்லாம் நடக்கும், உரிய வள்ளத்தில் இவர் அளந்த பின் நாரணன் உயிர்க்கெல்லா படி அளப்பான் ஓதரிய வேளாளர் பெருமையால் அன்றிமற்று உலகில் ஒரு பெருமையுண்டோ?"
கொங்கு வேளாளர்
    சங்க இலக்கியங்கள் எல்லாம் கொங்கு வேளாளர்களின் குடியியல், வாழ்வியல், உழைப்பு, பண்பாடு, அறிவியல், மருத்துவ அடிப்படையிலான சடங்குகள், குணவியல்புகள் ஆகிய வற்றையெல்லாம் கூறுகின்றன.
13ஆம் நூற்றாண்டில் விஜய ந‌க‌ர‌ப் பேர‌ர‌சு கொங்கு நாட்டை 24 நாடுக‌ளாக‌ப் பிரித்தாண்ட‌து. ஊர்த்த‌லைவ‌ர்க‌ள் பெய‌ரால் ஊர்க‌ள் அமைந்தன. த‌ற்கால அமைப்புப்ப‌டி கோவை, சேல‌ம், க‌ரூர், நாம‌க்க‌ல், ப‌ல்ல‌ட‌ம், ப‌ழ‌னி, தாராபுர‌ம், த‌ர்ம‌புரி ஆகியன கொங்கு நாட்டில் அட‌ங்கி இருந்தன.
இந்திய வ‌ர‌ல‌ற்றில் விடுத‌லைப் போருக்கு முத‌லில் வித்திட்ட‌வ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள்தாம். த‌மிழ் நாட்டில் விடுத‌லைப்போருக்கு முன்னோடியாக இருந்து, வீர‌ம் விளைவித்திட்ட‌வ‌ன் தீர‌ன் சின்ன‌ம‌லை.
தீர‌ன் சின்ன‌ம‌லை க‌ரியான் ச‌ர்க்க‌ரை ம‌ன்றடியாரின் பேர‌ன் ஆவார். மேல‌ப்பாளைய‌ம் காணியாளர் இர‌த்தின‌த்தின் ந‌க‌னாவார். கி.பி.1756 இல் பிறந்தார். இவ‌ர் அண்ணன் குழ‌ந்தைசாமி, த‌ம்பிசாமி, கிலேதார், குட்டிசாமி ஆகிய மூன்று த‌ம்பிய‌ர்க‌ளை உடைய‌வ‌ர். இவ‌ர‌து இய‌ற்பெய‌ர் தீர்த்த‌கிரி. வேளாண்குடியில் பிறந்திருந்தாலும் சிறுவ‌ய‌தில் சில‌ம்ப‌ம், வாள், வேல், ப‌யிற்சியில் ஈடுப‌ட்டார். தீர்த்தகிரி த‌ம்பியும், கிலேதாரும் இவ‌ருட‌ன் விட்ட‌ன‌ர். போர்ப் ப‌யிற்சியில் ஆர்வ‌ம்கொண்ட தீர்த்த‌கிரி திப்புவின் ப‌டையில் கி.பி.1775 இல் சேர்ந்தார். த‌ள‌ப‌தியானார். இர‌ண்டாவ‌து, மூன்றாவ‌து போர்க‌ளில் த‌ளப‌தியாக இருந்து ஆங்கில ப‌டைக‌ளை அழித்தார்.
கொங்கு நாட்டு வ‌ரிப்ப‌ணம் திப்புவுக்குச் செல்லாம‌ல் வழி ம‌றித்துப்பிடுங்கினார், ஆங்கிலேய‌ரின் வ‌ரிப‌ணத்தையும் பிடுங்கி கோவை நாட்டில் த‌னி அர‌சு அமைத்து ஆண்டார். நொய்ய‌ல் ஆற்றின்மேல் க‌ரையில் ஓடாநிலையில் அரண்ம‌னையும், கோட்டைக‌ளையும் க‌ட்டினார். கி.பி.1779 இல் திப்பு இறந்த‌பின் ஆறு ஆண்டுக‌ள் கொங்கு நாட்டை ஆண்டார். ஆங்கில ஆதிக்க‌த்தை எதிர்த்து நான்குபோர்கள் செய்து வெற்றி பெற்றார். கி.பி.1805 இல் வெள்ளைய‌ரின் வ‌ஞ்ச‌னை வ‌ளையில் சிறைப்ப‌ட்டார். ச‌ங்க‌கிரி கோட்டையில் தூக்கிலிட‌ப்ப‌ட்டார். அவ‌ர‌‌து உயிர்மூச்சு விடுத‌லைப் போருக்கு வித்திட்டது.
ப‌ண்டைய‌ கொங்கு நாடுக‌ள்
எண் கொங்கு நாடுகள்  இன்றைய‌ ப‌குதிக‌ள்
1 பூந்துறை நாடு  ஈரோடு, திருச்ச‌ங்கோடு.
2 தென்க‌ரை நாடு  தாராபுர‌ம், காங்கேய‌ம்.
3 காங்கேய‌ நாடு  தாராபுர‌ம்,கரூர்.
4 பொங்க‌லூர் நாடு  ப‌ல்ல‌ட‌ம், தாராபுர‌ம்.
5 ஆறை நாடு  கோவை, அவினாசி.
6 வார‌க்கா நாடு  ப‌ல்ல‌ட‌ம் பொள்ளாச்சி
7 திருஆவின் ந‌ன்குடி நாடு  ப‌ழ‌னி, உடும‌லை.
8 ம‌ண நாடு  க‌ரூர் தென்மேற்குப் ப‌குதி
9 த‌லையூர் நாடு  க‌ரூர் தெற்கு, மேற்கு
10 த‌ட்ட‌யூர் நாடு  குளித்த‌லை
11 பூவாணிய‌ நாடு  ஓம‌லூர், த‌ர்ம‌புரி
12 அரைய‌ நாடு  ஈரோடு, நாம‌க்க‌ல்
13 ஒடுவ‌ங்க‌ நாடு  கோபி
14 வ‌ட‌க‌ரை நாடு  ப‌வானி
15 கிழ‌க்கு நாடு  க‌ரூர், குளித்த‌லை
16 ந‌ல்லுருக்காநாடு  உடும‌லைப்பேட்டை.
17 வாழ‌வ‌ந்தி நாடு  நாம‌க்க‌ல் வ‌ட‌க்கு, க‌ரூர்
18 அண்ட‌ நாடு  ப‌ழ‌னி தென்கிழ‌க்கு
19 வெங்கால‌ நாடு  க‌ரூர் கிழ‌க்கு
20 காவ‌ழ‌க்கால‌ நாடு  பொள்ளாச்சி
21 ஆனைம‌லை நாடு  பொள்ளாசி தென்மேற்கு
22 இராசிபுர‌ நாடு  சேல‌ம், ராசிபர‌ம், கொல்லிம‌லை
23 காஞ்சிக் கோயில் நாடு  கோபி, ப‌வானி.
24 குறும்பு நாடு  ஈரோடு

Ruler can do anything, so Born to rule the Galaxy

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...