Saturday 15 April 2023

சோபகிருது வருடம் சித்திரை மாதம் 01 நாள் தமிழ் புத்தாண்டு. வாழ்த்துக்கள்

மனைவியின் காதல் பெரியதா? மகளின் காதல் பெரியதா?


ஆதி நெருப்பின் கதகதப்பு காதல்! 
உலகின் முதல் உன்மத்தம் காதல்! 
வயதையும் மனதையும் போட்டு விழுங்கும் புதிர்பூதம் காதல்!
Chemistry-யின் History யாய் இருப்பது இந்தக் காதல்!

அத்தகைய காதல் கொண்டு உங்களை வரவேற்கிறேன்.

ஒரு தோழி கேட்டிருந்தாங்க...

 நண்பா, என் கணவர் எனக்குத் தர முக்கியத்துவத்தைவிட என் மகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார். அவள் மீதே அதிக அக்கறையோட இருக்கிறார். இதுவே அவர்மீது எனக்குக் கோவமாக மாறுகிறது. நீங்க சொல்லுங்க. மனைவிமீது கொண்ட காதல் பெரியதா? மகள்மீது கொண்ட அன்பு பெரியதான்னு கேட்டிருந்தாங்க.

Alfred என்ற உளவியல் நிபுணர் என்ன சொல்றார் தெரியுமா? 
 ஒவ்வொரு ஆணும் தன் மனைவியிடத்தில் ஒரு குழந்தைத்தனத்தை எதிர்பார்க்கிறான்! அது கிடைக்காத போது மனைவியின் உருவச் சாயலில் குழந்தையாகவே கிடைக்கும் மகளின்மீது அவனது அன்பு 100 மடங்காக பெருகுகிறதுன்னு சொல்றாருங்க.

எந்த ஒரு ஆண், மனைவியை அதிகம் காதலிக்கிறானோ அவனால் மட்டுமே மகளை அதிகம் நேசிக்க முடியும்னு உளவியல் நிபுணர் சொல்றாருங்க.

அதனால் தானே பாரதி செல்லம்மாவைக் காதலித்தார்... ஆனால் தன் மகள் கண்ணம்மாவைத்தானே பாடினார்.

“ஓடி வருகையிலே உள்ளம் குளிருதடி பாடித் திரிதல் கண்டால், உன்னைப் போய்
ஆவி தழுவுதடி
உச்சிதனை முகர்ந்தால் கர்வம்
ஓங்கி வளருதடி
மெச்சி உனைஊரார் புகழ்ந்தால் என் மேனி சிலிர்க்குதடி
கண்ணத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி" னு
 பாரதி தன் மகளின் மீதான பாசத்தை
வெளிப்படுத்தியிருக்கிறாரில்ல.
   நா.முத்துகுமார் இன்னும் ஒருபடி மேலே போய் எழுதுவாருங்க

"மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு பட்டுமே தெரியும்.
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறான்"னு சொல்லியிருப்பாரு.

இந்த மகள்களை யார் ஒருவன் நேசிக்கிறானோ, அவன் தன் மனைவியின் மீதும் அதீத நேசிப்புடன் இருப்பாங்களாம்.

 ஒரு கூட்டுக் குடும்பம்! அப்போதான் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகியிருக்கு. இருவரும் தனியறையில் விளையாடிட்டு இருக்காங்க. என்ன விளையாட்டுனா யார் வந்து கதவைத் தட்டினாலும் கதவை திறக்கக் கூடாதுனு... முதல்ல பையனோட அம்மா கதவைத் தட்டுறாங்க. அந்தப் பையன் அதை ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டுக் கதவைத் திறக்கவில்லை. அடுத்து பையனோட அப்பா, அதற்கடுத்து பையனோட தங்கை இப்படி ஒவ்வொருத்தரா கதவைத் தட்டுறாங்க. இவங்க கதவைத் திறக்கவே இல்லை. கொஞ்ச நேரம் கழிச்சு மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்குது.

இப்போ, அந்தப் பெண் ஜன்னல் வழியா பாக்குறா. தட்டியவர் பெண்ணோட அப்பா. 'தங்கம்... நான் தான் நிக்கிறேன். அப்பா வந்திருக்கேன். கதவைத் தெறம்மா"னு ஒரே அழைப்புதான். அந்தப் பெண்ணிற்குக் கண்ணீர் முட்டிக் கொண்டு வருவதை அடக்கிக்கொண்டு ஓடிப்போய் கதவைத் திறந்துப்பா... இதை எல்லாத்தையும் கண்டு அந்தப் பையன் சிரிச்சிட்டே இருந்தான்.

இரண்டு நாள் கழித்து என்ன குழந்தை வேண்டும்னு இரண்டு பேரும் மொட்டை மாடியில பேசிட்டு இருந்தாங்க. கணவன் கொஞ்சம் கூட யோசிக்காமல் சொன்னான். கண்டிப்பாய் எனக்குப் பெண் குழந்தை தான் வேணும்னு சொன்னான். ஏன்னு மனைவி கேட்டாள். கடைசி காலத்தில் மகள் தானே நமக்குக் கதவைத் திறப்பான்னு சொன்னதா அந்தக் கதை வரும்...!

மகள்களைப் பெற்ற தந்தைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! அத்தகைய தந்தைகளைக் கணவனாய் பெற்ற மனைவிகள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

இன்னொரு முறை அவர் உங்கள் மகள் மீது கவனத்தைச் செலுத்தினாலோ, உங்கள் மகள் மீது அதிக அக்கறை செலுத்தினாலோ, உங்கள் மகள் மீது முக்கியத்துவத்தைச் செலுத்தினாலோ அவரோடு நீங்கள் அதிகம் காதலைச் செலுத்துங்கள்.

நன்றி!
மதுரை ராமகிருஷ்ணன்

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...