.
.
.
“நான் இப்படித்தான்
உயில் எழுத விரும்புகிறேன்.!
நான் இறந்தவுடன்
என் கண்கள்
பார்வையற்ற ஒருவன் கண்களில்
பதிக்கப்பட வேண்டும்
இந்த தங்க உலகத்தை
அவன் தரிசிக்க வேண்டும்
ஆடும் அலைகள்,
வண்ணப் பறவைகள்,
அப்பாவி வண்ணத்துப் பூச்சிகள்,
மினு மினுக்கும் நட்சத்திரங்கள்,
வானவில்லை பிரசவிக்கும் மேகங்கள்,
அத்தனை அதிசயங்களையும் அவன்
தரிசிக்க வேண்டும்!
அவன் மரணமடைந்தால்
அதே கண்களை பார்வையற்ற
இன்னொருவனுக்குப் பதிக்க வேண்டும் !
இப்படியாக என் கண்கள்
ஊழியின் எல்லை வரை
யுகங்கடந்து வாழ வேண்டும்!
என் கண்கள்
என் மரணத்தை
வெல்ல வேண்டும்!”
-N2R நந்தகுமார்
👇🏻கண்தானம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 👇🏻
.
.
.