Tuesday 11 August 2020

ஹிந்தி கற்பது குறித்த எமது அனுபவக் கருத்து

Published by 
N2R NandhakumaR

   2012,  13 களில் டெக்ஸ்டைல் தொழில் குறித்த அனுபவங்களுக்காக குஜராத்திலுள்ள சூரத் மற்றும் அகமதாபாத் சென்றிருந்தேன். அக் கால கட்டங்களில் எனக்கு ஹிந்தி மொழி கடுகளவும் தெரியாது. அங்கு தென் மாநிலங்களில்  பேசும் அளவில் கால் பாக மக்களுக்கு கூட ஆங்கிலம் சிறிதும் தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஹிந்தியும் குஜராத்தியும் மட்டும் தான். சாப்பிடுவதற்கும் தேநீர் அருந்துவதற்கும் ஏன் தண்ணீர் ஒரு பாட்டில் வாங்குவதற்கும் கூட ஆங்கிலத்தில் கூறி செய்கையாலும் காட்டுவேன் ஒரு உமைக்கு நிகராக. அங்கிருந்த பத்து நாட்களும் மிகவும் சிறமப்பட்டுள்ளேன் மொழி தெரியாததால்.

 அதற்கு பிறகு  சத்தீஸ்கர், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு பல முறை சென்றுள்ளேன். ஹிந்தி மொழியில் நேர்த்தியான உரையாடல் இல்லாவிட்டாலும் தேவையான அளவிற்கும்  எனது கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் அளவிற்கு கற்றுக் கொண்டு.

இருப்பினும், பத்து மாதங்களுக்கு முன்பு உத்திரப்பிரதேசம், மனவ்ரி என்ற ஊரிலுள்ள விமானப்படை தளம் செல்ல  அலாகபாத்திலிருந்து மனவ்ரி  வரை 18 கி.மீ ஆட்டோவில் சென்றிருந்தேன்.  அந்த ஆட்டோ காரர் 4 கி.மீ முன்பே சரியான இடத்திற்கு வந்து விடுடோம் என்று பொய் சொல்லி இறக்கிவிட்டு பணத்தையும் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். வட இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் மட்டுமே ஊர் பெயர் பலகைகளில் ஆங்கிமும் இடம் பெற்றிருக்கும் சிறிய நகரங்களிலெல்லாம் ஹிந்தியில் மட்டுமே எழுதியிருக்கும். ஹிந்தி படிக்கத்தெரியாத பலவீனத்தால் அங்குள்ளவர்களிடம் விசாரித்து பிறகொரு ஆட்டோ பிடித்து சேர வேண்டிய இடத்திற்கு வட இந்தியனிடம் ஏமாந்த தமிழனாக சென்றேன்.  ஏமாற்றியவன் ஒரு புரம் இருந்தாலும் ஹிந்தி படிக்கத் தெரியாமல் ஏமாந்தது என் தவறு தானே....

  கேரளா சென்றால் மலையாளம் தெரிந்திருக்க வேண்டும், கர்நாடகா சென்றால் கனடம் தெரிந்திக்க வேண்டும், ஆந்திர சென்றால் தெலுங்கு தெரிந்திருக்க வேண்டும் இருப்பினும்  இம் மாநிலங்களில் ஆங்கிலம் எடுபடும். வட இந்தியாவில் பல மாநிலங்களில் ஹிந்தி அல்லாமல் மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, காஷ்மீரி பேன்ற பல மொழிகள் பேசப்படுகிறது. வட இந்தியாவில் ஹிந்தி தெரியாத பெரும்பான்மையான மக்கள் தங்கள் தாய் மொழி மட்டுமே தெரிந்து வாழ்ந்துவருகின்றனர். மேலும், தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநிலத்தவர்கள் பலரும் தங்கள் வாழ்வாதரத்திற்காக தமிழையும் கற்று வாழ்ந்து வருகின்றனர்.

   இந்திய அரசியலமைப்பு உருவாகும் போது மாதராஸ் இந்தியாவின் தலைநகரமாக இருந்திருந்தால் தமிழ் இந்தியாவிற்கே தாய் மொழியாக இருந்திருக்கும்.

  இந்தியாவின் தாய்மொழி இந்தி என்பதற்காக இந்தியையும்  வேறு எந்த மொழியையும் கட்டாயம் படிக்க வேண்டுமென்பதில்லை. 

  மொழிக்கல்வியும் தொழிற்கல்வியும் வேறு வேறு. படிப்பறிவே இல்லாத பல லாரி ஓட்டுனர்கள் இந்தியவின் ஏழு எட்டு மொழிகள் சரளாமாக பேசுகின்றனர். தேவையிருந்தால் தேவைப்படும் மொழியை எந்த வயதிலும் கற்றுக்கொள்ளலாம்.

  தமிழகத்தை பெருத்தவரை இப்போதும் இரண்டு தலைமுறை மக்களுக்கு தமிழ் மட்டுமே தெரியும். ஆகவே, இந்த தலைமுறை வாழ நமது தாய் மொழியான தமிழை கட்டாயமான மொழிப் பாடமாகவும் ஆங்கிலத்தை இராண்டாவது மொழிப்பாடமாகவும் மூன்றாவதாக தேவைப்பட்டால்
 நம் விருபத்தின் படி பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுவதும் சிறந்த கல்வி முறையாக இருக்கும் என்பது எனது கருத்து.

ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் ஆயிரம் கருத்துக்களிலிருக்கலாம்!
 தமிழனுக்கு தமிழ் மட்டுமே முதல் நோக்கம்!!

N2R நந்தகுமார்

வள்ளலார் கூறும் 42 வகை பாவங்கள்

பாவம் செய்யாதிரு மனமே!
நாளும் பாவம் செய்யாதிரு மனமே! மனமே!!

1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.

2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.

3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.

4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.

5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.

6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.

7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.

8. தருமம் பாராது தண்டிப்பது.

9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.

10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.

11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.

12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.

13. ஆசை காட்டி மோசம் செய்வது.

14. பொது வழியை மூடி அடைப்பது.

15. வேலை வாங்கிக்கொண்டு கூலி குறைப்பது.

16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.

17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.

18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.

19. நட்டாற்றில் கை நழுவுவது.

20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.

21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.

22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.

23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.

24. கருவைக் கலைப்பது.

25. குருவை வணங்கக் கூசி நிற்பது.

26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.

27. கற்றவர் தம்மிடம் கடுப்போடு நடப்பது.

28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.

29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.

30. ஊன் சுவை உண்டு உடல் வளர்ப்பது.

31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.

32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.

33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.

34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.

35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.

36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.

37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.

38. சிவனடியாரைச் சீறி வைவது.

39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.

40. சுத்த ஞானியரைத் தூஷணம் செய்வது.

41. தந்தை தாய் மொழியைக் தள்ளி நடப்பது.

42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.

N2R நந்தகுமார்
Channel N2R

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...