Friday 6 April 2012

தியாகி தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடமான சங்ககிரியில், தமிழக அரசு சார்பில், நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது.

தியாகி தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடமான சங்ககிரியில், தமிழக அரசு சார்பில், நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது.

"ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட தியாகி தீரன் சின்னமலைக்கு, சங்ககிரியில் விரைவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்' என்று, முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் அறிவித்தார்.

தீரன் சின்னமலை வரலாறு: தீரன் சின்னமலை, 1756ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி, ஈரோடு அருகே மேலப்பாளையம் என்ற ஊரில் பிறந்தவர். கொங்கு மண்டலத்தில் ஆட்சி செய்தவர். அவரது, 1,000 பேர் கொண்ட படை வலிமை மிக்கதாகக் கருதப்பட்டது. அவரது படை, பிரான்ஸ் ராணுவத்திடம் போர்ப் பயிற்சி பெற்றது. வெள்ளையர்களுடன், 1801, 1802, 1804 ஆகிய ஆண்டுகளில், கிழக்கிந்திய கம்பெனியுடன் நடந்த சண்டையில், திப்பு சுல்தானின் படை வெற்றிபெற தீரன் சின்னமலையும், அவரது படை வீரர்களும் துணை நின்றனர். திப்பு சுல்தான் மறைவுக்குப் பின், ஈரோடு அருகே ஓடாநிலை என்ற இடத்தில் கோட்டை அமைத்து, வெள்ளையர்களுக்கு சவாலாக விளங்கினார். பின், வெள்ளையர்களின் பீரங்கி தாக்குதலில் இருந்து தப்ப, பழனி அருகிலுள்ள கருமலையில் தங்கி, கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டவர். தீரன் சின்னமலையை போரின் மூலம் வெல்ல முடியாததால், வெள்ளையர்கள் சூழ்ச்சி மூலம் அவரைக் கைது செய்து, சங்ககிரி கோட்டையில் வைத்து, 1805ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி ஆடிப்பெருக்கு தினத்தன்று தூக்கிலிட்டனர். வெள்ளையனை எதிர்த்துப் போரிட்டு உயிர் நீத்த தீரன் சின்னமலையை, கவுண்டர் சமுதாயத்தினர் தியாகியாகவும், போர் வீரனாகவும் கொண்டாடி வருகின்றனர்.

நினைவுச் சின்னங்கள்
* சென்னையில் தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
* கடந்த 95ம் ஆண்டு, காங்கேயத்தில் நினைவு விழா நடத்தப்பட்டு, அவரது வாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர்.
* தீரன் சின்னமலை நினைவு தினமான ஆடி 18ம் நாளை, அரசு விழாவாக அனுசரிக்க, 2003ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.
* ஈரோடு மாவட்டம், அரச்சலூர் கிராமம், ஓடாநிலையில், 30 லட்ச ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டு, 2006ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
Ruler can do anything, so Born to rule the Galaxy

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்!

அச்சச்சோ! மறந்து போச்சே... இன்று நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கியம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் நினைவாற்றல் இல்லாதது தான். நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

* வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களைப் பயன்படுத்தலாம்.

* பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும்.

அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.

* அதேபோல இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.

* ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.

* சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.

* கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் உப்பு அதிக அளவில் உள்ளது. இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.

மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், கவலைகள்தான். இரத்த ஓட்டக் குறைவும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும். மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
Ruler can do anything, so Born to rule the Galaxy

இரத்த அழுத்தத்தை குணமாக்கும் சீரகம்

 ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும் திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்து பருகவேண்டும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் அதிகரிக்காது. சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும். சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

Ruler can do anything, so Born to rule the Galaxy

வசப்படுத்தும் வசம்பு!

 ஈரப்பசை உள்ள நிலப்பரப்புகளில் வளரக்கூடிய ஒருவிதப் பூண்டு வகையைச் சேர்ந்த மூலிகைத் தாவரமே வசம்பு. உக்கிரம், வசம், வசை, வேணி, சுடுவான், உரைப்பான், பேர் சொல்லா மருந்து, பிள்ளை மருந்து, பிள்ளை வளர்த்தி ஆகிய மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு!

சுத்தம் செய்து நன்கு வெயிலில் உலர்த்தி, காய்ந்த நிலையில் இருக்கும் வசம்பு வேர்கள் நல்ல மணம் வீசும். வாசத்துக்கு மட்டும் அல்ல... உடலை வசமாக்கும் மருத்துவக் குணங்களுக்கும் வசம்பில் வரம்பு இல்லை.
குழந்தைகளின் வயிற்று வலி நீங்க...

வசம்பை விளக்குத் தீயில் சுட்டுக் கரியாக்க வேண்டும். கரியானத் தூளைச் சிறிது அளவு (100 மி.கி.) எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு பாலாடை அளவு தாய்ப்பால் சேர்த்துக் கலக்கி குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை குணமாகும்.
திக்குவாய் அகல...
குழந்தைகளுக்கு ஏற்படும் நாக்குத் தடுமாற்றம் (திக்குவாய்), வாயில் நீர் ஒழுகுதல் போன்ற பிரச்னைகள் குணமாக வேண்டும் எனில், விளக்குத் தீயில் சுட்ட வசம்பைத் தாய்ப்பால் விட்டு அரைத்து அந்தப் பசையை சிறிதளவு நாக்கில் தடவிவர வேண்டும்.
வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்த...

வசம்பைச் சுட்டு சாம்பலாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். சுட்ட வசம்புச் சாம்பலை சிறிதளவு எடுத்து தேனில் குழைத்து நாக்கில் தடவினால் வாந்தி உணர்வு நன்கு கட்டுப்படும்.

Ruler can do anything, so Born to rule the Galaxy

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...