Friday 7 June 2019

தெய்வத்தின் பார்வையில்......


எது நல்லநேரம் ?


• நல்லதை நினைக்கும் போது

• நல்லதைப் பார்க்கும் போது

• நல்லதைக் கேட்கும் போது

• நல்லதைப் பேசும் போது


எது இராகு காலம் ?


• அகங்காரம் கொள்ளும் நேரம்

• பாசம் கண்களை மறைக்கும் நேரம்

• ஆசைகள் எல்லையை மீறும் நேரம்

• கோபங்கள் உச்சத்தைத் தொடும் நேரம்

• தேகம் கவர்ச்சியில் மூழ்கும் நேரம்


எது குளிகை ?


• கவலைப்படும் நேரம்

• பயப்படும் நேரம்

• கலங்கும் நேரம்

• முயலாத நேரம்


எது எமகண்டம் ?


• பொறாமைப்படும் நேரம்

• புறம் கூறும் நேரம்

• கோள் சொல்லும் நேரம்

• சதி செய்யும் நேரம்


எது பிரம்மமுகூர்த்தம் ?


• தாய் தந்தையை ஆன்மா என உணர்ந்து அவர்களை மதித்து நினைக்கும் நேரம்

• கடமையில் வழுவாத நேரம்

• அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம்


எது சுப முகூர்த்தம் ?


• சுயநலம் கருதாது பிறருக்கு உதவி செய்யும் நேரம்..

• சம்பாதிப்பதில் கொஞ்சமாவது தானம் செய்யும் நேரம்..


எது சிறந்த ஞானம்?


பிரிந்து வாழ்வதைவிட புரிந்து வாழ்வது.


துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...