Tuesday 11 October 2011

திருப்பூர் சிறப்பு




கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி நகரம் திருப்பூர். தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. பின்னலாடைகளுக்குப் பெயர்போன திருப்பூர், தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை நகரின் அருகே அமைந்துள்ளது. இங்கு பின்னலாடைகள் மற்றும் பனியன் ரக ஆடைகளுக்காக 10ம் நம்பரிலிருந்து 100ம் நம்பர் வரையான நூல் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. டாலர் நகரம், பின்னலாடை நகரம், பருத்தி நகரம் என்றழைக்கப்படும் திருப்பூர், பனியன் ஆடைகளுக்கான மையமாக திகழ்கிறது.

இந்திய பொருளாதாரத்தில் திருப்பூரின் பனியன் தொழிற்சாலைகள் அதிக லாபம் உடையதாக விளங்கி வருகின்றன. இந்தியாவில் அதிக அளவில் அந்நிய செலாவணி ஈட்டித்தரும் நகர்களில் திருப்பூரும் ஒன்று. திருப்பூரிலிருந்து பல விதமான ஜவுளி ரகங்கள், ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் பின்னாலாடை ஏற்றுமதியில் 90 சதவீதம் திருப்பூரிலிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நகரின் குறுக்கே நொய்யல் ஆறு ஓடுகிறது.


பரப்பளவு : 41500 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை : 346,551

அமெரிக்காவில் பாரதிக்கு பரதாஞ்சலி


 
சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் சார்பில் பாரதிக்கு பரதாஞ்சலி என்னும் தலைப்பில் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நடனக் கலைஞர் பத்மஸ்ரீ குரு சரோஜா வைத்தியநாதனும் அவரது மாணவர்களும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தினர். இவ்விழாவிற்கான நடனங்களை சரோஜா வைத்தியநாதனே இயக்கி இருந்தார். மகாகவி பாரதியாரின் கவிதைகளை மையமாகக் கொண்டு நடன நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. பெண்ணுரிமை, பெண் விடுதலை, வாழ்வின் மதிப்பு உள்ளிட்ட கருத்துக்களை வெளிபடுத்தும் வகையில் நடன கலைஞர்களின் பாவனைகள் அமைந்திருந்தது. பாரதியில் உணர்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்திய நடன கலைஞர்களை பார்வையாளர்கள் வெகுவாகப் பாராட்டினர். இவ்விழாவில் தமிழ்ச் சங்க உருப்பினர்கள் மட்டுமின்றி, கலா ரசிகர்கள் பலரும் தங்களின் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

புடவையும், ஜாக்கெட்டும் பறக்குது பண்ருட்டியில்! : தே.மு.தி.க., பெண் வேட்பாளர் கைது

கடலூர் : வாக்காளர்களுக்கு அன்பளிப்பு கொடுக்க, புதுச்சேரியிலிருந்து ஆட்டோவில் புடவை மற்றும் சட்டைகளை வாங்கி வந்த, பண்ருட்டி, தே.மு.தி.க., கவுன்சிலர் பெண் வேட்பாளரை, போலீசார் கைது செய்தனர். கடலூர் - பண்ருட்டி சாலையில், சாவடியிலிருந்து பண்ருட்டி சாலைக்குத் திரும்பிய, புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட ஆட்டோவில், சேலையால் கட்டப்பட்ட, 10 மூட்டைகளும், பெண் ஒருவரும் இருந்ததை, அச்சாலையில் பாதுகாப்பில் இருந்த போலீசார் பார்த்து நிறுத்தினர். சோதனை செய்ததில், 335 சட்டைகளும், 182 புடவைகளும் இருந்தன.

அப்பெண், பண்ருட்டி, தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த முருகன் மனைவி சவுமியா என்பதும், பண்ருட்டி நகராட்சி 27வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்பதும் தெரிந்தது. புடவை, சட்டைகளின் மதிப்பு, 19 ஆயிரம் ரூபாய். பண்ருட்டி போலீசார், சவுமியா மற்றும் ஆட்டோ டிரைவரை கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.

எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்ட வக்கீல்கள்



கோவை : துடியலூர் போலீஸ் ஸ்டேஷனில் வக்கீலை தாக்கிய பெண் போலீஸ் எஸ்.ஐ., உள்பட ஐந்து போலீசாரை, கைது செய்ய வலியுறுத்தி எஸ்.பி. அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டனர். கோவை, துடியலூரைச் சேர்ந்தவர் வக்கீல் ஆனந்தீஸ்வரன். கடந்த 7ம் தேதி சிவில் வழக்கு ஒன்றுக்காக, துடியலூர் போலீஸ் ஸ்டேஷன் சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, தாக்குதலில் முடிந்தது. சிகிச்சைக்காக அவர், தனியார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. எஸ்.பி., நடத்திய விசாரணைக்குப்பின் பெண் எஸ்.ஐ.,உள்பட ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டனர்.
இச்சூழலில், வக்கீல் தாக்கப்பட்டதற்கு மேல் நடவடிக்கை எடுக்க வக்கீல்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் நேற்று நடந்தது. வக்கீல்கள் சங்கத் தலைவர் நந்தகுமார், செயலாளர் ரிச்சர்ட், பொருளாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏற்கனவே, பெண் எஸ்.ஐ.,ஒருவரால்,பார்வை குறைபாடுடைய வக்கீல் ரபீக் கடுமையாக தாக்கப்பட்டார். இதற்கு நியாயம் கேட்டு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம், மறியல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு வக்கீல், ஸ்டேஷனில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். இதை கண்டிக்கும் வகையில் வக்கீல்கள் பேசினர்.
இதன்பின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்: வக்கீலை தாக்கிய பெண் எஸ்.ஐ., உள்ளிட்ட ஐந்து பேரை சஸ்பென்ட் செய்யப்பட்டதோடு, அவர்களை கைது செய்து சிறையில்அடைக்க வேண்டும். அதுவரை கோர்ட் புறக்கணிப்பு நடக்கும். கைது நடக்கும் வரை கோர்ட்டுக்குள் போலீசார் நுழையவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.
போலீஸ் ஸ்டேஷனில் வக்கீல் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதற்காக சீனியர் வக்கீல்கள் ஞானபாரதி, சஞ்சையன், முருகேசன் கொண்ட சட்ட ஆலோசனைக்குழு அமைக்கப்படும்.என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வக்கீல்கள் சங்கத் தலைவர் நந்தகுமார் தலைமையில் 400க்கும், மேற்பட்ட வக்கீல்கள் போலீசாரை கண்டித்து கோஷமிட்டபடி, ஊர்வலமாக சென்று எஸ்.பி.,அலுவலகத்தை முற்றுகையிட்டனர். காலை 12.00 மணிக்கு துவங்கிய முற்றுகைப் போராட்டம் மாலை வரை தொடர்ந்தது. கோவை எஸ்.பி.,உமா, கிருஷ்ணகிரி ஆகியோர் வக்கீல்களுடன் பேச்சு நடத்தினர். சமாதானமடையாத வக்கீல்கள் தொடர்ந்து போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர்.
பகல் 2.00 மணிக்கு டி.ஆர்.ஓ.,கற்பகம் பேச்சு நடத்தி பிரச்னையை தீர்த்துக் கொள்ளலாம் என்றார். வக்கீல்கள் இதை ஏற்கவில்லை. இதனைத்தொடர்ந்து எஸ்.பி.,அறையில் அதிகாரிகளின் ஆலோசனை மேற்கொண்டனர். மாலை 5.00 மணிவரை முடிவு கிடைக்கவில்லை.
போராட்டத்துக்கு தலைமை தாக்கிய வக்கீல் சங்க தலைவர் நந்தகுமார் கூறியது: போலீஸ் ஸ்டேஷனில் வக்கீல் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. தற்போதும் அவர் மருத்துவமனையில் சீரியசாக உள்ளார். இதற்காக போலீசாரை கைது செய்ய வேண்டும். முடியாவிட்டால் எஸ்.பி.,அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ள எங்களை கைது செய்ய வேண்டும். இச்சம்பவத்தை கண்டித்து காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்பு நடக்கும். வக்கீலை தாக்கிய போலீசாரை கைது செய்யும் வரை கோர்ட்டுக்குள் போலீசாரை நுழைய விடப்போவதில்லை, என்றார்.
கோவையில் முதன்முதலாக எஸ்.பி.,அலுலகத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டு, சரமாரியாக கோஷமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போக்குவரத்து மாற்றம்: வக்கீல்கள் ஊர்வலமாக சென்று எஸ்.பி.,அலுவலகத்தை முற்றுகையிட்டு,கோஷமிட துவங்கியதும் ஸ்டேட் பேங்க் ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பஸ்கள் திருச்சிரோடு வழியாக திருப்பிவிடப்பட்டது. இதனால் பஸ்சுக்காககாத்திருந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். காலை 12.00 மணிக்கு நிறுத்தப்பட்ட பஸ்கள் மாலை வரை இவ்வழியாக விடவில்லை.
வக்கீல்களுக்கு குடிநீர், உணவு வழங்கல்: போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்,பெண் வக்கீல்கள் கடும் வெயிலில் தரையில் உட்கார்ந்து கோஷமிட்டனர். இதனைத்தொடர்ந்து வக்கீல்கள் சங்கம் நடத்தும் உணவுக்கூடத்தில் இருந்து பெட்டி பெட்டியாக குடிநீர் பாட்டில்கள் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டது. மதிய உணவும் பொட்டலங்களில் விநியோகிக்கப்பட்டது. பிஸ்கட் பாக்கெட்களும் தரப்பட்டன.
ஆனாலும், போலீசார் கடும் வெயிலை பொருட்படுத்தாமல், எஸ்.பி.,அலுவலகத்துக்குள் வக்கீல்களை அனுமதிக்காமல் காவல் காத்தனர். வக்கீல்கள் தொடர்ந்து கோஷமிட, மாலை 5.00 மணி அளவில் டி.ஐ.ஜி.,பாலநாகதேவியும், கலெக்டரும் எஸ்.பி.,அலுவலகம் வந்தனர். இவர்களும்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வக்கீல்களுடன் பேச்சு நடத்தினர். கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை வக்கீல்கள் முன்வைத்தனர்.

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...