Friday 7 August 2020

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2020 ல் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன வெற்றி



Published by
Channel N2R
07.08.2020 4:30 am

   கலைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான 9 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 2020 ல் திட்டமிடபட்டிருந்தது. ஆனால், கொரானோ வைரஸ் பாதிப்பால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் 05.08.2020 புதன்கிழமை அன்று நடைபெற்றது.

    மொத்தமுள்ள 225 எம்.பிக்களில் 196 பேர் தேர்தல் மூலமும், 29 பேர் நியமன எம்.பிக்களாகவும் தேர்வு செய்யப்படுவர். இலங்கையின் 22 மாவட்டங்களில் 12,985 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு  இத் தேர்தல் நடைபெற்றது.

   இத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 06.08.2020 வியாழக்கிழமை நடைபெற்று 07.08.2020 இன்று அதிகாலையில் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளது.

   1,62,63,885 மொத்த வாக்காளர்களை  கொண்ட இலங்கையில் 1,23,43,302 வாக்குகள் (75.8%) பதிவாகியுள்ளது. பதிவான வாக்குகளில் 1,15,98,929  செல்லத்தக்க வாக்குகளும் 7,44,373 செல்லாத வாக்குகளாகவும் பதிவாகி இருந்தது.

  தேர்தல் நடைபெற்ற 196 இடங்களில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) 128 இடங்களிலும் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 47 இடங்களிலும் பிற கட்சிகள் 21 இடங்களிலும்வெற்றி பெற்றுள்ளது.

  இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

N2R நந்தகுமார்
Channel N2R

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...