Wednesday 23 December 2020

தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகளாக அமைந்துள்ள ஊர்கள்



_1.திருவள்ளூர் மாவட்டம்_
    🏛கும்மிடிப்பூண்டி
    🏛பொன்னேரி
    🏛திருத்தணி
    🏛திருவள்ளூர்
    🏛பூந்தமல்லி
    🏛ஆவடி

_2.சென்னை மாநகரம்_
    🏛மதுரவாயல்
    🏛அம்பத்தூர்
    🏛மாதவரம்
    🏛திருவொற்றியூர்
    🏛ராதாகிருஷ்ணன் நகர்
    🏛பெரம்பூர்
    🏛கொளத்தூர்
    🏛வில்லிவாக்கம்
    🏛திரு. வி. க நகர்
    🏛எழும்பூர்
    🏛ராயபுரம்
    🏛துறைமுகம்
    🏛சேப்பாக்கம்
    🏛ஆயிரம் விளக்கு
    🏛அண்ணா நகர்
    🏛விருகம்பாக்கம்
    🏛சைதாப்பேட்டை
    🏛தி நகர்
    🏛மயிலாப்பூர்
    🏛வேளச்சேரி
    🏛ஆலந்தூர்

_3.செங்கல்பட்டு மாவட்டம்_
    🏛சோழிங்கநல்லூர்
    🏛பல்லாவரம்
    🏛தாம்பரம்
    🏛செங்கல்பட்டு
    🏛திருப்போரூர்
    🏛செய்யூர்
    🏛மதுராந்தகம்

_4.காஞ்சிபுரம் மாவட்டம்_
    🏛திருப்பெரும்புதூர்
    🏛உத்திரமேரூர்
    🏛காஞ்சிபுரம்

_5.ராணிப்பேட்டை மாவட்டம்_
    🏛அரக்கோணம்
    🏛சோளிங்கர்
    🏛ராணிப்பேட்டை
    🏛ஆற்காடு

_6.வேலூர் மாவட்டம்_
    🏛காட்பாடி
    🏛வேலூர்
    🏛அணைக்கட்டு
    🏛கீழ்வைத்தியணான்குப்பம்
    🏛குடியாத்தம்

_7.திருப்பத்தூர் மாவட்டம்_
    🏛வாணியம்பாடி
    🏛ஆம்பூர்
    🏛ஜோலார்பேட்டை
    🏛திருப்பத்தூர்

_8.கிருஷ்ணகிரி மாவட்டம்_
    🏛ஊத்தங்கரை
    🏛பர்கூர்
    🏛கிருஷ்ணகிரி
    🏛வேப்பனஹள்ளி
    🏛ஓசூர்
    🏛தளி

_9.தர்மபுரி மாவட்டம்_
    🏛பாலக்கோடு
    🏛பென்னாகரம்
    🏛தர்மபுரி
    🏛பாப்பிரெட்டிப்பட்டி
    🏛அரூர்

_10.திருவண்ணாமலை மாவட்டம்_
    🏛செங்கம்
    🏛திருவண்ணாமலை
    🏛கீழ்பென்னாத்தூர்
    🏛கலசபாக்கம்
    🏛போளூர்
    🏛ஆரணி
    🏛செய்யாறு
    🏛வந்தவாசி

_11.விழுப்புரம் மாவட்டம்_
    🏛செஞ்சி
    🏛மயிலம்
    🏛திண்டிவனம்
    🏛வானூர்
    🏛விழுப்புரம்
    🏛விக்கிரவாண்டி

_12.கள்ளக்குறிச்சி மாவட்டம்_
    🏛திருக்கோயிலூர்
    🏛உளுந்தூர்பேட்டை
    🏛ரிஷிவந்தியம்
    🏛சங்கராபுரம்
    🏛கள்ளக்குறிச்சி

_13.சேலம் மாவட்டம்_
    🏛கங்கவள்ளி
    🏛ஆத்தூர்
    🏛ஏற்காடு
    🏛ஓமலூர்
    🏛மேட்டூர்
    🏛எடப்பாடி
    🏛சங்ககிரி
    🏛மேற்கு சேலம்
    🏛வடக்கு சேலம்
    🏛தெற்கு சேலம்
    🏛வீரபாண்டி

_14.நாமக்கல் மாவட்டம்_
    🏛ராசிபுரம்
    🏛சேந்தமங்கலம்
    🏛நாமக்கல்
    🏛பரமத்தி வேலூர்
    🏛திருச்செங்கோடு
    🏛குமாரபாளையம்

_15.ஈரோடு மாவட்டம்_
    🏛கிழக்கு ஈரோடு
    🏛மேற்கு ஈரோடு
    🏛மொடக்குறிச்சி
    🏛பெருந்துறை
    🏛பவானி
    🏛அந்தியூர்
    🏛கோபிசெட்டிபாளையம்
    🏛பவானிசாகர்

_16.திருப்பூர் மாவட்டம்_
    🏛தாராபுரம்
    🏛காங்கேயம்
    🏛அவிநாசி
    🏛வடக்கு திருப்பூர்
    🏛தெற்கு திருப்பூர்
    🏛பல்லடம்
    🏛உடுமலைப்பேட்டை
    🏛மடத்துக்குளம்

_17.நீலகிரி மாவட்டம்_
    🏛உதகமண்டலம்
    🏛கூடலூர்
    🏛குன்னூர்

_18.கோயம்புத்தூர் மாவட்டம்_
    🏛மேட்டுப்பாளையம்
    🏛சூலூர்
    🏛கவுண்டம்பாளையம்
    🏛வடக்கு கோயம்புத்தூர்
    🏛தொண்டாமுத்தூர்
    🏛தெற்கு கோயம்புத்தூர்
    🏛சிங்காநல்லூர்
    🏛கிணத்துக்கடவு
    🏛பொள்ளாச்சி
    🏛வால்பாறை

_19.திண்டுக்கல் மாவட்டம்_
    🏛பழநி
    🏛ஒட்டன்சத்திரம்
    🏛ஆத்தூர்
    🏛நிலக்கோட்டை
    🏛நத்தம்
    🏛திண்டுக்கல்
    🏛வேடசந்தூர்

_20.கரூர் மாவட்டம்_
    🏛அரவக்குறிச்சி
    🏛கரூர்
    🏛கிருஷ்ணராயபுரம்
    🏛குளித்தலை

_21.திருச்சிராப்பள்ளி மாவட்டம்_
    🏛மணப்பாறை
    🏛ஸ்ரீரங்கம்
    🏛மேற்கு திருச்சி
    🏛கிழக்கு திருச்சி
    🏛திருவெறும்பூர்
    🏛லால்குடி
    🏛மண்ணச்சநல்லூர்
    🏛முசிறி
    🏛துறையூர்

_22.பெரம்பலூர் மாவட்டம்_
    🏛பெரம்பலூர்
    🏛குன்னம்

_23.அரியலூர் மாவட்டம்_
    🏛அரியலூர்
    🏛ஜெயங்கொண்டம்

_24.கடலூர் மாவட்டம்_
    🏛திட்டக்குடி
    🏛விருத்தாசலம்
    🏛நெய்வேலி
    🏛பண்ருட்டி
    🏛கடலூர்
    🏛குறிஞ்சிப்பாடி
    🏛புவனகிரி
    🏛சிதம்பரம்
    🏛காட்டுமன்னார்கோயில்
    
_25.நாகப்பட்டினம் மாவட்டம்_
    🏛சீர்காழி
    🏛மயிலாடுதுறை
    🏛பூம்புகார்
    🏛நாகப்பட்டினம்
    🏛கீழ்வேளூர்
    🏛வேதாரண்யம்
    
_26.திருவாரூர் மாவட்டம்_
    🏛திருத்துறைப்பூண்டி
    🏛மன்னார்குடி
    🏛திருவாரூர்
    🏛நன்னிலம்
    
_27.தஞ்சாவூர் மாவட்டம்_
    🏛திருவிடைமருதூர்
    🏛கும்பகோணம்
    🏛பாபநாசம்
    🏛திருவையாறு
    🏛தஞ்சாவூர்
    🏛ஒரத்தநாடு
    🏛பட்டுக்கோட்டை
    🏛பேராவூரணி

_28.புதுக்கோட்டை மாவட்டம்_
    🏛கந்தர்வகோட்டை
    🏛விராலிமலை
    🏛புதுக்கோட்டை
    🏛திருமயம்
    🏛ஆலங்குடி
    🏛அறந்தாங்கி

_29.சிவகங்கை மாவட்டம்_
    🏛காரைக்குடி
    🏛திருப்பத்தூர்
    🏛சிவகங்கை
    🏛மானாமதுரை

_30.மதுரை மாவட்டம்_
    🏛மேலூர்
    🏛கிழக்கு மதுரை
    🏛சோழவந்தான்
    🏛வடக்கு மதுரை
    🏛தெற்கு மதுரை
    🏛மத்திய மதுரை
    🏛மேற்கு மதுரை
    🏛திருப்பரங்குன்றம்
    🏛திருமங்கலம்
    🏛உசிலம்பட்டி
    
_31.தேனி மாவட்டம்_
    🏛ஆண்டிபட்டி
    🏛பெரியகுளம்
    🏛போடிநாயக்கனூர்
    🏛கம்பம்

_32.விருதுநகர் மாவட்டம்_
    🏛ராஜபாளையம்
    🏛திருவில்லிபுத்தூர்
    🏛சாத்தூர்
    🏛சிவகாசி
    🏛விருதுநகர்
    🏛அருப்புக்கோட்டை
    🏛திருச்சுழி

_33.ராமநாதபுரம் மாவட்டம்_
    🏛பரமக்குடி
    🏛திருவாடானை
    🏛ராமநாதபுரம்
    🏛முதுகுளத்தூர்

_34.தூத்துக்குடி மாவட்டம்_
    🏛விளாத்திகுளம்
    🏛தூத்துக்குடி
    🏛திருச்செந்தூர்
    🏛ஸ்ரீவைகுண்டம்
    🏛ஒட்டப்பிடாரம்
    🏛கோவில்பட்டி

_35.தென்காசி மாவட்டம்_
    🏛சங்கரன்கோவில்
    🏛வாசுதேவநல்லூர்
    🏛கடையநல்லூர்
    🏛தென்காசி
    🏛ஆலங்குளம்

_36.திருநெல்வேலி மாவட்டம்_
    🏛திருநெல்வேலி
    🏛அம்பாசமுத்திரம்
    🏛பாளையங்கோட்டை
    🏛நாங்குநேரி
    🏛ராதாபுரம்

_37.கன்னியாகுமரி மாவட்டம்_
    🏛கன்னியாகுமரி
    🏛நாகர்கோவில்
    🏛குளச்சல்
    🏛பத்மநாபபுரம்
    🏛விளவங்கோடு
    🏛கிள்ளியூர்

Channel N2R 

Friday 11 December 2020

ஏழை மக்களின் பசியாற்றிய மக்கள் சேவகர் சுப்பிரமணியம் சாந்தியடைந்தார்! சாந்தி கியர்ஸ் அறங்காவலர் மரணம்!!


கோவை : பல்வேறு விதங்களில் மக்களுக்கு சேவை செய்து வந்த கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (வயது 78) இன்று உயிரிழந்தார்.

இவர் கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை 1972 துவங்கி, இயந்திர உதிரி பாகங்களை பலவேறு நாடுகளுக்கு தயாரித்து கொடுத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்தவர் சுப்ரமணியம்.

கடந்த 1996 ம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பினை சுப்பிரமணியம் துவங்கினார்.
இந்த அமைப்பின் அறங்காவலராக இருந்து வந்தார் சுப்ரமணியம். சாந்தி கியர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வேறு நிறுவனத்திற்கு விற்கபட்டது.

சாந்தி சோசியல் சர்வீஸ் பணிகளை மட்டும் சுப்பிரமணியம் கவனித்து வந்தார்.

உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை நடத்தி லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தார்.

மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஏராளமானோர் உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர். தினமும் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவச உணவும் வழங்கப்பட்டு வருகின்றது.

சாந்தி மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் வெறும் ரூ.30 மட்டும் வசூலிக்கப்பட்டு வருகிறது. மருத்தகங்களிலும் 30 சதவீதம் விலை குறைவில் அனைத்து மருந்துகளும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் மருத்துவ ஆலோசனை பெறவும் , பரிசோதனைகள் செய்யவும்,மருந்துகள் வாங்கவும் பொது மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள். சாந்தி சோசியல் சர்வீஸ் பெட்ரோல் பங்கில், புதிய ஸ்டாக் வரும் போது என்ன விலையோ, அதே விலை அந்த ஸ்டாக் முடியும் வரை விற்பனை செய்யப்படும்.

சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பால் இலவச மின்மயானமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்தகைய சேவைகளை செய்து வந்த சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சுப்பிரமணியம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கோவை மக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

tamil


நீங்க நல்ல படிச்சா உங்க இங்கிலீஷ் டீச்சர விட நல்ல இங்கிலீஷ் பேசலாம்...

நீங்க எவ்வளவு நல்லா படிச்சாலும் உங்க தமிழ் வாத்தியரை விட சிறப்பா தமிழ் பேசமுடியாது...

-N2R நந்தகுமார் 

Tuesday 8 December 2020

N2R Inspiration Quotes 369


மற்றவர் தோள் மீது ஏறி நின்று  தன்னை உயரமாக காட்டி கொள்வதை விட, தனித்து நின்று தன் உண்மையான உயரத்தை  உலகிற்கு காட்டுவதே சிறந்தது!

-N2R நந்தகுமார்.


Tuesday 8 September 2020

அரசின் தேசிய கண் தான இணையத்தளம்

.
.
.


👇🏻கண்தானம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 👇🏻

                                 உள்நுழை / LOGIN




நான் இப்படித்தான்

உயில் எழுத விரும்புகிறேன்.!

நான் இறந்தவுடன்

என் கண்கள்

பார்வையற்ற ஒருவன் கண்களில்

பதிக்கப்பட வேண்டும்

இந்த தங்க உலகத்தை

அவன் தரிசிக்க வேண்டும்

ஆடும் அலைகள்,

வண்ணப் பறவைகள்,

அப்பாவி வண்ணத்துப் பூச்சிகள்,

மினு மினுக்கும் நட்சத்திரங்கள்,

வானவில்லை பிரசவிக்கும் மேகங்கள்,

அத்தனை அதிசயங்களையும் அவன்

தரிசிக்க வேண்டும்!

அவன் மரணமடைந்தால்

அதே கண்களை பார்வையற்ற

இன்னொருவனுக்குப் பதிக்க வேண்டும் !

இப்படியாக என் கண்கள்

ஊழியின் எல்லை வரை

யுகங்கடந்து வாழ வேண்டும்!

என் கண்கள்

என் மரணத்தை

வெல்ல வேண்டும்!”

    -N2R நந்தகுமார்




👇🏻கண்தானம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 👇🏻

                                 உள்நுழை / LOGIN



.
.
.

N2R MotivationalQuotes


#N2R_NandhakumaR_Quotes
#N2R_Quotes
#motivationalquotesoftheday
#channeln2r
#motivationalquotes
#motivationalwords

Saturday 22 August 2020

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா"

ஔவையார்,நல்வழி

நமது பாரம்பரிய வழக்கப்படி உள்ளூர் கோவிலில் சக்கரைப் பொங்கல் வைத்து, கொழுக்கட்டை செய்து இல்லாதோர்க்கு கொடுத்து கொண்டாடுவோம்.

N2R நந்தகுமார்

Friday 14 August 2020

ஆடி மாதத்துக்கும் அம்மன் வழிபாட்டுக்கும் என்ன தொடர்பு? ஆடி மாதம் கூழ் ஊற்றுவது ஏன்?

       கோழி கூவுவதற்கு முன்பே, `அம்பிகையே... ஈஸ்வரியே...' என்று பாடல் ஒலிக்கத் தொடங்கிவிட்டால் ஆடி மாதம் பிறந்துவிட்டது என்று அர்த்தம். ஆடி மாதம் அம்மனுக்கான மாதம். அம்மன் கோயில் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கிவிடும். 


    வருடத்தில் எல்லா மாதங்களும் சிறப்பானவைதாம் என்றாலும், ஆடிமாதத்துக்கு மட்டும் எந்த மாதத்துக்கும் இல்லாத தனிச்சிறப்பு உண்டு. ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் தொடங்குகிறது. உலக உயிர்கள் அனைத்தையும் காத்து அருள்புரியும் சூரியன்,  கடக ராசியில் சஞ்சரித்து தெற்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறார். எனவேதான் இதை `கற்கடக' மாதம் என்றும் குறிப்பிடுகிறோம். கடக ராசி சந்திரனுக்கு உரியது. சிவ அம்சமான சூரியன், சக்தியின் அம்சமான சந்திரனுடன் ஒன்றுசேர்ந்து கற்கடகத்தில் சஞ்சரிக்கும்போது சக்தியின் பலம் அதிகரிக்கிறது. ஆடி மாதத்தில் சிவபெருமானே சக்தியின் அம்சத்துக்குள் அடங்கிவிடுகிறார் என்பது ஐதீகம். எனவேதான், ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாகத் திகழ்கிறது.


    ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் தேவர்களின் இரவு நேரம் என்பது ஆன்மிக நம்பிக்கை. இந்தப் புண்ணிய காலத்தில் சூட்சம சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த நேரத்தில் பூஜைகள், ஜபங்கள், நீத்தார் வழிபாடு ஆகியவற்றைச் செய்தால் அதிக அளவு பலன்கிடைக்கும். `பார்வதி தேவி மலையரசன் மகளாகப் பிறந்தது ஆடி மாதம்தான்' என்கிறது தேவி பாகவதம். மதுரை மீனாட்சி அம்மன் அவதரித்ததும் ஆடி மாதமே. இதே ஆடி மாதத்தில்தான் ஆண்டாளும் அவதரித்தாள். 


     மேலும், மழைக்குரிய தெய்வமாக மாரியம்மன் திகழ்வதால், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு வரும் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. ஆடி மாதத்தில் கூழ் வார்த்தல், விளக்கு பூஜைகள், பூக்குழி இறங்குதல் போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன. ஆடிப் பூரம், ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய் என்று இந்த மாதம் முழுவதும் திருவிழாக்களுக்குப் பஞ்சமே இல்லை. 


    அம்மன் கோயில் பிரசாதங்களில் முதன்மையானவை வேப்பிலையும், எலுமிச்சைப் பழமும். இதற்குப் பின்னால், அறிவியல் காரணம் ஒன்றும் இருக்கிறது.  


    ஆடி மாதத்தில் மழைக்காலம் தொடங்குவதால் தொற்று நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புண்டு. வேப்பிலையும், எலுமிச்சைப் பழமும் இயற்கையான கிருமிநாசினிகள். இதனால் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கப்படுகின்றன. மேலும் வெப்பம் குறைவான நாள்களில் எளிதில் செரிக்கக் கூடிய உணவு கூழ். அதுமட்டுமல்ல கூழ் இயற்கையாகவே அதிக அளவு எதிர்ப்புச் சக்தியையும், வலிமையையும் உடலுக்கு வழங்கக்கூடியது. அதனால்தான் `ஆடிக்கூழ் அமிர்தமாகும்' என்று கூறுகிறார்கள்.

இது தொடர்பாக புராணக்கதை ஒன்றும் உண்டு...

  கேட்பவை அனைத்தையும் அளிக்கும் காமதேனு பசுவை, ஜமதக்னி முனிவரிடமிருந்து அபகரிக்க கார்த்தவீர்யார்ஜுனரின் மகன்கள் திட்டம் போடுகிறார்கள். ஒருதருணத்தில், முனிவரைக் கொன்று காமதேனுவைக் கவர்ந்துசென்றுவிடுகிறார்கள். கணவர் இறந்ததும் தானும் அக்னிப்பிரவேசம் செய்கிறாள் ஜமதக்னியின் மனைவி ரேணுகாதேவி. ஆனால், `தெய்வாம்சம் பொருந்திய ரேணுகா தேவியினால் உலகத்துக்கு நன்மை ஏற்படவேண்டும்' என்று நினைத்த இந்திரன், வருண பகவானிடம் மழையைப் பொழியும்படி உத்தரவிடுகிறார். மழை பெய்து தீயை அணைத்துவிடுகிறது. ஆனாலும், ரேணுகாதேவியின் உடல் முழுவதும் தீக்காயங்கள் மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.  

  தீக்காயத்தின் வெம்மையைத் தணிக்கவேண்டி, வேப்பிலையைச் சுற்றிக்கொள்கிறார் ரேணுகாதேவி. தீக்காயங்களுடன் போராடிய ரேணுகா தேவிக்குக் கிராமத்து மக்கள் கூழ் காய்ச்சிக் கொடுக்கிறார்கள். அத்துடன் வெல்லம், இளநீர் ஆகியவற்றையும் கொடுத்து உதவுகிறார்கள். உடல் முழுவதும் கொப்புளங்களுடன் போராடிக்கொண்டிருந்த ரேணுகா தேவியிடம் சிவபெருமான், ``பராசக்தியின் அம்சமான நீ மக்களை நோயிலிருந்து காக்க வேண்டும்" என்று அருள்புரிகிறார். எனவேதான் அம்மை நோயைக் குணமாக்கும் வேப்பிலைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும் கூழுக்கும் அம்மன் வழிபாட்டில் முக்கியப் பங்கு வழங்கப்படுகிறது. 


  ஆடி மாதம் செவ்வாய் கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் இருக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் நீண்ட ஆயுள் பெறவும், குழந்தை வரம் கிட்டவும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்குத் திருமணம் நடைபெறவும் ஆடி மாத விரதம் நலம் பயக்கும்.

  ஒரு குழந்தையின் இயல்பு என்ன. பகலெல்லாம் ஓடியாடித் திரிந்தாலும், இரவு வந்துவிட்டால் அந்தக் குழந்தை தன் தாயின் மடியைத்தானே தேடிச் செல்லும்... தாயின் மடியில்தானே இரவைப் பற்றிய அச்சம் நீக்கி ஆறுதலைப் பெறும்... அதுபோலவே, கால மாற்றமானது நம்முடைய வாழ்க்கையில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க, உலக மக்களாகிய நாமும் பராசக்தியின் அம்சமாக ஆங்காங்கே கோயில்களில் குடிகொண்டிருக்கும் அம்மனை நாடிச் சென்று, அவளுடைய திருவடிகளைத் தொழுது பணிந்து அருள் பெறுவோமாக...!

N2R நந்தகுமார்

Channel N2R 

இரண்டாம் குழந்தை


அரை டஜன் பிள்ளை பெற்றது அந்தக்காலம்... ஒரு பிள்ளைக்கே ஓராயிரம் முறை யோசிப்பது இந்த காலம்...

  பிள்ளை பெற்று தன் சந்ததியை காப்பாற்ற சேர்ந்தது அந்தக் காலம்...
சிற்றின்பத்திற்கு சேர்ந்து நித்திரைக்கு கேடாய் வாழ்வது இந்தக் காலம்...

  துரோகமும்  வஞ்சகமும் இல்லாதது அந்தக் காலம்...
 வஞ்சகமில்லையென்றால் வாழ முடியாது என்று பகிரங்கமாய் சொல்வது இந்த காலம்...

  வளர்ந்த பிறகு ஆணுக்கு பெண்ணும் பெண்ணும் ஆணும் வேண்டும் என்று என்னும் மனித மனதுக்கு தன் குழந்தை வளரும் போது தனிமையில் வளர்கிறதே என்ற எண்ணம் வருவதில்லை...

 பசியால் வயிற்று வலியை சொல்ல தெரியாமல் அழும் குழந்தை ஒரு நாள் உணர்ந்து  தானே உண்ண காற்றுக்கொள்ளும்...
  ஆனால், சந்தர்ப்பவதிகளால் நாளுக்கு நாள் பரிணாம வளர்ச்சியடையும் இந்த உலகில்
 தனக்கென பாசத்திற்குரியவர்களும் நம்பிக்கைக்குரியவர்களும் இல்லை என்று  தனிமையில் வளரும் குழந்தை ஒரு நாள் ஏங்கும்...

   அமைதியும் நிம்மதியும் இல்லாத வாழ்வில் பணமும் நாகரிகமும் ஒருவனை முழுமை படுத்திவிடாது.

உடன் பிறப்புகளுடன் பிறந்தவர்களுக்காக...

என்
துயரங்களின் தோழனே தேழியே....

உன்
துணையுடன்தான்
என் எல்லாவற்றையும்
நான் கடந்திருக்கிறேன்...

நான்
தனியாள் இல்லை
என்பதனை எனக்கு
உணர்த்திச்செல்லும்
தாய்கரங்களாய்
என் தலைகோதியது நீதான்

இந்த
பூமிக்கு வரும் முன்பே
என் தாயின் கருவறையில்
என்னுடன் உருவானது
நீ மட்டுமே
என் இறுதிப்பயணத்திலும்
உடன் வர தகுதியான ஒரு ஜீவன் நீதான்...

பெருங்கூட்டங்களில்  தனிமை உணர்ந்த எனக்கு
தனித்திருக்கும் வேளைகளில்
தோள் கொடுத்த தாய்மனமே நீதானே....

 நீ இருக்கும் வரை
எனக்கு தனிமையில்லை...

N2R நந்தகுமார்

Thursday 13 August 2020

தூங்கும் போது கால்களுக்கு நடுவே தலையணை வைத்து தூங்குபவரா? நீங்க பேரதிர்ஷ்டசாலிதான்! ஏன் தெரியுமா?

எவ்வளவு தான் நாள் முழுவதும் அயராது உழைத்தாலும், வீட்டிற்கு வந்து படுக்கையில் தூங்கும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கு சென்றாலும் கிடைக்காது. ஆனால் என்ன அவ்வாறு படுக்கையில் தூங்கும் போது ஆங்காங்கு சிறு வலிகளை சந்திப்போம். இதற்கு காரணம் நாம் தூங்கும் நிலை தான். ஒருவரின் முதுகெலும்பின் ஆரோக்கியத்திற்கு தூங்கும் நிலையானது மிகவும் முக்கியம். ஒரு நாளைக்கு 8 மணிநேரம் ஒரே நிலையில், அதுவும் தவறான நிலையில் தூங்கும் போது, முதுகெலும்பிற்கு போதுமான ஆதரவு கிடைக்கப் பெறாமல், அதன் விளைவாக வலி, பிடிப்பு மற்றும் உட்காயங்களை உண்டாக்கும

எனவே இரவு தூங்கும் போது சரியான நிலையில் தூங்க வேண்டியது அவசியம். எனவே தூங்கும் போது – முக்கியமாக பக்கவாட்டில் தூங்கும் போது கூட உங்கள் உடலை சரியான வழியில் நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டாம்.

மேலும் பொருத்தமான மெத்தை ஒன்றை தேர்ந்தெடுத்து, தலையணை பயன்படுத்தி முதுகெலும்பை ஆரோக்கியமான வளைவுக்கு மாற்றிவிடலாம்.

ஆரோக்கியமான தூக்கத்தினை பெற என்ன செய்யலாம்

தூங்கும் போது கால்களுக்கு இடையே தலையணையை வைத்துக் கொள்வதன் மூலம், அது ஆறுதலை அளிப்பதோடு, முழங்கால்களை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்திருப்பதன் மூலம் அழுத்தம் நீக்கப்படுகிறது.

இது உங்கள் இடுப்பு பகுதி சீரமைக்கப்படுவதை உறுதி செய்கிறது.

நன்மைகள்

முக்கிய குறிப்பு
  1. உடலின் ஆற்றலையும், மன விழிப்புணர்வையும் புதுப்பிக்க ஒரு நல்ல இரவு தூக்கம் அவசியம்.
  2. இது உங்கள் மனநிலையை மேம்படுத்தவும், அடுத்த நாளுக்கு உங்களை தயார்படுத்தவும் உதவுவது மட்டுமல்லாமல், நோயில் இருந்து மீளவோ அல்லது காயத்தில் இருந்து குணமடையவோ உதவும்.
  3. நீங்கள் தூங்கி எழுந்திருக்கும் போது, ஏதேனும் வலியை உணர்ந்தால், உடனே உங்கள் தூக்க தோரணையை சரிபார்க்கவும்.
  4. மேலும் ஒவ்வொரு இரவு தூங்கும் போதும் தூக்க தோரணையை கவனிக்க வேண்டியது அவசியம்.
  5. அதேப் போல் மறுநாள் காலையில் எழும் போது வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்.
N2R NandhakumaR
Channel N2R

Tuesday 11 August 2020

ஹிந்தி கற்பது குறித்த எமது அனுபவக் கருத்து

Published by 
N2R NandhakumaR

   2012,  13 களில் டெக்ஸ்டைல் தொழில் குறித்த அனுபவங்களுக்காக குஜராத்திலுள்ள சூரத் மற்றும் அகமதாபாத் சென்றிருந்தேன். அக் கால கட்டங்களில் எனக்கு ஹிந்தி மொழி கடுகளவும் தெரியாது. அங்கு தென் மாநிலங்களில்  பேசும் அளவில் கால் பாக மக்களுக்கு கூட ஆங்கிலம் சிறிதும் தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஹிந்தியும் குஜராத்தியும் மட்டும் தான். சாப்பிடுவதற்கும் தேநீர் அருந்துவதற்கும் ஏன் தண்ணீர் ஒரு பாட்டில் வாங்குவதற்கும் கூட ஆங்கிலத்தில் கூறி செய்கையாலும் காட்டுவேன் ஒரு உமைக்கு நிகராக. அங்கிருந்த பத்து நாட்களும் மிகவும் சிறமப்பட்டுள்ளேன் மொழி தெரியாததால்.

 அதற்கு பிறகு  சத்தீஸ்கர், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு பல முறை சென்றுள்ளேன். ஹிந்தி மொழியில் நேர்த்தியான உரையாடல் இல்லாவிட்டாலும் தேவையான அளவிற்கும்  எனது கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் அளவிற்கு கற்றுக் கொண்டு.

இருப்பினும், பத்து மாதங்களுக்கு முன்பு உத்திரப்பிரதேசம், மனவ்ரி என்ற ஊரிலுள்ள விமானப்படை தளம் செல்ல  அலாகபாத்திலிருந்து மனவ்ரி  வரை 18 கி.மீ ஆட்டோவில் சென்றிருந்தேன்.  அந்த ஆட்டோ காரர் 4 கி.மீ முன்பே சரியான இடத்திற்கு வந்து விடுடோம் என்று பொய் சொல்லி இறக்கிவிட்டு பணத்தையும் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். வட இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் மட்டுமே ஊர் பெயர் பலகைகளில் ஆங்கிமும் இடம் பெற்றிருக்கும் சிறிய நகரங்களிலெல்லாம் ஹிந்தியில் மட்டுமே எழுதியிருக்கும். ஹிந்தி படிக்கத்தெரியாத பலவீனத்தால் அங்குள்ளவர்களிடம் விசாரித்து பிறகொரு ஆட்டோ பிடித்து சேர வேண்டிய இடத்திற்கு வட இந்தியனிடம் ஏமாந்த தமிழனாக சென்றேன்.  ஏமாற்றியவன் ஒரு புரம் இருந்தாலும் ஹிந்தி படிக்கத் தெரியாமல் ஏமாந்தது என் தவறு தானே....

  கேரளா சென்றால் மலையாளம் தெரிந்திருக்க வேண்டும், கர்நாடகா சென்றால் கனடம் தெரிந்திக்க வேண்டும், ஆந்திர சென்றால் தெலுங்கு தெரிந்திருக்க வேண்டும் இருப்பினும்  இம் மாநிலங்களில் ஆங்கிலம் எடுபடும். வட இந்தியாவில் பல மாநிலங்களில் ஹிந்தி அல்லாமல் மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, காஷ்மீரி பேன்ற பல மொழிகள் பேசப்படுகிறது. வட இந்தியாவில் ஹிந்தி தெரியாத பெரும்பான்மையான மக்கள் தங்கள் தாய் மொழி மட்டுமே தெரிந்து வாழ்ந்துவருகின்றனர். மேலும், தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநிலத்தவர்கள் பலரும் தங்கள் வாழ்வாதரத்திற்காக தமிழையும் கற்று வாழ்ந்து வருகின்றனர்.

   இந்திய அரசியலமைப்பு உருவாகும் போது மாதராஸ் இந்தியாவின் தலைநகரமாக இருந்திருந்தால் தமிழ் இந்தியாவிற்கே தாய் மொழியாக இருந்திருக்கும்.

  இந்தியாவின் தாய்மொழி இந்தி என்பதற்காக இந்தியையும்  வேறு எந்த மொழியையும் கட்டாயம் படிக்க வேண்டுமென்பதில்லை. 

  மொழிக்கல்வியும் தொழிற்கல்வியும் வேறு வேறு. படிப்பறிவே இல்லாத பல லாரி ஓட்டுனர்கள் இந்தியவின் ஏழு எட்டு மொழிகள் சரளாமாக பேசுகின்றனர். தேவையிருந்தால் தேவைப்படும் மொழியை எந்த வயதிலும் கற்றுக்கொள்ளலாம்.

  தமிழகத்தை பெருத்தவரை இப்போதும் இரண்டு தலைமுறை மக்களுக்கு தமிழ் மட்டுமே தெரியும். ஆகவே, இந்த தலைமுறை வாழ நமது தாய் மொழியான தமிழை கட்டாயமான மொழிப் பாடமாகவும் ஆங்கிலத்தை இராண்டாவது மொழிப்பாடமாகவும் மூன்றாவதாக தேவைப்பட்டால்
 நம் விருபத்தின் படி பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுவதும் சிறந்த கல்வி முறையாக இருக்கும் என்பது எனது கருத்து.

ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் ஆயிரம் கருத்துக்களிலிருக்கலாம்!
 தமிழனுக்கு தமிழ் மட்டுமே முதல் நோக்கம்!!

N2R நந்தகுமார்

வள்ளலார் கூறும் 42 வகை பாவங்கள்

பாவம் செய்யாதிரு மனமே!
நாளும் பாவம் செய்யாதிரு மனமே! மனமே!!

1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.

2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.

3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.

4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.

5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.

6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.

7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.

8. தருமம் பாராது தண்டிப்பது.

9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.

10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.

11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.

12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.

13. ஆசை காட்டி மோசம் செய்வது.

14. பொது வழியை மூடி அடைப்பது.

15. வேலை வாங்கிக்கொண்டு கூலி குறைப்பது.

16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.

17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.

18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.

19. நட்டாற்றில் கை நழுவுவது.

20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.

21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.

22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.

23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.

24. கருவைக் கலைப்பது.

25. குருவை வணங்கக் கூசி நிற்பது.

26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.

27. கற்றவர் தம்மிடம் கடுப்போடு நடப்பது.

28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.

29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.

30. ஊன் சுவை உண்டு உடல் வளர்ப்பது.

31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.

32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.

33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.

34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.

35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.

36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.

37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.

38. சிவனடியாரைச் சீறி வைவது.

39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.

40. சுத்த ஞானியரைத் தூஷணம் செய்வது.

41. தந்தை தாய் மொழியைக் தள்ளி நடப்பது.

42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.

N2R நந்தகுமார்
Channel N2R

Friday 7 August 2020

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2020 ல் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன வெற்றி



Published by
Channel N2R
07.08.2020 4:30 am

   கலைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான 9 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 2020 ல் திட்டமிடபட்டிருந்தது. ஆனால், கொரானோ வைரஸ் பாதிப்பால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் 05.08.2020 புதன்கிழமை அன்று நடைபெற்றது.

    மொத்தமுள்ள 225 எம்.பிக்களில் 196 பேர் தேர்தல் மூலமும், 29 பேர் நியமன எம்.பிக்களாகவும் தேர்வு செய்யப்படுவர். இலங்கையின் 22 மாவட்டங்களில் 12,985 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு  இத் தேர்தல் நடைபெற்றது.

   இத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 06.08.2020 வியாழக்கிழமை நடைபெற்று 07.08.2020 இன்று அதிகாலையில் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளது.

   1,62,63,885 மொத்த வாக்காளர்களை  கொண்ட இலங்கையில் 1,23,43,302 வாக்குகள் (75.8%) பதிவாகியுள்ளது. பதிவான வாக்குகளில் 1,15,98,929  செல்லத்தக்க வாக்குகளும் 7,44,373 செல்லாத வாக்குகளாகவும் பதிவாகி இருந்தது.

  தேர்தல் நடைபெற்ற 196 இடங்களில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) 128 இடங்களிலும் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 47 இடங்களிலும் பிற கட்சிகள் 21 இடங்களிலும்வெற்றி பெற்றுள்ளது.

  இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

N2R நந்தகுமார்
Channel N2R

Friday 24 July 2020

ஏழு கல் விளையாட்டு | Lagori Game

காலம் மறந்த பொக்கிசம் ஏழு கல் விளையாட்டு


⚾தமிழர்கள் கண்டுபிடித்த விளையாட்டுகள் அனைத்தும் நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாச்சாரம், பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கை முறை, விடாமுயற்சி என்று ஏதேனும் ஒரு வகையில் நம்முடைய மனதிற்கும், நம்முடைய உடலிற்கும் நன்மைகளை வழங்கக்கூடிய விளையாட்டாகவே இருந்துள்ளன.

⚾கிராமங்களில் விளையாடக்கூடிய ஒரு விளையாட்டுதான் இந்த ஏழு கல் விளையாட்டு. இதனை seven stones என்றால் தான் அனைவருக்கும் தெரியும்.

எத்தனை பேர் விளையாடலாம்?

👉பத்திற்கும் மேற்பட்டோர். இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடலாம்.

தேவையான பொருட்கள் என்ன?

👉7 தட்டையான கற்கள் ( பெரிய அளவிலிருந்து சிறிய அளவு வரை வேறுபட்டவை)

👉ஒரு பந்து

எப்படி விளையாடுவது?

⚾முதலில் இரு அணிகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். எந்த அணி கற்களை அடுக்க வேண்டும் (முதலாவது அணி), எந்த அணி கற்களை களைக்க வேண்டும் (இரண்டாவது அணி) எனவும் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். இதை டாஸ் மூலமும் தீர்மானிக்கலாம்.

⚾முதலாவது அணி ஏழு கற்களையும் பெரிய கல் முதல் சிறிய கல் வரை ஒன்றன் மேல் ஒன்றாக வரிசையாக அடுக்கி வைப்பர்.

⚾'ரெடி" சொன்னவுடன் இரண்டாவது அணி கற்களின் மீது பந்தை எறிந்து அடுக்கிய கற்களை களைத்ததும் ஆட்டம் தொடங்கும்.


⚾முதலாவது அணி கற்களை அடுக்க முற்பட வேண்டும். ஆனால் இரண்டாவது அணி கற்களை அடுக்க விடாமல் அதை களைத்துக்கொண்டே இருப்பார்கள். கற்களை அடுக்க விடாமல் முதல் அணியில் உள்ள நபர்களை பந்தால் அடிப்பார்கள். அப்படி அடித்தால் இரண்டாம் அணிக்கு 1 பாயிண்ட்.

⚾முதலாம் அணி பந்தால் அடி வாங்காமல் ஏழு கற்களையும் அடுக்கிவிட்டு அதை சுற்றி வட்டம் வரைந்து விட்டால் முதல் அணி வெற்றி பெற்றதாகும்.


⚾கற்களை அடுக்கிவிட்டு வட்டம் வரைவதற்குள் இரண்டாம் அணி பந்தை எறிந்து கற்களை களைத்துவிட்டால் மீண்டும் ஆட்டம் தொடரும்.

⚾வெற்றிபெற்ற அணி மீண்டும் கற்களை அடுக்குவதா அல்லது களைப்பதா என்று தீர்மானித்து அடுத்த ஆட்டத்தை தொடங்குவர்.

பயன்கள் :

👉பொறுமை, விடாமுயற்சி கூடும்.

👉குழு ஒற்றுமை வளரும்.

👉இலக்கை அடையும் திறன் மேம்படும்.


Saturday 27 June 2020

பெண்களை திருமணத்திற்கு முன்பு ஊஞ்சலாட சொல்வது எதற்காக தெரியுமா ??

    வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.ஆனால் இப்போது இந்த பழக்கம் வெகுவாககுறைந்து விட்டது..முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் மகிழ்ச்சியாக ஆடினார்கள். இப்போது செல்போன் கையுமாகவே சுற்றுகிறார்கள். படிப்படியாய் குறைந்து தற்போது காணாமல் போய்விட்டது இந்த பழக்கம்…இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்…

   இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன. ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் விழாக்கள் இன்றும் உண்டு ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள நெகடிவ் எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றதது திருமணங்களில் ஊஞ்சல் சடங்கு’ இதன்
அடிப்படையிலேயே உருவானது.


    ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் அடையும்…நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு சைடுகளிலும் உள்ள சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. கணிணியில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய தலைமுறையினர் இந்த ஊஞ்சல் பயிற்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று
க ழுத்துவலி போன்ற பிரச்சனைகள் வராது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இது பொருந்தும்.


    தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது…மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு(ஆக்சிஜன்) வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு சுத்தமான ஆக்சிஜனை கொடுத்து இ தயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இ த ய நோய் கட்டுப்படும். ஊஞ்சல் ஆடுவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு இரத்தம் சீராக செல்லும்.

   சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இது உதவும். உணவு மண்டலம் சீரடையும்.. கோ பமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோ பம் குறையும்.. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக அமைதியாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும். பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள் வீட்டுக்குள் வரும் தேவதைகள் வீட்டின் முன் இருக்கும் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், என்று சொல்லி வைத்தார்கள்.

   ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது. இப்போது ஊஞ்சலை பார்ப்பது அரிதாக உள்ளது. வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது என்று பலரும் கூறுகின்றனர்.

N2R நந்தகுமார்
Channel N2R

Sunday 24 May 2020

உங்கள் வீட்டில், எறும்புகள் திடீரென்று கூட்டம் கூட்டமாக வருகிறதா? எறும்பு சாக்பீஸ் போட்டுட்டு அப்படியே விட்றாதீங்க! காரணத்தையும் தெரிஞ்சுக்கோங்க.


     வீடுகள் என்று இருந்தால் எறும்புகள் கட்டாயமாக வரும். இதற்கெல்லாம் காரண காரியங்கள் இருக்கின்றதா? என்ற கேள்வி உங்கள் மனதில் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது அல்ல. எறும்புகள் படை எடுத்து வருவதற்கும், காரணம் உண்டா? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் உங்களிடம் இருந்தால், இந்த பதிவை தொடர்ந்து படிக்கலாம். குடித்தனம் செய்யும் வீட்டில் திடீரென்று எரும்பு வருவதற்கு காரணம், நம் வீட்டில் உணவு பண்டங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் இருப்பதும் ஒன்று. இதைத் தவிர்த்து வெயில் காலங்களில், குளிர்ச்சியான இடங்களைத் தேடி எறும்புகள் வருவது இயற்கைதான். இவை எதுவுமே இல்லாமல் உங்கள் வீட்டு வெளிப்புறங்களில், கதவுகளுக்கு பின் பக்கங்களில், இப்படி எறும்புகள் வருவதற்கு வாய்ப்பே இல்லாத சில இடங்களில் திடீரென்று சாரைசாரையாக வரும். இந்த எறும்புகள் உங்களுக்கு எதை உணர்த்துகிறது என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள ஒரு அவசியம் இருக்கிறது. அதைப் பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

  எதிர்பாராமல் கூட்டம் கூட்டமாக உங்கள் வீட்டிற்குள் படையெடுக்கும் பிள்ளையார் எறும்பாக இருந்தாலும் சரி. கட்டெறும்பாக இருந்தாலும் சரி. யாருடைய கஷ்டத்திற்கோ, நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. அதாவது உங்கள் மேல் பாசம் வைத்துள்ள ஒருவரிடம், நீங்கள் நீண்ட நாட்களாக பேசாமல் இருக்கும் பட்சத்தில், அதை நினைவுபடுத்த கூட இந்த எறும்புகளானது உங்கள் வீட்டில் படையெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது உங்களுக்கு நெருங்கிய சொந்தமாக இருந்தாலும், தூரத்து சொந்தமாக இருந்தாலும் உங்கள் மீது உண்மையான பாசம் வைத்திருப்பவர்கள் யாரையும் நீங்கள் தள்ளி வைத்திருக்கிறீர்கள் என்பதை குறிக்கின்றது.

  

  பெண்களாக இருந்தால் கட்டாயம் அம்மா அப்பாவிடம் பேசாமல் இருக்க மாட்டீர்கள். உங்களுடைய மாமனார் மாமியார் உங்களுக்கு ஆகாதவர்கள் ஆக இருந்தாலும் கூட, அவர்கள் மனதில் உங்கள் மீது கொஞ்சம் பாசம் இருக்க வாய்ப்பு உண்டு. அவர்களின் ஏக்கத்திற்கு நீங்கள் காரணமாக இருந்தாலும், அதை வலியுறுத்த இந்த எறும்புகள் உங்கள் வீடு தேடி வரும்.

   சில ஆண்கள் தங்களுடைய தாய் தந்தையரிடம் சண்டை போட்டுக் கொண்டு பேசாமல் இருப்பவர்களும் உள்ளார்கள். அப்படி, இருக்கும் பட்சத்தில், அது மிகப்பெரிய தவறு. உங்களிடம் பாசம் வைத்திருப்பவர்கள் உங்களை நினைத்து கொண்டு ஏங்கிக் கொண்டிருக்கும் பட்சத்தில், அது பெரிய பாவத்தை கொண்டு வந்து, நம் சந்ததியினருக்கு சேர்த்து விடும் என்பதை நினைவில் கொண்டு, உங்கள் சொந்த பந்தங்களை, அலட்சியப்படுத்தாமல் நேரில் சென்று பார்க்க முடியவில்லை என்றாலும், தொலைபேசியிலாவது உரையாடும் வாய்ப்பை  ஏற்படுத்திக்கொள்ளுங்கள். சில வீடுகளில் கணவன் மனைவி பிரிந்து இருக்கும் பட்சத்தில், அவர்கள் மனதில் பாசம் இருக்க வாய்ப்பு உள்ளது. மனதிற்குள்ளேயே ஆயிரம் முறை மன்னிப்பு கேட்பவர்கள், வெளியில் ஒருமுறை மன்னிப்பு கேட்டால் போதுமே, பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

   இதை எத்தனை பேர் நம்புவீர்கள் என்பது தெரியாது. ஆனால், சித்தர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள, குறிப்புகள் தான் இவை அனைத்துமே. யாருடைய ஏக்கத்திற்கும், யாருடைய ஏமாற்றத்திற்கும் கட்டாயம் நீங்கள் காரணமாக இருக்காதீர்கள். உங்கள் மீது பாசம் வைத்து இருப்பவர்களை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், உங்களுக்கு நெருங்கிய சொந்தங்களாக இருந்தால், அவர்களிடம் பேசுவதில் எந்த தவறும் இல்லை.

  குறிப்பாக குழந்தைகளை தாத்தா பாட்டிகளிடம் பேச வைப்பது அவசியம். மகனாக இருந்தாலும் மகளாக இருந்தாலும், தன்னுடைய தாய் தந்தையரிடம் பேசுவது அவசியம். மருமகள், மருமகன் தங்களுடைய மாமனார் மாமியாரிடம் பேச வேண்டியது அவசியம். இந்த வரிசையில் அத்தை, மாமா, பெரியம்மா பெரியப்பா என்று யார் இருந்தாலும் உங்கள் மீது பாசம் வைத்திருப்பவர்கள் என்றால் அவர்களை ஒதுக்கி வைக்காமல் பேசுவதே நல்லது. இப்படி உங்க சொந்த பந்தங்களில் யாரையாவது நீங்கள் நீண்ட நாட்களாக பேசாமல் ஒதுக்கி வைத்து உள்ளீர்களா? என்று சிந்தித்துப் பாருங்கள்! உங்கள் வீட்டில் எறும்புகள் படை எடுத்து வருவதற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

  உங்களால் சில சொந்த பந்தங்கள் இடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், பேச முடியாத சூழ்நிலை என்றால் கொஞ்சம் அரிசி மாவு அல்லது ரவையிலோ சிறிதளவு சர்க்கரையை சேர்த்து கலந்து கோவில்களுக்கு சென்று அங்கு இருக்கும்  எறுப்புகளுக்கு உணவாக அளிக்கலாம். இதேபோல், வீட்டின் அருகில் செடி கொடிகள் இருந்தால் அங்கு வாழும் எறும்புக்கு, அரிசி மாவு சர்க்கரை ரவை சேர்த்து, உணவாக போடலாம். உங்கள் வீட்டில் வரும் எறும்புகள் காணாமல் போய்விடும்.

  சொந்தபந்தங்கள் என்றுமே ஒன்றுகூடி இருப்பது நல்லது தானே இதை நமக்கு கூட்டம் கூட்டமாக, என்றுமே ஒன்றாக வாழும் எறும்புக் கூட்டம் வலியுறுத்துகிறது என்று சொன்னால் அதை நம்புவதில் ஒன்றும் தவறு இல்லையே! உங்கள் மீது அன்பு வைத்திருப்பவர்கள், யாருடைய ஏக்கத்திற்கும் நீங்கள் காரணமாக இருக்கக் கூடாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

N2R NandhakumaR
Channel N2R 

Tuesday 19 May 2020

சட்டை முனி சித்தர் அற்புத வரலாறு



மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.

உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்

தியானச் செய்யுள்

சித்த வேட்கை கொண்டு

சிறந்து விளங்கிய சீலரே

அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற

அற்புத மூர்த்தியே

எம் அறியாமை நீக்கி ஞானவரம் அருள்வாய்

ஸ்ரீ சட்டைமுனி சுவாமியே!

இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார்

சட்டைமுனி எனும் இந்த சித்தர் சிங்கள நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்தவர்.சேணிய வகுப்பைச்சார்ந்தவர்.தாய்,ஆலய விழாக்களில் நடனமாடுபவர். தந்தை இசைக்கருவிகள் வாசிப்பவர். அந்த நாட்டை விட்டுத் தமிழகம் வந்து விவசாயம் பார்த்து வந்தனர். வானம் பொய்த்தக் காரணத்தால் விவசாயம் செய்துபிழைக்க வழியில்லாது போய்விட்டது. மேலும் பெற்றோருக்கு வயதாகிவிட்ட காரணத்தால் விவசாயக்கூலி வேலை பார்த்து வந்தார். பட்டினியால் வாடும் பெற்றோருக்கு உணவளிக்கவே தமிழகக் கோயில்களின்வாசல்களில் தட்டை ஏந்தி யாசகம் பெற்றுத் தமது தாய் தந்தையரைக் காப்பாற்றி வந்தார்.ஒருநாள் வழக்கம்போல கோயிலின் முன் நின்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுதுவட நாட்டிலிருந்து சங்கு பூண்ட ஒரு முனிவரைக் கண்டார். அவரிடம் தன் குறைகளை எடுத்து கூறி கண்ணீர்விட்டார். முனிவர். ”யாவும் விதியின் வழித்தான் செல்லும். தாய், தந்தையரை காப்பாற்றும் பொருட்டுநீ செய்யும் செயல் மிகப்பெரியது, புண்ணியமான செயலாகும். விரைவில் உனது நிலையும், காலமும் மாறும்.சிவன்பால் சிந்தனையை நிறுத்து. கடமையைச் செய்.” என்றார்.

சட்டைமுனி மன மகிழ்ச்சிக் கொண்டார். முனிவர் கூறியது போல் மழை நல்லபடி பெய்தது. விளை நிலங்களில் நல்ல விளைச்சல் விளைந்தது. அயராத உழைப்பால் சட்டைமுனியின் வாழ்வும் மலர்ந்தது. இறைவனைஆலயம் சென்று தினம் வணங்கினார். பிச்சைக்காரகளுக்கு தன்னால் இயன்ற அளவு உதவினார். சட்டை முனிக்கு திருமணமும் நடைப்பெற்றது. இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாவிட்டாலும் குடும்பம்நடத்தினார். தினம் கோயில் சென்று சிவனை வழிபடத்  தவறவில்லை. ஒருநாள் இறைவனை வணங்கிவிட்டுவெற்று உடம்போடு வெளியே வந்த சட்டை முனி தன் சட்டையை அணிய முற்பட்டார். வெளியிலிருந்துஒரு குரல் வந்தது. ‘ஏன்னப்பா உடுத்துவதில் உறுதியாய் இருக்கிறாய் போலிருகிறது. உதறிட எண்ணமில்லையா? ‘

சட்டைமுனி திடுக்கிட்டு திரும்பினார். எதிரே சங்கு பூண்ட ஒரு முனிவர் நிற்பதைக் கண்டார். அவர் காலடியில்வீழ்ந்து, ‘சாமி வழிகாட்டுங்கள்’ என்றார். ”உதற ஆயத்தமாக இருக்கிறாயா?” என்றார். ஆம்.. சாமி என்றுதாம் அணிந்திருந்த சட்டையை உதறினார். சட்டை முனியே! வாரும் எம்மோடு என்று அழைத்துச் சென்றார். இவரை ‘கயிலாயச் சட்டைமுனி நாயனார்’ என்றும் எப்போதும் கம்பளி மேலாடையை அணிந்திருப்பதால் கம்பளிச் சட்டைமுனி என்றும் அழைக்கப்படுகிறார்.. சங்கு முனிவரின் கையைப் பற்றிக்கொள்ள இருவரும் கனக மார்க்கமாக ஆகாயத்தில் பறந்தனர். இந்தச் செயலைக் கண்டு சட்டைமுனி வியப்படைந்தார். இது குறித்து வினவ ‘இதில் ஒன்றும் வியப்பில்லை.இரசமணியின் சக்தியால் இவைகள் சாத்தியமாகும். உனக்கோ இது போகப்போக விளங்கும்” என்றார்.

அம்முனிவரின் உபதேசங்களைக் கேட்டு அவருடனேயே சுற்றி வந்தார், இறுதியில் போகரைச் சந்தித்துசித்தர்களின் வழியில் தம் ஞானப் பயணத்தைத் தொடர்ந்தார். போகருடன் இருந்தபோது கொங்கணச் சித்தர்,கருவூரார் போன்ற சித்தர் பெருமக்களின் இனிய தொடர்பு ஏற்பட்டது. அகத்தியரிடம் சீடராகச் சேர்ந்து, ஞானநிலையினை அடைந்தார். இவரின் விடாமுயற்சி, ஞானத்தின் உயர்நிலையை எட்டினார். இவரின் தவத்தால்கயிலாயத்தில் சிவபெருமானை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார்...

சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார்.

இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென ஆவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன. அரங்கனின் தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா!” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது.

சட்டைமுனி இயற்றிய நூல்கள்:

சட்டைமுனி நிகண்டு – 1200

சட்டைமுனி வாதகாவியம் – 1000

சட்டைமுனி சரக்குவைப்பு – 500

சட்டைமுனி நவரத்தின வைப்பு – 500

சட்டைமுனி வாகடம் – 200

சட்டைமுனி முன் ஞானம் பின் ஞானம் – 200

சட்டைமுனி கற்பம் – 100

சட்டைமுனி உண்மை விளக்கம் – 51

சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.


N2R NandhakumaR

Channel N2R 

திருமூலர்

மிகவும் உத்தமமாக வாழ்ந்த சித்தரின் வரலாறு இது.சித்தர்களில் முதன்மையானவரும் சிவபெருமானிடமும்,நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவருமான திருமூலர் கயிலாசப் பரம்பரையை சேர்ந்தவர்.
இவரது வரலாறு குறித்து பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறியிருக்கும் தகவல்கள்.



திருக்கயிலாலயத்தில் நந்தி தேவரது திருவருள் பெற்ற மாணவர்களுள் ஒருவராய் அட்டமா சித்திகளைக் கைவரப் பெற்ற இச் சித்த மாமுனிவர் திருக்கயிலாயத்தில் இருந்து புறப்பட்டு தென்திசை நோக்கி செல்லும் வழியில் திருக்கேதாரம்,பசுபதி,நேபாளம்,அவிமுத்தம்(காசி),விந்த மலை,திருப்பரப்பதம்,திருக்காளத்தி,திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று பின்னர் காஞ்சி நகர் அடைந்து பின்னர் திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களுக்கு சென்று பின்னர் காஞ்சி நகர் அடைந்து பின்னர் திருவதிகை,தில்லை என்று காவிரியில் நீராடி அதன் பிறகு திருவாவடுதுறையை அடைந்து இறைவனை தரிசித்து விட்டு செல்கையில் அந்தனர்கள் வாழும் சாத்தனூரில் தொன்று தொட்டு மாடுகளை மேய்க்கும் குடியில் பிறந்த ஆயனாகிய மூலன் என்பவன் இறந்து நிலத்தில் விழுந்து கிடக்க பசுக்கள் அனைத்தும் அவனை சுற்றி வந்து கதறி அழுதன.

இக்காட்சியை கண்ட சித்த பெருமான் அப்பசுக்களின் துயர் நீக்க எண்ணித் தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்தி விட்டு கூடு விட்டு கூடு பாய்தல் (பிரகாயப் பிரவேசம்)என்னும் பவன வழியில் தமது உயிரை அந்த இடையது உடலில் செலுத்தி திருமூலராய் எழுந்தார்.



மூலன் எழுந்ததும் பசுக்களெல்லாம் துயர் நீக்கி அன்பினால் அவனது உடம்பை நக்கி,மோந்து மிகுந்த களைப்பினால் துள்ளி கொண்டு புல் மேயச் சென்றன.



அது கண்டு மகிழ்ந்த திருமூலர் (மூலன்) பசுக்கள் செல்லும் வழியே சென்று பின்னர் அவைகள் தங்கள் இல்லங்களுக்கு சென்றதும் தான் மட்டும் தனித்து நின்றார்.

அப்போது மூலனுடைய மனைவி பொழுது சாய்ந்த பின்னரும் தன் கணவர் இன்னும் சேராதது கண்டு அவனை தேடிக் கொண்டு வந்தவள் மூலன் வடிவில் சித்தரை வீட்டுக்கு அழைத்தாள்.

மூலரோ தான் அவளுடைய கணவன் அல்ல,அவனின் விதி முடிந்து இறந்துவிட்டான் என்றார்.தன் கண்ணெதிரே இருக்கும் கணவனே தான் இறந்து விட்டதாக கூறியதை கேட்டு மனம் பொறுக்காதவளாய் அவ்வூரில் உள்ளவர்களை அழைத்து தன் கணவருக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றத்தினை கூறி கதறினாள்.
அங்கிருந்தோர் மூலனுக்கு அறிவுரை கூறி அவளுடன் வீடு திரும்பு மாறு கூற மூலன் வடிவிலுள்ள சித்தர் தன் நிலையை பல முறை எடுத்துக் கூறியும்
நம்பாததால் மறுபடியும் அவ்வுடலை செயலற்றதாக்கி உண்மையை விளக்கினார்.கண்ணெதிர நடந்த இந்த அதிசயத்தை கண்டு ஊர் பெரியவர்கள் மூலனின் மனைவிக்கு ஆறுதல் சொல்லி அவளது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
தன்னுடைய பழைய உடலை தேடி சென்ற சித்தர் அங்கு தன் உடலை காணததால் மூலனுடைய உடலிலே நிரந்தரமாக தங்கி திருவாடுதுறை கோயிலை அடைந்து யோகத்தில் வீற்றிருந்தது,உலக மக்களின் நன்மையை பொருத்து ஞானம்,யோகம்,சரியை,கியை என்னும் நால்வகை நன்னெறிகளும் கூறும் திருமந்திரம் என்னும் நூலை தொடங்கி ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களை பாடினார்.பின்னர் இந்நூல் நிறைவடைந்ததும் அதாவது 3000 ஆண்டுகளுக்கு பின் இறைவன் திருவடியை அடைந்தார்.சதுரகிரி தலப்புராணம் கூறும் திருமூலர் வரலாறு இது.



பாண்டியநாடு சித்து வித்தைகளுக்கு பெயர் போனது.அதனை ஆண்ட தவேத மன்னனின் பட்டத்தரியான சுந்தரவல்லிக்கு வீரசேனன் என்ற புதல்வனும்,இரண்டாவது மனைவியான சுந்தரவதனிக்கு தர்மாத்தன்,சூரசேனன்,வஜ்ராங்கதன் என்ற புதல்வர்களும் இருந்தனர்.
குருகுல வாசம் முடித்த பின் உரிய வயதில் நான்கு இளவரசர்களுக்கும் திருமணம் முடிந்தது.

வீரணன்-குணவதி,தர்மாத்தன்-தனமதி,சூரசேனன்-சுகமதி,வஜ்ராங்கன்-மந்திரவல்லி என்ற தம்பதிகள் நால்வரும் இல்லறத்தை நல்லறமாக்கி வாழ்ந்து வந்தனர்.

முதுமையடைந்த தவேதன் பட்டத்தரசியின் மகனான வீரசேனனுக்கு பட்டம் சூட்டி அரசனாக்கினான்.அரசனும் நல்ல விதமாக ஆட்சி புரிந்து குடிகளை நன்முறையில் காத்து வந்தான்.
இரவு நேரத்தில் வழக்கம் போல மாறு வேடம் பூண்டு நகர சோதனைக்கு கிளம்பிய மன்னன் வீரசேனன் திரும்பிய போது திடுக்கிட்டாள்.பார்வை மங்கிய நிலையில் உடல் முழுவதும் வியர்வை வெள்ளத்தில் நனைய துவண்டு போய் மஞ்சத்தில் படுத்து விட்ட மன்னனிடம் பதறிய நிலையில் காரணம் கேட்ட மனைவிக்கு பதில் சொல்ல முடியவில்லை.வாயில் நுரை தள்ள ஆரம்பித்தது.

அரண்மனை வைத்தியருக்கு செய்தி அனுப்பப்பட்டது.அவர் வருவதற்குள் மன்னனின் தலை துவண்டு சாய்ந்து விட்டது.அரண்மனை வைத்தியப் பட்டாளமே ஓடி வந்து மன்னரை பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதை உறுதி செய்தது.



மன்னனின் மனைவி குரல் வெடிக்கக் கதறினாள்.அவளின் அழுகையொலி அந்த அரண்மனையை தாண்டி ஒலித்தது.அந்த நடுநிசியில் பாண்டிய நாடு சோகத்தில் புலம்பி தவித்தது.
அப்போது ஆகாய வீதியில் போய்க் கொண்டிருந்த திருமூலர் காதுகளில் இந்த புலம்பல் ஒலி அறைந்தார் போல் கேட்டது.அவர் கீழே நோக்கினார்.
அங்கே உயிரற்ற மன்னனின் உடலைக் கண்டு சோகம் தாளாமல் குணவதியும்,அரண்மனை சுற்றமும்,ஊர் மக்களும் ஓலமிட்டு அழுது கொண்டு இருந்தினர்.

நொடிப் பொழுதில் திருமூலருக்கு எல்லாம் புரிந்து விட்டது.அங்கு அழுதவரின் துயர் துடைக்க தீர்மானித்தார்.உடனே சதுரகிரிக்கு சென்று தான் தவம் புரியும் இடத்திற்கு சென்றார்.

தன் அந்தரங்க சீடன் குருராஜனை அழைத்து தான் சிறிது காலம் உன்னை பிரிந்திருக்க வேண்டியுள்ளது என்பதை தெரிவித்தார்.

"மகனே சிறிது காலம் பூவுலகில் மனிதனாக அதுவும் மன்னனாக வாழ விரும்புகிறேன்.பாண்டிய நாட்டின் ராஜேந்திரபுரியின் மன்னன் வீர சேனன் இறந்துவிட்டான்.அவரது அருமை மனைவியும் குடிமக்களும் அழுத காட்சி நெஞ்சை நெகிழச் செய்து விட்டது.அதனால் அந்த வீரசேனன் மகாராஜாவின் உடலில் பிரவேசித்து சில காலம் உலக வாழ்க்கையை ஈடுபடபோகிறேன்.நான் திரும்பி வரும் வரையிலும் கல்ப சாதனையால் வைரம் பாய்ந்து விளங்கும் இந்த உடலை காப்பாற்றி வைத்திருப்பாயாக"என்று கூறினார்.

முன்பு பசுக்களின் வருத்தத்தை தீர்ப்பதற்காக சுந்தரனார் உடலில் இருந்து இடையனாம் மூலனின் உடலில் புகுந்து தேவ உடலை இழந்து பூத உடலில் தங்கி விட்டார்.மறுபடியும் தெய்வீக உடலாக மாற்றிய மூலனின் உடலுக்கு சோதனை....ம்...
வீரசேனனின் உடலுக்காக இந்த மூலனின் உடலேயும் இழக்க துணிந்து விட்டீரோ?...என்று சீடனுக்கு மனதிற்குள் சந்தேகம் தோன்றினாலும் வெளியே கேட்கவில்லை.குருவின் கட்டளைக்கு மறு வார்த்தை பேசி அறியாத அந்த சீடனும் அவரின் செயலுக்கு சம்மதம் தெரிவித்தான்.

திருமூலர் குகையில் மறைவான ஓரிடத்தில் உடலை கிடத்தி விட்ட சூட்சும உடலோடு மன்னன் உடல் இருக்கும் இடத்திற்கு விரைந்தார்.அதற்குள் மன்னனின் உடலை கழுவி முடித்திருந்தார்கள்.கண்களில் கண்ணீர் வழிய குனவதி கதறிக் கொண்டிருந்தாள்.

அப்போது திருமூலர் மன்னின் உடம்பினுள் புகுந்தார்.அதுவரை அசையாமலிருந்த மன்னனின் உடல் அசைந்தது.சுற்றி இருந்தவர்கள் திடுக்கிட்டனர்.அழுகை ஒலி உடனே நின்றது.அதற்குள் திருமூலர் வீரசேன திருமூலராக எழுந்துவிட்டார்.
இறந்த மன்னன் உயிருடன் எழுந்ததை எண்ணி அனைவருக்கும் மகிழ்ச்சி.துயர கடலில் மூழ்கி கிடந்தவர்கள் இப்போது மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தனர்.

தன் கணவர் இறக்கவில்லை என்று தெரிந்ததும் அரசனின் மார்பில் சாய்ந்தாள் மகாராணி.

"நான் தான் எழுந்து விட்டேனே...இன்னும் ஏன் துயரம்"என்று அவளை தட்டிக் கொடுத்து எழுந்தார்.
'அரசே என்ன நேர்ந்தது?....எதனால் மயக்கமுற்றீர்கள்?....தாங்கள் இறந்து போய்விட்டதாக அல்லவா அரண்மனை வைத்தியர்கள் கூறினார்கள்'....என்று மகாராணி கேட்டாள்.

"அரண்மனை வைத்தியர் சொன்னது உண்மை தான்.நான் செத்ததும் உண்மை.இப்போது பிழைத்திருப்பதும் உண்மை...எனக்கு மிகவும் களைப்பாக உள்ளது.பிறகு பேசுவோம்...."என்று கூறி விட்டு ராணியுடன் சென்றார்.

அரண்மனையில் ஏற்பட்ட பரபரப்பிற்கும்,குழப்பத்திற்கும் அளவே இல்லை.அரசரே அதற்கு விளக்கமளித்தார்.

நகர சோதனைக்கு சென்ற இடத்தில் நந்தவத்திலுள்ள பூச் செடியிலுள்ள கூர்மையான முள் ஒன்று அதில் ஊர்ந்து கொண்டிருந்த  கடும் விஷமுள்ள பாம்பு ஒன்றின் உடலில் குத்தியது.வலி தாங்காமல் சீற்றமுடன் திரும்பி பார்க்க எதிரில் இருந்த பூ தான் தனக்கு இடைஞ்சல் செய்கிறது என்று நினைத்து கொத்தி தன் விஷம் முழுவதையும் பூவில் இறக்கி விட்டு போய்விட்டது அந்த பாம்பு.

விஷத்தின் தன்மையை பற்றி அறியாத நான்.அப்பூவின் அழகில் மயங்கி,அதை பறித்து முகர்ந்தேன்.உடனே தலை சுற்றியது.கண்கள் இருண்டன.நான் இறந்து விட்டேன்.எப்படி பிழைத்தேன் என்பது எனக்கே தெரியவில்லை.
எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அரசி குணவதிக்கு மட்டும் சந்தேகம் துளிர் விட்டுக் கொண்டிருந்தது.

அரசர் தன் அருகில் இருக்கும் போது குணவதி இந்த உலகையே மறந்து விடுவாள்.அவர் அப்பால் சென்றதும் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக தவிப்பாள்.ஆனால் அவள் மனதில் மட்டும் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

வீரசேன திருமூலர் ஒரு ராஜரிஷியை போல ஆட்சி நடத்தினார்.இரவு பொழுதில் ராணி குணவதிக்கு தத்துவ உபதேசங்கள் செய்தார்.நாட்கள் சில கடந்தன.குணவதியோ தன் கணவருக்கு உண்டான வேறுபாட்டிற்கு என்ன காரணம் என்பதை ஆராயத் தொடங்கினாள்.

"என்ன ஆயிற்று இவருக்கு?...ஒரு போதும் தன்னை விட்டு விலகாதவர்,இப்போது கண்டாலே விலகி செல்வதேன்?தத்துவ உபதேசம் வேறு செய்கிறாரே?...செத்து போய் பிழைத்ததில் இருந்து இப்படி அடியோடு மாறிவிட்டாரே....."

வழக்கம் போல் ஒருநாள் இரவு பொழுது வந்தது.அந்தப்புர அறைக்குள் வீரசேனர் நுழைந்ததும் ராணி தன் உள்ளத்திலுள்ளதை முன் வைத்தாள்.
"சுவாமி தாங்கள் யார்?...நாட்டையும் நாட்டு மக்களையும் அடியோடு மாற்றி விட்ட தாங்கள் யார்?தாங்கள் பழைய மகாராஜாவே இல்லை.இதை தங்களுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உணர்ந்தேன்".

"உத்தம கற்புக்கரசியே! நான் உனக்கு உண்மையை சொல்கிறேன் 

கேள்!"என்று நடந்தவை அணைத்தையும் கூறினார்.

"இன்று நீ வீரசேனனின் மனைவி.இந்த உடல் வீரசேனனின் உடல்.இது உனக்கு மட்டுமே சொந்தமானது.உன்னுடைய உடலை எனக்கு சொந்தம் என்று ஒருநாளும் நினைத்ததில்லை.அது வீர சேனனுடையது.நான் வெறும் ஆத்மா.உறவும் அதனால் உண்டான பிணைப்பும் உடலுக்கு மட்டுமே தவிர,உயிருக்கு கிடையாது.உன் கணவன் வீரசேனன் இறந்துவிட்டான்.அன்று நீயும் ஊர் மக்களும் அழுது புலம்புவதை கண்ட நான் மனமிறங்கியே வீரசேனனின் உடலில் புகுந்து கொண்டேன்.அதனால் தான்.வீரசேனனின் உடலோடு உன்னோடு பழகினேன்.தவறென்றால் என்னை மண்ணித்து விடு."

"என் கணவனின் உடலில் புகுந்திருப்பது சித்த புருஷரா?...சுவாமி....தாங்கள்.என்றென்றும் இந்த உடம்பில் இருப்பீர்கள் அல்லவா?..."என்று குணவதி கேட்டாள்.
"அம்மா...உன் கணவரின் இந்த உடம்பு பஞ்ச பூதங்களால் ஆனது.அழிந்து போய் விடும்.அதனால் நான் இந்த உடம்பில் நிரந்தரமாக இருக்க முடியாது.சதுரகிரியில் உள்ள ஒரு குகையில் எனது காயகல்ப உடல் இருக்கிறது.இன்னும் கொஞ்ச நாளில் நான் இங்கிருந்து போய் விடுவேன்"என்று அவளுக்கு பதில் சொன்னார் வீரசேனன் உடம்பிலுள்ள திருமூலர்.

இதை கேட்டு திடுக்கிட்ட குணவதி அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,சுவாமி தங்கள் உடம்பு மலையில் காவல் இல்லாமல் இருக்கிறதே....அதற்கு ஏதாவது ஆபத்து வந்து விட்டால் என்ன செய்வது?இதை தங்கள் மீது உள்ள அக்கரையினாள் கேட்கிறேன்"என்றாள் கண்ணீருடன்.

அவள் உண்மையில் அனுதாபத்துடன் தான் கேட்கிறாள் என்று நினைத்த திருமுலன் இரக்கத்தின் காரணமாக உண்மையை சொல்ல ஆரம்பித்தான்.
"கவலை படாதே!குணவதி அதை என் சீடன் குருராஜன் நன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறான்.எந்த விலங்கும் அதை நெருங்க முடியாது.காரணம் அது நெருப்பு மயமானது...அந்த கற்ப தேகத்தை சாதாரண தீயினால் எரித்துவிட முடியாது.குங்கிலியம்,வெடியுப்பு,வெங்காரம் இவற்றை இடித்து தூளாக்கி அந்த உடலில் பூசி பின் அவ்வுடலை விராலி இலையால் மூடி,விறகு வைத்து எரித்தால் தான் அது சாம்பலாகும்"என்று கூறி அவள் கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ராணியின் சிந்தனை இப்போது வேறு விதத்தில் வேலை செய்ய ஆரம்பித்தது.நம் கணவர் இறந்து விட்டார்.இப்போது இருப்பதோ சித்த புருஷர்.இந்த உண்மை நம்மை தவிர வேறு யாருக்கும் தெரியாது.இவர் நம்மைவிட்டு பிரிந்து போய் விட்டால் ராணி என்கின்ற அந்தஸ்த்து போய்விடும்.நாம் விதவை கோலம் பெற நேரிடும்.மன்னரின் சிற்றன்னை மகனான தர்மார்த்தன் அரசனாவான்.தன் சுக போக வாழக்கையெல்லாம் நாசமாக போய்விடும்.அதன் பிறகு என் வாழ்க்கை கேள்விக் குறியாகி விடும்.என்ன செய்வது இப்போது?....

ஏன்?....எதற்க்கு?....என்று கேட்காமல் தான் சொல்வதை அப்படியே கேட்கும் அரண்மனை ஊழியர்களை அழைத்தாள்.சதுரகிரி மலை குகையில் வைத்திருக்கும் சித்தரின் உடலை தேடி கண்டுபிடித்து அழித்துவிடும் படி இரகசியமாக கட்டளை இட்டாள்.அரண்மனை விசுவாசிகள் இராணி சொன்ன செயலை அச்சு பிசங்காமல் செய்து முடித்து விட்டார்கள்.
குகையில் குருநாதரின் உடலுக்கு காவலனாய் இருந்த சீடன் குருராஜன் வருடக்கணக்கில் காத்திருந்து குருவிற்கு என்ன ஆயிற்றோ....என்று அவரை தேடி கொண்டு சென்ற வேளையில் இவ்வளவு வேலையும் செய்து முடிக்கப்பட்டு விட்டது.சித்தரின் காய கல்ப தேகம் அழிந்தது.இனிமேல் அவர் நம்முடனே இருப்பார் என்கின்ற சந்தோஷக் கடலில் மிகுந்த ராணி எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் எப்போதும் போல் திருமூலரிடம் இயல்பாகவே இருக்க ஆரம்பித்தாள்.
இராணியின் நடவடிக்கைகள் சித்தருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே ஒரு நாள் வேட்டைக்குப் போவது போல் கிளம்பி சதுரகிரி மலைக்கு சென்று தன் உடல் வைத்துள்ள இடத்திற்கு சென்றார்.வழியில் குருராஜன் எதிர்படவே அவனையும் அழைத்துக் கொண்டு குகைக்குள் சென்றார்.
காயகல்ப உடம்பை காணவில்லை சித்த புருஷர் நடந்தவற்றை  உணர்ந்தார்.

குணவதி துரோகம் செய்திருந்தாலும் வீரசேனன் உடலில் இருக்கும் தான் அவளுக்கு துரோகம் செய்ய கூடாது என்று தீர்மானித்தார்.

அன்றிலிருந்து தத்துவ உபதேசங்கள் செய்வது நிறுத்தினார்.குணவதி எத்தனையோ முயற்ச்சி செய்தும்ஷபயனில்லை.உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மன்னர் சிறிது காலம் ஓய்வு எடுத்துக் கொள்வார் என்றும்,அதனால் மகாராணியே நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்றும் பிரகடனம் செய்தார்.

அரசரின் இந்த பிரகடனம் அரசியை திடுக்கிட வைத்தது.திருமூலரிடம் சென்று "ஏன் இந்த திடீர் முடிவு?...."என்று வினவினாள்.

சித்தர் சிரித்து கொண்டரே தவிர பதில் சொல்லவில்லை.

இனியும் எதையும் மறைப்பதில் பயனில்லை என்று எண்ணிய மகாராணி தன் சுயநலச் செயலைக் கூறி தன்னை மன்னிக்கும் படி கண்ணீர் விட்டு அழுதார்.

குணவதியின் கண்ணீரை கண்டு மனம் இரங்கினார் திருமூலர்.அவள் நிலையில் இருந்து பார்த்தால் அவள் செய்தது சரியென்றே பட்டது.எந்த மனைவி தன் கணவனை பிரிந்து வாழ ஆசைப்படுவாள்?....இருந்தாலும் நம்பிக்கை துரோகம் கூடாதல்லவா?...இன்னும் சிறிது காலம் இருக்க கூடிய அவளை நாம் ஏன் நோகடிக்க வேண்டும் என்று எண்ணியவராய்,"சரி அழாதே...என்ன வரம் வேண்டும் கேள்"என்றார்.
ராணியும் தயங்காமல் சித்தர் என்றென்றும் வீரசேனன் உடலில் தன்னுடனே தங்கி விட வேண்டும் என்ற ஆசையில் தான் என்றைக்கும் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று கேட்டாள்.சித்தரும் அவள் கோரிய வரத்தை அளித்தார்.

சித்தர் வாக்குப் பொய்க்காது அல்லவா?...இனி வீரசேன மகாராஜா தன்னை விட்டு போக மாட்டார் என்று மகிழ்ந்தாள் ராணி.ஒரு நாள் இரவு....ஊரே உறங்கி கிடந்தது.வீரசேன திருமூலர் யாருக்கும் தெரியாமல் அரண்மனையை விட்டு வெளியேறி சதுரகிரி நோக்கி போனார்.பொழுது பு புலரும் வேளை.நதியில் நீராடிக் கரை ஏறியவர் அங்கே அந்தனர் ஒருவர் அசையாமல் கற்சிலையை போல் உட்காந்திருப்பதை பார்த்து வியப்படைந்து அவனருகே சென்று பார்த்து வியப்படைந்து அவனருகே சென்று பார்த்த போது அவன் கண்கள் நிலைத்து போய் இருப்பதை கண்டார்.மூச்சு இயங்கவில்லை.தொட்டவுடனே அவன் உடல் அப்படியே கீழே விழுந்தது.ஆம்.அவன் எப்போதோ இறந்து விட்டிருந்தான்.

ஜம்புகேஸ்வரம் எனும் திருவானைக் கோவிலில் இருந்த ஜம்புகேஸ்வரர் என்னும் அந்த அந்தணன் பிராணயாமப் பயிற்ச்சியை மேற்கொள்வதற்காக சதுரகிரியை அடைந்து குருவின் துணையின்றி முரட்டுத்தனமாகப் பயிற்சியை மேற்கொண்டான்.தன்னை அடக்க முயன்றவனை அடக்கி விட்டு மூச்சு பறந்து விட்டது.



வீரசேனன் தன் அரச உடம்பை விட்டு விட்டு அந்தண உடம்பில் நுழையத் தீர்மானித்தார்.

கூடவே குணவதிக்குத் தாம் அளித்த வாக்குறுதியும் நினைவுக்கு வந்தது.வீரசேனன் உடலை சிரஞ்சீவத் தன்மை உடையதாக்க நினைத்தார்.அப்போது தானே அவள் நித்திய சுமங்கலியாக இருக்க முடியும்.
அரச உடலை எங்கே விட வேண்டும் என்று தீர்மானித்த போது அங்கிருந்த "யானை உண்டி"எனும் பெருத்த மரமொன்று தென்பட்டது.அந்த மரத்தில் பெரிய பொந்து ஒன்று தென்பட்டது.
வீரசேனத் திருமூலர் மர பொந்துக்குள் நுழைந்து உட்கார்ந்தவர் மன்னரின் உடலை அங்கேயே விட்டு விட்டு ஜம்புகேஸ்வரம் உடம்பில் நுழைந்தார்.(இது அவரின் மூன்றாவது உடம்பில் கூடு விட்டு கூடு பாயும் செயல்).

ஜம்புகேஸ்வர திருமூலர் எழுந்தார்.எழுந்ததும் ஜோதி மரத்தின் பூக்களை பறித்து,அதனுடன் சில மூலிகைகளை சேர்த்து நன்றாக குழைய அரைத்து அந்தக் கரைசலில் மந்திர சக்தியை ஏற்றி கரைசலை மரப் பொந்திலுள்ள அரசனின் உடலில் பூசினார்.மரத்தின் மேற்புறத்தை மரப்பட்டைகள்,இலைகள்,கிளைகள் முதலியவற்றை கொண்டு மூடினார்.பின்னர் சில மந்திரங்களை உச்சரித்தவுடன் மர பொந்து மூடிக் கொண்டது.

இனிமேல் யாரும் இந்த அரசனின் உடம்பைப் பார்க்க முடியாது.அரச உடம்பு  இருக்கும் மரம் அரச மரம் என்றே அழைக்கப்படும் என்று சொல்லி விட்டு சதுரகிரியில் ஒரு குகைக்குள் இருந்து சானைகள் பல செய்து மறுபடியும் தேகத்தைக் காய கல்ப தேகமாக ஆக்கிக் கொண்டார்.

சதுரகிரியில் குருராஜனுடன்(சீடன்) சேர்ந்து இன்னும் பல சீடர்கள் அவரிடம் சேர்ந்தனர்.சதுரகிரி ஒரு தவச்சாலையாக திகழ்ந்தது.ஜம்புகேஸத் திருமூலர் அவர் நல்வழி காட்டினார்.இன்னும் அவர் சதுரகிரியில் இருப்பதாக பெரியோர்கள் சொல்லக் கேள்வி.

வீரசேன திருமூலரை பிரிந்து வருத்த முற்றிருந்த குணவதி ஒருவாறு தன்னை தேற்றிக் கொண்டு தர்மார்த்தன் -தனமதி,ஆரசேனன்-சுகமதி முதலியோருடன் சதுரகிரி மலையில் இருக்கும் ஜம்புகேஸ்வர திருமூலரை தரிசிக்க சென்றாள்.

ஜம்புகேஸ்வர திருமூலர் தாம் யாரென்று அவளுக்கு தெரியாத நிலையில் அவளது குறைகளை கேட்டறிய அவள் தன்னை விட்டு பிரிந்த சித்தயோகியான தன் கணவரை பற்றி விபரம் தமக்கு தெரிவிக்க வேண்டும் என்றும்,மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ வழி செய்யுமாறு வேண்டினாள்.



மீண்டுமொரு பந்தத்தை தொடர விரும்பவில்லை ஜம்புகேஸ்வர திருமூலர்.அவள் கணவர் தம் சக்தியால் அரசமரமாக உருமாறியுள்ளான் என்றும் அவள் அரசமரத்தை பூஜை செய்வதினால் அவள் பதி சேவையை அடைந்ததன் பலனை அடைய முடியும் என்று அருளாசி வழங்கினார்.
தான் செய்த சிறு தவறு தன் வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டதை எண்ணி வருந்திய குணவதி அந்த அரச மரத்தினை வணங்கி,பல முனிவர்களையும் தரிசித்து விட்டு பின் நாடு திரும்பினாள்.
மேருமலை வடபாகத்தில் மடையை அடுத்திருந்த வனத்தில் தாருமூலர் யாகம் செய்தார்.உலக ஆசைகளை துறந்து வினைபயன்களையும் விட்டு,தமக்கு தொண்டு புரிந்த சித்தர்களுக்கும்,மார்கண்டேயனுக்கும்,கண்ணபிரானுக்கும் உபதேசம் செய்தார்.

...யடவிடக்கும் சென்று தானும்
பண்டுளவு கிருஷ்ண பூபாலனுக்கு
பார்தனில் உபதேசம் செய்தார்...

கிருஷ்ணன் இருந்த துவாபரயுகத்தில்,மகாபாரத காலத்தில் திருமூலரும் இருந்தார் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
திருமூலர் கைலாயத்திலிருந்து புறப்பட்டு வரும் வழியில் மகாநதி( பூரி ஜெகன்னாதம்)அருகில் துவாரபுரி அரசன் கண்ணன் ஒரு வேடனால் கொல்லப்பட்டு,அவ்வேடன் கண்ணனின் உடலை சிதையில் வைத்து கொளுத்தி விட்டு போய் விட,உடனே பெருமழை பெய்ய கருகிய கால்களை உடைய கண்ணனின் உடம்பானது வெள்ளத்தால் அடித்து கொண்டு போகபட்டு பூரிக்கு பக்கத்தில் கரை ஒதுங்கியது.அவ்வூரார் கண்ணனை இனம் கண்டு அடக்கம் செய்து கோவில் அமைத்தார்கள் என்றும் அதுவே பூரி ஜெகன்னாதர் கோவில் என்றும் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை திருமூலரே கண்டதாகவும் சொல்லப்படுகிறது.புராணங்களிலும் இதிகாசங்களிலும் இல்லாத இச் செய்தியை அகத்தியர் மட்டுமே தருகிறார்.திருமூலர் எண்ணாயிரம் திருமந்திரம் இயற்றியதாக அகத்தியர் தமது கௌடிய சாரகம் என்னும் நூலில் கூறியுள்ளார்.அகத்தியர் 12000 முதல் காண்டத்தில் திருமூலர் இயற்றிய நூல்கள் காணப்படுகின்றன.

N2R NandhakumaR
Channel N2R

Sunday 17 May 2020

ஸ்ரீ தியாகராஜர் அரிதான படம்


சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஶ்ரீ தியாகராஜர் உருவத்தில் எப்படி இருந்திருப்பார் என்று பலர் நினைத்திருப்பார்கள். இங்கே உள்ள நிழற்படம் 1847ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒருவரால் (William Russell) படம் பிடிக்கப்பட்டதென அறிகிறோம். வெளிச்சுற்றில் வர இத்தனை ஆண்டுகளாகி உள்ளது. 

சன்னியாச தீட்சை வாங்கிக்கொண்ட பிறகு உஞ்சவிருத்தி எடுத்து ஜீவனம் செய்தவர். பணத்தைப் புகழை விரும்பாதவர். ராம நாமத்தை இறுதிவரை கோடி ஜெபம் செய்தவர். அப்படி இருந்த அவர் திருமண் நாமம் தரிக்கிமல் விபூதி பூசியுள்ளாரே என்று நீங்கள் நினைக்கலாம். அவர் வைணவர் அல்ல, சைவர்தான். தெலுங்கு முலக்கநாடு பிரிவு ஸ்மார்த்த ஐயர். சரபோஜி மன்னர் காலத்தில் வாழ்ந்தவர். 'அபிராமி அந்தாதி' சுப்ரமணிய பட்டருக்குச் சமகாலத்தவர். அவருக்கு இராமன் மீது அலாதி பிரியம். சுமார் 700 கீர்த்தனைகளுக்கு மேல் இயற்றினார் என்றும் அதில் குறைவான எண்ணிக்கையே கிடைத்தது என ஆய்வு சொல்கிறது. இவர் இராமர்-சீதையை நேரில் கண்டு தரிசித்தவர். இவர் சித்தியான திருவையாறு தலத்தில் அவர் சமாதிக்கு முன்பாக ஆண்டு தோறும் பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்துப் பாடி அஞ்சலி செலுத்துவார்கள்.

இவர் விபூதியைத் தரித்த விதம் பலருக்கும் வியப்பைத் தரும். விபூதி /பஸ்ம தாரணத்தில் 5, 8,16, 32 எண்ணிக்கையில் திரிபுண்டரமாக உடலெங்கும் இடுவதுண்டு. இப்போது வெகு சிலரே இவ்வாறு நீறணிவதைப் பார்த்துள்ளேன். சிவதீட்சைப் பெற்றவர்கள் விபூதியைக் குழைத்துத் தரிப்பார்கள். நாம் எல்லோரும் வெறுமனே நெற்றியில் ஒற்றை வசக்கோடாகவோ, திரிபுண்டரமாகவோ, உத்தூளனமாகவோ அணிவதோடு சரி. விரலில் அதிகம் படிந்திருந்தால் போனால் போகிறதென்று தொண்டையில் பூசுகிறோம். 😊

Channel N2R
N2R NandhakumaR

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...