Monday 25 November 2019

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?


*சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்*...


✅ நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

*இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது*...


✅ இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...


✅ *நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது*.


✅ *நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்*.


✅ *மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது*.


✅ எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.


✅ சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.


✅ இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும், அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.


✅ ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். *உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்*. எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்... எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்...


✅ கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...


✅ சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...


✅ சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...


✅ *அமருங்கள் சம்மணமிட்டு*.


N2R நந்தகுமார்

Channel N2R

Saturday 19 October 2019

சின்னகோடங்கிபாளையம் | ChinnaKodangipalayam

  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் 7-வது பெரிய நகரமும் விடுதலைப்போரில் கொடி காத்த குமரன் பிறந்த மண்ணுமான திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் வட்ட எல்லைக்கு உட்பட்ட கோடங்கிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் சின்னகோடங்கிபாளையம் கிராமம் அமைந்துள்ளது.
    
Coordinate
11°01'00.4"N 77°12'25.2"E
     
Pincode: 641662

 சின்னகோடங்கிபாளையம் சுமார் 6.3 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கிராமம்.  சுமார் 350 வீடுகளும் உள்ளது. இக் கிராமத்தில் மக்கள் தொகை தோராயமாக 1200 பேர் ஆகும். இதில் கல்வி பயின்றவர்கள் விழுக்காடு 70% க்கும் மேலாணவர்கள் ஆவர்.

தட்பவெட்ப நிலை

Avg. Temperature (°C)Avg. Temperature (°F)Precipitation / Rainfall (mm)
January24.776.58
February26.479.58
March28.583.311
April29.585.148
May29.284.667
June27.481.317
July26.479.525
August26.679.923
September26.880.242
October26.379.3146
November25.477.7112
December24.475.950

Non Profitable Structure
  சமூக சேவை மற்றும் இயற்கை நலனில்  சின்னகோடங்கிபாளையம் இளந்தளிர் நற்பணி மன்றம் என்ற அமைப்பும்

 ஆன்மீகம், கலை மற்றும் கலாசாரம் பாதுகாக்கும்  நோக்கில் விக்னேஸ்வரா சுவாமி அறக்கட்டளையும் இயங்கி வருகிறது.

தொழில்கள்
இங்கு விசைத்தறி, விவசாயம், கல்குவாரி ஆகியவை முதன்மையான தொழில்கள் ஆகும்.

2019 ல்
தொடரும்...

Published by 
N2R NandhakumaR
Channel N2R 

Saturday 24 August 2019

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா - அருந்தமிழ் மருத்துவம்


_மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை_


பல்லுக்கு வேலாலன்

  பசிக்குசீ  ரகமிஞ்சி

கல்லீரலுக்கு  கரிசாலை

  காமாலைக்கு கீழாநெல்லி


கண்ணுக்கு நந்தியாவட்டை

  காதுக்கு சுக்குமருள்

தொண்டைக்கு அக்கரகாரம்

  தோலுக்கு அருகுவேம்பு


நரம்பிற்கு அமுக்குரான்

  நாசிக்கு நொச்சிதும்பை

உரத்திற்கு  முருங்கைப்பூ

ஊதலுக்கு நீர்முள்ளி


முகத்திற்கு சந்தனநெய் 

  மூட்டுக்கு முடக்கறுத்தான் 

அகத்திற்கு  மருதம்பட்டை

  அம்மைக்கு வேம்புமஞ்சள்


உடலுக்கு  எள்ளெண்ணை

  உணர்ச்சிக்கு  நிலப்பனை

குடலுக்கு ஆமணக்கு

   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே


கருப்பைக்கு அசோகுபட்டை

  களைப்பிற்கு சீந்திலுப்பு

குருதிக்கு அத்திப்பழம்

  குரலுக்கு  தேன்மிளகே!


விந்திற்கு ஓரிதழ்தாமரை

  வெள்ளைக்கு கற்றாழை

சிந்தைக்கு  தாமரைப்பூ

  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை


 கக்குவானுக்கு வசம்புத்தூள்

  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                           

விக்கலுக்கு மயிலிறகு

   வாய்ப்புண்ணிற்கு மணத்தக்காளி


நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்

  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்

வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ  

   வெட்டைக்கு சிறுசெருப்படையே 


தீப்புண்ணா குங்கிலியவெண்ணை

  சீழ்காதுக்கு நிலவேம்பு

நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்

   நஞ்செதிர்க்க அவரிஎட்டி 


குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்

    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்

பெரும்பாட்டிற்கு அத்திநாவல்

  பெருவயிறுக்கு மூக்கிரட்டை


கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்

  கழிச்சலுக்கு தயிர்சுண்டை 

அக்கிக்கு வெண்பூசனை

  ஆண்மைக்கு பூனைக்காலி


வெண்படைக்கு பூவரசு கார்போகி

   விதைநோயா கழற்சிவிதை 

புண்படைக்கு புங்கன்சீமையகத்தி

  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு


கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்

  கரும்படை வெட்பாலைசிரட்டை

கால்சொறிக்கு வெங்காரபனிநீர்

  கானாகடிக்கு குப்பைமேனி உப்பே


உடல்பெருக்க உளுந்துஎள்ளு

   உளம்மயக்க கஞ்சாகள்ளு

உடல்இளைக்க தேன்கொள்ளு

   உடல் மறக்க இலங்கநெய்யே


அருந்தமிழர் வாழ்வியலில்

  அன்றாடம் சிறுபிணிக்கு

அருமருந்தாய் வழங்கியதை

  அறிந்தவரை உரைத்தேனே!!





N2R NandhakumaR

Channel N2R

ChinnaKodangipalayam

Thursday 8 August 2019

N2R Logo


N2R Groups, Channal N2R, N2R Logo, N2R Vehicle Consultancy, N2R Tours and Travels, N2R Logistics, N2R NandhakumaR
Live With An Emotional Life,
Live With N2R.

Monday 5 August 2019

அது என்ன article 370 ?


தற்போது விவாத பொருளாகியுள்ள இந்த அரசியல் சாசன சட்டத்தை பார்ப்போம்.அதில் இடம் பெற்றுள்ள சலுகைகளை காண்போம். இந்தியாவில் உள்ள மற்ற மாநில மக்கள் ஏன் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்று பார்ப்போம்.


கடைசி வரை படித்து பாருங்கள் அப்ரோம் நீங்களும் article 370 ஐ எதிர்ப்பீர்கள்.


1.காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்கள் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள்.அவர்கள் இந்தியாவிலும் குடியேறலாம் பாகிஸ்தானிலும் குடியேறலாம்.


2.ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி கொடி உள்ளது..அங்கு இந்திய தேசிய கொடியை அவமதித்தாலும் அது தேச துரோகம் கிடையாது.


3.ஜம்மு காஷ்மீரில் மாநில அரசு 6 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம்.ஆனால் நம்மை போன்ற மற்ற மாநிலங்களில் 5 வருடங்கள் தான் வெற்றி பெற்ற அரசு ஆட்சி அமைக்க முடியும்.


4.இந்திய கொடி, தேசிய சின்னங்கள் மற்றும் தேசிய கீதத்தை அவமதித்தால் அங்கு அது தவறு கிடையாது என்று article 370 இல் உள்ளது.


5.இந்தியாவின் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளும் காஷ்மீரை தவிர அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்..


6.பாராளுமன்றத்தால் ஜம்மு காஷ்மீரில் உள்ள சில இடங்களுக்கு மட்டுமே சட்ட திருத்தங்களை செய்ய உரிமை உள்ளது.


7.ஜம்மு காஸ்மீரில் உள்ள ஒரு பெண் மற்ற மாநிலங்களில் உள்ள ஒரு ஆணை திருமணம் செய்தால் அந்த பெண்ணிடம் உள்ள காஷ்மீருக்கன.குடியுரிமை பறிக்கப்படும்.


அதே அந்த பெண்.பாகிஸ்தானில் இருக்கும் ஒரு ஆணை திருமணம் செய்தால் அந்த பாகிஸ்தான் ஆணுக்கும் இந்திய.குடியுரிமை.அளிக்கப்படும்.இதனால் பாகிஸ்தானில் இருந்து பல்வேறு பிரிவினைவாத தலைவர்கள் இந்தியாவின் உள்ளே வருகின்றனர்.


8.அரசியல் சாசன சட்டம் 370 காரணமாக இந்தியாவின் RTI, RTE மற்றும் CAG போன்ற எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீரில் செல்லாது..


9.இஸ்லாமியர்கள் பின்பற்றும் சரியத் சட்டம் ஜம்மு காஷ்மீரில் நடைமுறையில் உள்ளது.பஞ்சாயத்து போன்ற அமைப்புகளுக்கு அங்கு உரிமை இல்லை.மேலும் ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு இல்லை..


10.article 370 படி இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள மக்கள் ஜம்மு காஷ்மீரில் நிலங்களை வாங்க முடியாது.சொந்த நாடாக இருந்தாலும் நமக்கு உரிமைகள் அங்கு மறுக்கப்படும்.


11.காஷ்மீரி பெண்களை திருமணம் மட்டும் செய்து கொண்டு பாக்கிஸ்தானியர்கள் இந்திய குடிமகனாக மாற முடியும். ஆனால் இந்தியாவில் உள்ள மற்ற மாநில மக்கள் காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொண்டு காஷ்மீரில் குடியுரிமை வாங்க முடியாது..


12.காஷ்மீரில் உள்ள மக்களுக்கு என்று இந்திய அரசு வரிச்சலுங்க செய்ய வேண்டும் என்று article 370 கூறுகிறது.இதற்காக மட்டும் இந்தியா பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்கிறது.


Channel N2R

பல கோடீஸ்வரர்களை உருவாக்கிய பிரம்ம முகூர்த்தம்: முக்கியத்துவமும் பலன்களும் !


பிரம்ம முகூர்த்த ரகசியத்தைப் பற்றி  அதி காலையில் எழு! பல நன்மைகளை தரும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன!

வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந் தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புது தன்மை பெறுகின்றன. உற்சாகத்தையும் கொடுக்கின்றன. கண்கள் ஆரோக்கியத்தையும் உடல் வலிமையும் பெறுகின்றன. அதனால்தான் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்!. 


சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால் அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன!                           


 இந்த அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும் ஆரோக்யமாக இருக்கும். சத்தம் இல்லாமலும் பரபரப்பு இல்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்பதாகும்!                                       


உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகின்றதாம். இதனாலேயே விடியற் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கி சாய்வதால் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுவதால் விசேஷமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது. 

கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர் நீதி அரசர் சனி பகவான்: 


அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. பிரம்ம முகூர்த்தம் என்பது எல்லாமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வீட்டில் வேலை செய்ய வேண்டும். பின்பு குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். உறங்க வேண்டிய நேரத்தில் விழித்திருந்தால் நோய்கள் எல்லாம் நம்மை நோக்கி வரும். அதனால்தான் நமது பெரியோர்கள் அதிகாலையில் எழ வேண்டும் என்றார்கள். அந்த நேரத்தில் இறைவனிடம் வைக்கின்ற அனைத்துவித பிரார்த்தனைகள் கண்கூடாகவே நிறைவேறுகிறது!


சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மா நான்முகனை குறிக்கின்றது. படைக்கும் தொழில் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதி அமரச்செய்து 24 கலைகளையும் படைத்தார். பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் மற்றும் வீடு கிரகபிரவேசம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது! 


பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் அனைவரும் அறிந்திருப்பார்கள். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் இணைந்து மறுபிறவிதானே எனவே ஒவ்வொரு நாளும் காலையில் மறுபிறவி பெறுவதை சிருஷ்டி படைத்தல் என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா எனவே இவரது பெயரால் விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள்!


பிரம்ம முகூர்த்தத்தில் திதி வார நட்சத்திர யோக தோஷங்கள் கிடையாது. இந்த நேரம் எப்போதுமே சுபவேளை தான் இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலையை செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான். பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்!


தெய்வீகத்தன்மை இருக்கக்கூடிய நேரம் பிரம்ம முகூர்த்தம். ஒவ்வொரு நாள் காலையிலும் 4 மணி முதல் 6 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் வாழ்வில் மாற்றத்தை சரிசெய்ய லட்சுமி கடாட்சத்தை நினைத்த காரியங்களை நிறைவேற்ற நீங்கள் இந்த பிரம்மமுகூர்த்தத்தில் பயன்படுத்தலாம்!


நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை மீண்டும் மீண்டும் நினைப்பதற்கும் மந்திரம் யந்திரம் தந்திரம் நோக்கி நீங்கள் செல்ல வேண்டும் என்றால் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு நேரம் பிரம்மமுகூர்த்தம்!


அதுபோல் நமது மனதில் இருக்கும் எண்ணங்களை வைப்பதற்கான நேரம் தான் இந்த பிரம்மம் உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பிரம்ம முகூர்த்த தினம் தினமும் காலையில் தொடர்ந்து எந்த விஷயங்களை செய்கிறோமோ அதில் நாம் மாபெரும் வெற்றியை அடைய முடியும். 


சாதித்திருக்கக் கூடிய மிகப் பெரும் கோடீஸ்வரர்கள் அனைவருமே இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் எழுந்து செயல்பட ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல ஆதிக்கால தமிழர்கள் அனைவருமே இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் செயல்பட ஆரம்பிப்பார்கள். ஆரம்பிப்பது சரியாக இருந்தால் முடிவும் சரியாக இருக்கும் .ஆரம்பிக்கும் நேரம் நேரம் பிரம்ம முகூர்த்தம் ஆக இருந்தால், நம் வாழ்வில் வெற்றி இடம்பெறும். ஆகையால் சூரியனுக்கு முன் எழுந்து, சூரியனை விட உயர்ந்த வாழ்க்கையை நீங்கள் நிச்சயம் அடைய முடியும். பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 4 மணி முதல் 6 மணி வரை கடைபிடியுங்கள் வளமும் நலமும் பெற்று வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்!!!  என்றும் அன்புடன்.


N2R நந்தகுமார்

Sunday 28 July 2019

மன மாசுகள் எதிரி ஞானம்

ஒரு வீட்டை வாடகைக்கு விடவேண்டுமென்றால் உடைசல். விரிசல்களைப் பூசி வெள்ளையடித்து அதன் பிறகு தான் மனிதர்களை குடி அமர்த்துகிறோம். சாதாரண மனிதர்களை குடிவைப்பதற்கே இத்தனை பிரயத்தனமென்றால் சர்வ வல்லமை படைத்த இறைவனை நம் உள்ளத்தில் குடிவைக்க நமக்குள் இருக்கும் எத்தனை மாசுகளை நாம் துடைத்தெறிய வேண்டும்? அதற்கு நாம் எவ்வளவு அரும்பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதை உணரும்போது பெரும்மலைப்பாக இருக்கிறது.


நம் அனைத்து தீய செயல்களுக்கும், நம் தவறான நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் நம் மனமே மூல காரணமாக இருக்கிறது, ஒரு மீன் வியாபாரி இருந்தான், வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பும் போது பெரும்மழை பிடித்துக் கொண்டதால் வழியில் இருந்த அவன் பூக்கார நண்பன் வீட்டில் இரவு தங்கினான், அன்று இரவு முழுக்க அவனுக்கு உறக்கம் வரவில்லை ஏன்? மீன் நாற்றத்திலேயே உறங்கிப்பழக்கப்பட்டவனுக்கு பூவாசம் பெரும் தொல்லையாக இருந்தது,அதேபோன்றுதான் நம் மனம் முடைநாற்றம் வீசும் எண்ணங்களுக்குஉள்ளேயே முடங்கிக் கிடப்பதனால் பக்திப் படியேறி ஞானரதத்தில் பயணம் செய்ய முடியாமல் தட்டுத் தடுமாறி தரங்கெட்டுக் கிடக்கிறோம்,


இல்லையே? நான் அப்படி இல்லையே? நான் தினசரி பூஜை செய்கிறேன், தியானம் செய்கிறேன் அனைத்து விரதங்களையும் தவறாமல் கடைபிடிக்கிறேன், ஆனாலும் ஞானரதப் பயணம் எனக்குக் கிடைக்கவில்லையே? துன்பத்திலே அல்லவா துவண்டு கிடக்கிறேன்? தோல்வியில்அல்லவா துடிதுடித்து சாகின்றேன்? என்று சிலர் முணுமுணுப்பது நமக்குக் கேட்கிறது,


 உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் உங்கள் விரதமும். பூஜையும்பகவானை நோக்கியா? பகட்டான வாழ்வை நோக்கியா? நிச்சயமாக நாம் வெளிப் பொருள் வேண்டியே வேள்விகள் செய்கிறோம், ஒரு விவசாயி இரவு முழுவதும் கரும்புத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சினான்,விடிந்தபின் தோட்டத்தைப் பார்த்த விவசாயி பதைத்து போனான்,காரணம் இரவு முழுவதும் கஷ்டப்பட்டு இரைத்து பாய்ச்சிய தண்ணீர் தோட்டத்திற்குள் துளிகூட இல்லை, எலி ஒன்று தோண்டிய வளையால் வாய்க்கால் வழி உடைந்து வெற்று நிலத்திற்கு நீரெல்லாம் போய்விட்டது, புகழ். வெற்றி. பொருள் ஆகியவற்றில் கருத்தூன்றி பக்தன் செய்யும் அனைத்து விதமான ஈஸ்வர ஆராதனை ஒரு பலனும் இல்லாமல் எலி வளைத் தண்ணீராகத் தான் முடியும்,


இப்படிப்பட்ட பூஜையும்.பிரார்த்தனையும் ஆயுள் முழுக்க செய்தாலும் புறப்பட்ட இடத்திலேயே நகரவே நகராமல் நடந்து கொண்டிருப்போம், குழந்தை தாயிடம் ஆடை கேட்கிறதா? அணிகலன்கள் கேட்கிறதா? ஆனாலும் தாய் அவைகளை குழந்தைக்குத் தராமலா இருக்கிறாள், தாய்க்குத் தெரியும் தன் குழந்தைக்கு எதை எப்போது கொடுக்க வேண்டுமென்று, நாம் விவரம் புரியாமல் வெய்யில் காலத்தில் கம்பளியும். பனிக்காலத்தில்ஜஸ்கிரிமும் கேட்டால் எந்தத் தாய்தான் தருவாள்? தாயை விட சாலப்பரிவு உடையவன் இறைவன், அவனிடம் உன்னை முழுவதுமாகஒப்படைத்து விடு, உன் குறைகளை நிறையாக்குவது அவன் வேலை,அவனை மட்டுமே அடைய அழுவதும். தொழுவதும் தான் உன்வேலை, அவனை நீ அடைய வேண்டுமென்றால் உன்னை அவன் முதலில் அடையவேண்டும், அதற்கு நீ ஆமைபோல் ஐம்புலன் களையும் அடக்க பிரயத்தனம் எடுக்க வேண்டும், மந்திரித்த கடுகை பேய் பிடித்தவன் மீது அள்ளி வீசினால் பேய் அகன்று விடும்,


ஆனால் பேய் கடுகுக்குள்யே புகுந்து விட்டால் அந்தக் கடுகு எப்படிப் பேயை விரட்டும், அதேபோன்றுதான் பகவானை மனதால் தியானிக்க வேண்டும், தியானிக்க வேண்டிய மனதிலேயே காமகுரோதங்கள் நிறைந்து விட்டால் அதைக் கொண்டு எப்படி தியானிப்பது,படகைக்கொண்டு தான் ஆற்றைக் கடக்க வேண்டும், படகே பாம்பானால்அக்கரையுமில்லாமல். இக்கரையுமில்லாமல் நடு ஆற்றிலே நிற்கதியாகப்போகவேண்டியதுதான்.


மன மாசுக்களை அகற்றும் எண்ணம் ஞானத்தால் மட்டுமே உருவாகும், அந்த ஞானத்தைத் தருவது சூரியனாகும், சூரியன் என்பது வானத்தில் உள்ள வட்டப் பொட்டு அல்ல! உன் புருவங்களுக்கு மத்தியில்உள்ள மூளையின் வாசல் . ஓடுகின்ற மனத பிடித்து இழுத்து வந்து அந்த மையத்தில் கட்டு மனதிற்குள் மண்டிக் கிடக்கும் அஞ்ஞானக் குப்பைகள் பற்றி எரியும் அகங்கார கோபங்கள் வெந்து சாம்பலாகும்…..

பழமையான வாகனங்களுக்கு தடை?


govt-proposes-scrapping-of-vehicles-older-than-15-yrs

நாடு முழுவதும் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நிறுத்தி கொள்வதற்கான சட்டத் திருத்த கருத்துருவை மத்திய அரசு முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் ஓராண்டுக்கு ஒருமுறை தகுதி சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்பதை ஆறு மாதத்துக்கு ஒருமுறையாக மாற்ற வேண்டும் என்ற கருத்துரு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, புதிதாக பெட்ரோல் அல்லது டீசல் கார் வாங்கும்போது அதை பதிவு செய்வதற்கான கட்டணம் 600 ரூபாயில் இருந்து பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்களுக்கு பதிவு கட்டணம் 20 ஆயிரமாகவும் புதுப்பித்தல் கட்டணம் 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Channel N2R 
N2R NandhakumaR

Wednesday 24 July 2019

தேவைப்படும் தேவைகள்


 உடல் தேவை : உணர்ச்சியை நிறைவு செய்வது


மனதின் தேவை : இன்னது தான் வேண்டும் என்று கேட்பது


உயிரின் தேவை : அனுபவிப்பது


ஆன்மாவின் தேவை : தேவை இல்லை என்பது 


Channel N2R


உடலுக்கு ஒன்று தேவை 


மனதிற்கு ஒன்று தேவை 


உயிருக்கு ஒரு தேவை 


உள்ளமென்னும் ஆன்மவிற்கு ஒரு தேவை 


இந்த தேவைகளின் அடிப்படையில் உண்டாகும்  உரசலகள் தான்  துன்பங்கள் 


தேவைப்படும் தேவை ஒன்று, 


கிடைக்கும் தேவை வேறொன்று


உதாரணத்திற்கு உடலுக்கு தேவை உணவு.   


அந்த உணவு குறிப்பிட்ட  இந்த உணவாக தான் வேண்டும் என்று எண்ணுவது மனதின் தேவை 


உயிரின் தேவையோ ருசியை இன்னதென்று அறிந்து கொள்வது 


ஆனால் 


ஆன்மாவின் தேவை என்ற ஒன்று எதுவுமில்லை 


தேவையற்றதே ஆன்மாவின் தேவை 


இந்த வேறுபட்ட மன நிலை தான் நமக்குள் திரிபு நிலை உண்டாகக் காரணமாக இருக்கிறது 


நாம்  உடலாக நம்மை கருதும் பட்சத்தில் 


உடலின் தேவை என்பது உபத்திரவம் இல்லாமல் பூர்த்தியாகிறது 


ஆனால் அகங்காரம் என்னும் மனம் சஞ்சரிக்கும் போது 


வெவ்வேறு வகையான வேறுபட்ட எண்ணங்களும்,  ஆசைகளும் உண்டாகி 


உயிரின் தேவையையும், ஆன்மாவின் தேவையையும் கண்டுகொள்ள முடியாமல் செய்து விடுகிறது 


உண்பதற்கு கஞ்சி கிடைத்தால் அதுவே தேவாமிருதம் என்று ஏற்றுக்கொள்ள பழகிக் கொண்டால் 


ஆன்மாவின்  தேவையற்ற தேவையை உணர்ந்து கொள்ள முடியும் 


கஞ்சியில் எனக்கு இந்தக் கஞ்சி தான் வேண்டும், 


இது பிடிக்காது, 


அல்லது சேராது என்று பாகுபாடு உண்டாகும் போது 


மனம் அதிலேயே சிக்கி அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்ற நிலை உண்டாகிறது 


இந்த தவிப்பு உணவோடு நின்று விடுகிறதா என்றால் இல்லை 


அனைத்திலும் இதே மாறுபாடுகள் தான் 


வாழ்க்கை துணை விஷயத்திலும் சரி, 


குழந்தைகள் விஷயத்திலும் சரி,


உறவினர்கள் விஷயத்திலும் சரி...


பாகுபாடுகளை உண்டாக்கி 


உணர்வு நிலைக்கு நம்மை போக விடாமல் தடுத்துக் கொண்டு இருப்பது மனம் என்னும் அகங்காரம் கொண்ட மாய வலை 


மனம் இன்னதென்று அறிந்து 


அதன் சூட்சுமத்தை உணர்ந்து, 


அதன் வழியிலேயே பயணித்து, 


அதை அங்கேயே நிலை நிறுத்தி 


அதைக் கடந்தால் 


ஆன்மாவின் தேவை தேவையற்றது தான் என்று உணர்ந்து கொள்ள முடியும் 


அதற்கு "நான் யார்" என்ற விசாரத்தில் தேர்ச்சி பெற்றால் 


"தான்" என்ற தயாபர நிலையை உணர்ந்து கொள்ள முடியும்


மனமென்னும் மாயையை 


விழிப்புணர்வோடு கண்காணிக்க தொடங்குவோம் ஒவ்வொரு கணமும்...


சேயோன் சேவகன் 

N2R நந்தகுமார்

Saturday 20 July 2019

40 ஆண்டுகளுக்கு முன்பு அத்தி வரதரின் சுவடு...



#அத்திவரதர் 
#அத்தி வரதர் #அத்திவரதர் கோவில் #அத்திவரதர்1979 #அத்திவரதர் 2019 #அத்திவரதர் காஞ்சிபுரம்

Friday 12 July 2019

மன முதிர்ச்சி என்றால் என்ன? | What is Maturity of Mind ?


1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு 

    நம்மை திருத்திக்கொள்வது.

1. Correcting ourselves without trying to correct others.


2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)

    ஏற்றுக்கொள்வது.

2. Accepting others with their short comings.


3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் 

கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.

3. Understanding the opinions of others from their perspectives.


4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.

4. Learning to leave what are to be avoided.


5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

5. Leaving the expectations from others.


6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.

6. Doing whatever we do with peace of mind.


7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் 

    நிரூபிப்பதை விடுவது.

7. Avoiding to prove our intelligence on others.


8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் 

என்ற நிலையை விடுதல்.

8. Avoiding the status that others should accept our actions.


9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.

9. Avoiding the comparisons of ourselves with others.


10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..

10. Trying to keep our peace in our mind 

      without worrying for anything.


11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய 

    விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.

11. Understanding the difference between the basic needs 

      and what we want.


12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல

     என்ற நிலையை அடைதல்.

12. Reaching the status that happiness is not connected 

      with material things.


*இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்*

*Our life will be simple if only we practice 7 or 8 of the above 12*



உணர்வுப்பூர்வமான வாழ்க்கை வாழுங்கள்,

N2R உடன் வாழுங்கள்.


Live with an Emotional Life,

Live with The N2R.


நன்றி!

N2R நந்தகுமார்,

Channel N2R.

Thursday 11 July 2019

வெவ்வேறு ஊர்களில் பரமனுக்கு பல்வேறு திருப்பெயர்கள்


தஞ்சாவூரில் *பிரகதீஸ்வரர்*


திருவாரூரில் *தியாகராஜர்*


திருநெல்வேலியில் *நெல்லையப்பர்*


திருவையாறில் *ஐயாறப்பர்*


திருவண்ணாமலையில் *அண்ணாமலையார்*


திருவாவடுதுறையில் *கோமுக்தீஸ்வரர்*


திருவெண்காட்டில் *சுவேதாரண்யேஸ்வரர்*


திருவானைக்காவலில் *ஜம்புகேஸ்வரர்*


திருக்கருகாவூரில் *முல்லைவனநாதர்* 


திருவாலாங்காட்டில் *வடாரண்யேஸ்வரர்*


திருமருகலில் *ரத்தினகிரீஸ்வரர்*


திருவிசநல்லூரில் *யோகநந்தீஸ்வரர்* 


திருப்புகலூரில் *வர்த்தமானீஸ்வரர்*


திருத்தங்கூரில் *வெள்ளிமலைநாதர்*


திருக்கழுகுன்றத்தில் *வேதகிரீஸ்வரர்*


திருநீலக்குடியில் *நீலகண்டேஸ்வரர்*


திருச்சியில் *தாயுமானவர்*

 

திருநள்ளாரில் *தர்ப்பாரண்யேஸ்வரர்*

 

திருமணஞ்சேரியில் *உத்வாகநாதர்*


திருவேள்விக்குடியில் *கல்யாண சுந்தரேஸ்வரர்*


திருவேற்காட்டில் *வேதபுரீஸ்வரர்*


திருக்கண்ணபுரத்தில் *ராமநாதர்*


திருமழபாடியில் *வைத்தியநாதர்*


திருக்கோவிலூரில் *வீரட்டேஸ்வரர்*


திருப்புனவாசலில் *விருத்தபுரீஸ்வரர்*


திருவண்டுதுறையில் *வண்டுறைநாதர்*


திருமாணிக்குழியில் *வாமனபுரீஸ்வரர்*

 

திருவாளப்புத்தூரில் *மாணிக்கவண்ணர்*


*இப்படி ஒரே ஒரு கடவுளுக்கு பல்வேறு பெயர்களில் பல்வேறு இடத்தில் கோவில் அமைத்து தேவாரத்தையும் திருவாசகத்தையும் பாடி , ஆறு கால பூசையில் , ஒவ்வொரு பூசையையும் ஒவ்வொரு ஊரில் சிறப்பாக செய்து, தமிழையும் கடவுளையும் ஒன்றாகவே வணங்கி இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.*


*தேவாரம் பாடப் பெற்ற தலங்கள் மட்டுமே 274. இதில் சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தலங்கள் மட்டுமே 128. வடகரையில் அமைந்த தலங்கள் 63.*


*ஈழத்தில் உள்ள திருகோணமலையில் அமைந்த திருக்கோணேஸ்வரர் கோவில் மற்றும் திருக்கேதீச்சரத்தில் அமைந்த திருக்கேதீஸ்வரர் கோவிலும் தேவாரம் பாடப் பெற்ற தலங்களே.*


*தமிழையும் கடவுளையும் ஒன்றாக பார்த்த தலைமுறை இவர்களுடையதாகத் தான் இருக்கும். ஊரின் சிறப்பைக் கொண்டே அந்த ஊர்களுக்கு பெயர் வைத்து , அந்த பெயரைக் கொண்டே அந்த ஊர் கடவுளையும் வணங்கி இருக்கின்றனர்.*


*எடுத்துக்காட்டு : திரு + ஐந்து +ஆறு = திரு ஐயாறு , இதுவே காலப்போக்கில் திருவையாறாக மாறி இருக்கிறது. காவிரி , குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு எனும் ஐந்து ஆறுகள் அந்த ஊரில் ஓடுவதால் இந்தப் பெயரை வைத்து கடவுளையும் ஐயாறப்பர் என்று அழைத்து இருக்கின்றனர்.*


*இப்போதெல்லாம் நம்ம பெயருக்கு காரணம் கேட்டாலே நம்மால் சொல்ல முடிவதில்லை. அவர்கள் ஊருக்கு பெயர் வைப்பதில் கூட இவ்வளவு கவனமாக இருந்திருக்கின்றனர். வாழ்க தமிழர்களின் புகழ்.*


*திருச்சிற்றம்பலம்*


 -சேயோன் சேவகன்

N2R நந்தகுமார்

அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்

🌸


வள்ளுவர் ஓர் இந்து

🌸


 ஒரு மனிதன்  எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? 

🌸


இந்துக்களின் நெற்றி மதச் சின்னத்தைக் காட்டுகிறது.

 கிறிஸ்தவர்களின் கழுத்தில் தொங்கும் சிலுவை அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதை க்குறிக்கிறது.

முஸ்லீம்களின் ஆடையும், தொப்பியும் கோஷாவும் அவர்கள் முஸ்லீம்கள் என்பதைத் தெளிவாக்குகின்றன.

ஆனால், இந்தச் சின்னங்கள் ஏதுமில்லா த நவநாகரிக இளைஞன் ஒருவனை, அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படிக்கண்டுபிடிப்பது.?

🌸


ஒரு கதை உண்டு.

 ஒரு மனிதன் பன்னிரண்டு மொழிகள் பேசுவானாம்.

ஒவ்வொரு மொழியையும், அந்தந்த மொழிக்காரர்கள் எ ப்படிப் பேசுவார்களோ அப்படியே அதே தொனியொடும்  உச்சரிப்போடும் பேசுவானாம். 

அவனுடைய தாய்மொழி எது என்று யாருக்கும் தெரியவில்லையாம்.

அவனைக் கேட்டால் அவனும் சொல்ல மறுத்து விட்டானாம். அவனது தாய்மொழியைக் கண்டுபிடிக்க  அவனது நண்பர்கள் ஒரு வேலை செய்தார்களாம்.

ஒர நாள் அவன் நன்றாக த் தூங்கிக் கொண்டிருக்கும் போது ”பளார்” என்று அவன் முதுகிலே ஓங்கி அடித்தார்களாம்.

அவன் ஆத்திரத்தோடு எந்தடா நாயாடி மோனே” என்று சொல்லிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தானாம்.

அவனது தாய்மொழி மலையாளம் என்பது தெரிந்து விட்டதாம்.

🌸


தன்வயமற்ற நிலையில் ஒருவன் பேசுகிற பேச்சு தான்  உண்மையானப் பேச்சு.

அது போதையாயினும் சரி, உற்சாகமாயினும் சரியே.

🌸


நடக்கும் வழியில் ஒருகல்  தடுக்கிவிட்டதென்றால்  ஒருவன் கடவுளே “என்கிறான் அவன் இந்து.

அல்லா” என்றால் அவன் முஸ்லீம்.

கர்த்தரே” என்றால் அவன் கிறிஸ்தவன்.

🌸


ஒவ்வொரு மதத்துக்காரருக்கும் முக்கியமான கட்டங்களில் எல்லாம், தனது மத தத்துவம், தனது கடவுள் நினைவுக்கு வருவது போல ஒவ்வொரு மதக் கவிஞனுக்கும்  தனது எழுத்துகளில் தனது கடவுள்  பற்றிய சிந்தனையே வரும்.

வள்ளுவனும் அப்படியே!

🌸


இறைவனைப்பற்றி அவன் குறிப்பிடுகிற சில வார்த்தைகள் வேறு சில மதக்கடவுளுக்கும் பொருந்தும் என்றாலும், பெரும்பாலானவை  நேரடியாக இந்துமதக்கடவுள்களையே  குறிக்கின்றன.

🌸


உதாரணமாக ”வேண்டுதல் வேண்டாமை இலான்” என்பது எல்லா மதத்தின் மூலவருக்கும் 

பொருந்தும் என்றாலும் விருப்பு வெறுப்பற்றவன் என்று இந்துக்களே இறைவனை அதிகம் கூறுகிறார்கள்.

🌸


ஆழ்வார்கள் நயன்மார்கள் பாடல்கள் அனைத்திலும்  இந்த எண்ணம் பிரதிபலிக்கிறது.

🌸


கடவுள் என்ற வார்த்தையை வள்ளுவன் பயன்படுத்த வில்லை என்றாலும் ”கடந்து உள்ளிருப்பவன்” என்ற பொருளில்  இந்தக்கள் மட்டுமே அதனைப் பயன்படுத்துகிறார்கள். 

இறைவன் என்ற சொல் கடவுள் என்ற பொருளில் வளு்ளுவனால் இரண்டு இடங்களில் பயன்படுத்தப் படுகிறது.

🌸


ஐந்தாவது குறளில் ”இருள் சேர் இருவினையும்” சேரா இறைவன் என்றும்,

 பத்தாவது குறளில் ” பிறவிப்பெருங்கடல் நீந்துவார் நீந்தார்  இறைவனடி சேராதார்” என்றும் அது ஆளப்படுகிறது.

🌸


கடவுளை“இறைவன் ”என்று பௌத்தர்களோ,முஸ்லீம்களோ,கிறிஸ்தவர்களோ கூறத் தொடங்குவதற்குப்பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வள்ளுவன் கூறியிருக்கிறான். மற்றவர்கள் பின்னால் எடுத்துக் கொண்டார்கள்.

🌸


வள்ளுவன் காலத்தில் பௌத்த மதமும் இந்தியாவிலேயே பிறந்த வேறு  சில மதங்களும் மட்டுமே  இருந்தன.

அந்நாளில் அவை கடவுளை இறைவன்” என்று அழைத்ததில்லை.

ஆனால் இந்துக்களின் கடவுள் பாடல்கள் பிரபந்தங்கள் அனைத்திலும்  அந்த வார்த்தை வருகிறது.

🌸


அதிலும் வினைகள் இருவகை, அவை நல்வினை, தீவினை எனச் சொல்வோர் இந்துக்கள்.

அஃதன்றியும்,இறைவன் என்ற சொல்லை அரசன் என்ற பொருளில் 690,733,778 ஆவது குறள்களில் வள்ளுவன் கையாள்கிறான்.

 இறைவனையும் , அரசனையும் வேறு எந்த மதத்தவரும் ஒன்றாகக் கருதுவதில்லை.ஒரே சொல்லால் அழைப்பதில்லை.

🌸


பிற்காலத்தில் தமிழ் இந்துக்கள் இன்னும் ஒர படி மேலே போய் ”கோ” என்ற வார்த்தைக்கு  “இறைவன்” அரசன்.பசு என்ற மூன்று அர்த்தத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.

இறைவனடி சேர்வது என்ற மரபு இந்துக்களுக்கு மட்டுமே உண்டு.

🌸


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்.

என்ற குறளில் வரும்.”வானுறையும் தெய்வம்” இந்துக்களுக்கு மட்டுமே உண்டு.

🌸


தெய்வம் வானத்தில் இருக்கிறது என்பதை மற்ற மதத்தவர் ஒத்துக் கொள்வதில்லை.

பெயக்கண்டும்.நஞ்சுண்டமைவர்” என்ற குறள் ” திருப்பாற்கடல் கடையப்பட்ட போது ஆலகால விஷத்தை அள்ளியுண்ட பரமசிவனையே குறிக்கிறது.” அடியாருக்கு, நஞ்சமுதம் ஆவது தான் அற்புதமோ? என்கிறார் சேக்கிழார் பெருமான்.

🌸


நற்றிணையில் வரும் ”நஞ்சுண்பர் நனிநாகரிகர் ” என்ற தொடரும் சிவனாரைக் குறிப்பதாக நான் சொன்னால் யார் மறுக்க முடியும்?

🌸


அஃதன்றியும் , ஒரு குறளில் இந்துக்களுக்கு மட்டுமே உரிய இந்திரனைச் சாட்சிக்கழைக்கிறார் வள்ளுவர். 

🌸


வேறு எந்த மதத்தவருக்கும் ”இந்திரன்” என்று ஒருவன் இல்லை. அதிலும் இந்திரன் சம்பந்தப்பட்ட இந்து மதம் ஒன்றையே வள்ளுவர் உவமிக்கிறார்.

ஐந்தவித்தான் ஆற்றல்

அகல் விகம்புளார் கோமான்

இந்திரனே சாலுங் கரி.

ஐந்து பொறிகளையும் அடக்காது சாபம் எய்திய  இந்திரன் அடக்குவோனுடைய ஆற்றலுக்குச் சான்றாகிறான்  என்கிறார். 

கெட்டுப் போனவனைக் காட்டி நல்லவனைப் புகழ்வது போல் , பொறி அடக்காத இந்திரனைக் காட்டி அடக்குவோரின் ஆற்றலை வியக்கிறார் வள்ளுவர்.

🌸


 இந்துக்களின் புராணப்படி அகல் விசும்புளார் கோமான்” என்றே இந்திரனை அழைக்கிறார். 

அவர் கூறும் உவமான  கதை அகலிகையின் கதையாகும்.

🌸


இன்னுமோர் இடத்தில் 

 கோளில்  பொறியிற்  குணமிலவே எண்குணத்தான் 

 தாளை வணங்காத் தலை.

என்கிறார்.

 இந்துக்களின் இறைவனுக்கு மட்டுமே எட்டுக் குணங்கள் கற்பிக்கப் பட்டிருக்கின்றன.. 

🌸


பரிமேலழகர் சொற்படி அந்த எட்டுக் குணங்கள்  கீழ் கண்டவை

தன் வயத்தனாதல்

தூயவுடம்பினனாதல் 

இயற்கையுணர்வினனாதல்

முற்றுமுணர்தல்

இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்

பேரருளுடைமை

முடிவிலாற்றலுடைமை

வரம்பில் இன்பமுடைமை

-சைவ ஆகமத்திலும் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

அப்பர் சுவாமிகளும், எட்டு வான் குணத்து ஈசன் எனப்பாடினார்.

🌸


 கற்றதனால் ஆயப்பயன் என்கொல் வாலறிவன்

நற்றாள் தொழா அர் எனின். 

என்றொரு குறள்.

இதில்”வாலறிவன்”” என்பது மற்ற மதக்கடவுள்களையும் குறிக்கக்கூடிய மயக்கத்தைத் தரும்.ஆயினும் எங்கும், எப்பொழுதும் , தானாகவே அனைத்தையும்  அறியும் ஞானத்தைக் குறிப்பதால்” அங்கிங்கெனாதபடி  எங்கும் பிரகாசமாய் ஆனந்தமூர்த்தியாகி நிற்கும் ஈசனைக்குறிப்பதாகக் கொள்ளலாம்.

🌸


அது போல ”தனக்கு வமை இல்லாதவன்”          என்ற சொல்லும் மயக்கத்தைத்தரும்.ஆயினும், அதுவும் ஈசனைக்குறிப்பதாக எடுத்துக்கொள்ள முடியும்.

🌸


அப்பர் சுவாமிகள் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டிப் பேராசிரியர் ஜி.சுப்பிரமணியபிள்ளை அவர்கள் இதனை விளக்கியிருக்கிறார்கள். 

ஒரு ”குறளில் வரும் ”மலர்மிசை ஏகினான்” என்ற வார்த்தை பல பொருள் தருமாயினும், பரிமேலழகர் உரைப்படியும், பிற்கால நாயன்மார்கள் பாடல்களின்  படியும், அதுவும் சிவபெருமானையே குறிக்கிறது.


பிறவியைப் ”பெருங்கடல்”என்று இந்துக்கள் மட்டுமே குறிப்பதால் நான் முன்பு  சொன்ன அந்தக்குறளும் வள்ளுவன் ஓர் இந்துவே எனக் காட்டுகிறது.

🌸


மற்றும்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 

பற்றுக பற்று விடற்கு

என்றும்

தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிது கொல் 

தாமரைக்கண்ணான் உலகு

என்றும் இந்துக்களின் துறவுத்தத்துவத்தையும்  தலைவன் பெயரையும் வள்ளுவர் குறிப்பிடுகிறார். 

வள்ளுவர் கூறும் தானமும் தவமும் இந்துக்களின் மரபுகளே.

🌸


 துறவறத்தின் பெருமையைப் புத்தமதமும் கூறுமாயினும், இந்திரனைப்பற்றிய குறிப்பு வள்ளுவரின் நீத்தார் பெருமை” என்ற அதிகாரத்திலேயே வருவது குறிப்பிடத்தக்கது  

🌸


இவ்வாறு வள்ளுவப்பெருந்தகை          தொட்ட இடமெல்லாம்  இந்துக் கடவுள்களையும், இந்துக்களின் மரபையுமே கூறுவதால் அவரும் ஓர் இந்துவே என்பது  சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மை.

🌸


 அவரைத் தூக்கத்தில் தட்டி எழுப்பியிருந்தாலும் ”இறைவா” என்று தான் சொல்லி இருப்பார்.

🌸


 அறத்துப்பாலில் காணும் அறமும், பொருட்பாலில் காணும் பொருள்களும், தமிழர்களுக்கு மட்டுமே உரியவையாக அன்று இருந்தன.

🌸


ஆகவே தமிழரான வள்ளுவர் ஓர் இந்து. இந்துவான வள்ளுவர் ஒரு தமிழரே என்பது எனது துணிபு.

🌸

Tuesday 9 July 2019

உலகின் முதல் சிவன் ஆலயம் மற்றும் அதன் சிறப்பு தகவல்கள்


சிவனின் சொந்த ஊர், உலகிலயே முதல் நடராஜர் தோன்றிய ஊர்,

உலகின் உள்ள அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில். 


நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம். ஆயிரம் சிவ  அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம்.


3000 ஆண்டுகளாய் பூத்து குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயம். 


*தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்ற வாக்கியம் உருவான இடம்.


மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம். இப்படி பல அதிசயங்களையும், ஆச்சயர்களையும்   தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் அதுதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்.


தவறாமல் இத்திருக்கோவிக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள்.


இராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :-


1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.


2. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.


3. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது.


4. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.


5. திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது.


6. உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில்


சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.


7. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம்,


பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.


8. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும்.


9. இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.


10. மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய


திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.


11. மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.


12. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.


13. இறைவி மங்களேசுவரி பெயரில் வ.த. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901-ம் ஆண்டு வெளியான


அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.


14. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண


காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.


15. இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர்


வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.


16. இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.


17. கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.


18. இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான்


என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.


19. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.


20. சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த


கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.


21. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.


22. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.


23. இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.


24. சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே


அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.


25. ஆதிசைவர்கள் வசமிருந்த இத்தலம் பின்னரே ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுர


சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது இத்தலம்.


26. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன


பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும்.


27. இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை. கடல்நீரில் வாழும் மீன்களாகும்.


28. பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை


கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.


29. இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை


தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.


30.ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம்.


31. டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதகல்


நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.


32. இத்தலத்தில் தினமும் முதல் - அமைச்சரின் அன்னத்தானத்திட்டம் நடைபெறுகிறது. ரூ. 700 நன்கொடை வழங்கினால் 50 பேருக்குஅன்னதானம் கொடுக்கலாம்.


33. காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது.


34. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.


35. இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி சகஸ்ரலிங்க சன்னதி நான்கும்


தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


36. நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால்


இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.


37. காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.


38. உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.


39. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.


40. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பதுநாள் சிவ உற்சவம், ஐப்பதி மாதம்


அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்ஆகும்.


41. தினமும் இத்தலத்தில் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு


சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது.


42. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.


43. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம்செய்யலாம்.


44. மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.


45. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.


46. மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.


47. இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது.


48. உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.


49. நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.


50. இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம்.


51. இங்குள்ள மங்களநாதர் லிங்க வடிவில் உள்ளார்.


52. தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும்


முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.


53. வேதவியாசரும், பாராசரும் காகபுஜண்டரிஜி மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம்.


54. உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.


55. ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா


56. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.


57. சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.


58. ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும்.


59. உத்தர கோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.


60. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள்

உயரமாகவும், உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.


*இந்து மதத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது* இது உண்மையிலும் உண்மை..


அதே சமயம் நம் இந்து மதத்தை போற்றி பாதுகாப்பதும், 

நம் இந்து மதத்தின் வரலாற்று உண்மையை பிறருக்கு தெரிய படுத்துவதும் நம் கடமை.


*ஒம் நம சிவாயா*

சேயோன் சேவகன்

N2R நந்தகுமார்

Channel N2R

Tuesday 2 July 2019

அர்த்தமுள்ள வாழ்வை வாழ்வோம்

5 வயதில் விரல்களை எண்ணினான்,

10 வயதில் எண்களை எண்ணினான்,

15 வயதில் மதிப்பெண்களை எண்ணினான்,

20 வயதில் தேர்வு வினாக்களை எண்ணினான்

*Channel N2R*

25 வயதில் சம்பளத்தை எண்ணினான்,

30 வயதில் நண்பர்களை எண்ணினான்,

35 வயதில் வாரிசுகளை எண்ணினான்,

40 வயதில் கடன்களை எண்ணினான்,

45 வயதில் நோயை எண்ணினான்,

50 வயதில் சொந்தங்களை எண்ணினான்,

*Channel N2R*

55 வயதில் மாத்திரையை எண்ணினான்,

60 வயதில் பேரக் குழந்தைகளை எண்ணினான்,

அதற்கு பின் வயதை எண்ணினான்,

இறந்த பின், தனக்காக அழும் உள்ளங்களை எண்ணினான்.

எண்ணிப் பார்க்கையில் , 

தன்னிடம் கூடவே இருந்தது

கணிதம் மட்டும் தான் 

என எண்ணினான் !! விடை என்னவோ

தொடக்கமும் முடிவும்"0" தான்.


           - சேயோன் சேவகன் 

N2R நந்தகுமார்

Thursday 20 June 2019

தேங்காய், தென்னை மட்டை மேலே விழுந்தால் செய்ய வேண்டியவை


1) குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம்.


மற்றும்


2) "ஓம் கண்டபரஸவே ஸகலாய சர்வ சங்கட பாவ கர்ம ஹர ஹரயே சந்திர சஞ்ஜீவநாய இரட்சகம் இரட்சகம் பரிபூரண இரட்சகம்" 


 பிரம்மமுகூர்த்தத்தில் அதாவது காலை 4.30 மணிமுதல் 5.45 மணிக்குள்  குளித்து வீட்டில் தீபமிட்டு மேற்கூறிய மந்திரத்தை  16 முறை சொல்லி வழிபட வேண்டும்.


 அதேபோல் மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிக்குள்  குளித்து வீட்டில் தீபமிட்டு மேற்கூறிய மந்திரத்தை  16 முறை சொல்லி வழிபட வேண்டும்.


இவ்வாறு 48 நாட்களுக்கு வழிபட நன்மை உண்டாகும்.


-N2R NandhakumaR

Channel N2R


Source From:

https://www.facebook.com/NandhakumarInSpiritualSurvey/

Friday 7 June 2019

தெய்வத்தின் பார்வையில்......


எது நல்லநேரம் ?


• நல்லதை நினைக்கும் போது

• நல்லதைப் பார்க்கும் போது

• நல்லதைக் கேட்கும் போது

• நல்லதைப் பேசும் போது


எது இராகு காலம் ?


• அகங்காரம் கொள்ளும் நேரம்

• பாசம் கண்களை மறைக்கும் நேரம்

• ஆசைகள் எல்லையை மீறும் நேரம்

• கோபங்கள் உச்சத்தைத் தொடும் நேரம்

• தேகம் கவர்ச்சியில் மூழ்கும் நேரம்


எது குளிகை ?


• கவலைப்படும் நேரம்

• பயப்படும் நேரம்

• கலங்கும் நேரம்

• முயலாத நேரம்


எது எமகண்டம் ?


• பொறாமைப்படும் நேரம்

• புறம் கூறும் நேரம்

• கோள் சொல்லும் நேரம்

• சதி செய்யும் நேரம்


எது பிரம்மமுகூர்த்தம் ?


• தாய் தந்தையை ஆன்மா என உணர்ந்து அவர்களை மதித்து நினைக்கும் நேரம்

• கடமையில் வழுவாத நேரம்

• அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம்


எது சுப முகூர்த்தம் ?


• சுயநலம் கருதாது பிறருக்கு உதவி செய்யும் நேரம்..

• சம்பாதிப்பதில் கொஞ்சமாவது தானம் செய்யும் நேரம்..


எது சிறந்த ஞானம்?


பிரிந்து வாழ்வதைவிட புரிந்து வாழ்வது.


Friday 31 May 2019

மோடியின் அடுத்த திட்டம் டிஜிட்டல் கிராமம்... 100 நாட்களில் 1000 கி.மீ. சாலை

புதிய அமைச்சரவை வியாழக்கிழமை பதவி ஏற்கும் நிலையில், புதிய அரசு உடனடியாக செய்ய உள்ள திட்டங்களுக்கான பட்டியல் தயாராகி உள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலைகள் துறை முதல் 100 நாட்களில் 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலையை அமைக்கும் திட்டத்தை தயாரித்து வைத்து உள்ளது.

போக்குவரத்து துறை செயலர் சஞ்சய் ரஞ்சன் தலைமையிலான அதிகாரிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 100 நாட்களில் செய்ய வேண்டிய பணிகளில் 20 ஆண்டுகளை கடந்த பழைய வாகனங்களை போக்குவரத்தில் இருந்து நீக்கும் திட்டமும் இடம் பெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இதே போன்று டிஜிட்டல் கிராமத் திட்டத்தையும் உடனடியாக அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் படி சுகாதாரம், நிதி சேவை, திறன் மேம்பாடு, கல்வி ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் கிராம மக்களுக்கு வழங்கப்படும். இதற்காக நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலா ஒரு கிராமம் என 700 ஊர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த கிராமங்களுக்கு பாரத் நெட் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் வைபை வசதி செய்யப்பட உள்ளது. அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்படும் பொது சேவை மையம் மூலம் கிராம மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் வைபை வசதி அளிக்கப்பட உள்ளது. மேலும் ஒவ்வொரு சேவை மையத்திலும் கம்ப்யூட்டர் மையங்களும் அமைக்கப்பட உள்ளன.

இந்த மையங்களை கிராம மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் பயன்படுத்த முடியும். இந்த மையங்கள் மூலம் கிராம மக்களுக்கு மருத்துவ ஆலோசனை, பணப் பரிமாற்றம், வங்கி சேவை, நிதி மேலாண்மை, விவசாயம் சார்ந்த தகவல்கள், கிராம தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி ஆகியவை அளிக்கப்படும்.

மேலும் கிராமத்து மாணவர்கள் சேவை மையம் மூலம் கல்வி அறிவை வளர்த்து கொள்ளவும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக பட்சமாக 75 கிராமங்களும், மத்திய பிரதேசத்தில் 52 கிராமங்களும், பீகாரில் 38 கிராமங்களும் தேர்வு பெற்றுள்ளன. 
சுகாதார திட்டத்தின் படி, கிராமங்களில் உள்ளவர்கள் காணொலி காட்சி மூலம் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற முடியும்.

மிக அவசர சிகிச்சை தேவை படாத நோய்களுக்கு கிராம மக்கள், மருத்துவர்களிடம் காணொலி காட்சி மூலம் மருத்துவ ஆலோசனை, மற்றும் மருந்துகள் குறித்த பரிந்துரையை பெற முடியும். இதன் மூலம் கிராம மக்கள் மருத்துவர்களை தேடி செல்லும் பயண நேரமும், செலவும் மிச்சமாகும். 
இதே போல கால்நடை மருத்துவ ஆலோசனைகளும் பெற வசதி செய்யப்பட உள்ளது.

திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் வீட்டு உபயோக பொருட்களின் பழுது நீக்கும் பயிற்சி, வாகன பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பயிற்சி, செல்பேசி பழுது பார்க்கும் பயிற்சி, மின்சாதன பொருள் பராமரிப்பு, பழுது நீக்கும் பயிற்சி ஆகியவை அளிக்கப்பட உள்ளன. இதன் மூலம் கிராமத்தினர் சுய தொழில் செய்ய வழிவகை செய்யப்படும்.

நிதிச் சேவை திட்டத்தின் படி, கிராம மக்கள் நிதி உதவி பெற ஆலோசனை, தொழில் மற்றும் விவசாய கடன்களை பெற வழிகாட்டுவது, சம்பாதிக்கும் பணத்தை சிக்கனமாக சேமிக்கும் வழிமுறைகள் ஆகியவை அடங்குமென அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும் புதுப்பிக்க வல்ல எரிசக்தியை அதிகம் பயன்படுத்தும் வகையில் கிராம மக்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 Channel N2R  Narendra Modi Digital Village 100 Days 1000 kilometre Road

யார் இந்த காண்ட்ராக்ட்டர் நேசமணி | Who is Nesamani



நேசமணி, காரைக்குடி பக்கத்தில் கானாடுகாத்தான் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் பிறப்பு சாதாரணமானது கிடையாது. பிறக்கும் முன்பே ஒரு பேனில்லாமல், ஏசி இல்லாமல், திரும்பக்கூட இடமில்லாமல் வயிற்றில் பாடுபட்டு பிறந்தவர் நேசமணி. சிறு வயதிலேயே தன் அண்ணனை விட்டு பிரிந்த நேசமணி பல வருடங்கள் கழித்தே தன் அண்ணனுடன் சேர்ந்து கொண்டார்.


தன் அத்தை பெண் திவ்யாவை மனப்பூர்வமாக காதலித்தார் நேசமணி. அந்த காதல் கைகூடாதபோதும் கூட 'நீ யாரையோ நெனச்சி வாழாவெட்டியா இருக்கப்போற. நான் உன்னையே நெனச்சி வெட்டியா வாழாம இருக்கப்போறேன்' என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தவர் நேசமணி. வெறும் ஏரியா கவுன்சிலராக இருந்து சட்டம் படித்து வக்கீல் வண்டுமுருகனாகி, லண்டனில் வக்கீலாக வேலை செய்தாலும் நேசமணிக்கு வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கவில்லை. மீண்டும் குற்றாலத்தில் வந்து ஒரு டிவிஎஸ் 50 வாங்கிக்கொண்டு கடலைமிட்டாய் வாங்கித்தின்பதோடு சரி என்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் நேசமணி. இப்படி இருந்தபோது தமிழ்நாடு போலீஸ் அவரை கைது செய்து கொரில்லா செல்லில் அடைத்தது. அதிலிருந்து ஹெல்மேட்டோடு ஒரு ஆட்டோவில் தப்பி வந்து மீன் வியாபாரம் செய்தபோதும் அவருடைய விற்பனை கரும்பலகையை அந்நிய சக்திகள் அழித்த கதையும் மிகவும் கவலைக்குரியது.


எதுவும் சரியாய்ப்போகவில்லை என்று திருடியாவது பிழைப்போம் என்று முடிவெடுத்தபோது ஒரு குதிரை ஏமாற்றிவிட பீச்சில் கையும் களவுமாக பிடிபட்டார் நேசமணி. வாழ்க்கை நேசமணியை துரத்தியது. ஆனால் நேசமணி துவண்டுபோகவில்லை. சண்முகம் சலூன் கடை வைத்து ஸ்டெப் கட்டிங்க், ஸ்டைல் கட்டிங்க், பாப் கட்டிங்க் என்று தொழிலை கற்றுக்கொண்டு சைன் பண்ண ஆரம்பித்தார் நேசமணி. ஆனால் அந்த வேலையும் சில சக்திகளால் போய்விட வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற தன்னார்வமற்ற சங்கத்தை துவங்கினார் நேசமணி. கட்டதுரையின் பொறாமையாலும் அரசியலாலும், அவர் தேசிக்காய் உரித்து வைக்க மற்றவர்கள் விளக்கை ஏற்றும் கொடூரமும் நேசமணியின் வாழ்வில் நடந்தேறியது.


யார்யாரோ காலை பிடித்து பேலஸ்ஸில் ஒரு கான்ட்ராக்ட்டை வாங்கி பங்களாவுக்கு வெள்ளையடிக்கப்போன நேரத்தில் தான், தன் அண்ணன் மகன் கிச்சுணமூர்த்தியால் சுத்தியல் தாக்குதலுக்குட்பட்டு தற்போது ICU வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் நேசமணி. அவருக்காக பிரார்த்திக்க தேவையில்லை. கொஞ்சமாவது அனுதாபப்படுங்கள்.


#prayfornesamani #pray_for_nesamani Contractor Nesamani

Tuesday 28 May 2019

கர்ப்பிணிகளுக்கும் புதிய தாய்மார்களுக்கும் - வெந்தயக் குழம்பு இதோ!


ஏன் வெந்தயம்?

 

  • கர்ப்ப கால நீரிழிவு நோயை தடுக்கும்
  • குழந்தை பிறந்த பிறகு, அதிகமாக தாய்ப்பால் சுரக்கும்
  • கர்ப்பப்பை நன்றாக சுருங்குவதால் அதிக நேரம் எடுக்காமல் பிரசவம் எளிதில் உடனே நடக்க வாய்ப்பு உள்ளது
  • மார்பக வளர்ச்சிக்கும் வெந்தயம் உதவும்

 

கவனிக்க வேண்டியவை

 

  • வெந்தயத்தை அதிகளவில் சாப்பிடுவதால் சில கர்ப்பிணிகளுக்கு வயிற்றுபோக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
  • சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்
  • பிரசவ நேரம் நெருங்கும் காலத்தில், வெந்தயத்தை அதிகளவில் சாப்பிட்டால் சிறுநீரில் ஒருவித வித்தியாசமான வாசனையும் ஏற்படலாம்.
  • வெந்தயம் சாப்பிடுவதில் எந்தவித கெடுதலும் இல்லை. ஆனால், அளவை மீறக்கூடாது. மேற்கண்ட அறிகுறிகள் ஏற்பட்டால், வெந்தயத்தை சாப்பிடுவதை நிறுத்தி விடவும்.
  • மறக்காமல் உங்கள் மருத்துவரிடம் நீங்கள் வெந்தயம் சாப்பிடும் செய்தியை தெரிவிப்பது நல்லது

 

இப்படிப்பட்ட பயன்கள் நிறைந்த வெந்தயத்தை எப்படி குழம்பாக்குவது என்று பின்வருமாறு காணலாம்.

 

தேவையானவை

 

  • நான்கு டீஸ்பூன் வெந்தயம்
  • மூன்று டீஸ்பூன் மல்லி
  • நூறு  கிராம் சின்ன வெங்காயம்
  • ஒரு டீஸ்பூன் சீரகம்
  • நான்கு வரமிளகாய்
  • புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு
  • ஒரு கொத்து கறிவேப்பிலை
  • பத்து பற்கள் பூண்டு
  • அரை கப் துருவிய தேங்காய்
  • தாளிக்கும் அளவு நல்லெண்ணெய்
  • தாளிப்பதற்காக கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு
  • தேவையான அளவு உப்பு

 

செயல்முறை:

 

  • முதல் நாள் இரவிலேயே வெந்தயத்தை ஊற வைக்கவும்.
  • மல்லி வரமிளகாய், சீரகம் ஆகிய மூன்றையும் நன்றாக வறுத்து அரைக்கவும்.
  • அதே போல, தேங்காயையும் மறக்காமல் தனியாக துருவி அரைத்து வைக்கவும்.
  • பூண்டை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • சின்ன வெங்காயத்தையும் தோலுரித்துவிட்டு இரண்டாக வெட்டி வைக்கவும்
  • அடுப்பில் தீயேற்றி வாணலியை வைக்கவும், அதில், தாளிக்கும் அளவு நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கவும்
  • பிறகு, கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை ஆகிய மூன்றையும் இட்டுத் தாளிக்கவும்
  • முதல் நாள் இரவில் ஊற வைத்த வெந்தயத்தை வடிக்கட்டவும். பிறகு, வாணலியில் இட்டு வதக்கவும்.
  • இக்கலவை வதங்கிய பிறகு, வெட்டி வைத்த பூண்டும் வெங்காயமும் சேர்த்து வதக்கவும்
  • முன்பு அரைத்து வைத்த மிளகாய் விழுதினை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு, அரைத்து வைத்த தேங்காயை சேர்த்து வதக்கவும்
  • மறக்காமல் புளியைக் கரைத்து ஊற்றிய பிறகு உப்பையும் சேர்த்துக் கலக்கவும்
  • பிறகு, குழம்பை லேசான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
  • எண்ணெய் தெளிந்ததும், கொதித்த குழம்பை இறக்கி வைக்கவும்

 

வெந்தயக் குழம்பு ரெடி!!

 

சாப்பிட்டு பார்த்து மறக்காமல் உங்கள் கருத்தையும் குழம்பின் புகைப்படத்தையும் ஷேர் செய்யவும்.


N2R NandhakumaR

CHANNEL N2R 


துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...