தஞ்சாவூரில் *பிரகதீஸ்வரர்*
திருவாரூரில் *தியாகராஜர்*
திருநெல்வேலியில் *நெல்லையப்பர்*
திருவையாறில் *ஐயாறப்பர்*
திருவண்ணாமலையில் *அண்ணாமலையார்*
திருவாவடுதுறையில் *கோமுக்தீஸ்வரர்*
திருவெண்காட்டில் *சுவேதாரண்யேஸ்வரர்*
திருவானைக்காவலில் *ஜம்புகேஸ்வரர்*
திருக்கருகாவூரில் *முல்லைவனநாதர்*
திருவாலாங்காட்டில் *வடாரண்யேஸ்வரர்*
திருமருகலில் *ரத்தினகிரீஸ்வரர்*
திருவிசநல்லூரில் *யோகநந்தீஸ்வரர்*
திருப்புகலூரில் *வர்த்தமானீஸ்வரர்*
திருத்தங்கூரில் *வெள்ளிமலைநாதர்*
திருக்கழுகுன்றத்தில் *வேதகிரீஸ்வரர்*
திருநீலக்குடியில் *நீலகண்டேஸ்வரர்*
திருச்சியில் *தாயுமானவர்*
திருநள்ளாரில் *தர்ப்பாரண்யேஸ்வரர்*
திருமணஞ்சேரியில் *உத்வாகநாதர்*
திருவேள்விக்குடியில் *கல்யாண சுந்தரேஸ்வரர்*
திருவேற்காட்டில் *வேதபுரீஸ்வரர்*
திருக்கண்ணபுரத்தில் *ராமநாதர்*
திருமழபாடியில் *வைத்தியநாதர்*
திருக்கோவிலூரில் *வீரட்டேஸ்வரர்*
திருப்புனவாசலில் *விருத்தபுரீஸ்வரர்*
திருவண்டுதுறையில் *வண்டுறைநாதர்*
திருமாணிக்குழியில் *வாமனபுரீஸ்வரர்*
திருவாளப்புத்தூரில் *மாணிக்கவண்ணர்*
*இப்படி ஒரே ஒரு கடவுளுக்கு பல்வேறு பெயர்களில் பல்வேறு இடத்தில் கோவில் அமைத்து தேவாரத்தையும் திருவாசகத்தையும் பாடி , ஆறு கால பூசையில் , ஒவ்வொரு பூசையையும் ஒவ்வொரு ஊரில் சிறப்பாக செய்து, தமிழையும் கடவுளையும் ஒன்றாகவே வணங்கி இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.*
*தேவாரம் பாடப் பெற்ற தலங்கள் மட்டுமே 274. இதில் சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தலங்கள் மட்டுமே 128. வடகரையில் அமைந்த தலங்கள் 63.*
*ஈழத்தில் உள்ள திருகோணமலையில் அமைந்த திருக்கோணேஸ்வரர் கோவில் மற்றும் திருக்கேதீச்சரத்தில் அமைந்த திருக்கேதீஸ்வரர் கோவிலும் தேவாரம் பாடப் பெற்ற தலங்களே.*
*தமிழையும் கடவுளையும் ஒன்றாக பார்த்த தலைமுறை இவர்களுடையதாகத் தான் இருக்கும். ஊரின் சிறப்பைக் கொண்டே அந்த ஊர்களுக்கு பெயர் வைத்து , அந்த பெயரைக் கொண்டே அந்த ஊர் கடவுளையும் வணங்கி இருக்கின்றனர்.*
*எடுத்துக்காட்டு : திரு + ஐந்து +ஆறு = திரு ஐயாறு , இதுவே காலப்போக்கில் திருவையாறாக மாறி இருக்கிறது. காவிரி , குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு எனும் ஐந்து ஆறுகள் அந்த ஊரில் ஓடுவதால் இந்தப் பெயரை வைத்து கடவுளையும் ஐயாறப்பர் என்று அழைத்து இருக்கின்றனர்.*
*இப்போதெல்லாம் நம்ம பெயருக்கு காரணம் கேட்டாலே நம்மால் சொல்ல முடிவதில்லை. அவர்கள் ஊருக்கு பெயர் வைப்பதில் கூட இவ்வளவு கவனமாக இருந்திருக்கின்றனர். வாழ்க தமிழர்களின் புகழ்.*
*திருச்சிற்றம்பலம்*
-சேயோன் சேவகன்
N2R நந்தகுமார்
No comments:
Post a Comment