Friday 31 May 2019

மோடியின் அடுத்த திட்டம் டிஜிட்டல் கிராமம்... 100 நாட்களில் 1000 கி.மீ. சாலை

புதிய அமைச்சரவை வியாழக்கிழமை பதவி ஏற்கும் நிலையில், புதிய அரசு உடனடியாக செய்ய உள்ள திட்டங்களுக்கான பட்டியல் தயாராகி உள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலைகள் துறை முதல் 100 நாட்களில் 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலையை அமைக்கும் திட்டத்தை தயாரித்து வைத்து உள்ளது.

போக்குவரத்து துறை செயலர் சஞ்சய் ரஞ்சன் தலைமையிலான அதிகாரிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 100 நாட்களில் செய்ய வேண்டிய பணிகளில் 20 ஆண்டுகளை கடந்த பழைய வாகனங்களை போக்குவரத்தில் இருந்து நீக்கும் திட்டமும் இடம் பெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இதே போன்று டிஜிட்டல் கிராமத் திட்டத்தையும் உடனடியாக அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் படி சுகாதாரம், நிதி சேவை, திறன் மேம்பாடு, கல்வி ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் கிராம மக்களுக்கு வழங்கப்படும். இதற்காக நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலா ஒரு கிராமம் என 700 ஊர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த கிராமங்களுக்கு பாரத் நெட் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் வைபை வசதி செய்யப்பட உள்ளது. அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்படும் பொது சேவை மையம் மூலம் கிராம மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் வைபை வசதி அளிக்கப்பட உள்ளது. மேலும் ஒவ்வொரு சேவை மையத்திலும் கம்ப்யூட்டர் மையங்களும் அமைக்கப்பட உள்ளன.

இந்த மையங்களை கிராம மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் பயன்படுத்த முடியும். இந்த மையங்கள் மூலம் கிராம மக்களுக்கு மருத்துவ ஆலோசனை, பணப் பரிமாற்றம், வங்கி சேவை, நிதி மேலாண்மை, விவசாயம் சார்ந்த தகவல்கள், கிராம தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி ஆகியவை அளிக்கப்படும்.

மேலும் கிராமத்து மாணவர்கள் சேவை மையம் மூலம் கல்வி அறிவை வளர்த்து கொள்ளவும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக பட்சமாக 75 கிராமங்களும், மத்திய பிரதேசத்தில் 52 கிராமங்களும், பீகாரில் 38 கிராமங்களும் தேர்வு பெற்றுள்ளன. 
சுகாதார திட்டத்தின் படி, கிராமங்களில் உள்ளவர்கள் காணொலி காட்சி மூலம் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற முடியும்.

மிக அவசர சிகிச்சை தேவை படாத நோய்களுக்கு கிராம மக்கள், மருத்துவர்களிடம் காணொலி காட்சி மூலம் மருத்துவ ஆலோசனை, மற்றும் மருந்துகள் குறித்த பரிந்துரையை பெற முடியும். இதன் மூலம் கிராம மக்கள் மருத்துவர்களை தேடி செல்லும் பயண நேரமும், செலவும் மிச்சமாகும். 
இதே போல கால்நடை மருத்துவ ஆலோசனைகளும் பெற வசதி செய்யப்பட உள்ளது.

திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் வீட்டு உபயோக பொருட்களின் பழுது நீக்கும் பயிற்சி, வாகன பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பயிற்சி, செல்பேசி பழுது பார்க்கும் பயிற்சி, மின்சாதன பொருள் பராமரிப்பு, பழுது நீக்கும் பயிற்சி ஆகியவை அளிக்கப்பட உள்ளன. இதன் மூலம் கிராமத்தினர் சுய தொழில் செய்ய வழிவகை செய்யப்படும்.

நிதிச் சேவை திட்டத்தின் படி, கிராம மக்கள் நிதி உதவி பெற ஆலோசனை, தொழில் மற்றும் விவசாய கடன்களை பெற வழிகாட்டுவது, சம்பாதிக்கும் பணத்தை சிக்கனமாக சேமிக்கும் வழிமுறைகள் ஆகியவை அடங்குமென அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும் புதுப்பிக்க வல்ல எரிசக்தியை அதிகம் பயன்படுத்தும் வகையில் கிராம மக்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 Channel N2R  Narendra Modi Digital Village 100 Days 1000 kilometre Road

யார் இந்த காண்ட்ராக்ட்டர் நேசமணி | Who is Nesamani



நேசமணி, காரைக்குடி பக்கத்தில் கானாடுகாத்தான் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் பிறப்பு சாதாரணமானது கிடையாது. பிறக்கும் முன்பே ஒரு பேனில்லாமல், ஏசி இல்லாமல், திரும்பக்கூட இடமில்லாமல் வயிற்றில் பாடுபட்டு பிறந்தவர் நேசமணி. சிறு வயதிலேயே தன் அண்ணனை விட்டு பிரிந்த நேசமணி பல வருடங்கள் கழித்தே தன் அண்ணனுடன் சேர்ந்து கொண்டார்.


தன் அத்தை பெண் திவ்யாவை மனப்பூர்வமாக காதலித்தார் நேசமணி. அந்த காதல் கைகூடாதபோதும் கூட 'நீ யாரையோ நெனச்சி வாழாவெட்டியா இருக்கப்போற. நான் உன்னையே நெனச்சி வெட்டியா வாழாம இருக்கப்போறேன்' என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தவர் நேசமணி. வெறும் ஏரியா கவுன்சிலராக இருந்து சட்டம் படித்து வக்கீல் வண்டுமுருகனாகி, லண்டனில் வக்கீலாக வேலை செய்தாலும் நேசமணிக்கு வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கவில்லை. மீண்டும் குற்றாலத்தில் வந்து ஒரு டிவிஎஸ் 50 வாங்கிக்கொண்டு கடலைமிட்டாய் வாங்கித்தின்பதோடு சரி என்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் நேசமணி. இப்படி இருந்தபோது தமிழ்நாடு போலீஸ் அவரை கைது செய்து கொரில்லா செல்லில் அடைத்தது. அதிலிருந்து ஹெல்மேட்டோடு ஒரு ஆட்டோவில் தப்பி வந்து மீன் வியாபாரம் செய்தபோதும் அவருடைய விற்பனை கரும்பலகையை அந்நிய சக்திகள் அழித்த கதையும் மிகவும் கவலைக்குரியது.


எதுவும் சரியாய்ப்போகவில்லை என்று திருடியாவது பிழைப்போம் என்று முடிவெடுத்தபோது ஒரு குதிரை ஏமாற்றிவிட பீச்சில் கையும் களவுமாக பிடிபட்டார் நேசமணி. வாழ்க்கை நேசமணியை துரத்தியது. ஆனால் நேசமணி துவண்டுபோகவில்லை. சண்முகம் சலூன் கடை வைத்து ஸ்டெப் கட்டிங்க், ஸ்டைல் கட்டிங்க், பாப் கட்டிங்க் என்று தொழிலை கற்றுக்கொண்டு சைன் பண்ண ஆரம்பித்தார் நேசமணி. ஆனால் அந்த வேலையும் சில சக்திகளால் போய்விட வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற தன்னார்வமற்ற சங்கத்தை துவங்கினார் நேசமணி. கட்டதுரையின் பொறாமையாலும் அரசியலாலும், அவர் தேசிக்காய் உரித்து வைக்க மற்றவர்கள் விளக்கை ஏற்றும் கொடூரமும் நேசமணியின் வாழ்வில் நடந்தேறியது.


யார்யாரோ காலை பிடித்து பேலஸ்ஸில் ஒரு கான்ட்ராக்ட்டை வாங்கி பங்களாவுக்கு வெள்ளையடிக்கப்போன நேரத்தில் தான், தன் அண்ணன் மகன் கிச்சுணமூர்த்தியால் சுத்தியல் தாக்குதலுக்குட்பட்டு தற்போது ICU வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் நேசமணி. அவருக்காக பிரார்த்திக்க தேவையில்லை. கொஞ்சமாவது அனுதாபப்படுங்கள்.


#prayfornesamani #pray_for_nesamani Contractor Nesamani

Tuesday 28 May 2019

கர்ப்பிணிகளுக்கும் புதிய தாய்மார்களுக்கும் - வெந்தயக் குழம்பு இதோ!


ஏன் வெந்தயம்?

 

  • கர்ப்ப கால நீரிழிவு நோயை தடுக்கும்
  • குழந்தை பிறந்த பிறகு, அதிகமாக தாய்ப்பால் சுரக்கும்
  • கர்ப்பப்பை நன்றாக சுருங்குவதால் அதிக நேரம் எடுக்காமல் பிரசவம் எளிதில் உடனே நடக்க வாய்ப்பு உள்ளது
  • மார்பக வளர்ச்சிக்கும் வெந்தயம் உதவும்

 

கவனிக்க வேண்டியவை

 

  • வெந்தயத்தை அதிகளவில் சாப்பிடுவதால் சில கர்ப்பிணிகளுக்கு வயிற்றுபோக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
  • சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்
  • பிரசவ நேரம் நெருங்கும் காலத்தில், வெந்தயத்தை அதிகளவில் சாப்பிட்டால் சிறுநீரில் ஒருவித வித்தியாசமான வாசனையும் ஏற்படலாம்.
  • வெந்தயம் சாப்பிடுவதில் எந்தவித கெடுதலும் இல்லை. ஆனால், அளவை மீறக்கூடாது. மேற்கண்ட அறிகுறிகள் ஏற்பட்டால், வெந்தயத்தை சாப்பிடுவதை நிறுத்தி விடவும்.
  • மறக்காமல் உங்கள் மருத்துவரிடம் நீங்கள் வெந்தயம் சாப்பிடும் செய்தியை தெரிவிப்பது நல்லது

 

இப்படிப்பட்ட பயன்கள் நிறைந்த வெந்தயத்தை எப்படி குழம்பாக்குவது என்று பின்வருமாறு காணலாம்.

 

தேவையானவை

 

  • நான்கு டீஸ்பூன் வெந்தயம்
  • மூன்று டீஸ்பூன் மல்லி
  • நூறு  கிராம் சின்ன வெங்காயம்
  • ஒரு டீஸ்பூன் சீரகம்
  • நான்கு வரமிளகாய்
  • புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு
  • ஒரு கொத்து கறிவேப்பிலை
  • பத்து பற்கள் பூண்டு
  • அரை கப் துருவிய தேங்காய்
  • தாளிக்கும் அளவு நல்லெண்ணெய்
  • தாளிப்பதற்காக கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு
  • தேவையான அளவு உப்பு

 

செயல்முறை:

 

  • முதல் நாள் இரவிலேயே வெந்தயத்தை ஊற வைக்கவும்.
  • மல்லி வரமிளகாய், சீரகம் ஆகிய மூன்றையும் நன்றாக வறுத்து அரைக்கவும்.
  • அதே போல, தேங்காயையும் மறக்காமல் தனியாக துருவி அரைத்து வைக்கவும்.
  • பூண்டை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • சின்ன வெங்காயத்தையும் தோலுரித்துவிட்டு இரண்டாக வெட்டி வைக்கவும்
  • அடுப்பில் தீயேற்றி வாணலியை வைக்கவும், அதில், தாளிக்கும் அளவு நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கவும்
  • பிறகு, கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை ஆகிய மூன்றையும் இட்டுத் தாளிக்கவும்
  • முதல் நாள் இரவில் ஊற வைத்த வெந்தயத்தை வடிக்கட்டவும். பிறகு, வாணலியில் இட்டு வதக்கவும்.
  • இக்கலவை வதங்கிய பிறகு, வெட்டி வைத்த பூண்டும் வெங்காயமும் சேர்த்து வதக்கவும்
  • முன்பு அரைத்து வைத்த மிளகாய் விழுதினை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு, அரைத்து வைத்த தேங்காயை சேர்த்து வதக்கவும்
  • மறக்காமல் புளியைக் கரைத்து ஊற்றிய பிறகு உப்பையும் சேர்த்துக் கலக்கவும்
  • பிறகு, குழம்பை லேசான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
  • எண்ணெய் தெளிந்ததும், கொதித்த குழம்பை இறக்கி வைக்கவும்

 

வெந்தயக் குழம்பு ரெடி!!

 

சாப்பிட்டு பார்த்து மறக்காமல் உங்கள் கருத்தையும் குழம்பின் புகைப்படத்தையும் ஷேர் செய்யவும்.


N2R NandhakumaR

CHANNEL N2R 


Sunday 19 May 2019

ஆண்ணும் பெண்ணும் சமமானவர்களல்லர் – ஒரு உளவியல் பார்வை.


திருமண வாழ்க்கையில் ஆண் பெண் வித்தியாசத்தை விளங்கியிருக்கும்போது பிரச்சினைகள் ஏற்படுவது மிகவும் குறைவு. இதனை விளங்காதிருக்கும்போதுதான் “என்னால் முடியும் என்றால் ஏன் உன்னால் முடியாது? உன்னால் முடியுமென்றால் ஏன் என்னால் முடியாதா?” என்ற வெடுக்குத்தனமான கேள்விகளெல்லாம் எழுகின்றது. அதன் தொடராக பிரச்சினைகளும் வெடிக்கின்றன.


எனவே இல்லரத்தில் இணைந்தவர்களும் குறிப்பாக இணையவிருக்கின்றவர்களும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உளவியல் மற்றும் பண்பியல் ரீதியான வித்தியாசங்களை அறிந்துகொள்வது மிக முக்கியமானதாகும்.


1. குரோமசோம்களில் உள்ள வேறுபாடு.


பரம்பரையைத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செழுத்தும் குரோமசோம்களில்  ஆணின் குரோமசோம்களில் XY என்ற அமைப்பிலும் பெண்ணுடைய குரோமசோம்களில் XX என்ற அமைப்பிலும் காணப்படுகின்றது. இவைதான் ஒரு பிள்ளை ஆணாகப் பிறக்குமா? அல்லது பெண்ணாகப் பிறக்குமா? என்பதனைத் தீர்மானிக்கின்றது.


இதுவே அடிப்படை வித்தியாசம். எனவே எப்படி ஆணும் பெண்ணும் சமமாக முடியும்?


2. பார்வைப் புலன்.


பெண்களைப் பொருத்தவரை அவர்களால் 180 டிகிரி கோணத்தில் தமக்கு அருகாமையில் உள்ளவற்றை நன்கு தெளிவாகப் பார்க்க முடியும். ஆனால் தூர இருப்பவற்றை அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியாது. இதேவேளை ஆண்களைப் பொருத்தவரை அவர்களால் 90 டிகிரி கோணத்தில் தூர இருப்பவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியும். அருகில் உள்ளவற்றை அவர்களால் சரியாகப் பார்க்க முடியாது. 


உங்கள் வீட்டிலும் இந்தப் பிரச்சினை இருக்கும். கணவன் வேலைக்குச் செல்ல தயாராகும் போது “என் பைக் கீ எங்க? கார் கீ எங்க? ஆபீஸ் கீ எங்க?, சாக்ஸ பாத்தியா? ஷூவப் பாத்தியா? என்று மனைவியைப் போட்டு வதைப்பதும் மனைவியும் ”இது என்ன? கண்ணுக்கு முன்னே வச்சிக்கிட்டு தேடுறீங்க? எப்பவுமே நானே வந்து தேடிக் கையில தரனும்” என்று திட்டிக்கொண்டே அருகில் உள்ள பொருளைத் தேடிக்கொடுப்பதும் வீடுகளில் அன்றாடம் நடக்கும் சங்கதி.


இப்போது இதற்குக் காரணம் புரிந்திருக்கும். ஆண்களைவிட பெண்களால் இலகுவாக ஊசிக்கு நூல் கோர்க்க முடிவதும் இதனால்தான்.


3. கவனம் செழுத்தும் திறன்.


பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை Multi Personality என்போம். உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்யவும் முடியும். உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.


ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை மட்டுமே செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை Single Personality என்போம். உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது. அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது. கணவன் பத்திரிகையைத் திறந்து சோபாவில் அமர்ந்தால் மனைவி வாயைத் திறப்பார் “இந்த மனுசனுக்கு உலகமே அழிஞ்சாலும் ஒன்னும் தெரியாது. பேப்பர்தான் அவருக்கு உலகம்”


4. நிறங்கள் புலப்படும் விதம்.


ஆண்கள் ஆடைக் கடைகளுக்குச் சென்றால் குறுகிய நேரத்தில் தமக்கான ஆடையை பிடித்த நிறத்தில் பார்த்து எடுத்துக்கொண்டு வருவார்கள். ஆனால் பெண்கள் மிக நீண்ட நேரம் எடுப்பார்கள். காரணம் ஆண்களின் கண்களுக்குப் புலப்படும் நிறங்களை விட பெண்களின் கண்களுக்குப் புலப்படும் நிறங்கள் துல்லியமானவையாகவும் ஒரு நிறத்தில் உள்ள பல உப நிறங்களை வேறு பிரித்தறியும் விதத்திலும் இருப்பதனால்தான். எனவே ஆண்கள் மொத்தமாகப் பார்க்கும் பார்வையைவிடவும் பெண்கள் துல்லியமாகப் பார்ப்பதால் ஆடைகளைத் தெரிவுசெய்வதில் தாமதம் ஏற்படுகின்றது. 


5.மொழி.


பெண்களால் இலகுவாக பல மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியும். அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம். அவ்வாறே ஒரு நாளைக்குப் பெண்கள் சுமார் 7000 வார்த்தைகளைப் பேசுகின்றார்கள். 


ஆண்கள் ஒரு நாளைக்குப் பேசும் வார்த்தைகள் சுமார் 2000 மட்டும்தான். அனேக கணவன்மார் மனைவியைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைதான் “வாய மூடு, ஏன் எப்ப பாத்தாலும் சும்மா வள வளண்டு பேசுற?” பெண்கள் தமக்குள் உள்ளவற்றையெல்லாம் வாய் திறந்து பேசவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். கணவன் அன்றி வேறு யாரிடம்தான் அவர்களால் வாய் திறந்து பேச முடியும்? கணவன்மாரே மனைவியருக்கு சற்று செவிதாழ்த்தினால் என்ன?


6. பகுத்துணரும் திறன் (Analytical Skills)


ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆண்களின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.


உதாரணமாக வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் (Signal) என்பவற்றை முன் கூட்டியே விரைவாகக் கணித்து அதற்கு ஏற்றாற்போல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.


ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும். ஆண்களால் இவ்வாறு செய்ய முடிவதற்குக் காரணம், ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறனும் 90 டிகிரியில் தூரப் பார்க்கும் திறனுமாகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.


7. உடல் மொழிகளைப் பிரித்தறிதல்.


பெண்களால் இலகுவாக ஆண்களின் உடல் மொழிகளைப் (Body languages) படித்திட முடியும். சோர்வு, விரக்தி, கவலை, கோபம், சந்தோசம் என எதனையும் ஒரு பெண்ணால் இலகுவாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக இது பொய்தான் என்பதை அறிந்துகொள்வார்கள். ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை.  காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20%  உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் பிரித்தறிந்து உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை.


8. பிரச்சனைக்கான தீர்வுகள்.


பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும். இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.


ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்ணின் மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது.  யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதனூடாகவே திருப்தியடைந்துகொள்வார்கள். சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் சரி தீராவிட்டாலும் சரி அவர்கள் நிம்மதியாக படுத்துறங்குவார்கள்.


உதாரணமாக ஆண்கள் ஒரு பிரச்சினைக்கான தீர்வை யோசித்து, திட்டமிட்டு நடைமுறை ரீதியாக அதனைத் தீர்க்க முனையும்போது பெண்களோ அப்பிரச்சினையை உணர்ச்சி மூலம் தீர்த்துக்கொள்ள முற்படுகின்றனர். சிறு பிரச்சினைக்கும் பெண்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவது இதனால்தான்.


9. மகிழ்ச்சியின்மை:


ஒரு பெண்ணிற்கு தனது அன்புறவுகளிடையே பிரச்சினை அல்லது திருப்தியின்மை இருந்தால் அவர்களால், அவர்களின் வேலையில் ஒழுங்கு முறையாகக் கவனம் செலுத்த முடியாது. அதேபோன்று ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சினை இருந்தால் அவனின் அன்புறவுகளின் மீது சரியாகக் கவனம் செலுத்த முடியாது.


10. ஞாபக சக்தி.


இலக்கங்களை ஆண்களால் அதிகம் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம் படுவான். பிள்ளையின் பிறந்த தேதி, வயது, எத்தனையாம் ஆண்டில் படிக்கிறான் என்று தந்தைமாரைக் கேட்டால் மனைவியைத்தான் திரும்பிப் பார்ப்பார்கள். மனைவியிடம் கேட்டுத்தான் சொல்வார்கள். எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும் மறந்துவிடுவார்கள். காரணம் ஆண்களின் இயல்புத் தன்மை அப்படித்தான். ஆனால் இந்தவிஷயத்தில் பெண்கள் நல்ல ஞாபக சக்தி உள்ளவர்கள். கணவன், பிள்ளைகள் என எல்லோருடைய பிறந்த தினத்தையும் அவர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.


மேலே கூறிய குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி கரமாணதாக இருக்கத்தேவையான காரணிகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை கணவன், மனைவி இருவரும் அறிந்துகொள்வது அவசியாமாகும்.


மகிழ்ச்சிகரமாண குடும்ப வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்! நன்றி.


N2R NandhakumaR

Channel N2R

Friday 17 May 2019

நீங்கள் கவனிக்க வேண்டிய கார்ப்பத்தின் ஆரம்ப கால அறிகுறிகள்


எப்போதும்போலல்லாமல் வித்தியாசமாக உணர்வது, என்ன வென்று சொல்லமுடியவில்லை?

வாழ்க்கையை மாற்றக்கூடிய செய்தியாக இருக்கலாம்! தள்ளிப்போன மாதவிடாய் தவிர வேறு ஏதும் கர்ப்பத்திற்கான அறிகுறிகள் இருக்கலாம். கவனமாக இருக்கவும். எதையும் தவறவிடவேண்டாம்.

 

1.ஸ்பாட்டிங் மற்றும் வலி:

கருவுற்ற 6-12 நாட்களில், கருவானது கர்பப்பையினில் தானாகவே ஒட்டிக்கொள்கிறது. இது இம்ப்ளாண்டேஷன் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் பிடிப்புடன் ஸ்பாட்டிங் ஏற்படலாம். பல பெண்கள் இதை மாதவிடாய் தொடங்குவதாக தவறாக எண்ணுகின்றனர். இது நீண்ட நேரம் நீடிப்பதில்லை, லேசாக தான் இருக்கும். சிலருக்கு ஸ்பாட்டிங் இருக்கலாம், சிலருக்கு பிடிப்பு மட்டும் இருக்கலாம், சிலர் எதையுமே உணராமல் இருக்கலாம்.

 

  1. சோர்வு அல்லது பலகீனம்:

இதுவே கர்ப்பத்தின் முதல் அறிகுறியாகும். ஹார்மோன்கள் மாற்றத்தினால் இது ஏற்படுகிறது. சில நேரங்களில் அதிக நேரம் உட்காரவோ அல்லது நிற்கவோ முடியாமல் இருக்கலாம். சில நேரம் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதால், குறைந்த இரத்த சர்க்கரை அளவால் இருக்கலாம், இதுவும் சோர்வடைய செய்யும்.

 

  1. குமட்டல் மற்றும் வாந்தி:

காலை நேர நலமின்மை, இது காலையிலோ இரவிலோ ஏற்படலாம் (கருவுற்ற 2-9 வாரங்களுக்கிடையில்). இது மற்றுமொரு கர்ப்பகால அறிகுறியாகும். கர்ப்பத்தின்போது திடீரென ஹார்மோன் மாற்றம் ஏற்படுவதால் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும். நீர்சத்துடன் புரதம் நிறைந்த உணவு உட்கொள்ளலாம். சில பெண்கள் அதிர்ஷ்டசாலிகள், அவர்களுக்கு குமட்டல் ஏற்படுவதே இல்லை, சிலருக்கு சில நேரங்களில் மட்டும் இருக்கலாம்.

 

  1. மயக்கம்:

சில பெண்களுக்கு கிறக்கமாக இருக்கலாம், சிலர் மயங்கி விழலாம். இது குறைந்த இரத்த அழுத்தத்தினால் கர்ப்பத்தின்போது ஏற்படுகிறது. மருத்துவரிடம் சோதிக்கவும். இரத்த சர்க்கரை அளவு குறைந்திருந்தால், 2-3 மணிநேரத்திற்கு ஒரு முறை சிறு உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். முதல் மூன்று மாதம் முடிந்தவுடல் பல பெண்கள் ஓரளவுக்கு நன்றாக உணர்வர்.

 

  1. மார்பக மாற்றங்கள்:

உங்கள் மார்பகம் கனமாக, மிருதுவாக வலியையும் உணரலாம். உங்கள் மார்பகங்களில் கர்ப்பத்தின் போது ஏற்படும் சுரப்பினால் மார்பகம் வீக்கத்துடன் வலி அல்லது தொட்டால் கூசலாம். மார்பக நுனி பெரிதாகவும் கருப்பாகவும் ஆகலாம். வழக்கமான ஹார்மோன் மாற்றம் தவிர, நீர் தக்கவைப்பால் வீக்கம் ஏற்படும். சரியான ப்ரா அணிந்துகொள்வது அவசியம்.

 

  1. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும்:

அடிக்கடி கழிவறைக்கு செல்வது போல் உணரலாம். இது உங்கள் கர்பப்பை வளருவதாலும் அது சிறுநீர்ப்பையை அழுத்துவதாலும் ஏற்படும் என்றாலும் உங்கள் சிறுநீரகங்கள் அதிக சிறுநீரை உற்பத்தி செய்யும்.

 

  1. மலச்சிக்கல்:

ப்ரோஜெஸ்டிரான் என்ற ஹார்மோன், கர்ப்பத்தின்போது மென்மையான தசைகளை அமைதிப்படுத்தும், இதன் விளைவாக ஜீரண அமைப்பு பாதிக்கப்பட்டு, சிறிது ஆற்றல் குறையும். இதனால் உணவானது குடலுக்கு மெதுவாக செல்லும். இதனால் மலச்சிக்கல் மற்றும் வாயு ஏற்படும். இதைத் தவிர, வளரும் கர்பப்பையானது நிறைய இடத்தை எடுத்துக்கொள்ளும் என்பதால் குடல் இயக்கத்திற்கு சிறு இடமே இருக்கும். மேலும் இரும்புச்சத்துக்கான துணை உணவும் மலச்சிக்கலை தூண்டும். இரும்புச்சத்துக்கான துணை உணவை மாற்றித்தரும்படி மருத்துவரிடம் கேட்கலாம். அதிக நார்சத்து கொண்ட உணவை உட்கொண்டால் மலச்சிக்கல் குறையும்.

 

  1. சுவாசக் குறைவு:

கர்ப்பத்தின்போது உங்களுக்கு நிறைய பிரானவாயு தேவைப்படும். ப்ரோஜஸ்டிரான் ஹார்மோன் அதிகமாவது நுரையீர்லை பாதிக்கும். வளரும் கருவிற்கும் பிரானவாயு அதிகம் தேவைப்படுகிறது. இதனால் சுவாசக்குறைவை நீங்கள் உணரலாம்.

 

இந்த அறிகுறிகள் அனைத்தும் கர்ப்பத்தின் தனித்துவமானது அல்ல. இவை தொடர்ந்தால் மருத்துவரை நாடலாம். அதே நேரத்தில், இந்த அறிகுறிகள் இல்லாமல் சில பெண்கள் கர்ப்பமாக இருப்பர்.

 

மாதவிடாய் தள்ளிபோகும்வரை பொருமையாக இருக்கலாம், கர்ப்பப்பரிசோதனை செய்து அதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். கர்ப்பம் என்று தெரிந்தவுடன், உங்கள் கர்ப்பகால பராமரிப்பை தொடங்கலாம்.


Channel N2R

கர்ப்ப கால வரி என்றால் என்ன?


 

  • கர்ப்ப கால வரியை லினியா னைக்ரா என்றும் கூறுவர். கர்ப்ப காலத்தில் உங்கள் வயிற்றின் மீது ஒரு கருப்பு நேர் கோடு தோன்றும். இதைத்தான் கர்ப்ப கால வரி என்று அழைப்பார்கள்.
  • இந்த வரி ஏற்கனவே இடம்பெற்று இருக்கலாம். மிகவும் லேசான கோடு ஆனதால், பலரும் கவனிக்காமல் போயிருப்பார்கள். கர்ப்ப காலத்திற்கு முன், இதனை லினியா அல்பா என்று அழைப்பார்கள்.
  • கர்ப்ப காலத்தின் இதன் நிறம் கருமையாகுவதால், இதற்கு லினியா னைக்ரா என்று பெயர் கிடைத்தது.
  • பொதுவாக கர்ப்ப கால வரி கருப்பு நிறத்தில் இருப்பதில்லை. பிரவுன் நிறமாக எடுத்து காட்டும் வண்ணத்தில் இருக்கும்.
  • ¼ முதல் ½ இன்ச் வரை விரிவாகவும், வயிற்றில் நீட்ட வாக்கில் தொப்புள் வரை நீண்டு இருக்கும்.
  • பிரசவ நேரம் நெருங்க நெருங்க, கர்ப்ப வரி கருமையாக மாறும்.
  • சில நேரங்களில், 5-வது மாதங்களிலேயே இந்த வரியைக் காணலாம்

 

கர்ப்ப வரி ஏற்படுவதன் காரணம் என்ன?

 

  • இந்த வரி தோன்றுவது மிகவும் இயற்கையான தன்மை தான்.
  • ஏன் இந்த மாற்றம் ஏற்படுகிறது என்று காரணம் தெரியாது. சிலர் இதன் காரணம் சுரப்பிகளின் அளவில் ஏற்படும் மாற்றம் என்று கூறுவர்.
  • நஞ்சுக்கொடியினால் இயக்கப்பட்ட மேலாநோசைட் சுரக்கின்ற சுரப்பிதான் காரணம் என்றும் ஒரு கூற்று உள்ளது.
  • இந்த சுரப்பியினால் நிப்பிளை சுற்றியுள்ள இடமும் கருக ஆரம்பிக்கும்

 

இந்த கர்ப்ப வரி தோன்றாமல் தடுக்க இயலுமா?

 

  • நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. காரணம், இது இயற்கை முறைதான்.
  • ஆனால், வருத்தப்பட வேண்டாம்! குழந்தை பிறந்தவுடன் தானாகவே கர்ப்ப வரி மங்க ஆரம்பித்து காணாமல் போய் விடும்.
  • ஆதலால், நீங்கள் எந்தவித சிகிச்சையும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

Thursday 16 May 2019

தாங்கள் காசி வாரணாசி செல்பவர்களுக்கு ஒரு சிறு நல்ல தகவல்


*வாரணாசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது?


இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்: காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்!


அதன் முகவரி மற்றும் தொலை பேசி எண் என்ன?


கீழே கொடுத்துள்ளேன்.


அனைவரும் தங்கலாமா?


இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம்.


சிபாரிசுக் கடிதம் வேண்டுமா?


அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும். அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது.


முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:


Sri Kasi Nattukkottai Nagara Satram

Godowlia,

Varanasi - 221 001 (U.P) 

Telephone Nos: 0542 - 2451804


(ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்)


Naat Koat Satram

Location Godowlia, Tanga Stanad

Behind Sushil Cinema

Varanasi


கட்டணம் உண்டா?


உண்டு! தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர். உள்ளே உள்ள அரங்கங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கினால், அதற்கு வாடகை கிடையாது. 


உங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர்களைத் தருவார்கள். ஒரு லாக்கருக்கு ஒரு நாள் வாடகை பத்து ரூபாய் மட்டுமே! குழுவாகச் சென்றால், மண்டபங்கள் அரங்குகள் உள்ளன. அதுதான் வசதி. 20 பேர்கள், 30 பேர்கள், 50 பேர்கள் என்று வருபவர்களுக்கு, அவர்களின் அளவிற்கு ஏற்றபடி தங்கும் அரங்குகள், மண்டபங்கள் உள்ளன. பாய்கள், ஜமுக்காளங்கள், தலையணைகள் எல்லாம் அங்கேயே கிடைக்கும். அதற்குச் செலவில்லை.


ப்ரைவேசி வேண்டும் என்றால் தனி அறைகள் நிறைய உள்ளன. மூன்று விதமான அறைகள் உள்ளன. முன் காலத்தில் கட்டப்பெற்ற அறைகள்

அடுத்த காலகட்டத்தில் கட்டப்பெற்ற Attached Bath Room and Flush Outஉடன் கூடிய அறைகள். மற்றும் டீலக்ஸ் அறைகள். சுமார் 60 அறைகள் உள்ளன. சுமார் 500 பேர்கள் வரை தங்கும் வசதி உள்ளது.


மகா சிவராத்திரி, தீபாவளி, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற சமயங்களில் இருக்காது. தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 150 பேர்கள்வரை வந்து செல்கிறார்கள். அவர்களில் நகரத்தார்களின் பங்களிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவானதே. விழாக்காலங்களில் நகரத்தார்கள் 200 பேர்களுக்கு மேல் வந்து செல்வார்கள்.


எத்தனை பேர்கள் வந்தாலும் தாங்கும். உள்ளே குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள் தங்கும் அனைவருக்கும் சிறப்பாக உண்டு. அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தனியாகப் பணியாளர்கள் உள்ளார்கள். விடுதிக்கு 4 காவற்காரர்கள் உள்ளார்கள். 


இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம் கழிப்பறை குளியலறை இணைப்புடன் கூடிய அறைகளுக்கு (2/3 பேர்கள் தங்கலாம்) நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் கட்டணம். டீலக்ஸ் அறைகளில் 4 பேர்கள் தங்கலாம். அதற்கு நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம்.


குளியல் அறைகளில் Water Heater உண்டு.

குடிப்பதற்கு Purified Water உண்டு.

மின்தடை இருக்காது Full Gen Set வசதி உண்டு.


சரி உணவு?


விடுதியில் மிகப் பெரிய சமையல் அறையும், பரிமாறும் கூடங்களும் உள்ளன. இரண்டு செட்டி நாட்டு சமையல்காரர்களும், ஆறு பணியாளர்களும் உள்ளனர். சைவ உணவுகள் மட்டுமே. நம்பிச் சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.


1. காலைச் சிற்றுண்டி: நேரம் 8 மணி முதல் 10 மணி வரை.

இட்லி, பொங்கல் சாம்பார், சட்னி - அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். டீ உண்டு

கட்டணம் ரூ.35:00 மட்டுமே


2. மதிய உணவு: நேரம் 12:30 மணி 2:30 மணி வரை

சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர். அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். 90% கட்டணம் இருக்காது. அன்னதானக் கணக்கில் சாப்பாடு இலவசம். சில நாட்களில் கட்டளைதாரர்கள் இல்லை என்றால் அப்போது மட்டும் தலைக்கு ரூ.40:00 கட்டணம்


ரூ.4,000:00 அன்னதானக் கணக்கில் செலுத்திய கட்டளைதாரர்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் விரும்பிய தினத்தில் அவர்கள் பெயரில் அன்னதானம் நடைபெறும்.


3. மாலை 4 மணி டீ உண்டு.


4. இரவு 7:30 முதல் 9 மணிவரை இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, சாம்பார், சட்னி, குருமா என்று உள்ளன. அவற்றில் ஏதாவது இரண்டைச் செய்து பரிமாறுவார்கள். கட்டணம் ரூ.35:00 மட்டுமே.


உணவிற்குக் காலை 8 மணிக்கும் கூப்பன்களை வாங்கிவிட வேண்டும். அவர்கள் ஆட்களை எண்ணி அதற்குத் தகுந்தாற்போல சமைப்பதற்காக அந்த ஏற்பாடு.


Channel N2R 

Monet Painting Draws $110.7 Million At New York Auction

In each piece, Monet showed the light and surroundings of the same scene as they changed at different times of day, with the varying seasons and during various types of weather.


New York: 

A Claude Monet painting from his celebrated "Meules" (Haystacks) series drew $110.7 million in New York on Tuesday in an auction record for the French Impressionist master.

The sale at Sotheby's -- the first time the work had come to auction since 1986 -- fetched one of the 10 highest prices ever seen at auction.

The total, which includes fees and the commission, was more than 44 times higher than the previous record for the work.

Monet painted his 25 "Meules" compositions during the winter of 1890-1891 at his home in Giverny, in France's Normandy region. 

In each piece, Monet showed the light and surroundings of the same scene as they changed at different times of day, with the varying seasons and during various types of weather.

Another painting from the series was sold in November 2016 by the Christie's auction house in New York for $81.4 million.

The piece sold at Sotheby's is among the most immediately recognizable Monet paintings.

It distinguishes itself from others in the series by its vibrant paint palette, dramatic diagonal brushstrokes of varying directions that meet at the center and a unique perspective with only part of the first haystack appearing in the foreground.

The anonymous collector who brought the painting to be auctioned had purchased it in 1986 at Christie's for just $2.5 million.

The last record for a Monet painting was held in May 2018 during a Christie's sale of his "Nympheas en fleur" (Water Lilies in Bloom) for $84.6 million.



(Except for the headline, this story has not been edited by Channel  N2R staff and is published from a syndicated feed.)

Wednesday 15 May 2019

எண்ணெய் குளியல்

தூங்கும் போது உங்களை யாராவது அமுக்குவது போல் இருக்கிறதா?

தூங்குறப்போ......அடிக்கடி என்னை பேய் வந்து அமுக்குதுன்னு நிறைய பேரு சொல்லிக் கேட்டுருப்போம்..!


அவ்வளவு ஏன்..? நம்மில் பலருக்கும்  அந்த அனுபவமும் கூட இருக்கும்..! அது ஏன்?


உண்மையிலயே பேய் தான் வந்து அமுக்குகிறதா..? பாப்போம் வாங்க..!


மனித உறக்கத்தில் இரண்டு நிலை உண்டு.


ஒன்று விரைவான கண் அயர்  இயக்கம்

(RAPID EYE MOVEMENT @REM)


மற்றொன்று அதற்கு எதிர்பதம் (NonREM @NREM).

.

நீங்க உறங்க தொடங்கியதும் உங்களுக்கு முதலில் நிகழுவது NREM.


அடுத்து REM நிகழும்.!

இப்படி இரண்டுமே  மாறிமாறி நிகழும் தன்மை கொண்டதே மனித உறக்கம்.


ஒரு REM அல்லது NREMன் சுழற்சி 90 நிமிடங்கள் வரை இருக்கலாம்.

NREMன் கடைசி கட்டத்திலேயே உங்கள் உடல் முழுமையா உறக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து 100% தளர்ந்திருக்கும்.


அப்போது சுயநினைவும் முழுவதும் மங்கியிருக்கும். NREM நிலை முடிந்து REM நிலை தொடங்கும்போது உங்கள் கண்கள் கொஞ்சம் இயங்கும். கனவுகளும் தோன்றும், ஆனால் உங்கள்  உடல் இன்னும்  தளர்ச்சி நிலையிலேயே இருக்கும்.!


REM சுழற்சியில் இருக்கும் உங்கள் உடல் உறக்கத்தில் இருக்கும்போது...

அந்த சுழற்சி முடிவதற்குள் சிலநேரம்  உங்களுக்கு சுயநினைவு தோன்றினால்...

உங்கள் உடல் 100% REM சுழற்சியில் இருப்பதால் அசைக்க முடியாது.


மூளை விழித்திருக்கும். ஆனால் மூளையின் கட்டளைகளை உடல் உறுப்புகள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்காது (இரண்டாவது படம் பார்க்க).


அப்போதுதான் நமக்கு தோணும், "அய்யய்யோ நான் கைகாலை அசைக்க  ட்ரைப்  பண்றேன்  ஆனா என்னால முடியலயே  பேய்  வந்து அமுக்குது போல" என்று.!

சிலநேரம் அதற்கு தோதாக நமது மூளையில் நிகழ்ந்து  கொண்டிருக்கும்  கணவும்  பேய் நினைப்புக்கு சென்று  ஒரு பேயையும்  கணவில் கொண்டு வந்து காட்டும்..!


SLEEP PARALYSIS -  என்பதுதான்  உங்களை வந்து  அமுக்கிய பேய்.!

உண்மையிலயே அது பேய் அல்ல. அது நம் உறக்கத்தில் தோன்றும் ஒரு நிலை.!

உலகமெங்கும் நிறைய மக்களுக்கு இந்த SLEEP PARALYSIS நிகழ்கிறது... அதனால் பயப்பட ஏதும்  தேவை இல்லை..!!!


N2R NandhakumaR

Channel N2R 

Saturday 11 May 2019

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?


*சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்*...


✅ நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

*இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது*...


✅ இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...


✅ *நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது*.


✅ *நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்*.


✅ *மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது*.


✅ எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.


✅ சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.


✅ இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும், அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.


✅ ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். *உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்*. எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்... எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்...


✅ கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...


✅ சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...


✅ சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...


✅ *சாப்பிடும் முறை*...!

1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...

4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.

போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...

10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...

12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...

*அமருங்கள் சம்மணமிட்டு*.



Wednesday 8 May 2019

முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் காசி யாத்திரை செல்வது எப்படி தெரியுமா?


💐பித்ருக்கள் எனப்படும் நமது மூதாதையருக்கு தலைமுறை தாண்டி திதி கொடுக்காமல் அல்லது திதி கொடுக்க மறந்திருந்தால் வாழ்வில் காரணமின்றி தொடர் நஷ்டங்களும், கஷ்டங்களும் வந்து அதனை சரி செய்யமுடியாத நிலையும் ஏற்படும். இந்த பித்ரு தோஷம் தீர நாம் முன்னோர்களுக்கு தர்பணம் தர வேண்டும்.


💐பித்ரு தர்ப்பணம் செய்யாவிட்டால் ஆரோக்கியக் குறைபாடு, அகால மரணம், திருமணத் தடை, தீய பழக்கங்கள், ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு, மூளை வளர்ச்சிக் குறைவுள்ள குழந்தைப் பிறப்பு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெற்று, நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம். இவை பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் திகழ்கின்றன. இந்த நிலைமாற அவரவர் வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் பல்வேறு, மாறுபட்ட, வெவ்வேறு விஷயங்களாக வெளிப்படும்.இதனை பித்ரு தோஷம், பித்ரு சாந்தி என்று சொல்வார்கள்.

நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம். மூதாதையருக்கு திதி தரும் காசி யாத்திரை.

ஸ்ரீஅலகாபாத், ஸ்ரீகாசி மாநகரம், ஸ்ரீகயா ஆகிய மூன்று புண்ணிய நகரங்களை உள்ளடக்கியது. இங்கெல்லாம் மலர்கள் மணப்பதில்லை, காகம், பல்லிகள் சப்தமெழுப்புவது இல்லை, மாடுகள் முட்டுவதில்லை, பிணம் எரியும் வாடை வருவதில்லை. காரணம் அங்கு லட்சோப லட்சம் முனிவர்களும் ரிஷி பெருமக்களும் தவமியற்றிகொண்டே இருக்கின்றார்கள்.

அவர்களின் தவம் கலைந்து விடக்கூடாதென்று எண்ணியே எம்பெருமான் கருணை கொண்டு அருளியதே காரணம்.


💐திதி கொடுப்பது எப்படி


திதி என்பது மூதாதையரின் ஆன்மா சாந்தி அடைய மூதாதையரின் உடலை எரித்த சாம்பலை வைத்து கொடுக்கபடுவது. ஒருவர் தனது மூதாதையருக்கு திதி கொடுக்க நினைத்தால் காசி யாத்திரை புறப்படும் நாளுக்கு பத்து நாட்கள் முன்னதாக ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் ஒரு ஐயரிடம் சென்று அவரிடம்,

ஐயா, நான் காசிக்கு சென்று எனது மூதாதையருக்கு திதி கொடுக்கப் போகிறேன், எனக்கு மூதாதையரின் சாம்பல் வேண்டும் அதனால் இங்கு அவர்களுக்கு திதி கொடுத்து மண் வாங்க வந்துள்ளேன் என்று சொல்லி திதி தர வேண்டும். அவர்கள் சம்பிரதாயப்படி எல்லாம் செய்து அக்னி தீர்த்தக் கடலிலிருந்து மூன்று கை மண் எடுத்து அதனை ஒன்றாக்கி பிறகு அதனை மூன்று சம பாகமாக்கி ஒன்று மகாவிஷ்ணு, ஒன்று மகாசிவன், ஒன்று நமது மூதாதையர் என பிரித்து

அதற்கு பூஜை செய்து மகாவிஷ்ணு, சிவன் எனும் இரு பாகங்களை அங்கேயே அக்னி தீர்த்தத்திலேயே விட்டு விட்டு நமது மூதாதையர் பாகமான மணலை மட்டும் ஒரு துணியில் நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த மணலை வீட்டுக்கு கொண்டு சென்று காசிக்கு புறப்படும் நாள்வரை பூ வைத்து பூஜை செய்யவேண்டும். இந்த நாட்களில் உறவினர் இறந்தால் இருப்பது போல துக்கம் அனுஷ்டிக்கவேண்டும். இந்த மணல் காய்ந்தபின் பார்த்தால் இடுகாட்டு சாம்பலுக்கு சற்றும் மாறாமல் இருக்கும்.


💐காசி யாத்திரை - திரிவேணி சங்கமம்


காசி யாத்திரை தொடங்கும் நாளில் நீங்கள் திதி கொடுக்க இருக்கும் நாளின் நட்சத்திரம், திதி, நாம் திதி கொடுக்க இருப்பவர் பெயர், அவருக்கு நாம் என்ன உறவு என்பது போன்ற விபரங்களுடன் இந்த மணல், தேன், பச்சரிசி மாவு, எள் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளவும். முதலில் அலகாபாத் செல்ல வேண்டும் அங்குள்ள த்ரிவேணி சங்கமத்தில்தான் இந்த மணலை விடவேண்டும். திதி கொடுப்பவர் இங்கே மொட்டையடித்துக் கொள்ளவேண்டும். பின்னர் குளித்து விபூதி சந்தனம் பூசிக்கொண்டு ஒரு படகில் ஏறி கங்கை,யமுனா,சரஸ்வதி சங்கம இடத்திற்கு சென்று இறங்கி இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு அந்த மணலில் கொஞ்சம் கையில் எடுத்துக்கொண்டு, அதில் சிறிது பூவை வைத்து வருடம், மாதம், அன்றைய கிழமை, அன்றைய திதி, அன்றைய நட்சத்திரம், தான் இன்னார் மகன் அல்லது மகள், திதி தருபவருக்கு என்ன உறவு போன்றவைகளை சொல்லி என்னால் கொடுக்கப்படும் இந்த திதியை ஏற்று அவர்களின் ஆன்மாவை கைலாயத்திற்க்கோ வைகுண்டத்திற்கோ சேர்த்து ஆன்மாவிற்கு விடுதலை தரவேண்டும் தாயே என்றவாறு அந்த மணலை கையில் ஏந்தி நம் தலையில் வைத்து கங்காதேவி, யமுனாதேவி, சரஸ்வதி தேவியை நினைத்து மனமுருகி வேண்டி அப்படியே நீரில் மூழ்கி விட்டு விடவேண்டும்

இப்படியே நமது அத்தனை உறவினர்களுக்கும் ஒவ்வொருவராக சொல்லி சொல்லி மணலை த்ரிவேணி சங்கமத்தில் கரைக்க வேண்டும். நினைவில் இல்லாதவர்களுக்கும் இறுதியில் எனது வம்சம்,எனது தாயார் வம்சம், எனது தந்தையார் வம்சம் எல்லோருக்கும் என்று சொல்லி விட்டு விடலாம். நமக்கு விரோதமான சொந்தமாக இருந்தாலும் இங்கே கோபம் பாராட்டாமல் விரோதம் பாராட்டாமல் கொடுக்கவேண்டும். ஆத்மாக்களுக்கு சொந்தமில்லை நாமெல்லோரும் உறவுகளே எல்லோருக்கும் கொடுத்து முடித்தவுடன் நன்றாக குளித்துவிட்டு படகில் ஏறி இன்னும் கொஞ்சம் நதியின் உள்ளே சென்று ஒரு கேன் அல்லது ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் த்ரிவேணி தீர்த்தம் எடுத்துக் கொள்ளவேண்டும்.


💐காசி மாநகரம்


அடுத்து நாம் செல்வது வாரனாசி எனப்படும் காசி மாநகரம். கங்காதேவி இங்கு ஆர்ப்பரித்து ஆனந்தமாக பாய்ந்து செல்கிறாள். இங்கேதான் பல ஆயிரம் முனிவர்களும் மகரிஷிகளும் தினசரி அரூபமாக வந்து ஸ்ரீ காசி விஸ்வநாதரை தரிசிப்பதாக வாரனாசி க்ஷேத்ர புராணம் கூறுகிறது. கங்கையில் ஆனந்தமாக நீராடி (நமது அன்னையின் மடியில் தவழ்வதுபோல்) மகிழ்வுடன் ஸ்ரீ காசி விஸ்வநாதரை தரிசித்து ஐயனே எனக்கு தெரிந்தவகையில் எனது மூதாதையருக்கு என்னால் ஆன வகையில் திதி தந்துள்ளேன். பெருமான் அதனை ஏற்று எனது மூதாதையரின் ஆன்மாக்களை திருக்கைலாயமோ, ஸ்ரீவைகுண்டமோ எது அவர்களின் இருப்பிடமோ அங்கு சேர்க்க வேண்டும் என்று மனதில் ஆழமாக சிந்தித்து வழிபடவேண்டும்.

இங்கு ஸ்ரீ காசி விஸ்வநாதர் சிவலிங்கத்தில் நமது தலைமையை வைத்து வணங்கி வேண்டுதல் செய்யலாம். இங்கு ஸ்ரீ அன்னை அன்னபூரணி, ஸ்ரீ காசி விசாலாட்சி, ஸ்ரீ மகாகால பைரவர் என நிறைய கோயில்கள் உள்ளன.

சந்திரமுகி, அரிச்சந்திரா கட்டம் என நிறைய படித்துறைகள் உண்டு.


💐கயா மாநகரம்


அடுத்து நாம் செல்லவேண்டியது கயா. கயாசுரன் எனும் அரக்கனால் நமக்கு கிடைத்த பித்ரு பிண்டார்ப்பன ஸ்தலம். இங்கு பல்குனி எனப்படும் ஆறு ஓடுகிறது. அதில் குளித்து விட்டு தயாராக வேண்டும். ஐயர் நம்மிடம் எள், பச்சரிசி மாவு, தேன் தந்து அதனை கலக்கி பிசைந்து தயார் செய்ய சொல்வார், நாம் வைத்துள்ள எள், தேன், பச்சரிசி மாவுடன் அதையும் சேர்த்து நிறைய மாவாக்கி அதனை பிசைந்து கொள்ளவேண்டும்.

அதனை மூன்று பாகமாக்கி ஒவ்வொரு பாகத்தையும் முப்பத்திரண்டு சிறு சிறு உருண்டைகளாக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது தனித்தனியாக நம்மிடம் மூன்று முப்பத்திரண்டு உருண்டைகள் உள்ளது.

நாம் நிர்மாணித்த ஐயர் மந்திரங்கள் சொல்லி பூஜைகள் செய்வார், பிறகு நம்மிடம் நமக்கு மிகவும் பிடித்த ஒரு இலை, ஒரு காய், ஒரு பழம் இவைகளை நமது மூதாதையருக்காக இனி பயன்படுத்தமாட்டேன் என்று விட்டுவிட சொல்வார். நாம் ஏதாவது ஒரு இலை, ஒரு காய், ஒரு பழம் விடவேண்டும்.

முதல் முப்பத்திரண்டு உருண்டைகளை பல்குனி ஆற்றில் கொஞ்சம் கொஞ்சமாக விடவேண்டும், மீன்களுக்கு உணவாகும். இரண்டாவது முப்பத்திரண்டு உருண்டைகளை கயாசுரன் மார்பில் மகாவிஷ்ணுவின் ஒரு பாதம் மீது ஒவ்வொரு உருண்டையாக நமது உறவினர்களின் பெயரைச் சொல்லி சொல்லி விட வேண்டும்,அப்போதும் நாம் "எம்பெருமானே! என்னாலான வகையில் எனது மூதாதையருக்கு திதி தந்துள்ளேன்,

இதனை மனமுவந்து ஏற்று அவர்களின் ஆன்மாவை திருக்கைலாயமோ, ஸ்ரீவைகுண்டமோ அங்கு அழைத்துச் செல்வாயாக என்று மனமுருக வேண்டிக் கொண்டே ஒவ்வொன்றாக அந்த திருவடியின் மீது விடவேண்டும்.

மூன்றாவது முப்பத்திரண்டு உருண்டைகள் கோயிலுள்ளே இருக்கும் ஆலமரத்தின் வேர்களில் இடவேண்டும். இந்த ஆலமரத்தின் வேர்பகுதி அலகாபாத்திலும், நடுப்பகுதி ஸ்ரீகாசியம்பதியிலும் , கடைசிப்பகுதி இறைவனின் தோட்டத்திலும் இருப்பதாகவும் நமது மூதாதையரின் ஆன்மாக்கள் எல்லாம் அந்த மரத்தின் விழுதினைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் இங்கே தரும் திதியைப் பருகி மேலேறுவதாகவும் ஐதீகம்.


💐முன்னோர்கள் ஆன்மா


நாம் திதி தரமறந்தாலோ, தராமல் இருந்தாலோ அவர்களால் கீழேயேதான் இருக்கமுடியும், மேலேறும் மற்ற ஆன்மாக்களைப் பார்த்து அழுதுகொண்டிருப்பர்கள், இங்கே அவர்கள் அழ அழ நாம் அங்கே மிகுந்த கஷ்டங்களுக்கு ஆளாவோம் என்பார்கள், அந்த ஆன்மாக்களின் உறவுகளின் வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் உடனே இவனாவது நமக்கு திதி தந்து மேலேற்றுவானா என்று எண்ணுவார்களாம். நாம் இப்படி திதி கொடுப்பதனால் அவர்கள் உடனே மரத்தின் உச்சிக்கு சென்று தங்களின் இருப்பிடம் சேர்ந்து விடுவதாக ஐதீகம்.

இதனை அடுத்து மீண்டும் இராமேஸ்வரம் வரவேண்டும், ராமேஸ்வரம் வந்து நாம் அலகாபாத்தில் நாம் எடுத்த தீர்த்தத்தை கோயிலில் கங்கா அபிஷேகம் என்று சொல்லி இரசீது போட்டு அதனை இங்குள்ள கோயில் ஐயரிடம் தரவேண்டும், கங்கை நீரினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதை பார்க்கலாம்.


💐பித்ரு தோஷம் நீங்கும்


ஐயனே என் அறிவுக்கு தெரிந்தவாறு எனது மூதாதையருக்கு திதி தந்துள்ளேன், அதனை ஏற்று அவர்களை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மனமுருகி வேண்டிக் கொள்ளவேண்டும். பின்னர் அங்கே வரும் கோடித் தீர்த்தம் பிடித்து வந்து வீட்டில் எல்லோருக்கும் தரவேண்டும்.

வீட்டிலும் வைத்துக்கொள்ளலாம். காசியிலும் கங்காதீர்த்தம் பிடித்து வந்து வைத்துக் கொள்ளலாம். கங்காதீர்த்தம் வீட்டில் இருப்பது நன்றாகும். இப்படியாக ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில் முடிகிறது.

காசி யாத்திரை சென்று மூதாதையருக்கு திதி கொடுத்து அவர்களின் ஆத்மாவை சாந்தப்படுத்தி சந்தோஷப்படுத்தினால் உங்கள் சந்ததிகளுக்கும் நல்வழி ஏற்படும். இது போல யாத்திரை செல்ல முடியாதவர்கள் பித்ரு தோஷம் அமாவாசை, இறந்த திதி, மகாளயம் மற்றும் பித்ரு தினமான மக நக்ஷத்திரம் போன்ற தினங்களில் ஆறு, குளக்கரைகளில் தர்பணம், எள், தண்ணீர் தெளித்து காகத்திற்கு உணவு கொடுத்து முன்னோர்களை மனதார வேண்டினால் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்

கொடிவேரி அணையின் நாம் அறியாத தொழில்நுட்பங்கள்

 சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையம், சிறுமுகை, சத்தி, கோபி, நம்பியூர், அந்தியூர் உள்ளிட்ட பவானி ஆற்றுப் பகுதிகள் மைசூர் மன்னர்கள் மற்றும் விஜயநகர பேரர சின் ஆளுகையில் இருந்தன. மைசூர் மேல்நாடு என்றும் சத்தி உள்ளிட்டவை கீழ்நாடு என்றும் அழைக்கப்பட்டன. அன்றைய மக்கள் சத்தியமங்கலம் காசிபாளையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே ஏரா ளமான பாறைகளைக் கொட்டி சிறு நீர்த் தேக்கம்போல உருவாக்கி பாசனத் துக்குப் பயன்படுத்தினர். ஆனால், பவானியில் அடிக்கடி பெருக்கெடுத்த வெள்ளம் இதனை அடித்துச் சென்றது.

இதனால், 1490-ல் உம்மத்தூரை ஆட்சி புரிந்த மன்னர் நஞ்சராய உடை யாரிடம் சென்ற கீழ்நாட்டு மக்கள் ஆற்றில் தடுப்பணை கட்டித் தரும்படி கேட்டனர். அதன்படி கொடிவேலி செடிகள் சூழ்ந்த ஓர் இடத்தில் தடுப் பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அங்கே பாறைகள் இல்லாததால் சத்திய மங்கலத்தில் இருந்து 10 கி.மீ தொலை வில் உள்ள கம்பத்ராயன் மலையில் இருந்து பாறைகள் வெட்டிக் கொண்டு வரப்பட்டன. கட்டுமானப் பணிகளுக்காக ஒடிஷா, கர்நாடகம், ஆந்திர மாநிலங் களில் இருந்து கல்வேலைகளில் தேர்ச்சிபெற்ற கல் ஒட்டர் சமூகத்தினர் வரவழைக்கப்பட்டனர்.

சுமார் 3 ஆண்டுகளில் அணை கட்டி முடிக்கப்பட்டது. அணையை திறக்க நாள் குறித்து, மன்னர் வருவதாக ஏற் பாடானது. ஆனால், திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்து அணை முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. தகவல் மன்னருக்குச் சென்றது. அவர் மீண்டும் அணையைக் கட்ட உத்தரவிட்டார். அதன்படி சுமார் ஒன்றரை ஆண்டுகளில் மீண்டும் அணை கட்டப்பட்டது. மறுபடி யும் அணையைத் திறக்க மன்னர் வர விருந்த நிலையில் மீண்டும் வெள்ளம். இந்த முறை ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள்.

மிகுந்த மனவேதனை அடைந்த மன்னர், ‘‘பண்ணாரி அம்மனும் நஞ்சுண் டேஷ்வரரும் நான் கீழ்நாட்டுக்குச் செல்வதை தடுக்கிறார்கள். இனிமேல் நானோ, என் குடும்பத்தினரோ கீழ் நாட்டுக்கு வர மாட்டோம்’’ என்று சொல் கிறார். மேலும், மீண்டும் அணையைக் கட்ட உத்தரவிட்டவர், அணை கட்டி முடித்தவுடன் தகவல் தனக்கு வராமல் பார்த்துக்கொள்ளும்படி சொல்கிறார். அதன்படி மூன்றாவது முறையாக அணை கட்டி முடிக்கப்பட்டது. அதுதான் இன்றைக்கும் நிலைத்து நிற்கும் கொடி வேரி அணைக்கட்டு. அதன்படி 151 மீட்டர் நீளம், 30 அடி அகலத்தில் அணை கட்டப்பட்டது. அணையின் வலதுப் பக்கத்தில் தடப்பள்ளி வாய்க்காலும், இடதுப் பக்கத்தில் அரசன்கோட்டை வாய்க்காலும் சுமார் 5 கி.மீ நீளத்துக்கு ஆற்றை ஒட்டியே வெட்டப்பட்டன. பிற்காலங்களில் பாசனம் பெருகப் பெருக தடப்பள்ளி வாய்க்கால் 26 கி.மீ வரையும் அரசன்கோட்டை வாய்க்கால் 42 கி.மீ வரையும் வெட்டப்பட்டன. கொடிவேரி அணையின் சிறப்பே அதன் கால்வாய்கள் மற்றும் மணல் வாரிகள்தான். நுட்பமான நீரியல் தொழில்நுட்பம் கொண்டவை அவை.

ஓர் ஆற்றில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் எடுக்கக் கூடாது. குறிப் பிட்ட அளவு ஆற்றின் நீர் கடலில் கலக்க வேண்டும். ஆற்றின் நீரியல்போக்கு திசையில் இருந்து 50 சதவீதத்துக்கும் மேலாக எந்தக் காரணம் கொண்டும் திருப்பக்கூடாது என்கிறது உலக ஆறுகள் பாதுகாப்பு விதிமுறைகள் (Helsinki Rules). ஆனால், அன்றைக்கே நம் முன்னோர்கள் இதனை கொடிவேரி அணைக்கட்டுப் பாசனத்தில் நடை முறைப்படுத்தியிருக்கிறார்கள்.

தடப்பள்ளி கால்வாயும் அரசன் கோட்டை கால்வாயும் ஆற்றை ஒட்டியே இருபுறமும் செல்கிறது. இதனால் ஆற்றின் நீரோட்டம் திசை திருப் பப்படுவதில்லை. மேலும், ஆற்றில் இருந்து கால்வாய்களுக்குச் செல்லும் தண்ணீர் வயல்களுக்குச் சென்று அதன் கசிவு நீர் மீண்டும் வாய்க்கால் வழியாக ஆற்றுக்கு வந்துவிடும். அதாவது ஒரு பாசன நிலம் தனக்குத் தேவை யானதுபோக மீதமிருக்கும் தண்ணீரை மீண்டும் ஆற்றுக்கு அனுப்பிவிடுகிறது. இதற்காகப் பாசன நிலங்களின் மட்டத்துக்கு ஏற்ப கால்வாய்கள் அமைக் கப்பட்டன.

மிகச் சிறந்த சிக்கன நீர் மேலாண்மை இது. இங்கிருந்து ஆற்றுக்கு கீழே 60 கி.மீ தொலைவில் இருக்கிறது காலிங் கராயன் அணைக்கட்டு. தடப்பள்ளி - அரசன்கோட்டை கால்வாய்களின் மிகச் சிறந்த நீர் மேலாண்மை காரணமாக இன்றைக்கும் கொடிவேரி அணையில் பாசனத்துக்காக விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்தால், அந்தத் தண்ணீர் இடைப்பட்ட பகுதிகளின் பாசனத்துக்கு போக மீதம் சுமார் 400 கனஅடி தண்ணீர் காலிங்கராயன் அணைக்குச் சென்றுசேர்கிறது. அதேசமயம் நவீன காலத்தில் வெட்டப்பட்ட கிருஷ்ணா நதி கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரில் பாதியளவுகூட சென்னைக்கு வருவ தில்லை என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்தது மணல்போக்கி தொழில் நுட்பம். அணைக்கட்டின் மையப் பகுதி யில் தண்ணீரின் குவி மையத்தில் கிணறு வடிவில் சுரங்கம் வெட்டப்பட்டிருக

்கிறது. இது அணைக்கு வெளியே தண்ணீர் திறக்கப்படும் இடத்துக்கு சுமார் 20 அடி தூரத்துக்கு அப்பால் சென்று முடிகிறது. சுரங்கத்தின் வாய்ப் பகுதி அகலமாகவும் உள்ளேச் செல்ல செல்ல குறுகலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுரங்கத் துக்குள் கல்லால் ஆன நுட்பமான சல் லடை அமைப்புகள் மற்றும் கல்லால் செதுக்கப்பட்ட பல்வேறு வடிவமைப்பு கள் செய்யப்பட்டிருக்கின்றன. மணல் போக்கிகளைக் கரையில் இருந்தே மூடும் வகையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கதவுகள் அமைக்கப்பட்டன. இந்த மணல்போக்கிகள் மணலையும் சேற் றையும் உள்ளே இழுத்து மறுபக்க சுரங்கத்தின் துவாரம் அணைக்கு வெளியே தள்ளிவிடும். இதன் மூலம் அணையில் மணலும் சேறும் தங்கவில்லை. மேலும் இதன் வழியாக தண்ணீரும் வெளியேறாது என்பதும் இதன் தனி சிறப்பு. இதனால் அணையின் நீர் தூய்மையாக இருந்தது. அணை தன்னைதானே தூர் வாரிக்கொள்ளும் தொழில்நுட்பம் இது.

இந்த அரிய தொழில்நுட்பங்களை இன்றைய மக்கள் அறியாமல் போனது தான் வேதனை.


N2R NandhakumaR

Channel N2R 

கோயில்களில் கடவுள் சிலைகளை பெரும்பாலும் கருங்கல்லில் வடிக்கின்றனர் அது ஏன் என்று தெரியுமா?

 ஒரு கல்லில் சிலை வடிப்பது எளிதான விஷயம் அல்ல. முறையான விரதம் இருந்து, அதற்கான கல்லினை தேர்வுச் செய்து, அந்த கல்லின் தனித்துவம் உணர்ந்து செய்ய வேண்டும்.


உழியினால் கல்லினை செதுக்கும் போது, ஒரு சிறு பிழை ஏற்பட்டாலும் அந்த கல் முற்றிலுமாக உடைந்து விடும்.


ஆகம விதிப்படி முறையாக பூஜைகள் செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில் நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வத்தை நம்மால் உணரலாம்.


பெரும்பாலும் தெய்வச் சிலைளை உலோகங்களில் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள். அதற்கு முக்கியமான கரணம் உண்டு.


உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது.எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மைஉடையது கருங்கல். 


கருங்கல் என்பது பஞ்ச பூதங்களையும் அடக்கும் தன்மையுள்ளது. இது வேறு எந்த உலோகத்திற்கும் கிடையாது.


நீர்


கல்லில் நீர் உள்ளது. எனவே தன் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் நீருற்று இருப்பதை காணலாம்.


நிலம்


பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் உள்ளது.எனவே கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.


நெருப்பு


கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.


காற்று


கல்லில் காற்று உண்டு.எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.


ஆகாயம்


ஆகாயத்தைப் போல் , வெளியிலிருக்கும் சப்தத்தை தனக்கே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவே தான் கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது. 


அபிஷேகம் அர்ச்சனை ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது ஒரு கோவிலின் பஞ்சபூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. 


அக்கோவிலில் நாம் வணங்கும்போது , நம் உடலில் நல்ல (நேர்மறை) அதிர்வுகள் உண்டாகி அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன.


ஓம் நமசிவாய!

சேயோன் சேவகன்

N2R NandhakumaR

மனித உடலை பற்றிய வியக்கும் தகவல்கள்


70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:


1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்

2. கார்பன் 16 கிலோ கிராம்

3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்

4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்

5. கால்சியம் 1.0 கிலோ கிராம்

6. பாஸ்பரஸ் 780 கிராம்

7. பொட்டாசியம் 140 கிராம்

8. சோடியம் 100 கிராம்

9. குளோரின் 95 கிராம்

10. மக்னீசியம் 19 கிராம்

11. இரும்பு 4.2. கிராம்

12. ஃப்ளூரின் 2.6 கிராம்

13. துத்தநாகம் 2.3 கிராம்

14. சிலிக்கன் 1.0 கிராம்

15. ருபீடியம் 0.68 கிராம்

16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்

17. ப்ரோமின் 0.26 கிராம்

18. ஈயம் 0.12 கிராம்

19. தாமிரம் 72 மில்லி கிராம்

20. அலுமினியம் 60 மில்லி கிராம்

21. காட்மியம் 50 மில்லி கிராம்

22. செரியம் 40 மில்லி கிராம்

23. பேரியம் 22 மில்லி கிராம்

24. அயோடின் 20 மில்லி கிராம்

25. தகரம் 20 மில்லி கிராம்

26. டைட்டானியம் 20 மில்லி கிராம்

27. போரான் 18 மில்லி கிராம்

28. நிக்கல் 15 மில்லி கிராம்

29. செனியம் 15 மில்லிகிராம்

30. குரோமியம் 14 மில்லி கிராம்

31. மக்னீசியம் 12 மில்லி கிராம்

32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்

33. லித்தியம் 7 மில்லி கிராம்

34. செஸியம் 6 மில்லி கிராம்

35. பாதரசம் 6 மில்லி கிராம்

36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்

37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்

38. கோபால்ட் 3 மில்லி கிராம்

39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்

40. வெள்ளி 2 மில்லி கிராம்

41. நியோபியம் 1.5 மில்லி கிராம்

42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்

43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்

44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்

45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்

46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்

47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்

48. தால்வியம் 0.5 மில்லி கிராம்

49. இண்டியம் 0.4 மில்லி கிராம்

50. தங்கம் 0.4 மில்லி கிராம்

51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்

52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்

53. வாளடியம் 0.11 மில்லி கிராம்

54. தோரியம் 0.1 மில்லி கிராம்

55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்

56. சமாரியம் 50 மில்லி கிராம்

57. பெல்யம் 36 மில்லி கிராம்

58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.


✳ மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.


✳  மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது

மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று போய்விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்

ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம்.


✳  உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.


✳ உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.


✳ நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன

இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.


✳ நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன!!


# உடலின்_மொழி..

****************************

1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி


2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம்


3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி


4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.


5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்


6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -  வாய் கசப்பு மற்றும் பசியின்மை 


7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி


8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி


9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி


10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை


11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்


12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்


13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்


✳  நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.


 ✳ நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.


✳  நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.


N2R NandhakumaR,

Channel N2R 

ENN2AAR Groups

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...