- கர்ப்ப கால வரியை லினியா னைக்ரா என்றும் கூறுவர். கர்ப்ப காலத்தில் உங்கள் வயிற்றின் மீது ஒரு கருப்பு நேர் கோடு தோன்றும். இதைத்தான் கர்ப்ப கால வரி என்று அழைப்பார்கள்.
- இந்த வரி ஏற்கனவே இடம்பெற்று இருக்கலாம். மிகவும் லேசான கோடு ஆனதால், பலரும் கவனிக்காமல் போயிருப்பார்கள். கர்ப்ப காலத்திற்கு முன், இதனை லினியா அல்பா என்று அழைப்பார்கள்.
- கர்ப்ப காலத்தின் இதன் நிறம் கருமையாகுவதால், இதற்கு லினியா னைக்ரா என்று பெயர் கிடைத்தது.
- பொதுவாக கர்ப்ப கால வரி கருப்பு நிறத்தில் இருப்பதில்லை. பிரவுன் நிறமாக எடுத்து காட்டும் வண்ணத்தில் இருக்கும்.
- ¼ முதல் ½ இன்ச் வரை விரிவாகவும், வயிற்றில் நீட்ட வாக்கில் தொப்புள் வரை நீண்டு இருக்கும்.
- பிரசவ நேரம் நெருங்க நெருங்க, கர்ப்ப வரி கருமையாக மாறும்.
- சில நேரங்களில், 5-வது மாதங்களிலேயே இந்த வரியைக் காணலாம்
கர்ப்ப வரி ஏற்படுவதன் காரணம் என்ன?
- இந்த வரி தோன்றுவது மிகவும் இயற்கையான தன்மை தான்.
- ஏன் இந்த மாற்றம் ஏற்படுகிறது என்று காரணம் தெரியாது. சிலர் இதன் காரணம் சுரப்பிகளின் அளவில் ஏற்படும் மாற்றம் என்று கூறுவர்.
- நஞ்சுக்கொடியினால் இயக்கப்பட்ட மேலாநோசைட் சுரக்கின்ற சுரப்பிதான் காரணம் என்றும் ஒரு கூற்று உள்ளது.
- இந்த சுரப்பியினால் நிப்பிளை சுற்றியுள்ள இடமும் கருக ஆரம்பிக்கும்
இந்த கர்ப்ப வரி தோன்றாமல் தடுக்க இயலுமா?
- நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. காரணம், இது இயற்கை முறைதான்.
- ஆனால், வருத்தப்பட வேண்டாம்! குழந்தை பிறந்தவுடன் தானாகவே கர்ப்ப வரி மங்க ஆரம்பித்து காணாமல் போய் விடும்.
- ஆதலால், நீங்கள் எந்தவித சிகிச்சையும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
No comments:
Post a Comment