Tuesday 25 December 2018

சிவனை தரிக்கும் சூரியன்... அதிசய நிகழ்வு....!!

 நம்மைச் சுற்றி அன்றாடம் ஏதேனும் ஓர் அதிசய நிகழ்வுகள் நடத்துக் கொண்டுதான் இருக்கிறது. நாம் அது குறித்து அறிந்துகொண்டுதான் வருகிறோம். அதிலும் குறிப்பாக கோவில்கள். கண் திறக்கும் பெருமாள்இ பால் குடித்த அம்மன்இ வியர்க்கும் முருகன் என பல நிகழ்வுகளை நினைவு கூறலாம்.

🌞 அந்த வகையில்இ இங்கே ஓர் கோவிலில் வருடத்தின் ஒரே நாளில் மட்டும் சூரியனின் ஒளி மூலவராக வீற்றிருக்கும் சிவபெருமானை மீது விழும் அரிய நிகழ்வு நிகழ்கிறது. வாங்க அப்படி அந்த கோவில் எங்கே உள்ளது? என்னவெல்லாம் சிறப்பு என்று பார்க்கலாம்.


🌞 இந்த அரிய நிகழ்வு நடைபெறும் கோவில் விருதுநகர் மாவட்டம் முடுக்கங்குளம் என்ற ஊரிலுள்ள அருள்மிகு அம்பலவாணர் திருக்கோவிலாகும். இப்பகுதி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

🌞 இக்கோவிலில் சிதம்பரம் நடராஜரின் திருநாமமான அம்பலவாணர் என்ற பெயர் சுவாமிக்கு சூட்டப்பட்டுள்ளது. அதுபோல அம்பாளுக்கும்இ சிவகாம சுந்தரி என்ற பெயர் உள்ளது.


🌞 மாசி சிவராத்திரி தினத்தில் வேறெங்கும் நிகழாத அதிசயமாக இங்கு சூரியனின் ஒளி சிவனின் மீது படர்கிறது. இதற்காக பலகணி என்னும் கல்சாளரம் ஒன்று மூலவரின் சன்னிதி எதிரே உள்ளது.

🌞 பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டியரின் ஆட்சிக் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. அவற்றின் அடையாளமாக கோவிலின் ஒரு பகுதியில் பாண்டியரின் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

N2R_ NandhakumaR
Channel N2R

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...