Thursday 27 December 2018

ஐயப்பன் வரலாறு !!


ஆலயம் எழுப்புதல் :

மணிகண்டன் இருக்கும் ஆலயத்தை எவ்விதம் அமைப்பது என்பது பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தார் மன்னன். எப்படி வடிவமைப்பது? எதன் அடிப்படையில் அமைப்பது என்று புரியாமல் குழம்பிய மனநிலையில் இருந்த பொழுது ஒரு அசரீரி ஒன்று உருவானது.

அந்த அசரீரி மூலம் மணிகண்டன் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஆலயமானது இவ்விடத்தில் எவ்விதம் உருவாக வேண்டும் என்றும், அந்த ஆலயத்தில் பதினெட்டு படிகளும் அமைத்தல் வேண்டும் என்று அசரீரி கூறியது.

படிகளின் விளக்கம் :

மன்னரோ... ஆலய அமைப்பை பற்றி நன்கு அறிந்து கொண்டார். இருப்பினும் அந்த பதினெட்டு படிகளின் விளக்கம் யாதென்று அந்த அசரீரியிடம் கேட்க தொடங்கினார். அசரீரியோ அந்த படிகளின் விளக்கத்தைப் பற்றி எடுத்துரைக்க துவங்கியது.

இந்த பதினெட்டு படிகள் ஒவ்வொன்றும் ஒரு பொருளைக் குறிக்கும் என தெரிவித்து அதை பற்றி கூற துவங்கியது.

முதல் படி கண்களை குறிக்கும். இது நல்லதை மட்டுமே பார்க்க வேண்டும்.

இரண்டாம் படி மூக்கை குறிக்கும். சுத்தமான காற்றை மட்டும் சுவாசிக்க வேண்டும்.

மூன்றாம் படி காதுகளை குறிக்கும். நல்ல வார்த்தைகளைக் கேட்க வேண்டும்.

நான்காம் படி வாயைக் குறிக்கும். நல்ல சொற்களைப் பேச வேண்டும்.

ரூ. 289 மதிப்புள்ள ஏயுழு மற்றும் குரூப் 4
தேர்வுக்கான பயிற்சிப் புத்தகம்

50மூ சலுகை விலையில் ரூ. 145 மட்டுமே
+ ளுர்ஐPPஐNபு ஊர்யுசுபுநு நுஓவுசுயு.

ஐந்தாம் படி உணர்வை குறிக்கும். எப்போதும் மணி மாலையை மட்டுமே தொட வேண்டும்.

ஆறில் இருந்து பதின்மூன்று படி வரை உள்ள எட்டு படிகளும், அஷ்டரகஸ் என்பதைக் குறிக்கும். இது காமம், குரோதம், பேரார்வம், மோகம், கர்வம், போட்டி, பொறாமை, தற்பெருமை ஆகியவற்றைக் குறிப்பதாகும்.

பதினான்காம் படி சாத்வீகம் என்பதையும், பதினைந்தாம் படி ராஜஸம் என்பதையும், பதினாறாம் படி தாமஸம் என்பதையும் குறிக்கும்.

இம்மூன்றும் மூன்று குணங்கள் ஆகும். சோம்பலை விட்டு விட்டு, ஒருவர் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கக்கூடியது இந்த மூன்று படிகள் என்றும், பதினேழாம் படி வித்யா என்பதைக் குறிக்கும். வித்யா என்றால் அறிவு ஆகும்.

பதினெட்டாம் படி அவித்யா என்பதைக் குறிக்கும். அதாவது மோட்சத்தைப் பெற வேண்டும் என்பதைக் குறிக்கும்.

இந்த பதினெட்டு படிகளின் தத்துவத்தை அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சி கொண்டார் மன்னன். பின்பு ஆலயத்தில் எவ்விதம் கருவறையில் மணிகண்டனின் விக்கிரகத்தை அமைப்பது என்று கேட்டார்.

அதற்கு அசரீரியோ காலம் கடந்த பின் முனிவர் ஒருவரால் மணிகண்டனின் விக்கிரகம் ஆலயத்தை வந்தடையும் என்று கூறியது.

-தொடரும்...

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...