ஒவ்வொர் ஆண்டும் கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று கிருத்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரம்மாவும்,விஷ்ணுவும் சிவபெருமானின் திருவடியையும் திருமுடியையும் அன்னமாகவும்,பன்றியாகவும் உருவெடுத்துத் தேடிக்காணாதபோது ,சிவபெருமான் பெரிய ஒளிப்பிழம்பாகக் காட்சி தந்தார்.நெருப்புத் தலமாகிய திருவண்ணாமலையில் இந்நிகழ்ச்சி நடந்ததால் அத்தலத்தில் இன்றும் மலைமீது பெருவிளக்கேற்றியும்,அத்திருக்கோயிலில் விழாக்கொண்டாடியும் வருகின்றனர்.

கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்-images.jpg

இயற்கையாகவே ஐப்பசி, கார்த்திகை மாதத்தில், அதிக மழை பெய்யும். அப்படிப்பட்ட காலங்களில் பூச்சிகள் அண்டாமல் இருக்கவும், இல்லம் வெளிச்சம் பெறவும் வீட்டு வாசலில் விளக்குகளை ஏற்றி வைப்பதும், சொக்கப் பனை போன்ற தீபங்களை ஏற்றுதலும் வேண்டும் என நமது முன்னோர்கள் நமக்கு பழக்கப்படுதியிருக்கிறார்கள்.

எனவே பெருமை வாய்ந்த கார்த்திகை மாதத்தில் திருகார்த்திகை நாளில் நமது இல்லங்களில் ஒளி வீசும் தீபங்களை ஏற்றி மன சஞ்சலங்களையும், நோய்களையும், நமது துன்பங்களையும், பய இருளையும் போக்கி வாழ்வில் வளம் பல பெறுவோமாக..

கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்-1.jpg

நண்பர்கள் அனைவருக்கும் இனிய திருகார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள்..