Monday, 30 January 2023

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் மஹாலிங்கேஷ்வரர் கோவில், திருவிடைமருதூர்

முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் எதற்கெடுத்தாலும் சண்டை, சச்சரவு போட்டுக்கொண்டு நிம்மதி இல்லாமல் இருப்பார்கள். ஒரு சிலருக்கு உடல்நல ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டேயிருக்கும். வேறு சிலர் வசதியின்றி, வறுமையில் கஷ்டப்பட்டு வருவர். அது மட்டுமில்லாமல் திருமணம் நடைபெறாமல் தள்ளிப்போதல், குழந்தை பேறின்மை, திருமணமான தம்பதியரிடையே பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள், துன்பங்கள் போன்றவைகள் வருவதற்கு தலைமுறை, தலைமுறையாக ஏற்படும் முன்னோர்களின் சாபங்கள் தான் காரணம் என்று நம்பப்படுகிறது. அதையடுத்து, முன்னோர்களின் சாபங்களை போக்குவதற்கான கோயில் குறித்து பார்க்கலாம்.
* பிரம்மஹத்தி தோஷம் :

• சாபங்களிலேயே மிகவும் கொடிய சாபமாக முன்னோர்களின் சாபமே பிரம்மஹத்தி தோஷமாக கருதப்படுகிறது.
• பிரம்மஹத்தி தோஷத்தை போக்கக்கூடிய கோயிலாக கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
• 1200 ஆண்டுகளுக்கும் பழமையான இந்த கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் போன்றோர்களால் பாடப்பட்டதாகும்.
• முன்பொரு சமயம் மதுரையை அரசாட்சி செய்து வந்த வரகுண பாண்டியன் என்ற மன்னன் வேட்டைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தான்.
• அப்போது சாலையோரமாக தூங்கிக் கொண்டிருந்த அந்தனன் மீது குதிரையின் கால்பட்டு இறந்து விட்டான்.
• இந்த செயல் பாண்டிய மன்னனுக்கு தெரியாமலே நடந்தது என்றாலும் மன்னனை, பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.
• பெரிய சிவபக்தனான வரகுண பாண்டியன் இதிலிருந்து விடுபட மதுரை சோமசுந்தரரை வணங்கினான்.
• அப்போது வரகுண பாண்டியன் கனவில் தோன்றிய சிவபெருமான், சோழ நாட்டில் உள்ள திருவிடைமருதூர் சென்று வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும் என கூறினார்.

* திரும்பி வரும் போது...

• எதிரி மன்னனாக திகழும் சோழ நாட்டிற்குள், எப்படி செல்வது என நினைத்துக் கொண்டிருந்த போது, பாண்டிய நாடு மீது சோழ மன்னன் படையெடுத்து வந்திருப்பதாக செய்தி கிடைத்தது. 
• அதையடுத்து, போரில் வென்ற வரகுண பாண்டியன், சோழ படைகளை அவர்களது எல்லைக்கு விரட்டினான்.
• அப்போது திருவிடைமருதூர் கோயிலில் கிழக்கு வாயில் வழியாக சென்று மகாலிங்கேஸ்வரரை தரிசனம் செய்து பாண்டிய மன்னன் வழிபட்டான்.
• வரகுண பாண்டிய மன்னன் கோயிலுக்குள் நுழையும் போது, அவரை பற்றி இருந்த பிரம்மஹத்தி தோஷம் வெளியே நின்றது.
• வரகுண பாண்டியன் திரும்பி வரும் போது மீண்டும் பற்றிக் கொள்ளலாம் என நினைத்து காத்திருந்தது.
• அப்போது சிவபெருமான், நீ மேற்கு வாயில் வழியாக வெளியே போ என கூறினார். அதனால் வரகுண பாண்டியனை தொற்றி இருந்த பிரம்ஹத்தி தோஷம் நீங்கியது.
• அதையடுத்து, பாண்டிய மன்னன் சென்றது போலவே, இன்றும் இந்த கோயிலுக்கு செல்லும் சிவ பக்தர்கள் கிழக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்து, மேற்கு வாயில் வழியாக வெளியே செல்வது வழக்கமாக உள்ளது.

* சிறப்பு :

• உலகளவில் மருத மரத்தை ஸ்தல விருட்சமாக கொண்டிருக்கும் 3 கோயில்களில் இதுவும் ஒன்றாகும். ஸ்ரீசைலம் மற்றும் திருநெல்வேலி ஆகியவை மற்ற 2 கோயில்களாகும்.
• திருவுடைமருதூர் கோயிலில் இருக்கும் 3 பிரகாரங்களை வலம் வருவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

* அஸ்வமேதப் பிரகாரம் :
முதலாவதாக இருக்கின்ற இந்த வெளிப்பிரகாரத்தை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

* கொடுமுடிப் பிரகாரம் :
இரண்டாவதாகவும், மத்தியிலும் இருக்கும் இப்பிரகாரத்தை வலம் வருவது. சிவபெருமான் குடியிருக்கும் கைலாய மலையை வலம் வருவதற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

* பிரணவப்பிரகாரம் :
மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும்.

7 தலைமுறை முன்னோர்களின் பாவத்தை நீக்கக்கூடிய சக்தி வாய்ந்த சிவ மந்திரம்.. 

ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹ 
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மல்லேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹ

ஓம் நம சிவாய...
இந்த கோவில் மயிலாடுதுறை இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது.

Wednesday, 22 June 2022

கமலை / கவலையோட்டுதல் / ஏற்றம்

கலையிட்ட மறைவேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்,
மலையிட்ட புயத்தரசர் மணிமகுடம் சூட்டுவதும்,
தலையிட்ட பொருள்நான்கும் தலைநீட்டப் படுவதுவும்,
நிலையிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே.
           -ஏரெழுபது (துலையிட்ட நீரீன் சிறப்பு -40), கம்பர்.

விளக்கம்
கலையனைத்தும் கற்றறிந்த வேதம் ஓதும் அந்தணர்கள் அக்னி வளர்த்து யாகம் புரிவதும்;
மலை போன்ற வலிமையுடைய அரசர்கள் மணிமகுடம் சூடிக்கொள்வதும்;
சிறப்பு பொருந்திய வணிகர்கள் வாழ்வதற்காகப் பொருள் ஈட்டுவதும்; என
அனைவரும் நிலைபெற்று விளங்கும் விவசாயத் தொழில் புரியும் விவசாயிகளின் ஏற்றத்தைத் துணையாகக் கொண்டு பாய்ச்சிய நீரினால் மட்டுமே ஆகும்.

கமலை/கவலை


புகைப்படம் 1920 ல் மெட்ராஸ்ல் வெளியிடப்பட்ட அஞ்சல் அட்டை (post card)


  கமலை என்பது ஒரு கிணற்றிலிருந்து நீரிறைக்கும் சாதனமாகும். இதைக் கொண்டு ஒரு காலத்தில் வேளாண்மை நடந்துவந்தது.

  நன்செய்ப் பாசனத்திற்கு, ஆற்றுநீர் இல்லாவிடங்கட்குக் கண்ணாறுகளும் கால்வாய்களும் வெட்டிப் பாய்ச்சினர். அது இயலாவிடத்து ஏரிகளை வெட்டினர். ஏர்த்தொழிற்கு உதவுவது ஏரி. குளிப்பது குளம். இன்று ஏரியைத் தவறாகக் குளமென்பர் ஒரு சாரார். இயற்கையாக உண்டான ஏரி அல்லது குளம் பொய்கை எனப்படும். முல்லைநிலத்திற் புன்செய்ப் பாசனத்திற்குக் கிணறு களை வெட்டினர்.


புகைப்படம் 1920 ல் மெட்ராஸ்ல் வெளியிடப்பட்ட அஞ்சல் அட்டை (post card)

   எருதுகளைக் கொண்டு கிணற்றுநீரை இறைக்கும் ஏற்றம் கம்மாலை எனப்பட்டது. அம் = நீர், அம் - கம் = நீர். கம் + ஆலை = கம்மாலை. ஆலை சுற்றி வருவது. கம்மாலையென்பது இன்று கமலை என்றும் கவலை என்றும் திரிந்து வழங்குகின்றது.  இன்று எருதுகள் நேராகச் செல்வதால் கவலையோட்டுதல் என்றும் கூறுவர்.

எருது


  விதைக்கென்று முதற் காய்ப்பையும் சிறந்த மணிகளையும் ஒதுக்கி வைத்தனர். அக்காலத்து உழவர் பொருளீட்டலைக் குறிக் கொள்ளாது, உணவு விளைத்தலையே குறிக்கொண்டு பதினெண் கூலங்களையும் அவற்றின் வகைகளையும், ஆண்டுதோறும் விளைத்து வந்தனர். நூற்றுக்கணக்கான நெல்வகைகள் விளைக்கப் பெற்றன. அவற்றுட் பெரும்பாலனவற்றை இன்று கண்ணாலும் காண முடியவில்லை; காதாலும் கேட்க முடியவில்லை. பொன் தினை, செந்தினை, கருந்தினை என்னும் மூவகையுள், இன்று பொன்றினையே காண முடிகின்றது. அவரை வகைகளுட் பல ஆண்டு தோறும் ஒவ்வொன்றாய் மறைந்து வருகின்றன. இன்று ஆட்சியை நடத்துபவருக்குப் பதவியைக் காக்க வேண்டு மென்பதேயன்றி, விதை வகைகளைப் பேணவேண்டு மென்னும் கலை நோக்கில்லை. 


   தமிழகத்தில் உழவுத்தொழிற்கு இன்றியமையாத் துணையாக, தொன்றுதொட்டுப் பயன்பட்டுவரும் விலங்கு எருதாகும், ஏர்த் தொழிற்கு உதவுவதனால் காளை எருதெனப் பட்டது. ஏர் - ஏர்து-எருது. காட்டுமாட்டைப் பிடித்துப் பழக்கி வீட்டு விலங்காக்கி ஏர்த்தொழிற்குப் பயன்படுத்தினர். 


   எருதின் இன்றியமையாமை நோக்கியே ஏர்த் தொழிலைப் பகடு என்றனர். 

"பகடு புறந்தருநர் பாரம் ஒம்பி" (புறம். 35) 

"பகடு நடந்த கூழ்" (நாலடி. 4)


உழவுத்தொழிலும் பாண்டியம் எனப்பட்டது.

"பாண்டியஞ் செய்வான் பொருளினும்" (கலித்.136) 

பாண்டி எருது.

   எருதுகளை நிறம் பற்றியும் திறம்பற்றியும் பலவகையாக வகுத்து, அவற்றுள் நால்வகையைச் சிறப்பாக இறக்க வரிசையில் எடுத்துக் கூறினர். அது "முழுப் புல்லை, முக்கால் மயிலை, அரைச் சிவப்பு. கால் கருப்பு;" எனப் பழமொழியாய் வழங்கி வருகின்றது. 

சால் பறி



  இது இரண்டு வகைப்படும் படத்தில் உள்ளது இரும்பு பறி, இன்னொரு வகை தோலினால் ஆன பறி இதில் இரும்பு பறி அதிக நாளைக்கு உழைக்கும் தண்ணீர் அதிகம் பிடிக்கும் தோல் பறி ஆனது குறுகிய நாளில் சேதாரம் ஆகி கிழிந்து விடும் தண்ணீர் குறைவாக தான் பிடிக்கும்

  இரும்பு பறி வைத்திருக்கும் விவசாயிகள் எருதுகள் பெரியதாக இருக்கும் தோல் பறி வைத்திருக்கும் விவசாயிகள் எருதுகள் சிறியதாக இருந்தாலே போதும்.


கமலை/கவலை செயல்படும் விதம்


  தண்ணீர் இறைக்க “கவலை”, (சில ஊர்களில் கமலை,ஏற்றம்,ஏத்து என்பார்கள்) உபயோகப்படுத்துவார்கள். ஒரு கிணற்றுக்கு ஒன்று முதல் இரண்டு கவலைகள் இருக்கும். சாதாரணமாக ஒரு கவலைகள்தான் பெரும்பாலான கிணறுகளில் இருக்கும். தண்ணீர் வசதி அதிகம் இருந்தால் நான்கு கவலைகள் கூட இருக்கும்

  ஒவ்வொன்றுக்கும் இரண்டு எருதுகள், ஒரு ஆள். இரும்பு பறி அல்லது தோலினால் ஆன “பறி” என்று அழைக்கப்படும் ஒரு விதமான பெரிய பையை, வடக்கயிறு என்று சொல்லப்படும் ஒரு பெரிய கயிறு கட்டி ஏற்று உருளை மூலம் முன்னும் பின்னுமாக எருதுகளை ஓட்டி தண்ணீர் இறைப்பார்கள். ( கிணற்றில் வாளி மூலமாக தண்ணீர் சேந்துகிற மாதிரி)

  அந்தப்பறிக்கு ஒரு வால் இருக்கும். அதை வால் கயிறு எனப்படும் ஒரு சிறிய கயிற்றால் கட்டியிருப்பார்கள்.இதுவும் நிலத்து மட்டத்தில் இருந்து அரை அடி உயரத்தில் சிறிய உருளை மூலம் சிறிய வடக்கயிறும் வால்க்கயிறும் எருதுகளின் நுகத்தடியில் கட்டியிருப்பார்கள். பறி கிணற்றுக்கு மேல் வந்தவுடன் அந்த வால் வழியாக நீர் வாய்க்காலில் விழுவதற்குத் தோதாக வால் கயிற்றை இழுப்பார்கள். தண்ணீர் வால் வழியாக வாய்க்காலில் விழும்.

  அந்த கவலை மூலம் நீர் இறைப்பதே, பார்ப்பதற்கு ஒரு வேடிக்கையாக இருக்கும். இதில் மனித உழைப்பிலும் மாட்டின் உழைப்பிலுமே கிணற்று நீர் வெளியே வந்து சேர்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்

  ஒரு நாள் முழுவதும் கவலை இறைத்தால் அரை ஏக்கர் நிலம் நீர் பாய்ச்சலாம். பயிர்களுக்கு எப்படியும் எட்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும். ஆக மொத்தம் ஒரு கிணறும் இரண்டு கவலைகளும் இருந்தால் தண்ணீர் வசதி அதிகம் இருக்கும் காலங்களில் இரண்டு அல்லது மூன்று ஏக்கர் நிலம் பாசன விவசாயம் செய்யலாம்.

  ஆனால் இரண்டு எருதுகளும் திறமைசாலியாக இருக்கவேண்டும்

  அப்பொழுது எல்லாம் சிறு தானிய பயிர்களை மட்டுமே சாகுபடி செய்தார்கள் அதுவும் குறுகிய நாளில் வரக்கூடிய கேழ்வரகு, கம்பு, சோளம்,மிளகாய் போன்ற வகைகள்தான் அதிகம் நெல் நடவு செய்யமுடியாது இதற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும் தேவையான தண்ணீரை பாய்ச்சமுடியாது.

கமலையின் மகத்துவம்

  நீரில் மூன்று அடுக்குகள் உள்ளன. முதலாவது மேல்மட்ட நீர் (surface water), இரண்டாவது தந்துகிக் குழாய் நீர் (capillary water), மூன்றாவது நிலத்தடி நீர் (ground water).

  பொதுவாக மேல்மட்ட நீரானது குளங்களிலும் ஆறுகளிலும் காணப்படும். நிலத்தடி நீர் என்பது 100 அடிக்கும் கீழே தண்ணீர் தாவளங்களாக (aquifers) காணப்படும். இதற்கிடையில் உள்ள நீர், நுண்துளை நீர் என்று அழைக்கப்படும். இது ஆண்டுதோறும் பெய்யும் மழை, குளங்களில் சேமிக்கப்படும் நீரின் அளவு, காணப்படும் மரங்களின் அடர்த்தி ஆகியவற்றைக்கொண்டு உருவாகும்.

  பொதுவாகக் கமலைக் கிணறுகள் யாவும் இந்த நுண்துளை நீரை மட்டுமே பயன்படுத்துபவை. கமலையின் இறைப்பு அளவும், கிணற்றின் நீர் ஊறும் திறனும் பெரும்பாலும் சமமாக இருக்கும். ஒரு சால் நீரை வாய்க்காலில் ஊற்றிவிட்டு, அடுத்த சால் இறைக்கப் போகும்முன் நீர் ஊறிவிடும். இதைத்தான் நீடித்ததன்மை (sustainability) என்று இப்போது பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

மின் எக்கி

  வங்கிகள் மின்எக்கிகளை (electric motor) அமைத்துக்கொள்ளக் கடன் வழங்கின. கடன் பெறத் 'தகுதி' பெற்றோர் கடன் வாங்கி 'மோட்டார்களை' அமைத்துக்கொண்டனர். ஒரு சிற்றூரில் 100-க்கு 80 பேர் கமலை வைத்திருந்தார்கள் என்றால், அதில் 20 பேருக்கு மட்டும் கடன் கிடைத்தது. அதாவது, 80 உழவர்களில் 20 பேர் மின்எக்கிகளுக்கு மாறினர்.

  மின்சார எக்கிகள் நீரை மிக வேகமாக உறிஞ்சின. கிணற்றின் ஊறும் வேகம் மின்சார எக்கிகளுக்கு முன் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே, கிணறுகளில் நீர் மட்டம் அதி வேகமாகக் கீழிறங்கியது. இதனால் மீதமுள்ளவர்களும் மின்சார எக்கிகளுக்கு மாற வேண்டும் அல்லது சாகுபடியைக் கைவிட வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகினர். இதனால் கமலைகள் காணாமல் போயின. படிப்படியாக ஏற்றம் மூலம் தண்ணீர் பாய்ச்சு வதை நிறுத்தியதால் தற்போதுள்ள இளைஞர்களுக்கோ, காளை களுக்கோ ஏற்றம் மூலம் தண்ணீர் இறைக்கத் தெரியாமல் போய் விட்டது.

                                                                                         எழுத்து,                                                                                                          N2R நந்தகுமார்

Tuesday, 3 May 2022

ரமலான் பெருவிழா நல்வாழ்த்துக்கள் Ramzan Wishes

“அன்னம் ஆகாரம் இல்லாமல் ஒரு வேளை மட்டும் உணவருந்தி ரமலான் மாதம் முழுவதும் இறைவனை எண்ணி தன் உடலை வருத்தி நோன்பிருந்து இறைவனுக்கு தொழுகையால் தனது அன்பை பரிமாறும் இஸ்லாமிய நல்ல உள்ளங்களுக்கு எங்களது இனிய ரமலான் திருநாள் வாழ்த்துகள்...!”


N2R 

Tuesday, 19 April 2022

கிரகப்பிரவேச காலத்தில் பசுவை உள்ளே அழைப்பது ஏதற்காக?


கோமாதா என்று போற்றப்படும் கன்றுடன் கூடிய பசுவை முதன் முதலில் உள்ளே அழைப்பது எல்லோரது வீடுகளிலும் நடப்பது. இது தரைத்தள வீடுகளில் மட்டும் சாத்தியமாகிறது.


மாடி வீடுகளில் வசிப்பவர்கள் பசுவின் பொம்மை, காமாட்சி தீபம், மட்டைத் தேங்காயை வைத்து கோபூஜை செய்து விடலாம்.

வீடு கட்டும் காலத்தில் மற்றவர்களது கண்ணேறுகள் தோஷங்கள் அகல்வதற்காக தெய்வங்கள், மகரிஷிகள், தேவர்கள் இடமாகக் கொண்டுள்ள தெய்வப் பசுவை வாசலில் கோபூஜை செய்து மங்கள வாத்தியம் வேத கோஷங்கள் முழுங்க அழைத்து வருகிறார்கள்.

பசு கன்றுடன் வீட்டு உள்ளே வரும் போது….

“ஓம் சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசி நீ
பாவநீ சுரபி ஸ்ரேஷ்ட தேவி துப்யம் நமோஸ்துதே”!

என்று வணங்கி கூற வேண்டும்.


ஏ! கோ மாதாவே சகல தெய்வங்களையும் தீர்த்தங்களையும் உடலுள் வைத்துக் கொண்டு லட்சுமி அருளையும், சகல ஐஸ்வர்யங்களையும் பேர் அருளாய்ச் சுரக்கும் உன்னை அன்னையாகத் துதிக்கிறேன் என்று வரவேற்க வேண்டும். இதனால் வீட்டில் அனைத்து தெய்வ தேவ வாழ்த்துக்களும் கிடைக்கும்.

N2R NandhakumaR

Friday, 24 December 2021

ஒருவனுக்கு ஒருத்தி! ஒருத்திக்கு ஒருவன்!!


திருமணத்திற்கு பிறகு
வேலை வேண்டாம் என்றார் 
விட்டுவிட்டேன்!

நம்பரை மாற்ற வேண்டும் என்றார்
மாற்றிவிட்டேன்!

Facebook கூடாதென்றார்
நிறுத்தி விட்டேன்!

ஆண் நண்பர்கள் நட்பை
தொடரவேண்டாம் என்றார்
விட்டுவிட்டேன்!

லெக்கின் அணிந்தால்
கால் அளவு தெரியுமென்றார்
சுடிதாருக்கு மாறிக்கொண்டேன்!

Heels வைத்த செருப்பு
கூடாதென்றார்,
தூர ஒதுக்கினேன்!

ஜாக்கெட்டுக்கு தனியாய்
ஜன்னல் வேண்டாம் என்றார்
கழுத்துவரை மறைத்து 
தைத்துக்கொண்டேன்!

உதட்டு சாயம் கூடாதென்றார்
ஒன்றும் போடாமல் 
விட்டுவிட்டேன்!

பார்லர் பக்கம் வேண்டாம் என்றார்,
பாலாடை தயிரோடு 
நிறுத்திக்கொண்டேன்!

கொஞ்ச நாள் சந்தோஷமாய்
இருந்து அதன்பின் குழந்தை பற்றி
யோசிக்கலாம் என்றார்,
அதுவரை தவறாமல் மாதந்தோறும் 
மாத்திரை தின்றேன்!

வாரத்தின் ஏழுநாளும் 
அவருக்கு பிடித்ததே 
சமைக்க வேண்டும்!

வாரக்கடைசியில் நண்பர்கள்
என்று நடுராத்திரி தான்
திரும்புவார்!

இரவு ஒரு மணிக்கு
 Reached ? என்று 
பெண் பெயரில் மெசேஜ்!

பொழுது விடிந்ததும் 
யாரென்று கேட்டேன்,
Ex lover என்றார்!

விட்டுவிடச் சொன்னேன்,

முடியவில்லை என்றார்!

முயன்றால் முடியும்
துணைக்கு நானிருக்கிறேன்
என்றேன்!

நீயும் அவளும் ஒன்றா என்றார்,

வேறு வேறு தான்,
இது legal அது illegal என்றேன்!

அறைந்துவிட்டார்!

தூக்கம் போனது!

உங்களுக்காக எல்லாவற்றையும்
விட்டுவிட்டேன்,
எனக்காக இது ஒன்றை மட்டும்
விட்டுவிடுங்கள் என்றேன்!

முடியாது it's true love 
என்றார்!

எனக்கும் கூட true love
இருந்தது என்றேன்!

மறைத்ததற்காக ஒரு வாரம்
அடித்தார்!

தாங்கிக்கொண்டேன்!

ஆனால் அவரிடம் எந்த மாற்றமும்
இல்லை!

திரும்பவும் Facebook 
open செய்தேன்!

திரும்பவும் lipstick போட்டேன்!

திரும்பவும் ஜாக்கெட்டுக்கு
ஜன்னல் வைத்தேன்!

திரும்பவும் லெக்கின் போட்டேன்!

பார்லர் பக்கம் 
தலைவைத்து படுத்தேன்!

எனக்கு பிடித்ததையும்
சமைத்தேன்!

முகநூல் முழுவதும் 
காதல் கவிதைகளாய்
எழுதினேன்!

திரும்பவும் வேலைக்கு போனேன்,
திரும்பும் போது லேட்டாக
வந்தேன்!

ஆண் நட்புக்களை புதுப்பித்தேன்,
அவ்வப்போது weekend party என்று
வெளியே சென்றேன்!

ஒளிந்து ஒளிந்து போன் பேசினேன்,
மொபைலுக்கும் laptop க்கும்
Password போட்டேன்!

அவருக்கு இருந்த ஆயிரம்
வேலைகளில் முக்கியமான வேலை
என்னை வேவு பார்ப்பது!

தன் வீட்டு சாப்பாடு
தனக்கு மட்டுமே சொந்தம் என்று
திருடு போகாமல் காப்பாற்ற
லீவு நாட்களில் கூட அவர்
வெளியே போவதில்லை!

எப்படியாவது என் ex lover ஐ
கையும் களவுமாக பிடிக்கவேண்டும்
என்று என்னைச்சுற்றியே
வட்டமிடுகிறார்!

எந்த ஜென்மத்திலும் அவரால்
கண்டுபிடிக்க முடியாது,
காரணம் எந்த ex lover ம்
எனக்கு கிடையாது!

இல்லாத ஒருவனை தேடித்தேடியே
என் அருகாமையில் சுற்றுவார்,
அவளை விட்டு தூரம் வருவார்!

அவளை மறந்து என்னை
மட்டுமே நினைக்கும் வரை
எனக்கு ex lover வேண்டும்!
நீ யாரென்றே தெரியாது 
என் அன்பு காதலனே...

கலாசாரம் இல்ல வாழ்வு அற்ப வாழ்வு!
கலாசார வாழ்வு காலத்தை வென்ற வாழ்வு!!

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...