Thursday, 14 October 2021

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடும் முறை


   நவராத்திரி விழா கடந்த வாரம் துவங்கி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்தியில் நாம் பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். அத்துடன் அம்மனுக்கு மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் படைக்க வேண்டும்.

Published by
Channel N2R

   நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் நாட்கள் உகந்தவை. இன்று சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்விக்கடவுளான சரஸ்வதியை வணங்கும் வகையில், சரஸ்வதி பூஜையும் மற்றும் தொழில், வர்த்தகம் நிறுவனங்கள், அலுவலகங்களில் ஆயுத பூஜையும் நடத்தப்படுகிறது.

சரஸ்வதி பூஜை கொண்டாடும் முறை
  வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபடு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்தி ச‌ந்தன‌ம் தெ‌ளி‌த்து, கு‌ங்கும‌ம் இட வே‌ண்டு‌ம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ படை‌க்க‌ப்பட பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம் கு‌ங்கும‌ம் இட வேண்டும். 

  சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தை பூ‌க்க‌ளால் அல‌ங்க‌ரி‌க்க வே‌ண்டு‌ம். சரஸ்வதி படத்தின் கீழ் வாழை இலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப் பட்டவைகளை வைக்க வேண்டும். சரஸ்வதி படத்தின் அருகில் புத்தகங்களை வைக்க வேண்டும். படையலுக்காக பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் இவை அனைத்தும் வாழையிலையில் வைக்க வேண்டும். பின்னர் கலசம் வைத்து அதில் தேவியை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜித்து வழிபட நலன் உன்டாகும். கலைவாணியை பூஜித்து வணங்கினால் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆயுத பூஜை கொண்டாடும் முறை
  ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

 N2R நந்தகுமார்
Channel N2R

Tuesday, 12 October 2021

சைக்கிள் ஓட்ட உரிமம் தேவைப்பட்டது. இது பற்றி யாருக்காவது தெரியுமா? Cycling license required. Does anyone know about this?


1960 ஆம் ஆண்டுகளில் சைக்கிள் வைத்திருப்பது ஆடம்பரமாக கருதப்பட்டது, அப்போது சைக்கிள் ஓட்ட உரிமம் தேவைப்பட்டது.

In the 1960s, owning a bicycle was considered a luxury, and cycling licenses were required.

1960 കളിൽ, സൈക്കിൾ സ്വന്തമാക്കുന്നത് ഒരു ആഡംബരമായി കണക്കാക്കപ്പെട്ടിരുന്നു, സൈക്കിൾ ലൈസൻസുകൾ ആവശ്യമാണ്.

Saturday, 15 May 2021

இந்த உலகில் கொரானோ தொற்று ஏற்படாமல் உங்களை காப்பாற்ற ஒரே ஒருவரால் மட்டுமே முடியும்!



அது நீங்கள் தான்

நீங்கள் தான் உங்களின் பாதுகாவலர்!
நீங்கள் தான் உங்களின் மருத்துவர்!
நீங்கள் தான் உங்களின் துப்புரவாளர்!
நீங்கள் தான் உங்கள் உடலை தாக்கவந்த கொரானோ எனும் அசுரனை வேட்டையாடும் கடவுள்!

*அது நீங்கள் தான்!*
*நீங்கள் மட்டும் தான்!!*

ஆரோக்கியமான வாழ்விற்கு விழிப்புணர்வுடன் செயல்படுவோம்.


மக்களின் செல்வன்
N2R நந்தகுமார்

Wednesday, 23 December 2020

தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகளாக அமைந்துள்ள ஊர்கள்



_1.திருவள்ளூர் மாவட்டம்_
    🏛கும்மிடிப்பூண்டி
    🏛பொன்னேரி
    🏛திருத்தணி
    🏛திருவள்ளூர்
    🏛பூந்தமல்லி
    🏛ஆவடி

_2.சென்னை மாநகரம்_
    🏛மதுரவாயல்
    🏛அம்பத்தூர்
    🏛மாதவரம்
    🏛திருவொற்றியூர்
    🏛ராதாகிருஷ்ணன் நகர்
    🏛பெரம்பூர்
    🏛கொளத்தூர்
    🏛வில்லிவாக்கம்
    🏛திரு. வி. க நகர்
    🏛எழும்பூர்
    🏛ராயபுரம்
    🏛துறைமுகம்
    🏛சேப்பாக்கம்
    🏛ஆயிரம் விளக்கு
    🏛அண்ணா நகர்
    🏛விருகம்பாக்கம்
    🏛சைதாப்பேட்டை
    🏛தி நகர்
    🏛மயிலாப்பூர்
    🏛வேளச்சேரி
    🏛ஆலந்தூர்

_3.செங்கல்பட்டு மாவட்டம்_
    🏛சோழிங்கநல்லூர்
    🏛பல்லாவரம்
    🏛தாம்பரம்
    🏛செங்கல்பட்டு
    🏛திருப்போரூர்
    🏛செய்யூர்
    🏛மதுராந்தகம்

_4.காஞ்சிபுரம் மாவட்டம்_
    🏛திருப்பெரும்புதூர்
    🏛உத்திரமேரூர்
    🏛காஞ்சிபுரம்

_5.ராணிப்பேட்டை மாவட்டம்_
    🏛அரக்கோணம்
    🏛சோளிங்கர்
    🏛ராணிப்பேட்டை
    🏛ஆற்காடு

_6.வேலூர் மாவட்டம்_
    🏛காட்பாடி
    🏛வேலூர்
    🏛அணைக்கட்டு
    🏛கீழ்வைத்தியணான்குப்பம்
    🏛குடியாத்தம்

_7.திருப்பத்தூர் மாவட்டம்_
    🏛வாணியம்பாடி
    🏛ஆம்பூர்
    🏛ஜோலார்பேட்டை
    🏛திருப்பத்தூர்

_8.கிருஷ்ணகிரி மாவட்டம்_
    🏛ஊத்தங்கரை
    🏛பர்கூர்
    🏛கிருஷ்ணகிரி
    🏛வேப்பனஹள்ளி
    🏛ஓசூர்
    🏛தளி

_9.தர்மபுரி மாவட்டம்_
    🏛பாலக்கோடு
    🏛பென்னாகரம்
    🏛தர்மபுரி
    🏛பாப்பிரெட்டிப்பட்டி
    🏛அரூர்

_10.திருவண்ணாமலை மாவட்டம்_
    🏛செங்கம்
    🏛திருவண்ணாமலை
    🏛கீழ்பென்னாத்தூர்
    🏛கலசபாக்கம்
    🏛போளூர்
    🏛ஆரணி
    🏛செய்யாறு
    🏛வந்தவாசி

_11.விழுப்புரம் மாவட்டம்_
    🏛செஞ்சி
    🏛மயிலம்
    🏛திண்டிவனம்
    🏛வானூர்
    🏛விழுப்புரம்
    🏛விக்கிரவாண்டி

_12.கள்ளக்குறிச்சி மாவட்டம்_
    🏛திருக்கோயிலூர்
    🏛உளுந்தூர்பேட்டை
    🏛ரிஷிவந்தியம்
    🏛சங்கராபுரம்
    🏛கள்ளக்குறிச்சி

_13.சேலம் மாவட்டம்_
    🏛கங்கவள்ளி
    🏛ஆத்தூர்
    🏛ஏற்காடு
    🏛ஓமலூர்
    🏛மேட்டூர்
    🏛எடப்பாடி
    🏛சங்ககிரி
    🏛மேற்கு சேலம்
    🏛வடக்கு சேலம்
    🏛தெற்கு சேலம்
    🏛வீரபாண்டி

_14.நாமக்கல் மாவட்டம்_
    🏛ராசிபுரம்
    🏛சேந்தமங்கலம்
    🏛நாமக்கல்
    🏛பரமத்தி வேலூர்
    🏛திருச்செங்கோடு
    🏛குமாரபாளையம்

_15.ஈரோடு மாவட்டம்_
    🏛கிழக்கு ஈரோடு
    🏛மேற்கு ஈரோடு
    🏛மொடக்குறிச்சி
    🏛பெருந்துறை
    🏛பவானி
    🏛அந்தியூர்
    🏛கோபிசெட்டிபாளையம்
    🏛பவானிசாகர்

_16.திருப்பூர் மாவட்டம்_
    🏛தாராபுரம்
    🏛காங்கேயம்
    🏛அவிநாசி
    🏛வடக்கு திருப்பூர்
    🏛தெற்கு திருப்பூர்
    🏛பல்லடம்
    🏛உடுமலைப்பேட்டை
    🏛மடத்துக்குளம்

_17.நீலகிரி மாவட்டம்_
    🏛உதகமண்டலம்
    🏛கூடலூர்
    🏛குன்னூர்

_18.கோயம்புத்தூர் மாவட்டம்_
    🏛மேட்டுப்பாளையம்
    🏛சூலூர்
    🏛கவுண்டம்பாளையம்
    🏛வடக்கு கோயம்புத்தூர்
    🏛தொண்டாமுத்தூர்
    🏛தெற்கு கோயம்புத்தூர்
    🏛சிங்காநல்லூர்
    🏛கிணத்துக்கடவு
    🏛பொள்ளாச்சி
    🏛வால்பாறை

_19.திண்டுக்கல் மாவட்டம்_
    🏛பழநி
    🏛ஒட்டன்சத்திரம்
    🏛ஆத்தூர்
    🏛நிலக்கோட்டை
    🏛நத்தம்
    🏛திண்டுக்கல்
    🏛வேடசந்தூர்

_20.கரூர் மாவட்டம்_
    🏛அரவக்குறிச்சி
    🏛கரூர்
    🏛கிருஷ்ணராயபுரம்
    🏛குளித்தலை

_21.திருச்சிராப்பள்ளி மாவட்டம்_
    🏛மணப்பாறை
    🏛ஸ்ரீரங்கம்
    🏛மேற்கு திருச்சி
    🏛கிழக்கு திருச்சி
    🏛திருவெறும்பூர்
    🏛லால்குடி
    🏛மண்ணச்சநல்லூர்
    🏛முசிறி
    🏛துறையூர்

_22.பெரம்பலூர் மாவட்டம்_
    🏛பெரம்பலூர்
    🏛குன்னம்

_23.அரியலூர் மாவட்டம்_
    🏛அரியலூர்
    🏛ஜெயங்கொண்டம்

_24.கடலூர் மாவட்டம்_
    🏛திட்டக்குடி
    🏛விருத்தாசலம்
    🏛நெய்வேலி
    🏛பண்ருட்டி
    🏛கடலூர்
    🏛குறிஞ்சிப்பாடி
    🏛புவனகிரி
    🏛சிதம்பரம்
    🏛காட்டுமன்னார்கோயில்
    
_25.நாகப்பட்டினம் மாவட்டம்_
    🏛சீர்காழி
    🏛மயிலாடுதுறை
    🏛பூம்புகார்
    🏛நாகப்பட்டினம்
    🏛கீழ்வேளூர்
    🏛வேதாரண்யம்
    
_26.திருவாரூர் மாவட்டம்_
    🏛திருத்துறைப்பூண்டி
    🏛மன்னார்குடி
    🏛திருவாரூர்
    🏛நன்னிலம்
    
_27.தஞ்சாவூர் மாவட்டம்_
    🏛திருவிடைமருதூர்
    🏛கும்பகோணம்
    🏛பாபநாசம்
    🏛திருவையாறு
    🏛தஞ்சாவூர்
    🏛ஒரத்தநாடு
    🏛பட்டுக்கோட்டை
    🏛பேராவூரணி

_28.புதுக்கோட்டை மாவட்டம்_
    🏛கந்தர்வகோட்டை
    🏛விராலிமலை
    🏛புதுக்கோட்டை
    🏛திருமயம்
    🏛ஆலங்குடி
    🏛அறந்தாங்கி

_29.சிவகங்கை மாவட்டம்_
    🏛காரைக்குடி
    🏛திருப்பத்தூர்
    🏛சிவகங்கை
    🏛மானாமதுரை

_30.மதுரை மாவட்டம்_
    🏛மேலூர்
    🏛கிழக்கு மதுரை
    🏛சோழவந்தான்
    🏛வடக்கு மதுரை
    🏛தெற்கு மதுரை
    🏛மத்திய மதுரை
    🏛மேற்கு மதுரை
    🏛திருப்பரங்குன்றம்
    🏛திருமங்கலம்
    🏛உசிலம்பட்டி
    
_31.தேனி மாவட்டம்_
    🏛ஆண்டிபட்டி
    🏛பெரியகுளம்
    🏛போடிநாயக்கனூர்
    🏛கம்பம்

_32.விருதுநகர் மாவட்டம்_
    🏛ராஜபாளையம்
    🏛திருவில்லிபுத்தூர்
    🏛சாத்தூர்
    🏛சிவகாசி
    🏛விருதுநகர்
    🏛அருப்புக்கோட்டை
    🏛திருச்சுழி

_33.ராமநாதபுரம் மாவட்டம்_
    🏛பரமக்குடி
    🏛திருவாடானை
    🏛ராமநாதபுரம்
    🏛முதுகுளத்தூர்

_34.தூத்துக்குடி மாவட்டம்_
    🏛விளாத்திகுளம்
    🏛தூத்துக்குடி
    🏛திருச்செந்தூர்
    🏛ஸ்ரீவைகுண்டம்
    🏛ஒட்டப்பிடாரம்
    🏛கோவில்பட்டி

_35.தென்காசி மாவட்டம்_
    🏛சங்கரன்கோவில்
    🏛வாசுதேவநல்லூர்
    🏛கடையநல்லூர்
    🏛தென்காசி
    🏛ஆலங்குளம்

_36.திருநெல்வேலி மாவட்டம்_
    🏛திருநெல்வேலி
    🏛அம்பாசமுத்திரம்
    🏛பாளையங்கோட்டை
    🏛நாங்குநேரி
    🏛ராதாபுரம்

_37.கன்னியாகுமரி மாவட்டம்_
    🏛கன்னியாகுமரி
    🏛நாகர்கோவில்
    🏛குளச்சல்
    🏛பத்மநாபபுரம்
    🏛விளவங்கோடு
    🏛கிள்ளியூர்

Channel N2R 

Friday, 11 December 2020

ஏழை மக்களின் பசியாற்றிய மக்கள் சேவகர் சுப்பிரமணியம் சாந்தியடைந்தார்! சாந்தி கியர்ஸ் அறங்காவலர் மரணம்!!


கோவை : பல்வேறு விதங்களில் மக்களுக்கு சேவை செய்து வந்த கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (வயது 78) இன்று உயிரிழந்தார்.

இவர் கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை 1972 துவங்கி, இயந்திர உதிரி பாகங்களை பலவேறு நாடுகளுக்கு தயாரித்து கொடுத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்தவர் சுப்ரமணியம்.

கடந்த 1996 ம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பினை சுப்பிரமணியம் துவங்கினார்.
இந்த அமைப்பின் அறங்காவலராக இருந்து வந்தார் சுப்ரமணியம். சாந்தி கியர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வேறு நிறுவனத்திற்கு விற்கபட்டது.

சாந்தி சோசியல் சர்வீஸ் பணிகளை மட்டும் சுப்பிரமணியம் கவனித்து வந்தார்.

உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை நடத்தி லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தார்.

மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஏராளமானோர் உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர். தினமும் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவச உணவும் வழங்கப்பட்டு வருகின்றது.

சாந்தி மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் வெறும் ரூ.30 மட்டும் வசூலிக்கப்பட்டு வருகிறது. மருத்தகங்களிலும் 30 சதவீதம் விலை குறைவில் அனைத்து மருந்துகளும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் மருத்துவ ஆலோசனை பெறவும் , பரிசோதனைகள் செய்யவும்,மருந்துகள் வாங்கவும் பொது மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள். சாந்தி சோசியல் சர்வீஸ் பெட்ரோல் பங்கில், புதிய ஸ்டாக் வரும் போது என்ன விலையோ, அதே விலை அந்த ஸ்டாக் முடியும் வரை விற்பனை செய்யப்படும்.

சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பால் இலவச மின்மயானமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்தகைய சேவைகளை செய்து வந்த சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சுப்பிரமணியம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கோவை மக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...