Friday 24 December 2021

ஒருவனுக்கு ஒருத்தி! ஒருத்திக்கு ஒருவன்!!


திருமணத்திற்கு பிறகு
வேலை வேண்டாம் என்றார் 
விட்டுவிட்டேன்!

நம்பரை மாற்ற வேண்டும் என்றார்
மாற்றிவிட்டேன்!

Facebook கூடாதென்றார்
நிறுத்தி விட்டேன்!

ஆண் நண்பர்கள் நட்பை
தொடரவேண்டாம் என்றார்
விட்டுவிட்டேன்!

லெக்கின் அணிந்தால்
கால் அளவு தெரியுமென்றார்
சுடிதாருக்கு மாறிக்கொண்டேன்!

Heels வைத்த செருப்பு
கூடாதென்றார்,
தூர ஒதுக்கினேன்!

ஜாக்கெட்டுக்கு தனியாய்
ஜன்னல் வேண்டாம் என்றார்
கழுத்துவரை மறைத்து 
தைத்துக்கொண்டேன்!

உதட்டு சாயம் கூடாதென்றார்
ஒன்றும் போடாமல் 
விட்டுவிட்டேன்!

பார்லர் பக்கம் வேண்டாம் என்றார்,
பாலாடை தயிரோடு 
நிறுத்திக்கொண்டேன்!

கொஞ்ச நாள் சந்தோஷமாய்
இருந்து அதன்பின் குழந்தை பற்றி
யோசிக்கலாம் என்றார்,
அதுவரை தவறாமல் மாதந்தோறும் 
மாத்திரை தின்றேன்!

வாரத்தின் ஏழுநாளும் 
அவருக்கு பிடித்ததே 
சமைக்க வேண்டும்!

வாரக்கடைசியில் நண்பர்கள்
என்று நடுராத்திரி தான்
திரும்புவார்!

இரவு ஒரு மணிக்கு
 Reached ? என்று 
பெண் பெயரில் மெசேஜ்!

பொழுது விடிந்ததும் 
யாரென்று கேட்டேன்,
Ex lover என்றார்!

விட்டுவிடச் சொன்னேன்,

முடியவில்லை என்றார்!

முயன்றால் முடியும்
துணைக்கு நானிருக்கிறேன்
என்றேன்!

நீயும் அவளும் ஒன்றா என்றார்,

வேறு வேறு தான்,
இது legal அது illegal என்றேன்!

அறைந்துவிட்டார்!

தூக்கம் போனது!

உங்களுக்காக எல்லாவற்றையும்
விட்டுவிட்டேன்,
எனக்காக இது ஒன்றை மட்டும்
விட்டுவிடுங்கள் என்றேன்!

முடியாது it's true love 
என்றார்!

எனக்கும் கூட true love
இருந்தது என்றேன்!

மறைத்ததற்காக ஒரு வாரம்
அடித்தார்!

தாங்கிக்கொண்டேன்!

ஆனால் அவரிடம் எந்த மாற்றமும்
இல்லை!

திரும்பவும் Facebook 
open செய்தேன்!

திரும்பவும் lipstick போட்டேன்!

திரும்பவும் ஜாக்கெட்டுக்கு
ஜன்னல் வைத்தேன்!

திரும்பவும் லெக்கின் போட்டேன்!

பார்லர் பக்கம் 
தலைவைத்து படுத்தேன்!

எனக்கு பிடித்ததையும்
சமைத்தேன்!

முகநூல் முழுவதும் 
காதல் கவிதைகளாய்
எழுதினேன்!

திரும்பவும் வேலைக்கு போனேன்,
திரும்பும் போது லேட்டாக
வந்தேன்!

ஆண் நட்புக்களை புதுப்பித்தேன்,
அவ்வப்போது weekend party என்று
வெளியே சென்றேன்!

ஒளிந்து ஒளிந்து போன் பேசினேன்,
மொபைலுக்கும் laptop க்கும்
Password போட்டேன்!

அவருக்கு இருந்த ஆயிரம்
வேலைகளில் முக்கியமான வேலை
என்னை வேவு பார்ப்பது!

தன் வீட்டு சாப்பாடு
தனக்கு மட்டுமே சொந்தம் என்று
திருடு போகாமல் காப்பாற்ற
லீவு நாட்களில் கூட அவர்
வெளியே போவதில்லை!

எப்படியாவது என் ex lover ஐ
கையும் களவுமாக பிடிக்கவேண்டும்
என்று என்னைச்சுற்றியே
வட்டமிடுகிறார்!

எந்த ஜென்மத்திலும் அவரால்
கண்டுபிடிக்க முடியாது,
காரணம் எந்த ex lover ம்
எனக்கு கிடையாது!

இல்லாத ஒருவனை தேடித்தேடியே
என் அருகாமையில் சுற்றுவார்,
அவளை விட்டு தூரம் வருவார்!

அவளை மறந்து என்னை
மட்டுமே நினைக்கும் வரை
எனக்கு ex lover வேண்டும்!
நீ யாரென்றே தெரியாது 
என் அன்பு காதலனே...

கலாசாரம் இல்ல வாழ்வு அற்ப வாழ்வு!
கலாசார வாழ்வு காலத்தை வென்ற வாழ்வு!!

Thursday 14 October 2021

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடும் முறை


   நவராத்திரி விழா கடந்த வாரம் துவங்கி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்தியில் நாம் பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். அத்துடன் அம்மனுக்கு மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் படைக்க வேண்டும்.

Published by
Channel N2R

   நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் நாட்கள் உகந்தவை. இன்று சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்விக்கடவுளான சரஸ்வதியை வணங்கும் வகையில், சரஸ்வதி பூஜையும் மற்றும் தொழில், வர்த்தகம் நிறுவனங்கள், அலுவலகங்களில் ஆயுத பூஜையும் நடத்தப்படுகிறது.

சரஸ்வதி பூஜை கொண்டாடும் முறை
  வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபடு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்தி ச‌ந்தன‌ம் தெ‌ளி‌த்து, கு‌ங்கும‌ம் இட வே‌ண்டு‌ம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ படை‌க்க‌ப்பட பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம் கு‌ங்கும‌ம் இட வேண்டும். 

  சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தை பூ‌க்க‌ளால் அல‌ங்க‌ரி‌க்க வே‌ண்டு‌ம். சரஸ்வதி படத்தின் கீழ் வாழை இலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப் பட்டவைகளை வைக்க வேண்டும். சரஸ்வதி படத்தின் அருகில் புத்தகங்களை வைக்க வேண்டும். படையலுக்காக பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் இவை அனைத்தும் வாழையிலையில் வைக்க வேண்டும். பின்னர் கலசம் வைத்து அதில் தேவியை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜித்து வழிபட நலன் உன்டாகும். கலைவாணியை பூஜித்து வணங்கினால் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆயுத பூஜை கொண்டாடும் முறை
  ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

 N2R நந்தகுமார்
Channel N2R

Tuesday 12 October 2021

சைக்கிள் ஓட்ட உரிமம் தேவைப்பட்டது. இது பற்றி யாருக்காவது தெரியுமா? Cycling license required. Does anyone know about this?


1960 ஆம் ஆண்டுகளில் சைக்கிள் வைத்திருப்பது ஆடம்பரமாக கருதப்பட்டது, அப்போது சைக்கிள் ஓட்ட உரிமம் தேவைப்பட்டது.

In the 1960s, owning a bicycle was considered a luxury, and cycling licenses were required.

1960 കളിൽ, സൈക്കിൾ സ്വന്തമാക്കുന്നത് ഒരു ആഡംബരമായി കണക്കാക്കപ്പെട്ടിരുന്നു, സൈക്കിൾ ലൈസൻസുകൾ ആവശ്യമാണ്.

Saturday 15 May 2021

இந்த உலகில் கொரானோ தொற்று ஏற்படாமல் உங்களை காப்பாற்ற ஒரே ஒருவரால் மட்டுமே முடியும்!



அது நீங்கள் தான்

நீங்கள் தான் உங்களின் பாதுகாவலர்!
நீங்கள் தான் உங்களின் மருத்துவர்!
நீங்கள் தான் உங்களின் துப்புரவாளர்!
நீங்கள் தான் உங்கள் உடலை தாக்கவந்த கொரானோ எனும் அசுரனை வேட்டையாடும் கடவுள்!

*அது நீங்கள் தான்!*
*நீங்கள் மட்டும் தான்!!*

ஆரோக்கியமான வாழ்விற்கு விழிப்புணர்வுடன் செயல்படுவோம்.


மக்களின் செல்வன்
N2R நந்தகுமார்

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...