Monday 21 January 2019

பஞ்சாட்சர மந்திரம் பற்றிய அபூர்வ விளக்கம்


*சிவாய நம /சிவயநம சரியா?*
*நமசிவாய /நமசிவய சரியா ?*
*எதை நாம் சொல்ல வேண்டும் ?எப்படி
சொல்ல வேண்டும் ?*
முதலில் நாம் மந்திரம் என்பது என்ன என்று
புரிந்து அறிந்து கொள்வோம் ...
கருவில் உள்ளே புகுந்த உயிருக்கு ஓசை தான்
தொப்பிள் கொடிவழியாக
மனதை உண்டாகி மனதிடம் செல்கிறது,
இப்படியும் சொல்லலாம் உடலுக்கும்
உயிருக்கும்
ஓசை தான் மனதை உண்டாகிறது,
பிறப்பு எடுத்த பிறகு மனம் விழித்து
உணர்ச்சிகள் ,வாசனை ,கர்மம் போன்ற
நிலைகளை ஆட்பட்டு செயல்படுகிறது .
இப்படி மனதிற்கு அடித்தளமே இந்த ஓசை தான் .
மந்திரம் ஓசைகளினால் உண்டானது ,
ஓசை மனதின் உணர்சிகளுக்கு
கட்டுப்பட்டதால் நாம் உண்டாகும் ஓசைகள்
சில நமக்கு நன்மையையும் செய்யும்
தீமையும் செய்யும் ..
உதாரனமாக ஒரு நபரை பசு போல
இருப்பவனே என்றால் சிரித்து கொள்வார்கள்,
அவரை நாயை போல இருப்பவனே என்றால்
கோபாம் கொள்வார் .
இரண்டும் மிருகத்தை தான் குறிக்கிறது ,எது
அவருக்கு சிரிப்பை /கோபத்தை
தருகிறது என்றால் அந்த மிருகத்தின் செயல்
மனதில் படமாக தெரிவது தான் மனதில் உள்ள
உணர்சிகளை துண்டுகிறது என்பது ஒரு
பொருள் ...
மற்ற ஒன்று சப்தம் நீங்கள் நாயே என்று
சத்தமாக தான் சொல்லமுடியும் ஆனால் பசு
என்று கத்த முடியாது இப்படி சொல்லும்
பொழுது சாந்தமாக தான் ஓசை வரும் இதை
அனுபவத்தில் உணரலாம் ...
இது போல
ஒரு நாய் குட்டிக்கு உணவு அளித்து அது
உணவு உண்ணும் பொழுது அதன் பெயரை
சொல்லி அழைத்தால் அந்த சப்தத்தை அதன்
மனம் பதித்து கொள்ளும் ,
பிறகு எப்பொழுது அந்த சப்தம் கேட்டாலும்
(பெயர் ) தனக்கு உணவு கிடைக்க போகிறது
என்று அது நம்மை கவனிக்கும் இப்படி தான்
ஓசைக்கு மனம் விரிவடையும் சுருங்கும் ...
இங்கே கவனிக்க வேண்டியது ஓசை நம்
மனதை அடைந்து நம்மில் உள்ள நரம்பு
மண்டலத்தை அடைந்து நல்ல அல்லது தீய
எண்ணத்தை உண்டாக்கும் என்று புரிந்து
கொள்ள வேண்டும் ...
இதை உணர்ந்த நம் இன சித்தர்கள் ,மகான்கள்
,யோகிகள் ,ஞானிகள் நமக்கு நல்ல சிந்தனை
வளர மந்திரம் ,நாமம் என்ற சொற்களை
வகுத்து
தந்தார்கள் ...
இப்படி தான் மந்திரம் மனதில்
செயல்பாடுகளை தூண்ட வல்லது என்று
முதலில் புரிந்து கொள்ள வேண்டும் ...
மந்திரத்தை பற்றி அடுத்த பார்வை ....
மந்திரம் என்பது நினைபவனை காப்பது என்று
பொருள் .
மந்திரத்தை வசமாக்கினர் பலர் ,மந்திரம் பலரை
வசமாக்கியது
பலர் மந்திரத்தை துரத்தினர் மந்திரம் பலரை
துரத்தியது
மந்திரத்தை அறிந்தவர் சிலர் ,அழிந்தவர் சிலர் .
மேலும் மந்திரத்தை பற்றி சப்த கோடி மஹா
மந்திர நூலில் (வட மொழி)இருந்து சில
தகவல்கள் ...
1 எழுத்து--உடையது ----பிண்டம்
2-எழுத்து-உடையது--கர்த்தரி
3-எழுத்து--9-உடையது-பீசம்
10-எழுத்து-20 --உடையது--மந்திரம்
20-எழுத்து-மேல்--உடையது மாலா மந்திரம்
எனப்படும் என்றும் சொல்ல படுகிறது ...
மேலும் மந்திர தொகுப்பு என்ற நூலில் 68
வகையாக மந்திரம்களை பிரித்து உள்ளார்கள் .
இதனுடன் சைவ புஷன மந்திரம்கள்
1.சிருஷ்டி வடிவ சிவமந்திரம்கள்.
2.திதி வடிவ சதாசிவ மந்திரம்கள்
3.சங்கரவடிவ மகேஷ்வர மந்திரம்கள்
4.பிரணவ மந்திரம்கள்
5.பஞ்சாக்ர மந்திரம்கள்
6.தேவி முல மந்திரம்கள்
7.அஸ்திர மந்திரம்கள்
8.பஞ்ச பிரம மந்திரம்கள்
9.தேவாதி மந்திரம்கள்
10.மகாசக்தி மந்திரம்கள்
11.சித்த மந்திரம்கள்
12.கிரியா மந்திரம்கள் ..
இப்படி சித்தர்களின் மந்திர குறிப்பு நூல்கள்
சொல்கிறது ...
ஓசை தான் மந்திரம் ,சில ஓசைகள்
நன்மைகளும் சில ஓசைகள் தீமைகளும்
செய்யும் என்று கடந்த பதிவில் விளக்கினேன் ,
ஒரு மீன் நீரை விட்டு வெளியே வந்ததும்
எப்படி இறக்கிறதோ அப்படி தான் நாமும்
காற்றால் நிரப்பப்பட்ட பந்தில் வாழ்கிறோம்
காற்றை விட்டு வெளியே வந்தால்
இறக்கிறோம் என்பதனை நாம் அனைவரும்
அறிவோம்..
இந்த உலகம் சப்த அலைகளால் நிரம்பியது
என்று புரிந்து கொள்ள வேண்டும் ,
சப்த அலைகள் மனிதனை ஆட்கொண்டு நல்
வழிபடுத்த சித்தர்களும் ரிஷிகளும் மந்திரம்
என்ற மொழியை இறை சிந்தனையோடு நமக்கு
சொல்லி கொடுத்து உள்ளார்கள் என்று நாம்
புரிந்து கொள்ளல் வேண்டும் .
உலகில் உள்ள சமயம்களில் சைவ சமயம்
இதில் முதல் தரமாக வருகிறது என்று
சொல்வேன் ,
ஆம் திருமறைகள் என்னும் அற்புதம்களை
நமக்கு அறிவை தெளிவு படுத்தி கொள்ளவும்
,இறைவனை தொடர்பு கொள்ள உணர்வு
திருமறைகளையும் தந்து உள்ளது .
இவைகளை நாம் உணர்ந்து படிக்க ஆரம்பித்து
விட்டால் மனிதன் மனிதன் ஈசனாக
மாறிவிடுவான் .
உணராமல் படிப்பது வீண் ,
எல்லா பக்தர்களாலும் இப்படி உணர்ந்து படிக்க
முடியாது ,காலமும் கோள்களும் ,கர்மம்களும்
வழிவிடாது ,
இவர்களுக்காக
ஆண்ட பிண்ட சராசரத்தின் அன்னை சக்தி
பக்தர்கள் மேல் பரிவு பட்டு சிவபெருமானிடம்
வலது காதால் கேற்று பெற்ற ரகசியம் தான்
பஞ்சாட்சர மந்திரம் என்னும் 5 எழுத்து.
இந்த தகவலை பற்றி மாயவரத்தில் உள்ள ஒரு
கோவிலில் நாம் காணமுடியும் .
இப்படி அம்பாள் சிவ பெருமானிடம் வலது
காதில் மந்திரத்தை கேட்டபடி
இருப்பது போல் அதாவது அம்பாள் தெற்கு
பார்த்து இருப்பது போல கோவில்களை
வடிவமைத்தார்கள் .
(சில கோவில்கள் விதி
விளக்காக மாறும் ஏன் என்று அதை முடிவில்
புரிந்து கொள்ளலாம் )
அம்பாளுக்கு பிறகு
அம்பாளின் முழு அம்சத்தையும் அதாவது
அகத்தியும் என்ற நிலையை
அடைந்த ஒரே ஒரு நபரான அகத்தியர்
பெருமான் தான் பஞ்சாட்சர மந்திரத்தை
பெருமானிடம் கேட்டு அறிந்தவர் .
ஆதிசித்தர் என்றும் சித்தர்களின் குரு என்ற சிவ
பெருமான் பஞ்சாட்சர
மந்திரங்களையும் கோபீசம் என்னும்
மகத்துவம் பொருந்திய அட்சரம்களையும்
லக்கங்களையும் கடைபிடிக்க வேண்டிய
முறைகளை
மகிமைகளை உபதேசித்தவர் .
அவர் விதித்த நிபந்தனை காமத்தால் அடங்காத
மனதை உடையவர் ,கோபகாரர்கள் ஏமாற்றும்
சீடர்கள் போன்றவர்களுக்கு உபதேசிக்க
கூடாது என்றார் .
இதை பற்றி சிவ புராணத்தில் காணலாம் .
பொதிகை மலையில் இருந்து மாமுனிவர்
அகத்தியர் குரு உபதேச மொழியாக
மந்திரத்தை பெற்று மந்திரகாவியும் என்று
எழுதி மக்களுக்கு பயன்பட
வேண்டும் முயற்சி செய்தபொழுது மற்ற
சித்தர்களும் ரிஷிகளும்
தேவ ரகசியம் என்று அதை மறைத்து
விட்டார்கள் என்று சொல்ல படுகிறது .
பிறகு அகத்தியர் இறைவனை பணிந்து
உலகமக்களின் நன்மைகே எழுதியதாக
விளக்கம் அளிக்க இறையனார் சாபம்
போக்கினார் என்று நூல்கள் சொல்கிறது .
திருமறைகளை பாடி வந்த நாயன்மார்கள் தான்
முதன் முதலில் பஞ்சாட்சர மந்திரத்தை எல்லா
பக்தர்களுக்கும் தெரிவிக்கும் படி
சொல்லிவந்தார்கள் .
அதில் உள்ள ரகசியம்களை அவர்கள் சொல்வது...
முதலில் அவர்கள்
ந ம சி வ ய
என்று தான் சொல்லிவந்தார்கள் ,
இப்படி சொல்வதினால் இகலோக வாழ்க்கை
மேன்மையாகும்,
ஆனால் மோட்சம் கிடைக்காது என்று சில
காலம் கழித்து
சி வ ய ந ம
என்று மாற்றி சொல்லி இறைவனை அடைய
இது தான் சரி என்று முடிவுசெய்தார்கள்
அதன்படி
சி- சிவம்
வ- திருவருள்
ய-ஆன்மா
ந-திரோதமலம்
ம-ஆணவமலம்.
திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும்
பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை
பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு
சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து
பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது
இதன் பொருள் என்று முடிவு செய்து இப்படி
சொல்ல வேண்டும் என்று கூறினார்கள்.
இவர்கள் கோட்பாட்டின் அடிப்படையில்
முதலில் கோவில்களில் நமசிவய என்றும்
சில கோவில்களில் சிவயநம என்று எழுதி
வைக்க பட்டது ,
சில பக்தர்கள் அப்படியும் சில பக்தர்கள்
இப்படியும் சொல்லி வந்தார்கள் .
உண்மையில் இதன் அர்த்தம் சூக்கும
பஞ்சாட்சரம் ,ஸ்துல பஞ்சாட்சரம் என்று
பிரித்து பார்க்க வேண்டும் என்று சில
மகான்கள் சொல்கிறார்கள் .
கேளப்பா சிங் நமசி வாய மென்றால்
கிளர்ந்து நின்ற தென்னமரம் வளையுமப்பா
நாளப்பா மங் மங் கென் றொருகா லோதில்
நமனுமே கிட்ட வந்து அணுகா னப்பா
வாளப்பா வங் சிவய நமவென் றாலோ
மழைதனிலே நனையாமற் செல்லலாகும்
ஆளப்பா மழைநிற்க வேண்டு மென்றால்
ஆச்சரியம் சிவாய ஓம் ஸ்ரீயும் சொல்லே.
நாம் வாழும் இந்த பூமியை ஆண்ட வடிவம்
என்றும் இந்த அண்டம் ஒரு வெற்று இடத்தில்
சுற்றி கொண்டு இருக்கிறது என்றும் நாம்
அறிவோம் .
இந்த அண்டத்துள் வாழும் நம்மை பிண்டம்
என்று சொல்கிறார்கள் மெய்ஞானிகள்
(சித்தர்கள் )
அண்டமும் பிண்டமும் ஒன்றே என்றும்
அண்டத்துக்குள் அண்டமாய்
அணுவில் நிற்பவனும் ,
அண்டவெளி பிரபஞ்சத்தில் நிறைந்து இருக்கும்
அந்த இறைவனை
அடைவது பற்றி அதாவது சிவம் என்ற அந்த
மஹா பிரம்மத்தில் கலப்பது பற்றி
கலந்தவர்கள் ,
அதனுடன் கலக்க மனித பிறப்பு எடுத்த
உயிர்களுக்கு கருணையுடன் சொன்ன ரகசியம்
தான் இந்த பஞ்சாட்சர எழுத்துக்கள் ....
சில அடிப்படை விவமரம்களை நாம் தெரிந்து
கொள்ளவேண்டும் ...
எந்த ஒரு காரியத்தில் நாம் நுழைந்தாலும் சில
விதிமுறைகள் மற்றும் கட்டுபாடுகள் உண்டு ,
அதன்படி நாம் செய்தோம் என்றால் நமக்கு
வெற்றியும் அந்த செயலின் நிறைவு
கிடைக்கும்.இது ஒரு வகை அறிவியல்
கோட்பாடு தான் ..
சிவபெருமானின் 5 முகம்கள்...
சத்தியோஜாதம்--படைத்தல் --பிரம்மா--தம்பனம் --பூமி --கேட்டல் --ந
வாமதேவம் -காத்தல்-பெருமாள் -பேதனம் -
தண்ணீர் -தொடு உணர்வு -ம
அகோரம் -அளித்தால் (கொடுத்தல் )-ருத்ரன் -.மோகனம் - தீ- பார்த்தல் - சி
தத்புருஷம் -சாந்தம் -மகேஸ்வரன் -மாரணம் - காற்று -சுவை அறிதல்-வ
ஈசான்யும்-அனுக்ரஹம்-சதாசிவம்-ஆ
கர்ஷணம்-ஆகாயம்-சுவாசித்தல்-ய
ந -காது
ம -தோல் (தீண்டுதல் உணர்வு )
சி -கண்
வ -நாக்கு
ய - மூக்கு
இவைகள் சித்தர்கள் வகுத்த யோகா நூல்களில்
சொல்லபடுபவை ..
இப்படி 5 செயல்களை உள்ளே அடக்கியது
அல்லது 5 செயல்களை கொண்ட
சிவபெருமானின் அட்சரம் என்று சொல்லலாம் .
இப்படி 5 பூதம் ,
5 புலன்கள் ,
5 மூர்த்திகள்
5 தொழில்கள்
5 உணர்வுகள்
5 மூர்த்திகள் ....கொண்ட கலவை
என்று புரிந்து கொள்ளல் வேண்டும் .
மற்ற ஒரு பார்வை
5 மூர்த்திகளையும் வணங்கும் படி 5
எழுத்துகள்
இதில் சிவ பெருமானின் 5 தொழில்களை பற்றி
நாம் அறிந்து கொள்ள முடியும்
ஆனால் 6வது ஒரு தொழில் உண்டு அது
அருளல் என்று செயலாகும் .
இதை அறிந்து கொள்ள அட்சரத்துக்குள் உள்ளே
கவனிக்க வேண்டும்
அது
1.ந ம சி வ ய...
2.ந ம வ சி ய
3. வ சி ய ந ம
4.சி வ ய ந ம
5.ம ய ந வ சி
6.சி வ ய வ சி ...
இங்கே எல்லா அட்சரமும் சிவ பதியட்சரத்தில்
ஒடுங்க சீவன் முக்தி வரும் என்பது சித்தர்
வாக்கு ...
இதன் விவரத்தை நான் இங்கே பதியவில்லை ,
(யோக நூல்கள் உள்ள விவரம் விளக்கம் தர பல.தகவல் பதிக்க வேண்டிவரும்)
சிவ வாக்கியர் padalakali கவனமுடன்
கவனித்து கேட்டோம் என்றால்
இவைகள் தெளிவாக புரியும் ..
"சி வ ய ந ம" என்று சொல்பவருக்கு ஆபத்து
ஒரு நாளும் இல்லையே என்று
சொல்லபடுவதை காரண அட்சரம் என்றும்
" சி வ ய வ சி" என்பதனை மஹா காரண
அட்சரம் என்றும் இரு கொள்ளி என்று
சொல்கிறார்கள் சித்தர்கள் ...
நாம் எப்படி சொல்ல வேண்டும் ?
வாசி என்று சொல்லை திருப்பினால் சி வா..
வாசி என்றால் நம்மில் உள்ள மூச்சு காற்று
நம்முடைய உடம்பில் ஓடும் காற்றை மாற்றும்
சக்தி படைத்தது சிவா
என்ற சொல் சிவா சிவ இரண்டும் ஒன்று தான்
குழம்ப வேண்டாம் .
இதை பற்றி அறிந்து கொள்ள நீங்கள் திருவாசி
(திருச்சி ) என்று சிவ பெருமான் கோவிலுக்கு
சென்று வந்தால் புரிந்து கொள்ளலாம் .
"ஓம் ந ம சி வ ய "என்று சொல்வதின் முலம்
உலகத்தில் உள்ள எல்லா இன்பம்களையும்
பெறமுடியும் ....
"ஓம் சி வ ய ந ம" என்று சொல்வதின் முலம்
கோள்களின் சாபம் விலகும்
அம்மையப்பனின் தரிசனம் கிடைக்கும் ..
மற்றும் பஞ்சாட்சர மந்திரத்தை
மாற்றி ,திருப்பி
ஓம் ந ம சி வ ய-- தம்பனம்
ஓம் ம சி வ ய ந --பேதனம்
ஓம் சி வ ய ந ம--மோகனம்
ஓம் வ ந ம சி வ--மாரணம்
ஓம் ய ந ம ச வ--ஆகர்ஷணம்
போன்ற பலன்கள் அந்த மூர்த்திகளால்
தரப்படும் ,
நமக்கு வாழ்கையில் நற் கதி அடைய
அம்பாளின் முலம் அப்பனை அடைந்தால்
மட்டுமே சாத்தியம் ,
இது சத்தியம் ,சத்தியம் ,சத்தியம்
இதன் முறையாக பெருமானை அடைய நாம்
சொல்ல வேண்டிய அட்சரம்
"சி வ ய ந ம ஓம் "
"சி வ ய சி வ ஓம்"
"சி வ ய வசி ஓம் "
" சிவ சிவ சிவ ஓம் "....
என்று சுக ஆசனம்
கொண்டு ஜெபிக்க சிவ கதி கிடைக்கும் ..
இது.சித்தர்கள் வாக்கு
என் அனுபவம் ஒரு ஒரு லிங்கோத்பவ
காலத்திலும் சுக ஆசனத்தோடு வடக்கை
நோக்கி நான் விளையாட்டாக சொல்லியது
...அதன் பின் நடந்த
அற்புதம்கள் ....
நீங்களும் அடைய வேண்டும்
என்று உங்களை வாழ்த்தி
பதிவை நிறைவு செய்கிறேன் ....


N2R NandhakumaR
Channel N2R

தைப்பூச வரலாறு

🙏தைப்பூச திருநாள் இன்று🙏 : அப்படி என்ன சிறப்பு இருக்கு?

அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுளான முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.

தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். கொடிய அரக்கன் தாரகனை அழித்து உலக உயிரினங்களை துன்பத்தில் இருந்து மீட்ட தினம் தை மாதப் பூச நட்சத்திர தினமாகும்.

தமிழகத்தில் இன்று தைப்பூச விழா உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. பழனி முருகன் கோவில் உட்பட பல முருகன் கோவில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மேலும் முருகன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது. பால் குடம், காவடி, பாதயாத்திரை என பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு சென்று தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

தைப்பூச வரலாறு :

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. அதனால் பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.

எங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே எங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்தி மிக்க ஒருவரை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.

கருணைக் கடலான சிவபெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன் என்னும் முருகன் ஆவார்.

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான ஆறு தீப்பொறிகள் ஆறு அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால் அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தார்.

அன்னை பார்வதிதேவி ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.

அம்பாள் அளித்த வேல்-ஐ ஆயுதமாகக் கொண்டே முருகன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அசுரர்களை திருச்செந்தூரில் வதம் செய்து தேவர்களை பாதுகாத்தார்.

அதனால் முருகரைப் போலவே அவரது வேலுக்கும் தனி சக்தியுண்டு. அசுரர்களை வதம் செய்ய உதவிய முருகப்பெருமானின் வேல்-ஐ பூஜிப்பதாலேயே தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

தைப்பூசத்தில் முருகனுக்கு பலவித பூஜைகள், நிவேதனங்கள் என செய்து ஆராதிப்பதுடன் கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை பாராயணம் செய்யலாம். தைப்பூச தினத்தில் முருகன் அருள்பாலிக்கும் தலத்திற்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.

சிறப்புகள் :

தைப்பூசத்திருநாளில் முருகக் கடவுளிற்கு படைக்கும் காணிக்கைகளை காவடிகளாக எடுத்துக் கொண்டு நடைபயணமாக அவர் சன்னதி வந்து காணிக்கைகளை அவருக்கு செலுத்தி பூஜை செய்வதை தான் தைப்பூச திருநாளின் சிறப்பாகும்.

வாழையோ, நெல்லோ, பழங்களோ தமது இடத்தில் எது விளைந்தாலும் தான் உண்பதற்கு முன் அதை இறைவனிற்கு அர்ப்பணித்துப் படைப்பதற்கும், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை காணிக்கையாக அர்ப்பணிப்பதற்கும், பயணிக்கும் விரத விழாவே தைப்பூச திருவிழாவாகும்.

முருகனின் அறுபடை வீடுகளில் பழனிக்கே மக்கள் முக்கியத்துவம் கொடுத்து தைப்பூச திருவிழாவிற்கு நடைபயணமாக செல்வது தொன்று தொட்ட வழக்கமாக இருக்கிறது.

தைப்பூசத்தில் கோவில்களில் தெப்ப உற்சவம் நடைபெறும். கோவிலில் இருக்கும் கடவுளை தேரில் வைத்து ஊர்வலமாக தெரு முழுவதும் அழைத்து வருவர். இந்த நன்னாள் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.

மிக சிறப்பு வாய்ந்த இந்நாளில் எல்லாம் வல்ல முருகபெருமானிடம் நம்முடைய அனைத்து துயரங்களும் நீங்க பிரார்த்திப்போம்...!

N2R NandhakumaR
Channel N2R

Sunday 13 January 2019

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய விசயம்


சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்
பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.
எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.
எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.
இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.
லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.
‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.

N2R NandhakumaR
Channel N2R

Thursday 10 January 2019

கட உபநிடதம் (யஜுர் வேதம்)


1.2.19இந்த சைதன்ய ஸ்வரூபமான
ஆத்மா பிறப்பதில்லை,இறப்பதில்லை,எதனிடமிருந்தும்
இது தோன்றவில்லை,இதனிடமிருந்தும் எதுவும்
தோன்றவில்லை.இது பிறப்பற்றது,என்றும்
உள்ளது,தேய்வற்றது,வளர்ச்சியற்றது,உடல்
கொல்ப்படும் பொதும்
இந்த
ஆத்மா கொல்ப்படுவதில்லை.
1.2.20.இந்த ஆத்மா சிறியதைக்காட்டிலும்
சிறியது.பெரியதைக்காட்டிலும்
பெரியது.உயிர்களுடைய இதயக்குகையில்
உறைகிறது.ஆசையற்றவன்.இந்திரியத்தின்
அமைதியினால் ஆத்மாவினுடைய
மகிமையை அறிகிறான்.சோகத்திலிருந்து விடுபடுகிறான்.
1.2.22. உடல்களுக்குள் உடலற்றதாகவும்
நிலையானவற்றுள்
நிலையானதும்மான,பெரிய.அனைத்தையும்
வியாபிக்கின்ற,ஆத்மாவை அறிந்து தீரன்
துன்பப்படுவதில்லை.
1.2.24.தவறான நடத்தையுடையவன்,இந்திரய
ஒழுக்கமற்றவன்,மனஒருமைப்பாடு அற்றவன்,மன
அமைதியற்றவன் இவர்களால்
ஆத்மாவை அடைய முடியாது.
1.3.7.யார் அறிவற்றவனாகவும்
நெறிப்படுத்தப்படாத
மனதையுடையவர்களாகவும் என்றும்
துாய்மையற்றவர்களாகவும்
உள்ளார்களோ அவர்கள் அந்த மேலான
நிலையை அடைய மாட்டார்கள்.மீண்டும்
மீண்டும் பிறக்கும்
சம்ஸாரத்தை அடைகிறான்.
1.3.8.யார் அறிவுடையவனாகவும்
நெறிப்படுத்தப்படட
மனதையுடையவனாகவும் என்றும்
துாய்மையுடையவனாகவும்
உள்ளானோ,அவன்,எதை அடைவதால்
மீண்டும் பிறப்பதில்லையோ,அந்த மேலான
நிலையை அடைகிறான்.
1.3.12.எல்லா உயிரினங்களுக்குள்ளும்
மறைந்திருக்கின்ற இந்த
ஆத்மா தெளிவாக
விளங்குவதில்லை.கூர்மையான,நுட்பமான
புத்தியின் மூலம் நுண்ணிய
பார்வை உடையவர்களால் இந்த
அத்மா அறியப்படுகிறது.
1.3.13.ஞானி வாக்கை மனத்தில் ஒடுக்க
வேண்டும்.மனத்தை புத்தியில்
ஒடுக்கவேண்டும்.புத்தியை ஸமஷ்டி புத்தியில்
ஒடுக்கவேண்டும்.ஸமஷ்டி புத்தியை சாந்தமான
ஆத்மாவில் ஒடுக்கவேண்டும்.
1.3.14.எமுந்திரு,விழித்துக்கொள்,சான்றோர்களை அடைந்து ஆத்மாவை அறியுங்கள்.
2.1.1.ஈஸ்வரன்
இந்திரியங்களை வெளிநோக்கு உடையதாக
படைத்துள்ளான்.ஆகவே ஒருவன்
வெளி விஷயத்தையே பார்க்கிறான்.தன்னுள்
உள்ள
ஆத்மாவைப்பார்ப்பதில்லை.யாரோ ஒரு தீரன்
மரணமற்ற
நிலையை விரும்பி,வெளியிலிருந்து விலகிய
பார்வையை உடையவனாக தன்னுள் உள்ள
ஆத்மாவைப் பார்க்கிறான்.
2.1.15.எவ்விதம் துாய்மையான நீரில்
துாய்மையான நீர் விடப்படும்
போது துாய்மையாகவே இருக்கிதோ,அதுபோல்
ஞானத்தை உடைய
முனிவருக்கு ஆத்மாவானது பிரம்மமாக
இருக்கிறது.
2.2.7.அவரவர் கர்மத்திற்கேற்பவும்
அவரவர்களுடைய உபாஸனைக்கேற்பவும் சில
ஜீவர்கள் மனித அல்லது மிருக
உடலை எடுப்பதற்கான
கர்பத்தை அடைகிறார்கள்.வேறுசில ஜீவர்கள்
மரம் முதலிய உடலை அடைகிறார்கள்.
2.2.8.இந்தஆத்மா கனவில் விதவிதமான
பொருட்களைத்தோற்றுவித்துக்கொண்டு இந்திரியங்கள்
உறங்கும்போது விழித்துக்கொண்டிருக்கிறது.அந்த
ஆத்மாவே துாய்மையானது.அது ப்ரம்மன்.அதுவே மரணமற்றத.எல்லா உலகங்களும்
அதைச்சார்ந்துள்ளது.எதுவும்
அதைக்கடந்து செல்வதில்லை.
2.2.9 எவ்விதம் உலகில் உள்ள
ஒரே நெருப்பானது ஒவ்வொரு பொருளிலும்
அப்பொருளின்
உருவமாகத்தோன்றுகிறதோ,அவ்விதம்
எல்லா ஜீவர்களுக்குள் இருக்கும்
ஒரே ஆத்மா ஒவ்வொரு உடலிலும்
அந்த உடலின் வடிவில் தோன்றுகிறது.
வெளியேயும் உள்ளது.
2.2.10 எவ்விதம் உலகில் உள்ள
ஒரே வாயுவானது ஒவ்வொரு பொருளிலும்
அப்பொருளின்
உருவமாகத்தோன்றுகிறதோ,அவ்விதம்
எல்லா ஜீவர்களுக்குள் இருக்கும்
ஒரே ஆத்மா ஒவ்வொரு உடலிலும்
அந்த உடலின் வடிவில் தோன்றுகிறது.
வெளியேயும் உள்ளது.
2.2.12. எந்த ஒன்று அனைத்தையும்
தன்வசத்தில் வைத்துள்ளதாகவும்
எல்லா ஜீவர்களுக்குள்ளும் ஆத்மாவாக
இருந்து கொண்டும் தன்னடைய
ஒரு ரூபத்தை பலவாக
வெளிப்படுத்துகிறதோ,அந்த
அத்மாவை உடலில் வெளிப்படுவதாக
எந்த தீரர்கள்
அறிகிறார்களோ,அவர்களுக்கு நிலையான
சுகம் கிடக்கிறது.மற்றவர்களுக்கு இல்லை.
2.3.4. உடலின் வீழ்ச்சிக்கு முன்
இங்கேயே ப்ரம்மத்தை அறிந்தவன்
விடுதலையடைகிறான்.அறியவில்லை என்றால்
உயிரினங்களுடைய உலகத்தில் மீண்டும் உடல்
எடுப்பதற்கு முற்படுகிறான்.
2.2.16. இதயத்துடன் ஸம்மந்தப்பட்ட
நுாற்றியோரு நாடிகள் உள்ளன.இந்த
நாடிகளில் ஒன்று தலை உச்சியைப்
பிளந்து வெளியேறுகிறது.அன் வழியாக
மேலே செல்பவன் ப்ரம்ம லோகத்தில்
அதிககால
வாழ்க்கையை அடைகிறான்.வேறு திசையில்
செல்கின்ற மற்ற நாடிகள்
மறுபிறப்புக்கு காரணமாகின்றன.

N2R NandhakumaR
Channel N2R

Tuesday 8 January 2019

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்

சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..
தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்
இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.

சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1

இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று  சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.

என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....

ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!

பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...

அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!

சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?

சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)

அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)

மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)

மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)

இந்த வானியல் மாற்றங்களையும்,  அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும்  நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

#சித்திரை  (vernal equinox) - புத்தாண்டு.
#ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு.
#ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி.
#தை 1(winter solstice) - பொங்கல்.

இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...

#நமது #முன்னோர்கள்  "#தன்னிகரற்ற" #மாபெரும் #அறிவாளிகள் . #மிகவும் #மகத்தானவர்கள்.

N2R NandhakumaR
Channel N2R

Friday 4 January 2019

இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள்

கோயில்களுக்கு செல்ல
குழந்தைகளை கண்டிப்பாக
பழக்குங்கள்..
1. பூமியின் காந்த அலைகள் அதிகம்
வீசப்படும் இடங்களில்தான்
கோயில்கள் இருக்கும்.
2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும்
அதிகம் கொண்டிருக்கும், இது
நார்த் போல் சவுத் போல் திரஸ்ட்
வகை ஆகும்.
3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம்
என்று அழைக்கப்படும் மூலவர்
சிலைதான் இந்த மையப்பகுதியில்
வீற்றீருக்கும்.
4. இந்த இடம்தான் அந்த சுற்று
வட்டாரத்திலேயே காந்த மற்றும்
பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம்
காணப்படும் இடம் ஆகும்.
5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே
சில செப்பு தகடுகள்
பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே
இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி
பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
6. அதுபோக எல்லா மூலஸ்தானமும்
மூன்று சைடு மூடி வாசல் மட்டும்
தான் திறந்து இருக்கும் அளவுக்கு
கதவுகள் இருக்கும். இது அந்த
எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு
வழியாக அதுவும் வாசலில் இடது
மற்றும் வலது புறத்தில் இருந்து
இறைவனை வணங்கும் ஆட்களுக்கு
இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது
ஆகும் ..
7. கோயிலின் பிரகாரத்தை
இடமிருந்து வலமாய் சுற்றி வர
காரணம் எனர்ஜியின் சுற்று பாதை
இது தான் அதனால் தான்
மூலஸ்தானத்தை சுற்றும் போது
அப்படியே எனர்ஜி சுற்றுபாதை
கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த
எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில்
வந்து சேரும்.
8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும்,
மனதிற்கும், மூளைக்கும்
தேவையான ஒரு பாஸிட்டிவ்
காஸ்மிக் எனர்ஜி.
9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு
கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து
கொண்டிருக்கும் அது போக அந்த
விக்கிரகத்திற்க்கு பின் ஒரு
விளக்கு இருக்கும்.அதை சுற்றி
கண்ணாடி ஒன்று இருக்கும்.
10. அது அந்த எனர்ஜியை அப்படி
பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல்
செயல்தான்.
11. அது போக மந்திரம் சொல்லும்
போதும், மணியடிக்கும் போதும்
அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த
எனர்ஜியை மென்மேலும் கூட்டி
ஒரு கலவையாய் கொண்டு வரும்
ஒரு அபரிதமான எனர்ஜி
ஃபேக்டரிதான் மூலஸ்தானம்
என்பது..
12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின்
கெமிக்கல்), துளசி (புனித
பேஸில்), குங்குமப்பூ
(சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை
சேர்த்து அங்கு காப்பர் செம்பில்
வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம்
ஒரு ஆன்டிபயாட்டிக்.
13. இதை மூன்று தடவை
கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள்
தலையில் தெளித்து இந்த உடம்பை
புண்ணியமாக்க, மீதி இரண்டு
சொட்டு உங்கள் உடம்பை
பரிசுத்தமாக்க.
14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல்
சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த
படுத்தும் ஒரு அபரிதமான கலவை.
கோயிலுக்கு முன்பெல்லாம்
தினமும் சென்று வந்த
மானிடர்களுக்கு எந்த வித நோயும்
அண்டியது இல்லை என்பதற்கு
இதுதான் காரணம்.
15. கோயிலுக்கு மேல் சட்டை
அணிந்து வர வேண்டாம் என சில
கோயில்களில் கூறுவதற்கும் இது
தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி,
அப்படியே மார்பு கூட்டின் வழியே
புகுந்து உங்கள் உடம்பில் சேரும்
என்பது ஐதீகம்.
16. பெண்களுக்கு தாலி அணியும்
காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை
போன்று இதய நோய் வராமல்
இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல்
இதயத்தின் வெளியே நல்ல
பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி
உள்ளே உள்ள கொழுப்பை கூட
கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு
கூடுதல் தகவல்.
17. பல மைல் தூரத்தில் இருந்து
பயணம் செய்திருப்பினும்,
மூலவரின் தரிசனம் கிட்டும்போது,
அந்த சில நொடிகளில் அந்த உடம்பில்
ஏற்படும் ஒரு மென்மையான
சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும்
ஏற்படுகிறது என்றால் அதற்க்கு
காரணம், கோயிலின் மூலஸ்தானம்
மற்றும் அதில் உள்ள எனர்ஜி.
18. கோயிலின் கொடி மரத்திற்க்கும்
மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி
வயர்லெஸ் தொடர்பு உண்டு.
கோயில் மேல் இருக்கும் கலசம் சில
சமயம் இரிடியமாக மாற இது தான்
காரணம். கீழ் இருந்து கிளம்பும்
மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும்
இடியின் தாக்கம் தான் ஒரு
சாதாரண கலசத்தையும்
இரிடியமாக மாற்றும் திறன்
படைத்தது.
19. அது போக பெரும்பாலும்
கோயில் இடி தாக்கும் அபாயம்
இல்லாமல் போன காரணம் கோயில்
கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள்
ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..
20. நல்ல மானிடர் இருவேளை
கோயிலுக்கு சென்று வந்தால்
மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின்
மனதும் மூளையும் சுத்தமாகும்.
இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த
கோயில்களுக்கு குடும்பத்துடன்
சென்று வர பழகுவோம்
..குழந்தைகளையும் பழக்குவோம்
...அது அறிவியல் ஆகட்டும்
..எதுவாகட்டும் ....இறை சக்தி நம்மை
காக்கட்டும் ... நன்றி ....

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...