Monday 1 August 2016

எண் ஏழு (Number 7) பெருமை



உங்களிடம் பகிர்த்துக் கொள்வதில் மகிழ்ச்சி:

ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண்.

ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும்.

ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும்.

காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்காலமக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.

ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது.

எண் ஏழின் சிறப்புக்கள்:

1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007

2. எழு குன்றுகளின் நகரம் ரோம்

3. வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்

4. மொத்தம் ஏழு பிறவி

5. ஏழு சொர்க்கம்(குரான்)

6. ஏழு கடல்கள்
'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.

7. வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)

8. ஏழு வானங்கள். (Qur'an)

9. ஏழு முனிவர்கள் (Rishi)

10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி)

11. ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)

12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின்
எண்ணிக்கை ஏழு

13. ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.

14. கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)

15. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.

16. மேலுலகம் ஏழு

17. கீழுலகம் ஏழு
நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்
பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே - திருமூலர் பாடல்

18. திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது

19. மொத்தம் ஏழு தாதுக்கள்

20. ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா

21. ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.

22. ஏழு புண்ணிய நதிகள்

23. இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு

24. அகப்பொருள் திணைகள் ஏழு

25. புறப்பொருள் திணைகள் ஏழு

26. சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு

27. கடை ஏழு வள்ளல்கள்

28. சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)

29. "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்

30. ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் - ஜப்பான்

31. ஏழு மலையான் - திருப்பதி, ஆந்திரா

32. மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு

33. உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு.

34. பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு (பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,
பேரிளம் பெண்)


Ruler can do anything, so Born to rule the Galaxy

மகாபாரதம் சுருக்கம்


  மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். குரு வம்சத்தின் பங்காளிகளுக்கு இடையே நிலத்துக்காக நடைபெற்ற மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். இதைக் களமாகக் கொண்டு ஆசிரியரான வியாசர் மாபெரும் காப்பியத்தைப் படைத்துள்ளார். மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சு+தாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்.

ஆடி 18 அன்று முடிவுற்ற போர் :

✴ சந்தனு மஹhராஜாவுக்கு முதல் மனைவி கங்கை மூலம் தேவவிரதன் என்றொரு மகன் பிறக்கிறான். அதன் பின் மனைவி கங்கை, மஹhராசா சந்தனுவை விட்டுப் பிரிந்து சென்றுவிடுகிறார். மஹhராசா சந்தனு பின்னர், சத்யவதி என்ற பெண்மீது ஆவல்கொண்டு அவளை மணக்க விரும்புகிறார்.

✴ ஆனால் தன் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகள் தான் நாட்டை ஆள்வார்கள் என்று அரசர் வாக்குறுதி அளித்தால் தான் பெண்ணை மணமுடித்துத் தரமுடியும் என்று சத்யவதியின் தந்தை சொல்கிறார். மூத்த பையன் தேவவிரதன் இருக்கும்போது இவ்வாறு செய்வது சரியல்ல என்பதால் சந்தனு மறுத்துவிடுகிறார்.

✴ இந்த உண்மை தெரியவந்ததும், தேவவிரதன் தான் இனி அரசனாகப் போவதில்லை என்றும், திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்றும் சு+ளுரைக்கிறார். வானில் இருந்து தேவர்கள் அவர்மீது பு+மாரி பொழிகிறார்கள். அவர் செயற்கரிய சபதம் செய்ததனால் அன்றிலிருந்து அவர் பீஷ்மர் என்று அழைக்கப்படுகிறார்.

✴ சந்தனு சத்யவதியை மணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு சித்ராங்கதன், விசித்ரவீர்யன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. மஹhராசா சந்தனுவுக்குப் பின்பு சித்ராங்கதன் சில காலம் அரசாண்டு, மணம் செய்துகொள்ளாமலேயே இறந்துபோகிறான்.

✴ விசித்ரவீர்யன் அடுத்து அரசனாகிறான். அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று அரச குமாரிகளுக்குச் சுயம்வரம் நடக்கும் இடத்திலிருந்து அவர்களை பீஷ்மர் தூக்கிக்கொண்டு வந்து விசித்ரவீர்யனுக்கு மணம் முடிக்க முற்படுகிறார்.

✴ அம்பா விசித்ரவீர்யனை மணக்க விரும்பாமல் நெருப்பில் மூழ்கி இறந்துபோகிறாள். அம்பிகாவையும், அம்பாலிகாவையும் விசித்ரவீர்யன் மணந்துகொண்டாலும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரேயே விசித்ரவீர்யன் இறந்துபோகிறான்.

✴ இப்போது நாட்டை ஆள யாரும் இல்லை. பீஷ்மர் தான் செய்துகொடுத்த சத்தியத்தின் காரணமாக நாட்டை ஆள மறுக்கிறார். சத்யவதி வியாசரை வேண்டிக்கொள்ள, அவரது அருளால், ராணிகள் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. இவர்கள்தான் திருதராஷ்டிரனும், பாண்டுவும்.

✴ கூடவே அருகில் இருக்கும் வேலைக்காரிக்கும் விதுரன் என்ற குழந்தை பிறக்கிறது. திருதராஷ்டிரனுக்குக் கண் பார்வை கிடையாது. பாண்டுவுக்கு தோலில் நோய். திருதராஷ்டிரனுக்கு காந்தாரியையும்; பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என்ற இருவரையும் மணம் செய்துவைக்கிறார் பீஷ்மர்.

✴ குந்திக்கு ஒரு முனிவர் சில மந்திரங்களைக் கற்றுத் தந்திருக்கிறார். அந்த மந்திரங்களை உச்சரித்தால் தேவர்கள் அருளால் அவளுக்குக் குழந்தை பிறக்கும். ஆனால் தனக்குத் திருமணம் ஆகும் முன்னரே அவள் இந்த மந்திரங்களை முயற்சித்துப் பார்க்கிறாள்.

✴ அப்போது ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. பயந்துபோன குந்தி அந்தக் குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்டுவிடுகிறாள். அந்தக் குழந்தையை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தைதான் கர்ணன்.

Ruler can do anything, so Born to rule the Galaxy

Sunday 31 July 2016

நல்ல காரியங்களை அமாவாசை தினத்தில் துவங்கலாமா?




🌑 புதிய காரியங்களை வளர்பிறையின் துவக்க நாளிலிருந்து ஆரம்பிப்பது நலமென்று நிறையப்பேர் நம்புகிறார்கள். அமாவாசைக்கு பிறகு வரும் நாட்களை வளர்பிறை நாட்கள் என்று அழைக்கிறோம். எனவே புதிய காரியங்களை வளர்பிறையின் துவக்க நாளிலிருந்து ஆரம்பிப்பது நலமென்று நம்புகிறார்கள்.

🌑 சிலர் அமாவாசை என்பது சந்திரன் இல்லாத நாள் அதாவது பு+மிக்கு சந்திரன் தெரியாது அன்று இருட்டாக இருக்கும். எனவே இருட்டு பொழுதில் நற்காரியங்களை செய்ய கூடாது என்றும் சொல்கிறார்கள். இதில் எது சரி எது தவறு என்று முடிவெடுப்பது மகா சிரமமான காரியம். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்று பொதுவாக சொல்லிவிட்டு போகலாம். ஆனால் அது சரியல்ல.

🌑 இதை ஜோதிட சாஸ்திரம் மற்றும் வானியல் சாஸ்திரத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும். அமாவாசை தினத்தில் சு+ரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அன்று இவ்விரு கிரகங்களும் ஒரே ராசியில் இருக்கும். அந்த நேரத்தில் இரண்டு கிரகங்களில் ஆகர்ஷன சக்தியும் மிக அதிகமாக இருக்கும்.

🌑 இதனால் மனித மூளையில் துரிதமான மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு நிறைய உண்டு அதாவது மனம் கொந்தளிப்பான நிலையிலேயே இருக்கும். எனவே அந்த நாட்களில் சுப காரியங்கள் செய்வது கூட தவறு அல்ல ஆனால் புதிய காரியங்களை துவங்குவது தவறு என்பதே சரியான கருத்தாகும்.

Ruler can do anything, so Born to rule the Galaxy

Sunday 24 July 2016

ருத்ராட்ச முகத்தில் உள்ள தேவதைகளால் விலகும் பாவங்களை தெரிந்து கொண்டு பயன்படுத்துவீர்


ஒரு நாள் ஜமதக்கினி மகரிஷியின் வயலில் ஒரு பசு மேய்ந்து கொண்டிருந்தது. அவர் ஒரு நெற்கதிர் எடுத்து விரட்டினார். அந்தப்பசு இறந்துவிட்டது. இதனால் பாவம் செய்து விட்டோம் என்று கருதி அவர் சுகமகரிஷியிடம் சென்று தன் துன்பத்தை கூறினார். உடனே அவர், ஜமதக்கினி நீ காசிக்கு சென்றால் ஒரு முக ருத்ராஷம் கிடைக்கும். அதை நீ அணிந்துக் கொண்டால் உன்னுடைய ‘கோ ஹத்திய தோஷம்’ நீங்கும் என்று கூறினார்.

ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு தேவதை அதிபதியாக இருப்பார்கள். அவரவர் அந்தந்த பாவங்களை அழித்து விடுவார்கள். இந்த ருத்ராஷம் குடும்பத்தில் உள்ளவர்களின் பாவத்தை அழிக்கும் என்று சொன்னாராம்.

ஒரு முகம்:

ஒரு முகம் கொண்ட ருத்திராட்சம் பிரம்ம ஹத்திய தோஷம் அழிக்கும். இது சிவனின் மற்றொரு உருவம் என்று கருதப்படுகிறது. இதை அணிந்தால் சிவனைப் பூஜை செய்த பலன் கிடைக்கும்.

இரண்டு முகம்:

இரண்டு முக ருத்ராஷம் அர்த்த நாரிஸ்வர சொரூபம். அனைத்து பாவங்களையும் அழிக்கும். இதை அணிந்தால் சிவனையும், சக்தியையும், பூஜை செய்த பலன் கிடைக்கும்.

மூன்று முகம்:

மூன்று முகம் ருத்ராஷத்திற்கு அக்னிதேவன் அதிபதி. இந்த ருத்ராஷம் ஸ்ரீ ஹத்தியா தோஷத்தை நீக்கும். (ஒரு பெண்ணை கொன்றால் வரும் பாவம்). மும்மூர்த்திகளையும் பூஜை செய்த பலன் கிடைக்கும் மூன்று முக ருத்ராஷம் மணமானப் பெண்கள் அவர்களின் தாலிக்கொடியில் அணிந்தால் பூவும், பொட்டும் நிலைத்து மகிழ்ச்சியை அளிக்கும்.

நான்கு முகம்:

நான்கு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி பிரம்மன். ஞாபசக்தியை பெருக்கும் சர்வஹத்தியா தோஷம் நீங்கும்.

ஐந்து முகம்:

ஐந்து முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி காலாக்கினி ருத்திரன். இது அனைத்து பாவங்களையும் அழிக்கும். மனதிற்கு சாந்தி தரும். இரத்த அழுத்தத்தை நீக்கும். அஜீரணத்தைப் போக்கும் மார்பு வலியை நீக்கும். தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்கள் ஒரு ருத்ராஷக்கொட்டை எடுத்து அதை பால்விட்டு இழைத்து அந்த சாந்தை எடுத்து கண்ணின் இமையின் மீது தடவினால் நல்ல உறக்கம் வரும். விஷ பூச்சிகள் தீண்டினால் உடனே ஒரு ருத்ராஷக் கொட்டை எடுத்து எலுமிச்சைப் பழச்சாரில் குழைத்து அந்த சாந்தை எடுத்து தீண்டிய இடத்தில் தடவினால் வலி குறைந்து குணமாகும். காய்ச்சிய நீர் அல்லது காய்ச்சியை பாலில் இரண்டு ருத்ராஷக் கொட்டைப் போட்டு உடன் எடுத்து விட வேண்டும். அப்படி எடுத்த நீர் அல்லது பாலை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எந்த விஷ பூச்சிகளும் அருகில் நெருங்காது. 32 கொட்டை கொண்ட மாலையை அணிந்தால் விரோதி கூட மரியாதை செலுத்துவான்.

ஆறு முகம்:

ஆறு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி கார்த்திகேயன் பனிரெண்டு ருத்ராஷ கொட்டை கையில் (மணிக்கட்டில்) அணிந்தால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஹிஸ்டீரியா போன்ற வியாதிகளை வராமல் காக்கும். மாணவர்கள் அணிந்தால் ஞாபசக்தி பெருகும் கண்திருஷ்டியைப் போக்கும்.

ஏழு முகம்:

ஏழு முகம் ருத்ராஷத்திற்கு இதற்கு அணங்கம் என்று பெயர். இதற்கு அதிபதி காமதேவன். ஜாதகம் சரி இல்லாதவர்கள் இதை அணியலாம். இதை அணிந்தால் அகால மரணம் வருவதைத் தடுக்கும்.

எட்டு முகம்:

எட்டு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி விக்னேஷ்வரன். பஞ்ச மகா பாதகத்தை அழிக்கும். மன தைரியம் உண்டாக்கும். கணேசனை பூஜை செய்த பலன் கிடைக்கும். காய்ச்சியப் பாலில் இதைப்போட்டு எடுத்துவிட்டு அந்தப் பாலை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் பக்கவாதம் மூன்று மாதங்களில் குணமாகும்.

ஒன்பது முகம்:

ஒன்பது முக ருத்ராஷத்திற்கு அதிபதி பைரவன். இதற்குள் ஒன்பது சக்தி இருக்கிறது. ஒரு கொட்டை அணிவதாக இருந்தால் வலது கையில் அணியலாம். துர்கை பூஜை செய்பவர்களும் இதை அணியலாம். மனிதன் கிரக சாந்திக்காக நவரத்தினங்களை மோதிரமாக அணிகின்றான். நவரத்தின மாலை அணிகின்றான். நவகிரக பூஜையும் செய்கிறான். இவையாவும்; ஒரு ஒன்பது முக ருத்ராஷக் கொட்டை அணிந்தால் கிடைக்கும்.
உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம்
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம்
அரசு மருத்துவமனை எதிரில்
ஆத்தூர்
சேலம் (மாவட்டம்)
M.கிருஷ்ண மோகன் 8526223399
பத்து முகம்:

பத்துமுக ருத்ராஷத்திற்கு ஜனார்த்தனம் என்று பெயர். இதற்கு அதிபதி ஸ்ரீ மகா விஷ்ணு அனைத்து கஷ்டத்தையும் அழிக்கும் சக்தி இதற்கு உண்டு. பாம்பு மற்றும் விஷபூச்சிகளில் இருந்து நம்மை காக்கும் சக்தி இதற்கு உண்டு. காய்ச்சியப் பாலில் இந்த ருத்ராஷக் கொட்டையைப் போட்டு எடுத்துவிட்டு அந்தப் பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் கக்குவான் வராமல் தடுக்கும். ஒரு முக ருத்ராஷம் எப்படி சிவசொரூபமோ, அதேபோல் தஸமுகி ருத்ராஷம் சம்பூர்ண விஷ்ணு சொரூபம். இது மிகமிக குறைவாக கிடைக்கிறது.

பதினொன்று முகம்:

பதினொன்று முக ருத்ராஷம் ஏகாதஸ ருத்ர சொரூபம். இதை அணிந்தால் அசுவமேத யாகப்பலன் கிடைக்கும். முனிவர்களின் பத்தினிகள் கூட இதை அணிந்து கொண்டார்களாம். இதைப் பெண்கள் அணிவதால் இரக்கக்குணம் உண்டாகும்.

பனிரெண்டு முகம்:

பனிரெண்டு முகம் ருத்ராஷம் ஆதித்தியம் ஆகும். இதற்கு அதிபதி சூரிய பகவான். இதை காதில் அணிந்தால் சூரியனின் கருணை நமக்கு கிடைக்கும்.

பதிமூன்று முகம்:

பதிமூன்று முக ருத்ராஷத்திற்கு அதிபதிகள் கார்த்திகேயன், காமதேவன், இதை அணிந்தால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

பதினான்கு முகம்:

பதினான்கு முக ருத்ராஷம் பரமசிவனுக்கு நிகரானது.

பதினைந்து முகம்:

பதினைந்து முக ருத்ராஷம் கடவுளின் மேல் பக்தியை உண்டாக்கும் சக்தி இதற்கு உள்ளது.

பதினாறு முகம்:

பதினாறு முக ருத்ராஷம் தந்திரம் செய்பவர்களுக்கு இந்த ருத்ராஷம் பயன் தரும்.

பதினேழு முகம்:

பதினேழு முக ருத்ராஷத்திற்கு அதிபதி விஸ்வகர்மா. இதை அணிந்தால் சகல வசதி கிடைக்கும்.

பதினெட்டு முகம்:

பதினெட்டு முக ருத்ராஷத்திற்கு அதிபதி பூதேவி.

பத்தொன்பது முகம்:

பத்தொன்பது முக ருத்ராஷம் அணிந்தால், ஞானம் பெருகும். சாந்திக் கிடைக்கும்.

இருபது முகம்:

இருபது முக ருத்ராஷத்திற்கு அதிபதிகள் பிரம்ம தேவன். சரஸ்வதி இதை அணிந்தால் ஞானம் பெருகும். மனதிற்கு சாந்தி தரும்.

இருபத்தி ஒன்று முகம்:

இருபத்தி ஒன்று முக ருத்ராஷத்திற்கு அதிபதி குபேரன். சொத்து சுகம் கிடைக்கும். எல்லா பாவத்தையும் அழிக்கும் சக்தி இதற்கு உண்டு.

ருத்திராஷம் கொட்டையின் உட்பகுதியில் வெற்றிடம் உள்ளது. இதனால் புதிய ருத்திராஷம் தண்ணிரில் மிதக்கும். பயன்படுத்த பயன்படுத்த ருத்திராஷத்திற்கு எடை கூடும். இதனால் ருத்திராஷம் நிரில் முழ்கும். ருத்ராஷக் கொட்டை அணிவதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது நாம் எந்த நிலையிலும் ருத்திராஷத்தை பயன்படுத்தலாம். இதனால் எவ்விதத்திலும் ருத்திராஷத்திற்கு சக்தி குறையாது. ஆனால் மனதிற்கு தவறு என்று நினைத்தால் ருத்திராஷத்தை அணிய வேண்டாம்.

நாக ருத்திராட்சம்

இந்த ருத்திராட்சம் மிகவும் அரிதான ஒன்று எவருக்கும் எளிதில் கிடைக்காது. அதிலும் உண்மையான நாக ருத்திராட்சமாக இருக்க வேண்டும் மற்றும் பயன்படுத்தும் முறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது ஒருமுக ருத்திராட்சத்துடன் பாம்பு படம் எடுப்பது போல் ஒட்டியிருக்கும். இது மிகவும் குறைந்த அளவே கிடைக்கும். இதன் பயன்பாட்டை அறிந்து அணிவது நலம். ஒரு ருத்திராட்ச மரத்தில் நாகம் ஏறினால் அந்த மரத்தில் ஒரு ருத்திராட்ச கொட்டையில் மட்டும் நாகம் இருப்பது போல் உருவாகும். பின்பு அம்மரத்தில் ருத்திராட்ச கொட்டை உருவாகாது மேலும் அம்மரத்தை வெட்டி விடுவார்கள்.

ஒரு ருத்திராட்சக் கொட்டையை அணிந்தால் பயனில்லை 108 அல்லது 54 கொட்டை மாலையின் நடுவில் ஒரு பெரிய ருத்திராட்சம் போடவேண்டும். அப்பொழுது தான் முழுமையான பலன் கிடைக்கும். உண்மையான ருத்திராட்சத்திற்கு புஜத்துவாரம் தட்டையாகத்தான் இருக்கும். போலி ருத்திராட்சம் புஜத்துவாரம் உருண்டையாக இருக்கம். இதை வைத்தது போ லியைக் கண்டுபிடித்து விடலாம்.

Ruler can do anything, so Born to rule the Galaxy

Friday 22 July 2016

ஆடி பெயர் வந்தது எப்படி தெரியுமா?


✡ ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர; என்கிறது புராணம். ஒரு சமயம் பார;வதிதேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள்.

✡ பிறகு பார;வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர;ந்தார;. தன்னை நோக்கி வந்தவள் பார;வதி அல்ல என்பதை அறிந்து, தன் சு+லாயுதத்தால் ஆடியை அழிக்க யத்தனித்தார;. அப்போது சு+லாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது.

✡ அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார;வை என்மீது பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான். என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு. எனவே பு+வுலகில் கசப்புச் சுவையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார;.

✡ அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம், நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார;கள்.

✡ ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பு+லோகத்தில் அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார;.

✡ ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பு+லோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது. தெய்வாம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது. நோய்கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டவளாக திகழ்ந்தாள் அந்த மங்கை.

N2R NandhakumaR 
Channel N2R 

Ruler can do anything, so Born to rule the Galaxy

Thursday 21 July 2016

உங்களையே சுற்றி வரும் உங்களுடைய மனைவியின் அன்பையையும் மனதையும் நேசியுங்கள்..!! மனைவியை மனதார நேசியுங்கள்.

உங்களையே சுற்றி வரும் உங்களுடைய மனைவியின் அன்பையையும் மனதையும் நேசியுங்கள்..!!
மனைவியை மனதார நேசியுங்கள்.

ஒரு மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறாள்.

அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் ' 'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல்,

அவள் பேசுவது ' உப்பு சப்பில்லாத டப்பா ' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள்.

டிப்ஸ் - 1

'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ! அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின் இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும்.
உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.

டிப்ஸ் -2:

தமிழ் சினிமாவில் காண்பிப்பது போல் ' அல்வாவும், ஒரு முழம் பூவும்' வாங்கி கொடுத்தால் மனைவி நாய் குட்டியாக உங்களை வலம் வருவாள் என எதிர்பார்க்காதிருங்கள்.

பெண்களுக்கு 'பூ' பிடிக்கும்தான், அதை வாங்கி கொடுப்பது உங்கள் கடமை. பூ கொடுத்து 'ஐஸ்' வைக்கும் காலம் மலையேறி விட்டது.

மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [ உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள்.

மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!

கணவன் தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.

வேலைக்கு செல்லும் மனைவி தன் வீட்டு வேலைகளில் சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன் மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.

டிப்ஸ் -3:

பெண்களுக்கு புகழ்ச்சி , பாராட்டு இரண்டும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக அவர்கள் உடை அலங்காரம், அழகு போன்றவற்றை ரசித்து கணவன் பாராட்டினால் திக்கு முக்காடி மெய்மறந்து போய் விடுவார்கள்.

[செயற்கைதனமாக , மற்றும் ஒப்புக்காக வர்னிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில் கண்டும் பிடித்து விடுவார்கள்........ஜாக்கிரதை] அதனால் மனைவியை மனதார பாராட்டுங்கள், ரசித்து வர்னியுங்கள்.

ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு கொடுத்துவிடும்!!

டிப்ஸ் -4:

மனைவியை குறை கூறுவதை நிறுத்துங்கள், முக்கியமாக குழந்தைகள் முன், மற்ற குடும்பத்தினர் முன், நண்பர்கள் முன் குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.

குறை கூறுதல் ஒரு மனைவியின் மன நிலையை பெரிதும் பாதிக்கும். உங்கள் மீதுள்ள நேசம் குறைந்து கடமைக்காக சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

அதற்காக மனைவியை எப்போழுதும் புகழ்ந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல.

உதாரனமாக, உங்கள் மனைவியின் சமையலில் காரம் அதிகம், உப்பு இல்லை என்றால்,
முதலில் " சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்குதுமா, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்" என நாசூக்காக கூறுங்கள்,

கப்பென்று புரிந்து கொள்வார்கள், தன் தவறையும் திருத்தி கொண்டு இன்னும் அதிக சுவையுடன் சமைக்க முனைவார்கள்.

உங்களுக்காக பார்த்து பார்த்து சமைக்கும் மனைவியின் மனம் நோகாமல் குறைகளை எடுத்துச் சொல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லையே!!!

டிப்ஸ் -5:

பெண்களுக்கு பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால் உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.

தன் பிறந்த வீட்டினரை தன் கணவன் நக்கல் செய்வது, அவமானபடுத்துவது போன்றவை ஒரு பெண்ணின் உணர்வுகளை காயபடுத்தி உங்கள் மணவாழ்க்கையில் விரிசலை உண்டுபண்ணும்.

உங்கள் மீது உங்கள் மனைவிக்கு இருக்கும் மரியாதை குறையவும், பழிவாங்கும் உணர்ச்சியாக உங்கள் பெற்றோர் மீது வெறுப்படையவும் செய்யும்.

டிப்ஸ் -6:

உங்கள் மணநாள், மனைவியின் பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.

அது ஒரு விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.

மனைவியை கடைக்கு அழைத்துச் சென்று,
"எனக்கு கார்ட்[வாழ்த்து அட்டை] செலக்ட் பண்ண தெரியாது, பரிசு வாங்க தெரியாது ,அதனால உனக்கு பிடித்ததை வாங்கிக்கோ, நான் உனக்கு பரிசாக கொடுத்ததாக நினைச்சுக்கோ"ன்னு கடமைக்காக பரிசு கொடுக்கிறேன் பேர்விழி என்று டுபாக்கூர் வேலையெல்லாம் செய்ய கூடாது.

இப்போதைக்கு இவ்வளவு டிப்ஸ் தான் என்னால் சேகரிக்க முடிந்தது.
மணமான சில நண்பர்கள் அன்புடன் கேட்டதின் பெயரில் இந்த பதிவையிடுகிறேன்.

எதிர் காலத்தில் மணமுடிக்க போகும் நண்பர்களும் இதனை மனதில் வைத்துக் கொண்டால் மணவாழ்க்கை தித்திக்காமல் போகுமா???

உங்கள் மணவாழ்வு இனிக்க என் வாழ்த்துக்கள்!!!!

Ruler can do anything, so Born to rule the Galaxy

Thursday 7 July 2016

Murugan Song Lyrics- KnR


Ruler can do anything, so Born to rule the Galaxy

Quota- KnR


Ruler can do anything, so Born to rule the Galaxy

Proverbs & Meaning 106 -KnR


Ruler can do anything, so Born to rule the Galaxy

Proverbs & Meaning 105 -KnR


Ruler can do anything, so Born to rule the Galaxy

Proverbs & Meaning 104 -KnR


Ruler can do anything, so Born to rule the Galaxy

Proverbs & Meaning 103 -KnR

Ruler can do anything, so Born to rule the Galaxy

Proverbs & Meaning 102 -KnR



Ruler can do anything, so Born to rule the Galaxy

Proverbs & Meaning -KnR


Ruler can do anything, so Born to rule the Galaxy

Love Quota- KnR


Ruler can do anything, so Born to rule the Galaxy

Love Quota- KnR


Ruler can do anything, so Born to rule the Galaxy

Love Quota- KnR



 Ruler can do anything, so Born to rule the Galaxy

Wednesday 13 January 2016

சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஏன்?


சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஒரு பெரிய பாவ செயல். சண்டிகேஸ்வரருக்கு காது கேக்காது என்று வேறு கூறி வருகிறோம். அப்படியில்லை.
சண்டிகேஸ்வரர் ஒரு மிக சிறந்த சிவ பக்தர். அவர் எப்போதும் சிவ சிந்தனையிலே
தியானத்தில் இருப்பவர். எனவே அவருக்கு முன் சென்று கை தட்டுவது அவரது தியானத்தை
கலைப்பது போன்றது. எனவே இனி சண்டிகேஸ்வரர் முன் கை தட்டாதீர்கள்.
சண்டிகேஸ்வரர் சிவ பக்தர் மட்டும் இல்லை. சிவனின் சொத்துகளை பாதுகாப்பவர். எனவே சிவ ஆலயங்களை விட்டு செல்லுமுன், சண்டிகேஸ்வரர் முன் சென்று மெதுவாக சத்தம வராமல் கைகளை துடைத்து, சிவன் கோயில் சொத்து எதையும் நாம் எடுத்து செல்லவில்லை என்பதை சண்டிகேஸ்வரர் தியானம் கலையாமல் சொல்லவேண்டும்.
இதுவே முறையாகும். தங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இதனை தெரிவிப்பது நமது கடமையும் அல்லவா!

Monday 11 January 2016

கோடங்கிபாளையம் கிராம ஊராட்சி சில பெருமைகள்

வரலாறு 

 சங்ககாலத்தில் கோவில் கொண்டான் பாளையம் என்று அழைக்கப்பட்ட இவ்வுரானது மருவி பிற்காலத்தில் கோடங்கிபாளையம் என்றானது. 

  கோடங்கிபாளையம் ஊராட்சி 1950ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தின் 5வது பெரிய ஊராட்சியாகும்.
10,000 மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாக உள்ளது.

கிராமங்கள்
இந்த ஊராட்சியில் 6 பழைய குக்கிராமங்கள் உள்ளன.
3.பெருமாள்கவுண்டம்பாளையம்
4.ராசாக்கவுண்டம்பாளையம்
5.காரணம்பேட்டை
6.சங்கோதிபாளையம்

புதியதாக,
1.காந்திநகர்
2.பெரியார் நகர்
3.அண்ணாநகர்
4.நேருநகர்
5.முருகன் நகர்
6.பகவதி நகர்
7.அருள்ஜோதிநகர்
8.அன்னை நகர்
9.இலந்தைமடை
10.பாலாஜிநகர்
போன்ற குக்கிராமங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அஞ்சல் நிலையங்கள்
கோடங்கிபாளையம்-641668
காரணம்பேட்டை-641401,
என இரு அஞ்சல் நிலையங்கள் உள்ளன.

நற்பணி மன்றங்கள்
கோடங்கிபாளையம் ஊராட்சியில் நல்லமுறையில் இயங்கும் 6 இளைஞர் நற்பணி மன்றங்கள் உள்ளன.

1. கோடங்கிபாளையம்- இளைஞர் நற்பணி மன்றம்
3. காரணம்பேட்டை-முத்தமிழ் மன்றம்
4. சங்கோதிபாளையம்-இளைஞர் நற்பணி மன்றம்
5. பெருமாக்கவுண்டம் பாளையம்- பாரதி இளைஞர் நற்பணி மன்றம்
6. ராசாக்கவுண்டம்பாளையம்-விவேகம் இளைஞர் நற்பணி மன்றம்

குழந்தைகள் நல மையங்கள்
ஆரம்ப துணை சுகாதார நிலையம் காரணம்பேட்டையில் உள்ளது.

கோடங்கிபாளையம், சின்னகோடங்கிபாளையம், 
காரணம்பேட்டை,
சங்கோதிபாளையம்,
பெருமாக்கவுண்டம்பாளையம்,
எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய ஊர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகள் நல மையங்கள் (பாலர் பள்ளிகள்) செயல்படுகின்றன.

நியாயவிலைக் கடைகள்
கோடங்கிபாளையம் -முழு நேர நியாயவிலைக் கடை,
காரணம்பேட்டை-முழு நேர நியாயவிலைக் கடை,
சங்கோதிபாளையம்-பகுதி நேர நியாயவிலைக் கடை,
பெருமாக்கவுண்டம்பாளையம்-பகுதி நேர நியாயவிலைக் கடை
என நான்கு நியாயவிலைக் கடைகள் உள்ளன.

பொதுக் கிணறுகள்
1.கோடங்கிபாளையம்-5
2.சின்னக்கோடங்கிபாளையம்-1
3.சங்கோதிபாளையம்-2
4.பெருமாக்கவுண்டம்பாளையம்-1
5.காரணம்பேட்டை-2
6.ராசாக்கவுண்டம்பாளையம்-1
எனமொத்தம் 12 பொதுக்கிணறுகள் ஊராட்சி மன்றக் கட்டுப்பாட்டில் உள்ளன.

நீர்த்தொட்டிகள்
31மேல்நிலை நீர்த்தொட்டிகளும், 4 தரைமட்டத் தொட்டிகளும் உள்ளன.
1. கோடங்கிபாளையம்-4 தொட்டிகள்-கொள்ளளவு-1,20,000 லிட்டர்கள்
2.சின்னக்கோடங்கிபாளையம்-9 தொட்டிகள்-கொள்ளளவு-2,20,000 லிட்டர்கள்.
3.காரணம்பேட்டை-8 தொட்டிகள்-கொள்ளளவு-2,40,000 லிட்டர்கள்
4.சங்கோதிபாளையம்-6தொட்டிகள்-கொள்ளளவு-2,00,000லிட்டர்கள்.
5.பெருமாக்கவுண்டம் பாளையம்-5தொட்டிகள்-கொள்ளளவு-1,30,000 லிட்டர்கள்
6.ராசாக்கவுண்டம்பாளையம்-3 தொட்டிகள்-கொள்ளளவு- 80,000லிட்டர்கள்

ஆக 35 தொட்டிகளின் மொத்தக்கொள்ளளவு 9,90,000 லிட்டர்கள்.



தேசிய நெடுஞ்சாலை 67ம், மாநில நெடுஞ்சாலை 174ம் காரணம்பேட்டையில் சந்திக்கின்றன.இது முக்கியப் போக்குவரத்து மையமாக உள்ளது.

புறக்காவல் நிலையம்(Outpost) காரணம்பேட்டை சந்திப்பில் பல்லடம் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தானியங்கி சைகை(Signal) காரணம்பேட்டையில் நிறுவப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம் 
சின்னகோடங்கிபாளையம் (காரணம்பேட்டை)யில் பேருந்து நிலையம் உள்ளது.

சங்கோதிபாளையத்தில் 33MW துணை மின் நிலையம் உள்ளது.
சூலூர் கிழக்கு மின் வாரிய அலுவலகம் காரணம்பேட்டையில் உள்ளது.

திருக்கோவில்கள்
அனைத்துக் குக்கிராமத்திற்கும் பொதுவான சங்ககாலத் தமிழ் மன்னரால் கட்டப்பட்ட மீன் சின்னம்  பொறித்த மாரியம்மன் கோயில் கோடங்கிபாளையத்தில் உள்ளது.

அனைத்துக் குக்கிராமத்திற்கும் பொதுவான மிகவும் பழைமையும் சக்தியும் வாய்ந்த பகவதி அம்மன் கோவிலும்,கரிவரதராசப் பெருமாள் கோவிலும் இலந்தைமடையில் உள்ளன.
மேலும்,
1.கோடங்கிபாளையம்-14
2.சின்னக்கோடங்கிபாளையம்-12
3.ராசாக்கவுண்டம் பாளையம்-4
4.பெருமாக்கவுண்டம் பாளையம்-5
5.காரணம்பேட்டை-11
6.சங்கோதிபாளையம்-8
ஆக 46கோயில்கள் உள்ளன.

 சின்னகோடங்கிபாளையத்தில் ஆனந்தபுரி ஆதீனம் உள்ளது.தவத்திரு.பழனிச்சாமி அடிகளார் ஆதீனமாக உள்ளார்.

சின்னகோடங்கிபாளையத்தில் ஸ்ரீசக்ரா தியான பீடம் உள்ளது.சுவாமி-ஸ்ரீயுக்தேஷ்வர்

கோடங்கிபாளையத்தில் ஸ்ரீவாலை பரமேஸ்வரி அம்மன் சித்தர் பீடம் உள்ளது. சுவாமி-டாக்டர் சிவசாமி அவர்கள். இங்கு சித்த வைத்தியமும் நடைபெறுகிறது.

பள்ளிகள்
5 அரசு ஆரம்பப் பள்ளிகளும்,2 அரசு உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன.
2தனியார் பள்ளிகள் உள்ளன.
1.ஆதர்ஷ் வித்யாலயா, சின்னகோடங்கிபாளையம் - LKG முதல் +2வரை
2.கற்பகவிருட்ச வித்யாலயா,காரணம்பேட்டை - LKG முதல் 5ம் வகுப்பு வரை.

முக்கிய தொழில்கள்
கருங்கல் சுரங்கங்கள் மற்றும் அது தொடர்புடைய கல்லுடைக்கும் தொழிற்சாலைகள் நிறைய உள்ளன.
விசைத்தறியும்,விவசாயமும் முதன்மைத் தொழில்களாக உள்ளன.

நூற்பாலைகள் மூன்றும்,சிறு நூற்பாலைகள் 8ம் உள்ளன.
மகாலட்சுமி(அரோமா)பால் தொழிற்சாலை உள்ளது. ஸ்ரீ கணேசா ரெடிமிக்ஸ் காங்கிரீட்-காரணம்பேட்டை,
ஸ்ரீ காடேஸ்வரி ரெடிமிக்ஸ் காங்கிரீட்-கோடங்கிபாளையம்
என இரு காங்கிரீட் கலவை தொழிற்சாலைகள் உள்ளன. சமையல் எண்ணெய்...குறிப்பாக தேங்காய்எண்ணெய் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று சுருச்சி ரீபைனரீஸ் என்ற பெயரில் இயங்கி வருகிறது.
இயற்கை முறையிலான செக்கு எண்ணெய் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையம் காரணம்பேட்டை பேருந்து நிலைய எதிர்புறம் உள்ளது.

மூன்று திருமண மண்டபங்கள்
1.கொங்குவேளாளர் திருமணமண்டபம்,காரணம்பேட்டை
2.கொங்கு திருமணமண்டபம்,கோடங்கிபாளையம்.
3.ஸ்ரீ வெங்கடேஷ்வரா திருமண மகால்A/C ,காரணம்பேட்டை.

காரணம் பேட்டையில் வாகன எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் 3 உள்ளன.

வங்கிகள்
காரணம் பேட்டையில் தேசியமயமாக்கப்பட்ட கனரா வங்கி, காரணம்பேட்டை கிளை உள்ளது.
காரணம்பேட்டையில் தேசியமயமாக்கப்பட்ட சிட்டி யூனியன் வங்கி, கோடங்கிபாளையம்(காரணம் பேட்டை) கிளை உள்ளது.
காரணம் பேட்டையில் K2016 கோடங்கிபாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம்(வங்கி) உள்ளது.

ஏ.டி.எம் 
கனரா வங்கி,சிட்டி யூனியன் வங்கி,கரூர் வைஸ்யா வங்கி ஆகியவற்றின் தானியங்கி பணம் வழங்கும்(Automatic Money Teller-ATM) இயந்திரங்கள் காரணம் பேட்டையில் உள்ளன.

சுவையான உணவு உண்ண
1.பொன்னுசாமி உணவகம்,காரணம்பேட்டை
2.ஐஸ்வர்யா உணவகம்,ஆறாக்குளம் பிரிவு, சின்னகோடங்கிபாளையம்.
3.குரு ரெஸ்டாரன்ட், காரணம்பேட்டை
4.ஜெர்மன் டிரைவ் இன் Q உணவகம் ஆகியவை செயல்படு கின்றன.


அருகிலுள்ள மருத்துவ மனைகள்
1.PSG மருத்துவமனை,கரடிவாவி-தொலைவு - 6 கி.மீ.
2.KMCH சூலூர் மருத்துவமனை,சூலூர்-தொலைவு- 5 கி.மீ.
3.பாலாஜி மருத்துவமனை,சூலூர்-தொலைவு - 5 கி.மீ.
4.ராகவேந்திரா மருத்துவமனை,சூலூர்-தொலைவு- 6 கி.மீ.
5.பொன்னி மருத்துவமனை-பல்லடம்-தொலைவு-10 கி.மீ.
6.சஞ்சீவ் மருத்துவமனை,பல்லடம்- 9 கி.மீ.

கோடங்கிபாளையம் ஊராட்சிக்கான ஆரம்ப சுகாதார நிலையம் செம்மிபாளையத்தில் உள்ளது.

மயானங்கள்
அனைத்து 6 பெரிய குக்கிராமங்களிலும் அனைத்து சாதியினருக்கும் பொதுவான "பொது மயானங்கள்" உள்ளன.இது சிறப்புத் தன்மை வாய்ந்த ஒன்றாகும்.

தகவல்கள் 2015 ல்
தொடரும்...,

Published by 
N2R NandhakumaR
Channel N2R

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...