Wednesday, 13 January 2016

சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஏன்?


சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஒரு பெரிய பாவ செயல். சண்டிகேஸ்வரருக்கு காது கேக்காது என்று வேறு கூறி வருகிறோம். அப்படியில்லை.
சண்டிகேஸ்வரர் ஒரு மிக சிறந்த சிவ பக்தர். அவர் எப்போதும் சிவ சிந்தனையிலே
தியானத்தில் இருப்பவர். எனவே அவருக்கு முன் சென்று கை தட்டுவது அவரது தியானத்தை
கலைப்பது போன்றது. எனவே இனி சண்டிகேஸ்வரர் முன் கை தட்டாதீர்கள்.
சண்டிகேஸ்வரர் சிவ பக்தர் மட்டும் இல்லை. சிவனின் சொத்துகளை பாதுகாப்பவர். எனவே சிவ ஆலயங்களை விட்டு செல்லுமுன், சண்டிகேஸ்வரர் முன் சென்று மெதுவாக சத்தம வராமல் கைகளை துடைத்து, சிவன் கோயில் சொத்து எதையும் நாம் எடுத்து செல்லவில்லை என்பதை சண்டிகேஸ்வரர் தியானம் கலையாமல் சொல்லவேண்டும்.
இதுவே முறையாகும். தங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இதனை தெரிவிப்பது நமது கடமையும் அல்லவா!

Monday, 11 January 2016

கோடங்கிபாளையம் கிராம ஊராட்சி சில பெருமைகள்

வரலாறு 

 சங்ககாலத்தில் கோவில் கொண்டான் பாளையம் என்று அழைக்கப்பட்ட இவ்வுரானது மருவி பிற்காலத்தில் கோடங்கிபாளையம் என்றானது. 

  கோடங்கிபாளையம் ஊராட்சி 1950ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தின் 5வது பெரிய ஊராட்சியாகும்.
10,000 மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாக உள்ளது.

கிராமங்கள்
இந்த ஊராட்சியில் 6 பழைய குக்கிராமங்கள் உள்ளன.
3.பெருமாள்கவுண்டம்பாளையம்
4.ராசாக்கவுண்டம்பாளையம்
5.காரணம்பேட்டை
6.சங்கோதிபாளையம்

புதியதாக,
1.காந்திநகர்
2.பெரியார் நகர்
3.அண்ணாநகர்
4.நேருநகர்
5.முருகன் நகர்
6.பகவதி நகர்
7.அருள்ஜோதிநகர்
8.அன்னை நகர்
9.இலந்தைமடை
10.பாலாஜிநகர்
போன்ற குக்கிராமங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அஞ்சல் நிலையங்கள்
கோடங்கிபாளையம்-641668
காரணம்பேட்டை-641401,
என இரு அஞ்சல் நிலையங்கள் உள்ளன.

நற்பணி மன்றங்கள்
கோடங்கிபாளையம் ஊராட்சியில் நல்லமுறையில் இயங்கும் 6 இளைஞர் நற்பணி மன்றங்கள் உள்ளன.

1. கோடங்கிபாளையம்- இளைஞர் நற்பணி மன்றம்
3. காரணம்பேட்டை-முத்தமிழ் மன்றம்
4. சங்கோதிபாளையம்-இளைஞர் நற்பணி மன்றம்
5. பெருமாக்கவுண்டம் பாளையம்- பாரதி இளைஞர் நற்பணி மன்றம்
6. ராசாக்கவுண்டம்பாளையம்-விவேகம் இளைஞர் நற்பணி மன்றம்

குழந்தைகள் நல மையங்கள்
ஆரம்ப துணை சுகாதார நிலையம் காரணம்பேட்டையில் உள்ளது.

கோடங்கிபாளையம், சின்னகோடங்கிபாளையம், 
காரணம்பேட்டை,
சங்கோதிபாளையம்,
பெருமாக்கவுண்டம்பாளையம்,
எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய ஊர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகள் நல மையங்கள் (பாலர் பள்ளிகள்) செயல்படுகின்றன.

நியாயவிலைக் கடைகள்
கோடங்கிபாளையம் -முழு நேர நியாயவிலைக் கடை,
காரணம்பேட்டை-முழு நேர நியாயவிலைக் கடை,
சங்கோதிபாளையம்-பகுதி நேர நியாயவிலைக் கடை,
பெருமாக்கவுண்டம்பாளையம்-பகுதி நேர நியாயவிலைக் கடை
என நான்கு நியாயவிலைக் கடைகள் உள்ளன.

பொதுக் கிணறுகள்
1.கோடங்கிபாளையம்-5
2.சின்னக்கோடங்கிபாளையம்-1
3.சங்கோதிபாளையம்-2
4.பெருமாக்கவுண்டம்பாளையம்-1
5.காரணம்பேட்டை-2
6.ராசாக்கவுண்டம்பாளையம்-1
எனமொத்தம் 12 பொதுக்கிணறுகள் ஊராட்சி மன்றக் கட்டுப்பாட்டில் உள்ளன.

நீர்த்தொட்டிகள்
31மேல்நிலை நீர்த்தொட்டிகளும், 4 தரைமட்டத் தொட்டிகளும் உள்ளன.
1. கோடங்கிபாளையம்-4 தொட்டிகள்-கொள்ளளவு-1,20,000 லிட்டர்கள்
2.சின்னக்கோடங்கிபாளையம்-9 தொட்டிகள்-கொள்ளளவு-2,20,000 லிட்டர்கள்.
3.காரணம்பேட்டை-8 தொட்டிகள்-கொள்ளளவு-2,40,000 லிட்டர்கள்
4.சங்கோதிபாளையம்-6தொட்டிகள்-கொள்ளளவு-2,00,000லிட்டர்கள்.
5.பெருமாக்கவுண்டம் பாளையம்-5தொட்டிகள்-கொள்ளளவு-1,30,000 லிட்டர்கள்
6.ராசாக்கவுண்டம்பாளையம்-3 தொட்டிகள்-கொள்ளளவு- 80,000லிட்டர்கள்

ஆக 35 தொட்டிகளின் மொத்தக்கொள்ளளவு 9,90,000 லிட்டர்கள்.



தேசிய நெடுஞ்சாலை 67ம், மாநில நெடுஞ்சாலை 174ம் காரணம்பேட்டையில் சந்திக்கின்றன.இது முக்கியப் போக்குவரத்து மையமாக உள்ளது.

புறக்காவல் நிலையம்(Outpost) காரணம்பேட்டை சந்திப்பில் பல்லடம் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தானியங்கி சைகை(Signal) காரணம்பேட்டையில் நிறுவப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம் 
சின்னகோடங்கிபாளையம் (காரணம்பேட்டை)யில் பேருந்து நிலையம் உள்ளது.

சங்கோதிபாளையத்தில் 33MW துணை மின் நிலையம் உள்ளது.
சூலூர் கிழக்கு மின் வாரிய அலுவலகம் காரணம்பேட்டையில் உள்ளது.

திருக்கோவில்கள்
அனைத்துக் குக்கிராமத்திற்கும் பொதுவான சங்ககாலத் தமிழ் மன்னரால் கட்டப்பட்ட மீன் சின்னம்  பொறித்த மாரியம்மன் கோயில் கோடங்கிபாளையத்தில் உள்ளது.

அனைத்துக் குக்கிராமத்திற்கும் பொதுவான மிகவும் பழைமையும் சக்தியும் வாய்ந்த பகவதி அம்மன் கோவிலும்,கரிவரதராசப் பெருமாள் கோவிலும் இலந்தைமடையில் உள்ளன.
மேலும்,
1.கோடங்கிபாளையம்-14
2.சின்னக்கோடங்கிபாளையம்-12
3.ராசாக்கவுண்டம் பாளையம்-4
4.பெருமாக்கவுண்டம் பாளையம்-5
5.காரணம்பேட்டை-11
6.சங்கோதிபாளையம்-8
ஆக 46கோயில்கள் உள்ளன.

 சின்னகோடங்கிபாளையத்தில் ஆனந்தபுரி ஆதீனம் உள்ளது.தவத்திரு.பழனிச்சாமி அடிகளார் ஆதீனமாக உள்ளார்.

சின்னகோடங்கிபாளையத்தில் ஸ்ரீசக்ரா தியான பீடம் உள்ளது.சுவாமி-ஸ்ரீயுக்தேஷ்வர்

கோடங்கிபாளையத்தில் ஸ்ரீவாலை பரமேஸ்வரி அம்மன் சித்தர் பீடம் உள்ளது. சுவாமி-டாக்டர் சிவசாமி அவர்கள். இங்கு சித்த வைத்தியமும் நடைபெறுகிறது.

பள்ளிகள்
5 அரசு ஆரம்பப் பள்ளிகளும்,2 அரசு உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன.
2தனியார் பள்ளிகள் உள்ளன.
1.ஆதர்ஷ் வித்யாலயா, சின்னகோடங்கிபாளையம் - LKG முதல் +2வரை
2.கற்பகவிருட்ச வித்யாலயா,காரணம்பேட்டை - LKG முதல் 5ம் வகுப்பு வரை.

முக்கிய தொழில்கள்
கருங்கல் சுரங்கங்கள் மற்றும் அது தொடர்புடைய கல்லுடைக்கும் தொழிற்சாலைகள் நிறைய உள்ளன.
விசைத்தறியும்,விவசாயமும் முதன்மைத் தொழில்களாக உள்ளன.

நூற்பாலைகள் மூன்றும்,சிறு நூற்பாலைகள் 8ம் உள்ளன.
மகாலட்சுமி(அரோமா)பால் தொழிற்சாலை உள்ளது. ஸ்ரீ கணேசா ரெடிமிக்ஸ் காங்கிரீட்-காரணம்பேட்டை,
ஸ்ரீ காடேஸ்வரி ரெடிமிக்ஸ் காங்கிரீட்-கோடங்கிபாளையம்
என இரு காங்கிரீட் கலவை தொழிற்சாலைகள் உள்ளன. சமையல் எண்ணெய்...குறிப்பாக தேங்காய்எண்ணெய் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று சுருச்சி ரீபைனரீஸ் என்ற பெயரில் இயங்கி வருகிறது.
இயற்கை முறையிலான செக்கு எண்ணெய் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையம் காரணம்பேட்டை பேருந்து நிலைய எதிர்புறம் உள்ளது.

மூன்று திருமண மண்டபங்கள்
1.கொங்குவேளாளர் திருமணமண்டபம்,காரணம்பேட்டை
2.கொங்கு திருமணமண்டபம்,கோடங்கிபாளையம்.
3.ஸ்ரீ வெங்கடேஷ்வரா திருமண மகால்A/C ,காரணம்பேட்டை.

காரணம் பேட்டையில் வாகன எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் 3 உள்ளன.

வங்கிகள்
காரணம் பேட்டையில் தேசியமயமாக்கப்பட்ட கனரா வங்கி, காரணம்பேட்டை கிளை உள்ளது.
காரணம்பேட்டையில் தேசியமயமாக்கப்பட்ட சிட்டி யூனியன் வங்கி, கோடங்கிபாளையம்(காரணம் பேட்டை) கிளை உள்ளது.
காரணம் பேட்டையில் K2016 கோடங்கிபாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம்(வங்கி) உள்ளது.

ஏ.டி.எம் 
கனரா வங்கி,சிட்டி யூனியன் வங்கி,கரூர் வைஸ்யா வங்கி ஆகியவற்றின் தானியங்கி பணம் வழங்கும்(Automatic Money Teller-ATM) இயந்திரங்கள் காரணம் பேட்டையில் உள்ளன.

சுவையான உணவு உண்ண
1.பொன்னுசாமி உணவகம்,காரணம்பேட்டை
2.ஐஸ்வர்யா உணவகம்,ஆறாக்குளம் பிரிவு, சின்னகோடங்கிபாளையம்.
3.குரு ரெஸ்டாரன்ட், காரணம்பேட்டை
4.ஜெர்மன் டிரைவ் இன் Q உணவகம் ஆகியவை செயல்படு கின்றன.


அருகிலுள்ள மருத்துவ மனைகள்
1.PSG மருத்துவமனை,கரடிவாவி-தொலைவு - 6 கி.மீ.
2.KMCH சூலூர் மருத்துவமனை,சூலூர்-தொலைவு- 5 கி.மீ.
3.பாலாஜி மருத்துவமனை,சூலூர்-தொலைவு - 5 கி.மீ.
4.ராகவேந்திரா மருத்துவமனை,சூலூர்-தொலைவு- 6 கி.மீ.
5.பொன்னி மருத்துவமனை-பல்லடம்-தொலைவு-10 கி.மீ.
6.சஞ்சீவ் மருத்துவமனை,பல்லடம்- 9 கி.மீ.

கோடங்கிபாளையம் ஊராட்சிக்கான ஆரம்ப சுகாதார நிலையம் செம்மிபாளையத்தில் உள்ளது.

மயானங்கள்
அனைத்து 6 பெரிய குக்கிராமங்களிலும் அனைத்து சாதியினருக்கும் பொதுவான "பொது மயானங்கள்" உள்ளன.இது சிறப்புத் தன்மை வாய்ந்த ஒன்றாகும்.

தகவல்கள் 2015 ல்
தொடரும்...,

Published by 
N2R NandhakumaR
Channel N2R

Thursday, 5 November 2015

உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர். ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா!

யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?

அந்த பெருமைக்குரியவர்,
அவரது மனைவி வாசுகி தான். 
அந்த அம்மையார் தனது கணவரின்
செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்
முழுவதும் விமர்சித்ததே இல்லை.

அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது,
ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,
ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம்.

அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம்.

ஆனாலும் கணவரிடம்
காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.

இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே 
அவை இரண்டும் என்றாராம்.

நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை.

அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சி
யாக சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார் அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர்.

அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது. விசிறு என்றார். பழைய சோறு எப்படி சுடும்? 
அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை.

விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி,
கணவருடன் வாதம் செய்யாமல்
விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம்
கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்.

வள்ளுவர் அவரை அழைக்கவே,
கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக்
கயிறு அப்படியே நின்றதாம்.

இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!

அந்த அன்பு மனைவி ஒருநாள்
இறந்து போனார்.

“நெருநல் உளனொருவன்
இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு”
என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே மனைவியின் பிரிவைத்
தாங்காமல் கலங்கி விட்டார்.

நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக்
குறளின் பொருள்.

ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக
பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர் 
மனைவியின் பிரிவைத் தாளாமல் 
"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு" என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.

அடியவனுக்கு இனியவளே!
அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என்
பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே!
பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில்
தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர் 
இந்தசம்பவத்தை மனதிற்குள்
அசைபோடுவார்களா..!!
ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார்.  அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.

அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.

உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இருவரும்  அறிவாளியாக  இருந்தால் 👍🙏😊 அதுவே கோவில்.

Friday, 25 September 2015

ஆயகலைகள் 64.

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

Friday, 11 September 2015

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?

புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.
ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.

இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.
இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர்.
அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.

துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.

பலரை சென்றடைய தயவுசெய்து பகிருங்கள் உறவுகளே...

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...